KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Wednesday, 27 Apr 2016, 1:51 PM | Message # 191 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| இரத்த விருத்திக்கு பாட்டி வைத்தியம்
முருங்கைக் கீரையைக் கொண்டுவந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு கோழிமுட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.
பொன்னாங்கண்ணிக் கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும்.
அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.
தினசரி உலர்ந்த திராட்சையோ அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டுவர ரத்தம் தூய்மை பெறும்.
தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்பிட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பாலைக்குடித்து வந்தால், புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
அத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்க வல்லது, “ஹீமோகுளோபின்” குறைவு காரணமாக உடம்பு வெளுத்து, சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பவர்கள், தினசரி சீமை அத்திப்பழம் ( நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும் ) தினசரி 3 எடுத்து காய்ச்சிய பசும்பாலில் போட்டு வேகவைத்து தேன் 1 ஸ்பூன் கலந்து தினம் 1 வேளை பருகிவர, 2 மாதத்தில் உடம்பில் இரத்தம் ஓட்டம் பெருகிப் பருத்துப் பூரித்துக் காணும். உடல் வெப்பம் தணித்து மலக்குடல் தூய்மை ஆகி, உடம்பெங்கும் புத்துணர்வு மலரும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Wednesday, 27 Apr 2016, 1:55 PM | Message # 192 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள் - இயற்கை மருத்துவம்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.
* கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
* செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
* கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
* கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
* சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
* பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
* அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
* தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
* மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
* கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
* முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 09 May 2016, 1:45 PM | Message # 193 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| Ginger....
இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் - இயற்கை மருத்துவம்இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள்.இஞ்சியில் உள்ள சத்துக்கள்:-இஞ்சி நிறைய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. அதில் விட்டமின் ஏ,சி ஈ,மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ளது, அதோடு மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற கனிம சத்துக்களும் உள்ளன.இஞ்சி டீ செய்யும் முறை:-தேவையானவை:-4-6 தோலை நீக்கிய மெலிதான இஞ்சித் துண்டுகள் 1.5-2 கப் குடிநீர் சில துளிகள் எலுமிச்சை சாறு 1-2 தேக்கரண்டி தேன்இஞ்சியின் தோலை முழுவதுமாக நீக்கவும். மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவுள்ள நீரைக் கொதிக்க வைய்யுங்கள். அதில் இஞ்சித் துண்டுகளை சேர்க்கவும். 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள்.பின் அதனை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு கலக்கவும் 1-2 தேக்கரண்டி தேனை சேர்த்து பருகவும். இது மிகவும் ருசியாக இருக்கும். பசியை நன்கு தூண்டும்இன்னும் சுவையான அரோமா கலந்த சுவை வேண்டுமென்றால், நீரில் இஞ்சியைக் கொதிக்க வைக்கும் போது, கூடவே பட்டை,புதினா தழையை போட வேண்டும். அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் மட்டுமே குடிக்க வேண்டும்.இஞ்சி டீ குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்:-ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது:-இஞ்சி டீ ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மற்ற சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்ல உதவி புரிகிறது. செல் வளர்ச்சியை தூண்டுகிறது.சிறந்த வலி நிவாரணி:-'ஜிஞ்சரால்' என்ற பொருள் இஞ்சியில் உள்ளது. அது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. நம் உடலில் காக்ஸ்-2 என்ற என்ஸைம் தான் வலியைத் தருகிறது. அதன் செயலை தடுக்க இஞ்சி உதவி புரிந்து வலியை குறைக்கச் செய்கிறது. தொடர்ந்து இஞ்சி டீயை எடுத்துக் கொள்ளும் போது, எலும்பு சம்பந்தமான வியாதிகளான, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம், கீல்வாதம் ஆகியவற்றால் ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மைக்ரைன் எனப்படும் நாள்பட்ட ஒற்றை தலைவலி, டென்ஷனினால் வரக் கூடிய தலைவலி ஆகியவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.மாத விடாய் பிரச்சனைகளுக்குத் தீர்வு :-தொடர்ந்து இஞ்சியை உட்கொள்ளும்போது, ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகிறது என 2014 ம் ஆண்டில் ISRN (Obstetrics and Gynecology) என்ற இதழ் ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது. மாதவிடாயின் போது வெதுவெதுப்பான இஞ்சி டீ குடிப்பதனால், தசைகளுக்கு ஓய்வு தந்து, வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளை போக்கி இதம் அளிக்கிறது.வாந்தியா?வயிற்று வலியா?இஞ்சி டீ இருந்தால் கவலையில்லை:-இஞ்சியில் இருக்கும் ஃபீனால் மற்றும் வோலடைல் ஆயில் ஆகியவை நரம்பு மண்டலத்தை தூண்டி, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்குகிறது. குமட்டல், வாந்தியை தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு அருமையான மருந்தாகும், வாய்வினைப் போக்கும். ஜீரணத்தை தூண்டும். கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதத்தில் வரக் கூடிய வாந்தியினை இஞ்சி டீக் கொண்டு தடுக்கலாம்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:-இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செல்களை அதிகரிக்கச் செய்கிறது. தொற்றுக்களை அகற்ற உதவி புரிகிறது. உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.சுவாசத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுதலை:-இஞ்சி மார்பில் கட்டியிருக்கும் சளியை கரைக்கும். ஆஸ்த்மா நோயாளிகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும். சாதாரண சளி, இருமல்,வறட்டு இருமல், மற்றும் நுரையீரல் தொடர்பாக ஏற்படும் தொற்றிற்கும் நிவாரணம் அளிக்கிறது.கொழுப்பினை கரைக்கிறது:-உடலின் குடலில் படியும் கொழுப்பினை இஞ்சி வெகுவாக குறைக்கிறது. பைல் அமிலத்தின் சுரப்பினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் கொழுப்பு உடலிலேயே தங்காமல் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. உடல் பருமனை குறைக்கும்.இஞ்சி டீ அதிகமாக உட்கொண்டாலும் பக்க விளைவுகள் :-இஞ்சியை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது குமட்டல் வாந்தி வரலாம். இது அமிலத்தன்மை கொண்டுள்ளதால், அசிடிட்டி அதிகரிக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இஞ்சியை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதய நோய் உள்ளவர்கள், பித்தப்பை கற்கள் உள்ள நோயாளிகள், மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 09 May 2016, 1:46 PM | Message # 194 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| குறையொன்றுமில்லை பாடல் பிறந்த கதை;
1925. நாடெங்கிலும் காந்தியின் தலைமையில் விடுதலைப் போராட்டம் புது எழுச்சி கொண்டிருந்த காலகட்டம். காசையும் வாங்கிக் கொண்டு கேசையும் ஏற்றுக் கொண்டு தானும் கோர்ட்டுக்குப் போகமாட்டேன் அடுத்தவனையும் போகவிடமாட்டேன் என்ற தற்போதைய நீதிமன்றப் புறக்கணிப்பைப் போலன்றி ஏழு வருடங்களாக ஒத்துழையாமை இயக்கத்தின் கீழ் தங்கள் சன்னத்துகளை திரும்பத் தந்துவிட்டு அந்நிய அரசின் நீதிமன்றங்களை அன்றைய வக்கீல்கள் முழுமையாகப் புறக்கணித்து வந்த காலம். தற்போதைய ஆந்திர மாநிலத்திலிருக்கும் சித்தூரிலிருந்த ஒரு காங்கிரஸ் மேலவை உறுப்பினரும் மூதறிஞர் ராஜாஜியின் நண்பருமான ஒரு வக்கீல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமரர் ராஜாஜி சித்தூர் செல்கிறார். காந்தியின் கட்டளையை மீறி ஒரு குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு 'தாழ்த்தப்பட்ட பஞ்சமனுக்கு' அப்பீலில் ஆஜராவதாக அவர் துணிந்து முடிவெடுத்திருந்தார். அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி என்ற எண்ணத்திற்கு அவர் வந்திருந்தார் என்பதும் கடைசி வரை அதை அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் அவரது மேன்மை. அந்த மனிதன் அப்படி என்ன தவறிழைத்துவிட்டான்? தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து விட்டதால் அவன் திருப்பதி கோவிலுக்குள் நுழைந்து இறைவனைப் பார்த்து வணங்க அனுமதியற்ற அவலமான காலகட்டம். அப்போதிருந்த நீதிமன்றம் அதை மீறும் 'பஞ்சமர்களை' சிறைக்கு அனுப்பிய காலம். அந்த மனிதன் பத்து வருடங்களாக திருப்பதி கோவிலுக்குள் செல்லத் துடிக்கிறான். அனுமதி இல்லை. ஒரு நாள் 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் பக்திமேலிட கோவிலுக்குள் நுழைய காவலர் கைது செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான். அவனுக்காக அப்பீல் செய்த அந்த சித்தூர் வக்கீல் குற்ற வழக்குகளில் ஜாம்பவான் ஆகிய ராஜாஜிக்கு அந்த அப்பீலை நடாத்தித் தரும்படி வேண்டுகிறார். ராஜாஜிக்கு மிகப்பெரிய சவால். ஏழு வருடங்களாக காந்தியின் கட்டளைக்கிணங்கி தான் புறக்கணித்து வந்த நீதிமன்றப் பணியை இந்த ஒரு வழக்கிற்காக மீண்டும் ஏற்பதா? வேண்டாமா? கட்சியா? நியாயமா? அரிசனங்களின் ஆலயப்பிரவேசம் அவசியமானது என்ற அவரது கொளகைக்கு முன்னால் காந்தியின் கட்டளை தோற்கிறது. அந்த ஏழைக்காக சித்தூர் செசன்ஸ் கோர்ட்டில் அந்த மேல்முறையீட்டில் ஆஜராக ராஜாஜி முடிவெடுக்கிறார். ஆனால் அவரது வக்கீல் தொழிலுக்கான உரிமத்தை பல்லாயிரக் கணக்கான காங்கிரஸ் வக்கீல்கள் போல அவரும் பார் கவுன்சிலிடம் திரும்பத் தந்துவிட்டாரே? எப்படி ஆஜராவது என்கிறார் அந்த சித்தூர் வக்கீல். கவலை வேண்டாம் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் வக்கீலாக இல்லாமல் வக்காலத்து இல்லாமல் தனிமனிதனாக ஒரு குற்றவாளிக்கு ஆஜராக வழி உண்டு என்பதை சுட்டிக்காட்டி அவர் சித்தூர் சென்ற நாள் 22-12-1925. ஆங்கிலேய நீதிபதி அவருக்கு விதிகளின் படி அனுமதி அளிக்க மூதறிஞர் ராஜாஜி அவருக்கே உரித்தான சட்ட ஞானத்தோடு வக்கீல் உடையின்றி சிவில் உடையோடு அவ்வழக்கை நடத்தி அந்த மனிதனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். அவனைத் தன்னோடு திருக்கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார். தெய்வ தரிசனம் அவனுக்குப் பரவசத்தையும் இவருக்கு மகிழ்வையும் தருகிறது. அந்த உணர்வு மேலீட்டில் மூதறிஞர் எழுதிய பாடல்தான் ' குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' கீர்த்தனை. பிற்பாடு தனக்கு மாப்பிள்ளை ஆகியவரும் காந்தியின் மகனுமான தேவதாஸ் காந்திக்கு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து இந்த சம்பவத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதுகிறார். அது காந்தியாரின் பார்வைக்குச் செல்கிறது. ஒரு உன்னதமான காரியத்தைச் செய்த்தற்காக அந்த மகாத்மா இந்த உத்தமரைப் பாராட்டுகிறார். அக்கடிதங்களை சபர்மதி ஆசிரமத்தில் தான் பார்த்ததாக ஒரு முறை இரயில் பயணத்தில் நான் சந்தித்த ஒரு அன்பர் சொன்னார். இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து முதன்முதலாக ராஜாஜியின் நினைவாக தி இந்து நாளிதழில் 2002 ம் வருடம் டிசம்பர் 24ம் தேதி ராஜாஜியின் பேரன் கோபால் காந்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதை இத்துடன் லிங்க்கியிருக்கிறேன். சற்றே நினைத்துப்பாருங்கள். 1925 ல் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் யாருக்கும் தெரியாமல் போகிறது. பிற்பாடு 1967ல் கல்கி வார இதழ் ராஜாஜி எழுதிய இப்பாடலை முதல் தடவையாக பதிப்பித்தது. ஆனாலும் இப்பாடலை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது இசையரசி எம். எஸ். சுப்புலக்ஷ்மி தான். 1979ம் வருடம் HMV நிறுவனம் எம்.எஸ். பாடிய ஸ்ரீவேங்கடேச பஞ்சரத்னமாலா என்ற ஒலித்தட்டில் இப்பாடலை அவர் அற்புதமாகப் பாடி அருமையான அப்பாடலுக்கு மேலும் மெருகேற்றியிருந்தார். சிவரஞ்சனி, காப்பி மற்றும் சிந்துபைரவி ஆகிய மூன்று ராகங்களில் அமைந்த ராகமாலிகைப் பாடல் கேட்பவர்களை உன்மத்தம் அடையச் செய்ய வல்லது. பதிவுசெய்யப்பட்டாலும் சரித்திரம் மறந்த அந்த உன்னதமான சம்பவத்தையும் அந்த உத்தமரின் மேன்மையையும் தங்களின் மேலான பார்வைக்கு வைப்பதில் இந்த எளியவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததால் எனக்கும் குறை ஒன்றும் இல்லை.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 09 May 2016, 1:48 PM | Message # 195 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| Vazhimuraikkal....
1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.6.அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு. 13. திருடாதீர்கள்.14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளிக்கொடுங்கள். ஏனென்றால் நாம் போகும்போது சிறிதும் அள்ளிச்செல்ல முடியாது...
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 09 May 2016, 1:49 PM | Message # 196 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| patty Vaithiyam.. Health tips...
1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.6. சிரங்கு தொல்லையா? சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 09 May 2016, 1:50 PM | Message # 197 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சமைப்பது ஆரோக்கியமானதா?
காய்கறி, பழங்களை முதல் நாளே நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சமைப்பது ஆரோக்கியமானதா? அதனால் சத்துகள் அழிய வாய்ப்புண்டா?சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்வேலைக்குச் செல்கிறவர்கள் வேறு வழியின்றி, இது போல முதல் நாளே காய்கறிகளை நறுக்கியும், ஒரு வாரத்துக்கான காய்கறிகளை நறுக்கியும் வைத்து உபயோகிக்கிறார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் இப்படிச் செய்ய வேண்டாம். நம்முடைய உணவுகளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் எனப்படுகிற உயிர்வழி காக்கும்எதிர்காரணிகளின் பங்கு மிக முக்கியமானது. அந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் இருந்தால்தான் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸை இழப்பதென்பது நம்மை அறியாமல் தினசரி பல விதங்களில் நடந்து கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு சமைக்கும் போது காய்கறிகளை லேசாக வதக்கி, அவ்வப்போது தண்ணீர் தெளித்துச் செய்கிற போது, அது 50 சதவிகிதம் வரை குறையும். அதுவே ஆவியில வேக வைத்து சமைக்கிற போது அதிகபட்ச ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் கிடைக்கும். எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சமைக்கிற போது மொத்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்டும் வீணாகி விடும்.காய்கறி, பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடும் போது 100 சதவிகித ஆன்ட்டி ஆக்சிடென்ட் கிடைக்கும். காய்கறி, பழங்களை நறுக்கி வைத்து நீண்ட நேரம் கழித்துப் பயன்படுத்தினாலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் முழுமையாகக் கிடைக்காது. இட்லி, தோசை போன்றவற்றுக்கு ஊற வைத்து அரைத்துப் பொங்க விட்டுச் செய்கிறோம். அப்படிச் செய்கிற இட்லி, தோசையில்கூட ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போதுமான அளவு நமக்குக் கிடைக்கும். உணவுப் பொருட்களில் உள்ள என்சைம்கள், காற்றுடன் கலந்து ஆக்சிடைஸ் ஆனால், அவற்றில் உள்ள சத்துகள் பறிபோகும். அப்படிச் செய்யாமல் தவிர்க்கிற மாதிரி சமைத்து சாப்பிட வேண்டியது நம் பொறுப்பு.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 09 May 2016, 1:52 PM | Message # 198 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும்.அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது கடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. தூதுவளை பவுடர் : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. துளசி பவுடர் : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. ஆவரம்பூ பவுடர் : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். கண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. ரோஜாபூ பவுடர் : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். ஓரிதழ் தாமரை பவுடர்: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், ஜாதிக்காய் பவுடர்: நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். திப்பிலி பவுடர்: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. வெந்தய பவுடர்: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. நிலவாகை பவுடர்: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். நாயுருவி பவுடர்: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. கறிவேப்பிலை பவுடர்: கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. வேப்பிலை பவுடர்: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. திரிபலா பவுடர்: வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். அதிமதுரம் பவுடர்: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். துத்தி இலை பவுடர்: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. செம்பருத்திபூ பவுடர்: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. கரிசலாங்கண்ணி பவுடர்: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. சிறியாநங்கை பவுடர்: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. கீழாநெல்லி பவுடர்: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. முடக்கத்தான் பவுடர்: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. கோரைகிழங்கு பவுடர்: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. குப்பைமேனி பவுடர்: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. பொன்னாங்கண்ணி பவுடர்: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. முருஙகைவிதை பவுடர்: ஆண்மை சக்தி கூடும். லவங்கபட்டை பவுடர்: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. வாதநாராயணன் பவுடர்: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். பாகற்காய் பவுட்ர்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் வாழைத்தண்டு பவுடர்: சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. மணத்தக்காளி பவுடர்: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். சித்தரத்தை பவுடர்: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. பொடுதலை பவுடர்: பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும். சுக்கு பவுடர்: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. ஆடாதொடை பவுடர்: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. கருஞ்சீரகப்பவுடர்: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். வெட்டி வேர் பவுடர்: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். வெள்ளருக்கு பவுடர்: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். நன்னாரி பவுடர்: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. நெருஞ்சில் பவுடர்: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். பிரசவ சாமான் பவுடர்: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. கஸ்தூரி மஞ்சள் பவுடர்: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். பூலாங்கிழங்கு பவுடர்: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். வசம்பு பவுடர்: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். சோற்று கற்றாலை பவுடர்: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். மருதாணி பவுடர்: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். கருவேலம்பட்டை பவுடர்: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 09 May 2016, 2:04 PM | Message # 199 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! !
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |