வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் - Page 7 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
JanviDate: Thursday, 16 Oct 2014, 9:27 PM | Message # 61
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
இந்தியாவில் பசுமைப் புரட்சி
 
இந்தியா விடுதலை அடைந்தபோது அதன் உணவு உற்பத்தி மிகக் கவலை தருவதாக இருந்தது.விவசாயிகள் கடன் சுமையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கைவசம் மிகக் குறைந்த அளவு நிலமே இருந்தது.அதிலும் அவர்களின் துண்டு நிலங்களும் ஒரே இடத்தில் இருக்காமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.புதிய விவசாயக் கருவிகளைப் பற்றி அறிந்திருந்தவர்களிடம் அவற்றை வாங்கிப் பயன்படுத்த போதிய பணம் இல்லை.வானம் பார்த்த விவசாயம் .வானம் பொய்த்தபோது உணவு உற்பத்தியும் குறைந்தது.நிலத்தின் உற்பத்தித் திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவாக இருந்தன.மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
 
JanviDate: Thursday, 16 Oct 2014, 9:28 PM | Message # 62
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 தீவிளைவுகள்

 
பசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நீரிழிவு, புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறவி ஊனம்
, கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான்.இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.
“சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.”வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்
 
JanviDate: Wednesday, 05 Nov 2014, 10:29 PM | Message # 63
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
சொட்டுநீர்ப் பாசனத்துக்கு 50% மானியம்!


வழிகாட்டி ஆறுச்சாமி
சொட்டுநீர்ப் பாசனத்துக்கு 50% மானியம்!
'நபார்டு' வங்கியின் உதவியோடு சிறிய அளவிலான நீர்ப் பாசனத் திட்டங்கள், நிலத்தை
மேம்படுத்துதல், தோட்டக்கலை, விவசாயப் பொறியியல், காடுகள், தரிசுநில
மேம்பாடு, மீன்வளம், கால்நடை, மருத்துவ மற்றும் மூலிகை பயிர்கள், உயிரித்
தொழில்நுட்பம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன என்று முந்தைய
இதழில் பார்த்தோம். அவற்றை ஒவ்வொன்றாக இனி அலசுவோம். இதைப் படித்ததும்
Ôநபார்டு வங்கி' அலுவலகம் எங்கே என்று தேட ஆரம்பித்து விடாதீர்கள். இந்தத்
திட்டங்கள் அனைத்துக்கும் உங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கபட்ட வங்கிகள்
கடனுதவி செய்கின்றன. இந்தத் திட்டங் களில் உள்ள அடிப்படையான தகவல்களைச்
சொல்கிறேன். மேற்கொண்டு கடன் வாங்கி சாதனை விவசாயியாக மாறுவது உங்கள்
கையில்தான் உள்ளது.
சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற பிரிவில் ஆறு வகையான செயல்பாடுகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. 1. சொட்டுநீர்ப்
பாசனம், 2. திறந்தவெளிக் கிணறு, 3. நீர் இறைக்கும் பம்ப்செட், 4. தெளிப்பு
நீர்ப் பாசனம், 5. ஆழ்துளைக் கிணறு, 6. நீர் ஏற்றும் பாசனம். முதலில் நாம் பேச இருப்பது சொட்டு நீர்ப் பாசனம் பற்றித்தான். இது முக்கியமாக
காய்கறி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஏற்றது. வழக்கமாக பயன்படுத்தும்
நீரைவிட 50% குறைவான நீரே செலவாகும். அதன் காரண மாகவே நாடு முழுக்க உள்ள
விவசாயிகளை சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க மத்திய அரசு ஊக்கப்படுத்தி
வருகிறது. விவசாயிக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. வங்கியில் கடன்
பெறும்போது 50% மானியம் போக மீதியுள்ள 50% தொகையைத் திருப்பிச்
செலுத்தினால் போதும். சிறு மற்றும் குறு விவசாயிகள் 10 முதல் 15
ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். நபார்டு
திட்டத்தின்படி கடன் வாங்க வேண்டும் என்றால் வங்கி அதிகாரி சொல்லும்
தொழிநுட்ப ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்பது நிபந்தனை.
--- நன்றி பசுமை விகடன்
 
RAWALIKADate: Thursday, 15 Jan 2015, 4:50 PM | Message # 64
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
''மாடித்தோட்டம் அமைப்பதற்கு அரசு மானியம் உண்டா? அதை எப்படி பெறுவது?'


எஸ்.குமார், திருச்சி.



சென்னையில் உள்ள திருவான்மியூர் உதவித் தோட்டக்கலை அலுவலர் டி.செந்தில்குமரன் பதில் சொல்கிறார்.
''தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் நகர்ப்புறத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 'நீங்களே செய்து பாருங்கள்’ என்ற பெயரில் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்சமயம் சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகர் பகுதியில் மட்டுமே செயல்படும் இத்திட்டம், இப்பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் வீட்டின் மாடி மற்றும் பால்கனி பகுதிகளில் எளிய முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துகிறோம். அதாவது, மாடியில் பத்து வகையான காய்கறிகளை உற்பத்தி செய்ய தேவையான 2,650 ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் அடங்கிய தளை ஒன்றினை (KIT) 50 சதவிகித மானிய விலையில் 1,325 ரூபாய்க்கு வழங்குகிறோம். ஒரு தளை மூலம் தோட்டம் அமைக்க, 150 சதுர அடி இடம் போதுமானது. அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 தளைகள் வரை வழங்கப்படுகிறது.



ஒவ்வொரு தளையிலும் தென்னை நார்க்கழிவு கட்டி, பாலித்தீன் பை, காய்கறி விதைகள், பாலித்தீன் விரிப்பு, உயிர் உரங்கள், உயிர் பூஞ்சணக்கொல்லி, இயற்கை வேம்பு பூச்சிக்கொல்லி என்று 13 விதமான பொருட்கள் இருக்கும். மண்ணைவிட எடைகுறைந்த, அதேசமயம் நீர்ப்பிடிப்பு அதிகம் கொண்டது என்பதால்தான், தென்னை நார்க்கழிவை செடிகள் வளர்ப்பதற்கான ஊடகமாகக் கொடுக்கிறோம். செடிகளை வளர்க்க நாங்கள் வழங்கும் பாலித்தீன் பைகள் எடை குறைந்த மற்றும் யு.வி.கதிர்களைத் தாங்கும் திறன்கொண்டதாக இருக்கும். காய்கறி விதைகளில்.... கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, செடிஅவரை, முள்ளங்கி, சிறுகீரை, பாலக்கீரை மற்றும் கொத்தமல்லி ஆகிய விதைகள் மூன்று பருவங்களுக்கும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. இயற்கை முறையிலான பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சணக்கொல்லிகளையே, மாடித் தோட்டங்களில் பயன்படுத்த ஆலோசனை வழங்குகிறோம்

இந்தத் திட்டத்தில் பயன்பெற சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகர மக்கள் மட்டுமே தகுதியானவர்கள். இருப்பிடச் சான்று நகலுடன், எங்கள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் விளக்கப்படும். வாடகை வீட்டில் வசிப்பவர்களும்கூட மானியம் பெற்று மாடித்தோட்டம் அமைக்கலாம் என்பது குறிப்பிடதக்கது. இணையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.'' இணையதள முகவரி: 
http://tnhorticulture.tn.gov.in/horti/do-it-yourself-kit
 
JanviDate: Wednesday, 11 Feb 2015, 6:29 PM | Message # 65
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வீட்டுத் தோட்டத்தில் பூண்டுச் செடியை வளர்க்கும் வழிகள்!!!

பண வீக்கம் அதிகரிக்கும் இந்த சூழலில் காய்கறிகளின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன. இதை சரிக்கட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை நாம் ஒரு வீட்டுத் தோட்டம் அமைத்து பயனடையலாம். சிறிது முயற்சி எடுத்தால் போதும் அதை மிகவும் சிறப்பாகவும், அழகாகவும் வளர்க்க பராமரிக்கச் செய்ய முடியும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் நாம் புதிய காய்கறிகளை இதன் மூலம் பெற முடியும். உங்களின் அக்கறை கொண்டு மிகவும் கவனமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள் நிச்சயம் சுவைக்காமல் போகாது. இப்போது புதிதாக காய்த்த காய்கறிகளை நாம் வாங்கி சமைக்க முடிவதில்லை. இத்தகைய முயற்சி நமது ஆரோக்கியத்தையும் பணத்தையும் சேமிக்கும் வண்ணம் அமைகின்றது. 



சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க சிறது முயற்சி தேவைபடுகின்றது. தற்போதைய நவீன கால சூழலில் பெரிய தோட்டத்தை அமைப்பது கடினம் தான். ஆனால் நிச்சயம் சில செடிகளை நடுவதற்கும் வைப்பதற்கும் வெளியில் இடம் இருக்கும். உங்கள் பால்கனியில் செடிகளை வளர்ப்பது அழகாகவும் மதிப்பூட்டுவதாகவும் அமையும். அதற்கு சில எளிய வழிகளை கொண்டு நாம் வீட்டுத் தோட்டங்களை அமைக்க முடியும். இதை அமைப்பதற்கு முன்னதாக நாம் செய்ய வேண்டிய வேண்டிய காரியங்கள் இரண்டு உள்ளன. முதலாவது அதற்கான இடத்தையும் மற்றும் இரண்டாவதாக எந்த வகை காய்களை பயிர் செய்ய வேண்டுமென்று தேர்ந்தெடுப்பது தான். வளர்க்க முனையும் காய்களில் பூண்டும் ஒரு சிறந்த காய்களில் ஒன்றாகும். உங்கள் சமையலில் பெருமளவில் நாம் எப்போதும் இதை பயன்படுத்துவோம். ஆகையால் இதை முயற்சி செய்யுங்கள். பூண்டு வளர்ப்பது எப்படி என்று ஒரு சில குறிப்புக்களை இங்கு நாம் பார்ப்போம்.
 
JanviDate: Wednesday, 11 Feb 2015, 6:33 PM | Message # 66
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பூண்டை பயிரிடும் காலம்

சமையல் அறை தோட்டத்தில் நாம் பூண்டை பயிரிட திட்டமிடடும் போது, எந்த பருவத்தில் பயிரிட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். எப்படியாயினும், குளிர் காலம் பூண்டு வளர்ப்பிற்கு சிறந்த பருவம் அல்ல. குளிர் காலம் வர ஒரு சில மாதங்களுக்கு முன்பே, நிலம் வறண்ட நிலையில் இருக்கும் போது அதை பயிரிடுவது சிறந்தது. வசதியற்ற பருவ காலத்தில் பூண்டு வளர்க்கும் போது நமக்கு நல்ல பலன் கிடைக்காது.

வேர் பிடிக்கச் செய்தல்

பூண்டை குளிர் காலம் தொடங்கும் முன்னர் விதைத்து விட்டால், அது குளிருக்கு முன்னரே வேர் பிடித்து விடும். பூண்டு வளர்ப்பு ஒரு சில எளிய வழிகளில் மிகவும் சுலபமாக செய்யும் காரியமாகும். முதலில் இதற்காக நிலத்தை பண்படுத்த வேண்டும். நிலம் குளிரின் காரணமாக இறுகுவதற்கு முன் பூண்டை பயிரிடுங்கள். இதனால் அவை சீக்கிரம் வேர் பிடிக்கும். பச்சை இலைகள் குளிர் காலம் வரும் முன்னே தோன்றும். நல்ல வளமான மண்ணைத் தேர்ந்தெடுத்து பூண்டை பயிரிட வேண்டும்.

கவனமாக தேர்ந்தெடுங்கள்

பயிரிடுவதற்கு முன் உங்களுக்கு தேவையான பூண்டு வகையை கவனமாக தேர்ந்தெடுங்கள். இவற்றில் வன் கழுத்து பூண்டு மற்றும் மென் கழுத்து பூண்டு ஆகியவைகள் அடங்கும். வன் கழுத்து பூண்டில் தலை பகுதி சுருண்டு காணப்படும். அதிக அளவு பற்களை மென்மையான கழுத்து பூண்டு வகையில் காண முடியும். பயிரிடும் போது பெரிய பெரிய பூண்டுகளை பயிரிடுங்கள். அப்போது தான் நமக்கும் பெரிய பூண்டு கிடைக்கும். பெரிய பற்களை பயிரிடவும் மற்றும் சிறிய பற்களை நமது சமயல் அறையிலும் பயன்படுத்தலாம்.

பயிரிடுதல்

பூண்டை பயிரிடும்போது மொட்டு மேல் நோக்கி இருப்பது போல் பயிரிடல் வேண்டும். இதை பயிரிட்ட பின் அதன் மேலுள்ள மண்ணை சீர்ப்படுத்துங்கள். இதுவே வீட்டுத் தோட்டத்தில் பூண்டு வளர்க்கும் முறையாகும். ஒரு வகைக்கு மேல் பூண்டுகளை பயிர் செய்தால் நீங்கள் அவற்றின் எல்லைகளை நிர்ணயம் செய்வது நல்லது.

அக்கறையுடன் பார்த்துக்கொள்ளுங்கள்

பயிரிடுவது மட்டுமல்லாமல் அதை நல்ல முறையில் நாம் கவனித்துக் கொள்ளவும் வேண்டும். நல்ல உரமிட்டு மற்றும் தண்ணீர் விட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். மீன் கழிவுகளை எடுத்து வைத்து அவற்றை உரமாக பயன்படுத்தலாம். இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது உரமிடல் வேண்டும். பூண்டிற்கு பெருமளவு நீர் தேவைப்படாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். மண்ணின் தன்மை ஈரப்பதத்துடன் இருப்பது நல்லது. அப்படியில்லாமல் வறண்டு காணப்பட்டால் தண்ணீர் பாய்ச்சுங்கள்.

அறுவடை

ஐந்திலிருந்து ஆறு இலைகள் வரும் வரை காத்திருங்கள். இவை முளைத்த பின் அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். வெயில் காலத்திற்கு முன் அல்லது குளிர்காலத்தில் அதை அறுவடை செய்யலாம்.

--- Thanks to Boldsky
 
JanviDate: Wednesday, 11 Feb 2015, 6:40 PM | Message # 67
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 
JanviDate: Wednesday, 11 Feb 2015, 7:02 PM | Message # 68
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 
RAWALIKADate: Thursday, 12 Feb 2015, 0:18 AM | Message # 69
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுக்குள் விவசாயம்


வீட்டுத்தோட்டம்

நந்தினி செந்தில்நாதன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

''பந்தலிலே பாவக்கா... தொங்குதடி  லோலாக்கா'' என்று ஒரு பெண் பாட...

 ''போகையில பறிச்சுக்கலாம்... போகையில பறிச்சுக்கலாம்'' என்று இன்னொரு பெண் பதில் பாட்டு பாடுகிற கிராமத்து சிலேடை ரொம்பவே பிரபலமானது.

துக்க வீட்டுக்கு வந்த இரண்டு பெண்கள் பாடுவது போல இது அமைந்தாலும், அந்த வீட்டின் புறக்கடை வீட்டுத்தோட்டத்தில் பந்தல் அமைத்து, பாகல் கொடியைப் படர விட்டு இருக்கிறார்கள். பெண்ணின் காதில் தொங்கும் லோலாக்கு போல அதில் பாகல் பிஞ்சுகள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன என்பதாக அறிகிறோம்.



1980-களின் இறுதிவரை புறக்கடை இல்லாத வீடுகளை எங்கும் பார்க்கமுடியாது. ஒவ்வொரு வீட்டுப் புறக்கடையிலும் ஒரு சிறிய கிணறும், அதை ஓட்டிய துவைக்கும் கல்லும், சில வாழை மரங்களும், பூச்செடிகளும், அவரை, பாகல் கொடி படரும் சிறிய பந்தலும், கண்டிப்பாக கறிவேப்பிலை செடியும், ஒரமாய் ஒரு குப்பைக்குழியும், அதில் கீறிப் பறித்து மேய்ந்து திரியும் நாட்டுக்கோழிகளையும் காணாமல் இருக்க முடியாது.

காலச்சக்கரம் சுழற்றி அடித்ததில்... மறு முளைப்புத்திறன் கொண்ட நாட்டு ரக விதைகள் அழிந்து போயின. பெருகிய மக்கள் தொகையால், புறக்கடைகளில் புது வீடுகள் உருவாயின. வீட்டுத்தோட்டங்கள் இல்லாமல் போயின. தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிட மக்களும், தினசரி மார்க்கெட்டுகளுக்கு பை தூக்க ஆரம்பித்தனர். கூட்டுக்குடும்பங்கள் வழக்கொழிந்து போய், கோலம் போட வாசலின்றி 'கூட்டில்’ குடும்பமாய் வசித்து வரும் நம்மால், வீட்டுத்தோட்டத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 2010-ம் ஆண்டு வரை இதுதான் நிலைமை.

வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம்!


ஆனால், ஒவ்வொரு புதுமையும் பழமைக்குத் திரும்பியே ஆகவேண்டும் என்கிற சுழற்சி விதி தன் வேலையைக் காட்ட துவங்கியது. அதன் பலன் அந்தக்காலத்தில் இருந்த புறக்கடைத்தோட்டங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாடித்தோட்டங்களாக பரிணாம வளர்ச்சி பெற்றன. கான்கிரீட் வீடுகளின் மாடியில் தோட்டம் அமைத்து, தங்களது குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்கிற தொழில்நுட்பம் பரவ ஆரம்பித்தது. அதற்காக கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டன. ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டன.

ரசாயனத்தில் விளையும் காய்கறிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து அதன் நச்சுத்தன்மை குறித்து நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் பலரும் விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டனர். அது கிராமங்களைத்தாண்டி நகர்புறங்களில் வசிப்பவர்களையும் வெகுவாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

தங்கள் குடும்பத்துக்குத் தேவையான விஷமில்லா காய்கறிகளை நகரவாசிகளும் மாடித்தோட்டத்தில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசும் தன் பங்குக்கு தோட்டக்கலைத் துறை மூலம் நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டத்தை துவக்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் மாடித்தோட்டம் அமைக்க மானியத்துடன் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள பயனாளிகள் அதைப் பெற்று வீட்டுத்தோட்டங்களை அமைத்து வருகிறார்கள். ஆம், மீண்டும் பழைய காலம் திரும்பிக்கொண்டிருக்கிறது.



2020-ம் ஆண்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தோட்டம் இருக்கும் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. இனி... வீடுதோறும் விவசாயிகள் இருப்பார்கள். இது காலத்தின் கட்டாயம்.
மாடியிலே பாவக்கா... மதில் சுவத்தில் கோவக்கா..!


'பசுமை விகடன்’ அதை மனதில் கொண்டுதான் கடந்த எட்டு ஆண்டுகளாக வீட்டுத்தோட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை வெளியிட்டு வருவதோடு... கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் 'வீட்டுக்குள் விவசாயம்’ என்கிற இந்தப் புதிய பகுதி. வீட்டில் தோட்டம் அமைக்கும் தொழில்நுட்பங்கள், முன்னோடி வீட்டுத் தோட்ட விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவை இந்த பகுதியில் இடம் பெறும். 'பந்தலிலே பாவக்கா...’ என்று சிலேடை பாடிய பெண்கள் இனி.... 'மாடியிலே பாவக்கா... மதில் சுவத்தில் கோவக்கா... விஷமில்லா கத்திரிக்கா... விளைஞ்சிருக்கு பாரக்கா’ என்று மாற்றிப் பாடலாம்.

''வீட்டுத்தோட்டம் ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் கிடையாது. அதன் சூட்சமங்களைப் புரிந்து கொண்டால் உங்களுக்குள் இருக்கிற விவசாயி விழித்தெழுவார்'' என்கிறார், பல ஆண்டுகளாக தங்களது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள், வாழை என விளைவிக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சரஸ்வதி.

முளைப்பாரிதான் மூலாதாரம்!


''கடைக்குப் போனோமா... பணத்தைக் கொடுத்து பை நிறைய காய் வாங்கினோமா... என்ற நிலையில் இருக்கும் பலருக்கு வீட்டுத்தோட்டம் குறித்த ஒரு தயக்கம் நிலவுகிறது. ஆனால், உண்மை அப்படியில்லை... கொஞ்சம் மெனக்கெட்டாலே வீட்டுத்தோட்டம் அமைப்பது ரொம்ப சுலபம். கோயில் திருவிழாக்களில் பெண்கள் பலரும் முளைப்பாரி எடுக்கிறார்கள். திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன் இருந்தே அதற்கான வேலையை வீடுகளில் தொடங்கி விடுவார்கள். நல்ல செம்மண் அல்லது வளமான வண்டல் மண்ணை நிலத்தில் இருந்து தோண்டி எடுத்து வந்து, அதில் உள்ள கட்டிகளை உடைத்து, சிறுகற்களை அப்புறப்படுத்தி அந்த பொலபொலப்பான மண்ணில் சிறிது ஆட்டு எரு அல்லது சாணம் கலந்து பாத்திரத்தில் பாதியளவு கொட்டி சமன்படுத்துவார்கள். தொடர்ந்து முளைப்பாரிக்குத் தேவையான நெல், கம்பு, சிறுசோளம், வரகு, கேழ்வரகு என்று ஏதாவது ஒரு சிறுதானிய விதைகளைத் தூவி அதை கிளறி விட்டு, மண் நனையும்படி தண்ணீர் ஊற்றி வெயில்படும்படி முற்றத்தில வைப்பார்கள். தொடர்ந்து தேவையான தண்ணீரைக் கொடுத்து வர 20 நாட்களில் பாத்திரத்தில் உள்ள விதைகள் முளைத்து 'திகுதிகு’ என்று வளர்ந்து பச்சைப்பசேல் என்று கண்ணைக் கவரும். அதைப் பெருமையோடு ஊர்வலமாய் எடுத்துச் சென்று சாமிக்குப் படைத்துத் திரும்புகிறார்கள். ஆக, பெண்கள்தானே முளைப்பாரியை விதைக்கிறார்கள், விளைவிக்கிறார்கள். ஆம், அந்தத் தொழில்நுட்பம்தான் வீட்டுத்தோட்டத்துக்கு மூலாதாரம்'' என்று வீட்டுத்தோட்ட லாவகம் குறித்து எளிமை விளக்கம் அளித்த சரஸ்வதி தொடர்ந்தார்.



''வீட்டுத்தோட்டம் அமைக்க, குறைந்தபட்சம் 50 சதுர அடி இடம் இருந்தாலே போதுமானது. நல்ல வெயில்படும் இடமாகவும் இருக்க வேண்டும். இதற்குத் தேவையான உபகரணங்களை இரண்டு விதங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஒன்று 'ரெடிமேட் கிட்ஸ்’. இதற்கு செலவு அதிகம். தேடல் குறைவு. அடுத்தது, வீணான பழைய பொருட்களில் செடிகள் வளர்ப்பது. இதற்கு தேடல் அதிகம். செலவு குறைவு. நாங்கள் வீணான பொருட்களைக் கொண்டுதான் வளர்க்கிறோம். அவற்றைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்'
 
JanviDate: Thursday, 26 Feb 2015, 5:35 PM | Message # 70
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
Thanks Rawali-ka
 
Search: