Ram's தகவல் பெட்டகம் - Page 10 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
Ram's தகவல் பெட்டகம்
ramsDate: Tuesday, 11 Feb 2014, 9:32 AM | Message # 91
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
சதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்

நக்சசல்பாரிகள்உள் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று பிரதமராலேயே சொல்லப்படுபவர்கள். இவர்களை சமாளிப்பதுதான் மாநிலத்தின் மிகப்பெரிய சவால் என்று மாநில முதல்வரால் விவரிக்கப்படுபவர்கள். இவர்களுக்கு ஜனநாயக வழியிலான தேர்தல் முறையில் விருப்ப மில்லை. சட்டத்தின் ஆட்சி என்பது பிடித்தமானதல்ல. தேர்தலை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்துபவர்கள். தேர்தலுக்கு ஆதரவானவர்களை அடிப்பது உதைப்பது கடத்திச் செல்வது கொடூரமாய் கொல்வது என்பதெல்லாம் இவர்களது வழிமுறைகள். வாக்குச்சாவடியை கைப்பற்றுவது, ஓட்டளிக்க வருபவர்களை ஆயுதங்களால் தாக்குவது, ஒட்டுப் பெட்டியை உடைத்து சுக்கு நூறாக்குவது என்பது இவர்களுக்கு பழகிப்போன ஒன்று.

அதிலும் சதீஷ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டம் என்பது ஐம்பது சதவீதம் அடர்த்தியான காடுகள் நிறைந்த மாவட்டம். இதன் காரணமாக இங்குதான் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம். இந்த மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு சவலான விஷயம். இந்த சவாலான விஷயத்தை ஒருவர் கையாண்டு வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளார். 

அவர்தான் கான்கேர் மாவட்டத்தின் கலெக்டர் அலர்மேல் மங்கை, கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் ஆனவர்.கடந்த 2004ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அலர்மேல் மங்கை வடமாநிலங்களில் பல்வேறு பணிகளில் இருந்துவிட்டு தற்போது கான்கேர் மாவட்டத்தின் கலெக்டராகியுள்ளார்.

கலெக்டரானதும் இவர் முன் வந்து நின்ற சவாலான விஷயம் நக்சல்களின் ஆதிக்கத்தை தாண்டி இங்கு வெற்றிகரமாக தேர்தலை நடத்தவேண்டும் என்பதுதான். அதற்காக பல இரவுகளை பகலாக்கி திட்டமிட்டு வேலை செய்தார். இதற்காக மக்களை சந்தித்து ஓட்டளிப்பதன் அவசியத்தை அவர்கள் மொழியிலேயே சொல்லி ஊக்கப்படுத்தினார். இவரது துணிச்சசலும், திட்டமிடலும், சுறுசுறுப்பும் நக்சல்களை ஓரங்கட்டியது.

இதன் விளைவு யாருமே எதிர்பாராத விதமாக நடந்து முடிந்த தேர்தலில் நக்சல்களின் ஆதிக்கத்தை தாண்டி இங்கு 78 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த முறையைவிட 13 சதவீதம் அதிகமாகும். ஜனநாயக பாதைக்கு மக்கள் மேற்கொண்ட வெற்றிகரமான பயணமாகும்.

இந்த சாதனையை பாராட்டி கடந்த 25ம்தேதி வாக்களர் தினத்தன்று டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் அலர்மேல் மங்கைக்கு விருதும்,ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கி, ஜனாதிபதி கவுரப்படுத்தி உள்ளார். இந்த பெருமை, பரிசு அனைத்தும் எனது அணிக்கே சேரும் என்று தன் அணியை பாராட்டி அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இரண்டு நாள் தமிழ் மாநிலம் தாண்டி போனாலே "ஹோம் சிக் 'என்று சொல்லக்கூடிய மனிதர்கள் நிறைந்திட்ட காலத்தில் கடந்த பத்து வருடங்களாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கேற்ப வடமாநிலங்களில் பணியாற்றும் கலெக்டர் அலர்மேல் மங்கை பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்தான்.எனது (கான்கேர்) மாவட்ட மக்கள் சுகாதாரம் மற்றும் கல்விப்பணியில் பின்தங்கி உள்ளனர். இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றது, அத்துடன் இவர்களுக்காக உழைப்பதில் மனம் நிறைவாகவும் இருக்கிறது. இங்குள்ள மக்கள் மிகவும் பாசமானவர்கள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் எனக்கு இங்கு வேலை பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவமே என்று கூறினார்.

தனது கலெக்டர் பணியை பெரிதும் நேசித்து செயல்படும் அலர்மேல் மங்கையை போனில் பாராட்டிய போது மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு நன்றி கூறினார். தனது பணிக்கு பெரிதும் உந்துதலாக இருந்து உற்சாகம் தருபவர் தனது கணவர் அன்பழகனும், சகோதரர் ஆனந்தகுமாரும் என்றார். கணவர் அன்பழகன் இதே மாநிலத்தில் ஜாங்கீர் மாவட்ட கலெக்டராக பணியாற்றுகிறார். குழந்தைகளுக்கு அகிலன் நிலவரசு, அமுதினி என்ற அழகான தமிழ் பெயர்களை சூட்டியுள்ளனர். கலெக்டர் அன்பழகன் சிறந்த தமிழ் ஆர்வலரும் கூட. கலெக்டர் அலர்மேல் மங்கைக்கு தமிழ் ஆங்கிலம் தாண்டி நீண்ட காலம் வடமாநிலங்களில் இருப்பதால் இந்தி மொழியும், இந்தியை கொஞ்சம் திரித்து பேசக்கூடிய சசதீஷ்கரி என்ற மொழியும் நன்கு தெரியும். நக்சல்களின் ஆதிக்கத்தில் உள்ள பழங்குடி மக்களிடம் பேசுவதற்காக அவர்களின் மொழியான கொவுண்டி மொழியும் கொஞ்சம் தெரியும்.
விருது பரிசு பாராட்டு இவைகளை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட மக்கள் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள கலெக்டர் அலர்மேல் மங்கையின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதுதான் இருந்தாலும் இப்படி ஒரு சாதனை படைத்திட்டவரை குறைந்தபட்ச நேரம் எடுத்துக் கொண்டு பாராட்டினால் அவர் மேலும் சாதனை படைப்பார் என்பதால் முடிந்தவர்கள் குறைந்த பட்ச அவகாசம் எடுத்துக்கொண்டு பாராட்டலாம் அவரது எண்: 09425532380..


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 11 Feb 2014, 8:23 PM | Message # 92
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
மஞ்சளை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்

இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் மஞ்சள். இத்தகைய மஞ்சளானது உணவிற்கு நிறத்தை மட்டும் கொடுப்பதில்லை. மாறாக பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது.

இத்தகைய மஞ்சளானது அக்காலத்தில் இருந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் பலவற்றில், மஞ்சளில் உள்ள நோயெதிப்பு அழற்சி தன்மையினால், மஞ்சளானது காயங்களை சரிசெய்ய உதவுவதுடன், புற்றுநோய் முதல் அல்சைமர் வரை பல உடல்நல பிரச்சனைகளையும் குணப்படுத்த பெரிதும் உதவியாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

ஆகவே அத்தகைய பொருளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து இனிமேல் தவறாமல் மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

கல்லீரலை சுத்தப்படுத்தும்

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரலில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, கல்லீரலானது சுத்தமாக இருக்கும்.

அல்சைமர் நோயைத் தடுக்கும்

மஞ்சள் தூளில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், அதனை உணவில் சேர்த்து வந்தால், மூளையில் அமிலாய்டு என்னும் பிளேக் உருவாவது தடுக்கப்பட்டு, இதனால் மறதி நோயான அல்சைமர் நோய் ஏற்படுவது தடுக்கப்படும்

புற்றுநோயை தடுக்கும்

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, பல வகையான புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

நாள்பட்ட மூட்டு வலி

மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், நாள்பட்ட மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டு வலியைக் குணப்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.

எடை கட்டுப்பாடு

மஞ்சளானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மன இறுக்க நிவாரணி

சீன மருத்துவத்தில் மஞ்சளை மன இறுக்கத்தை சரிசெய்யும் சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பொருளை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது மன இறுக்கத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

கீல்வாதம்

மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையானது இருப்பதால், இது கீல்வாதம் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே கீல்வாதம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

எலும்புப்புரை

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, பிற்காலத்தில் எலும்புப்புரை போன்ற முதுகு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 11 Feb 2014, 8:25 PM | Message # 93
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
புற்றுநோயை எதிர்க்கும் காரட்...!

காரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் காரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Carrot இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு என்று பெயர். இந்த நோயை ஒழிக்க எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 11 Feb 2014, 8:27 PM | Message # 94
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம்...!

வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும்,சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய். . .

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும். . .

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும். . .

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும்,செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும். . .

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ யரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும். . .

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 11 Feb 2014, 8:28 PM | Message # 95
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
பேரீச்சம் பழத்தின் நன்மைகள்...!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கண்பார்வை தெளிவடைய
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. பார்வை குறைபாடை போக்கி பார்க்கும் திறனை அதிகரிக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது. இனிப்பு சுவையுள்ளதால் இந்த பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை அளிக்கும் பேரிட்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும். தூசு இல்லாத சுத்தமான பேரீச்சம் பழத்தைதான் வாங்கி சாப்பிட வேண்டும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 11 Feb 2014, 8:30 PM | Message # 96
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு - புதிய ஆய்வில் தகவல்...!

குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத்துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கான்சர்ட்’ என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறுவனங்களின் பிஸ்கெட்டுகள் மற்றும் 25 நிறுவனங்கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ள கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 7 மாதங்களாக பிஸ்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குனர் சந்தனராஜன் கூறியதாவது:–

கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக்கரியில் இருந்து தயாரிக்கப்படும்பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும்பிஸ்கெட்டுகளில்ரசாயன கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவதன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.

மாறாக உடலில் சத்துகள் உருவாகாது. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உணவுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கின்றன.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட்களாலும் 30 சதவீதம் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

‘‘எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன்’’ ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும்பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப் பட்டுள்ளது.

இனிப்பு வகை ஊறுகாய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த தகவலை இந்திய நுகர்வோர் சங்க தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.


endrum anbudan

vijiram
 
NathasaaDate: Wednesday, 12 Feb 2014, 1:02 AM | Message # 97
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi Ram
thnQ for the useful information....

neengal pathivukal pakirnthu kondal ingu Links Update - thakaval palskaiyil kurippidavum....

http://magalirkadal.ucoz.com/forum/4-26-6
 
ramsDate: Wednesday, 12 Feb 2014, 9:39 AM | Message # 98
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
மகசூலை அள்ளிக் கொண்டே இருக்கலாம்!

ஐம்பது ஆண்டு காலம் வரை, மகசூல் தரும், முருங்கை ரகத்தை உற்பத்தி செய்து, சாகுபடி செய்து வரும், சடையாண்டி: 

நான், திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். 'முருங்கையை போட்டவன், வெறுங்கையா நின்னதுல்ல' என்பது பழமொழி.நான், 10 ஆண்டுகளாக முருங்கை சாகுபடி செய்து வருகிறேன். விதைகள் மூலம், முருங்கையை வளர்த்தால், காய்ப்புக்கு வர, இரண்டு ஆண்டுகளாகும்.தற்போது, தரமற்ற கன்றுகளே கிடைப்பதால், பயிரிட்ட இரண்டு ஆண்டுகளிலேயே, அவை அழிந்து விடுகின்றன. அதனால், நல்ல காய்ப்புத் திறன் உள்ள மரத்திலிருந்து, 'விண் பதியம்' முறையில், கன்றுகளை, நானே உற்பத்தி செய்து, 7 ஏக்கரில் பயிரிட்டு வருகிறேன்.முருங்கை, எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது. எனி னும், மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் நிலங்கள் மிகவும் ஏற்றது. நன்கு வளர்ந்த ஆரோக்கியமான மரத்தின் தண்டுப்பகுதியின் மேற்தோலை, வட்ட வடிவமாக வெட்டியெடுக்க வேண்டும்.அந்த இடத்தில், தென்னை நார்க்கழிவு, பஞ்சகாவியம், நுண்ணுயிர் உரங்கள் கலந்து, ஈரப்பதத்துடன் பாலிதீன் பேப்பரை வைத்து, நுாலால் இருபுறமும் இறுக்கிக் கட்ட வேண்டும். வேர் விட்ட பின், இதை தனியாக சிறு பைகளில், இரண்டு மாதங்கள் வரை வளர்த்து, 15 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முதலில், ஒரு ஏக்கரின் பாதி அளவுக்கு நட்டு, ஆறு மாதங்கள் கழித்து, மீதி, இடத்தில் நடவு செய்தால், ஆண்டு முழுவதும் அறுவடை செய்யலாம்.புது குருத்துகள் வர, முருங்கையை, ஒடித்து வளர்ப்பது மிக முக்கியம். வாரமொரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. கன்றை நட்ட ஆறாவது மாதத்தில், பூப்பிடிக்கும்; எட்டாவது மாதத்திலேயே, காய்ப்புத் துவங்கி விடும்.நுாற்புழுத் தாக்குதல் அதிகம் இருக்கும். இவை இலை, பூ, காம்புகளை சாப்பிட்டு விடும். கங்கணம் பூச்சி, முருங்கையின் வேரைத் தாக்கி, மரத்தையே அழித்து விடும். மேலும், தேயிலைக் கொசுக்கள் மரத்தில் உள்ள, அனைத்து இலைகளையும் சாப்பிட்டு, மரத்தையே மொட்டையாக்கி விடும்.இதை, இயற்கைப் பூச்சி விரட்டிகளை பயன்படுத்திக் கட்டுபடுத்தலாம்.ஆண்டுக்கு, மூன்று மாத இடைவெளியில், மூன்று காய்ப்பு கிடைக்கும். ஒன்றரை வயதுக்கு மேல் உள்ள முருங்கையில், ஒரு காய்ப்புக்கு ஒரு மரத்திலிருந்து, 200 கிலோ காய்கள் கிடைக்கும். இவற்றை முறையாக பராமரித்தால், 50 ஆண்டு காலம் வரை, மகசூலை அள்ளிக் கொண்டே இருக்கலாம்.



endrum anbudan

vijiram
 
ramsDate: Wednesday, 12 Feb 2014, 9:41 AM | Message # 99
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
உலக "டிசைன்' நகரம்

குளிர் மிகுந்த பின்லாந்து நாட்டின் ஹெல்சிங்கி நகரம், உலக "டிசைன்' நகரம் என்ற சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது.உலகெங்கும் புகழ்பெற்ற "நோக்கியா', ஹெல்சிங்கி நகரத்தின் உள்ளூர் தயாரிப்பு. டிசைன் நகரம் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஹெல்சிங்கி நகரில் "ஆர்ட் ஆண்ட் டிசைன்' பல்கலைக்கழகம் உள்ளது.ஹெல்சிங்கி நகரின் ஒரு பகுதி "டிசைன் டிஸ்ட்ரிக்ட்' என உருவாக்கப்பட்டுள்ளது. "டிசைன் டிஸ்ட்ரிக்ட்' பகுதியில் ஒவ்வொரு இடமுமே தனித்துவத்துடன் உள்ளது.
 



endrum anbudan

vijiram
 
shanDate: Wednesday, 12 Feb 2014, 11:01 AM | Message # 100
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
arumaiyaana tagavalgal ram.
 
Search: