KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Thursday, 22 May 2014, 2:28 PM | Message # 141 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| Hi shanthi, lakshmi,
Thanks for ur comments.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 22 May 2014, 2:28 PM | Message # 142 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| இட்லி சாப்பிடுங்கள்! நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன. அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது. இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும் போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி, முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா, கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக இருக்கிறது. அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது. எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
shan | Date: Thursday, 22 May 2014, 5:15 PM | Message # 143 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| இட்லியில் இவ்வளோ மகிமையா ....வாரத்தில் 3 நாள் இந்த டிபன் தான். நன்றி கோதை
|
|
| |
kvsuresh | Date: Friday, 23 May 2014, 3:11 PM | Message # 144 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| நன்றி சாந்தி,
நம் முன்னோர்கள் எல்லாம் தெரிந்து தான் நடைமுறை படுத்தி இருக்காங்க,
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
sai | Date: Friday, 23 May 2014, 7:22 PM | Message # 145 |
Lieutenant colonel
Group: Users
Messages: 137
Status: Offline
| Great information abt Idly.Thank u.
|
|
| |
lakshmi | Date: Monday, 26 May 2014, 9:18 AM | Message # 146 |
 Major
Group: Users
Messages: 92
Status: Offline
| Hi Kvsuresh,
Thanks for the Idly infos.
Message edited by lakshmi - Monday, 26 May 2014, 9:18 AM |
|
| |
kvsuresh | Date: Wednesday, 28 May 2014, 1:40 PM | Message # 147 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| thanks sai lakshmi.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Wednesday, 28 May 2014, 1:41 PM | Message # 148 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?
சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். "ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா' என்றே முதலில் உச்சரித்தார். "மரா' என்றாலும், "ராம' என்றாலும் "பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால் "இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Wednesday, 28 May 2014, 1:42 PM | Message # 149 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சடாரியை தலையில் வைப்பதன் தத்துவம் !
ஒரு குழந்தை கருப்பையில் இருந்து வெளியேறும் போது சடம் என்ற வாயு வெளியேறுகிறது. இந்த வாயு உலகமாயை என்னும் குடும்பப் பாச பிணைப்பில் மக்களை தள்ளிவிடும் சக்தி கொண்டது. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் மாயை என்னும் சக்தியை வென்றவராக பிறப்பின் போதே பகவானால் பூமிக்கு தரப்பட்டார். அவரே நம்மாழ்வார். பெருமாளின் பாதங்களுக்கு சமமானவர். எனவே அவரது பாதம் பொறித்த சடாரி என்னும் கலனை தலையில் சார்த்துகிறார்கள். இதனால் பாச பந்தங்களிலிருந்து மனிதன் விலகுவான். சடம் என்ற சொல்லில் இருந்து சடாரி என்ற வார்த்தை பிறந்தது. தினமும் சடாரியை தலையில் சார்த்தி பாச பந்தங்களை அறுத்து, விரைவில் இறைவன் திருவடியை அடையலாம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
shan | Date: Wednesday, 28 May 2014, 1:58 PM | Message # 150 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் கோதை , ராமஜெயம் விளக்கமும் ,ராமின் அர்த்தமும் கேள்விப்பட்டதில்லை நன்றி . சடாரி என்றால் என்ன ?
|
|
| |