Quote srk (
)
கால்களே இவ்வளோ அழகா இருக்கே என்ற வியப்புடன் நிமிர்ந்து பார்த்தவள் இமைக்க மறந்தாள். காதில் ஒலித்த பாடல் இப்போது அவள் இதயத்தில்...........
ஆடி காரிலிருந்து ஆடாமல் இறங்கிய நந்தனும் எதிரில் நின்றிருந்த சந்தனச் சிலையை இமைக்காமல் பார்த்தான்.
செல்வதற்கு வழியில்லாமல் ஆடி ...கடுப்படைந்து எழுப்பிய சத்தத்தில் இருவரின் கண்களும் மனமில்லாமல் பிரிந்தது.
அவசரமாக தன் ஆடி காரில் ஏறி புயலென பறந்த நந்தனின் மனம் ரோடில் கண்ட தேவதையை சுற்றி கொண்டிருந்தது.
அலை கடலென புரளும் பட்டு போன்ற கேசமும், .... தெரிந்த மின்னலும் இப்போது நினைத்தாலும் அவளின் கன்னங்களை சிவக்க வைத்தது.
அந்த பன்னாட்டு நிறுவனத்தை ஒற்றை ஆளாய்.. உலகில் எல்லோரும் வியந்து நோக்கும் நந்தனேதான். இந்த சிறிய வயதில் அவன் இந்த நிலைக்கு வர காரணம் அவனது அயராத உழைப்பே உழைப்பே...
எனக்கு ஒரு (பல) டவுட்டு
எப்படி நாயகிக்கு X-ரே கண்களோ....அழகான கால்களை பார்க்க முடியுது.
சந்தன சிலை..சந்தன சிலைன்னு சொல்லுறாங்களே... அது சந்தனமரக்கட்டை கொண்டு செஞ்சதுதானே.... அப்போ லீகல்/ இல்லீகல்
ஓரமா கடலை வறுத்தால் யாரும் கடுப்பாகி ஹோர்ன் அடிக்க மாட்டாங்களே!
புயலா வண்டிய ஓட்டாமலே சடன் பிரேக் போடுறாங்க..இவிங்க புயல் மாதிரி பறந்தால் நிலைமை என்ன ஆகும்?
நம்ப நாட்டுல ...தமிழ் நாட்டுல எத்தனை பன்னாட்டு நிறுவனம் இருக்கணும்..அதுவும் நம்ப ஆளுங்களுக்கு சொந்தமா! அதுவும் திருமணம் ஆகாத வயசு பசங்களுக்கு!
கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்!
மத்தவங்க எல்லாம் உழைக்கறது இல்லை...அதுனால தான் அவங்களுக்கு சொந்தமா பன்னாட்டு நிறுவனம் இல்லை!