ஈஸியா செய்யலாம் யோகா ! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
ஈஸியா செய்யலாம் யோகா !
RAWALIKADate: Sunday, 09 Mar 2014, 9:44 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
RAWALIKADate: Sunday, 09 Mar 2014, 9:44 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஈஸியா செய்யலாம் யோகா !

 

நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
யோகாவில், சில அடிப்படைப் பயிற்சிகளை சென்ற இதழில் பார்த்தோம். இனி, எளிமையான சில ஆசனங்களை அறிவோம்...

அர்த்த பத்மாசனம்

சுகாசனத்தில் அமர்ந்து, வலது காலை எடுத்து, இடது தொடை மீது வைக்கவும் (வசதிக்கு ஏற்ப காலை மாற்றிக்கொள்ளலாம்). இதே நிலையில் சில நிமிடங்கள் இருந்துவிட்டு, இயல்பு நிலைக்கு வரவும்.பலன்: சுவாசம் சீராகும். கவனம் குவியும். ஞாபக சக்தி மேம்படும்.



பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை. முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களை நீட்டவும். மெள்ள வலது காலை மடித்து, இடது தொடை மீது வைக்கவும். பிறகு, மெதுவாக இடது காலை மடித்து, வலது தொடை மீது வைக்கவும். கை விரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்து, உள்ளங்கைகளை மேல்முகமாக மடி மீது வைக்கவும். இதுவே தியான முத்திரை. கண்களை மூடி, சீராக மூச்சு விடவும். இதே நிலையில் சில நிமிடங்கள் இருந்துவிட்டு, பிறகு மெதுவாகக் கால்களை நேராக்கவும்.

பலன்: இந்த ஆசனம் செய்வதால், மனம் லேசாகும்.  ஒவ்வாத உணவுகளால் ஏற்படும் உடல் பருமன் குறையும். தொடைப் பகுதிகளில் தேவையற்ற தசைப் பகுதி கரையும். நரம்புகளில் புத்துணர்வு ஏற்படும்.
- உமா ஷக்தி
படங்கள்: தி.குமரகுருபரன்
 
RAWALIKADate: Sunday, 09 Mar 2014, 9:46 AM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஈஸியா செய்யலாம் யோகா !

யோகா செய்யச் செய்ய உடம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். நமக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல் வெளியே வரும். இந்த இதழில் நாம் அறியப்போவது, தடாசனம் மற்றும் விரிக்சாசனம். சொல்லித்தருகிறார், விஜயா ராமச்சந்திரன்.

 தடாசனம்

 பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும். மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
 10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும்.
 இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.

பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம்.

விரிக்சாசனம்

 பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது நேராக நிற்கவும்.

 வலது காலை மடித்து, உள்ளங்காலை இடது தொடை மீது மெதுவாக வைக்கவும்.

கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து, தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.

10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். பிறகு, இடது காலை மடித்து, உள்ளங்காலை வலது தொடை மீது வைத்து, 10 எண்ணும் வரை நிற்கவும். இப்படி ஆறு முறை செய்யவும்.

பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

உமா ஷக்தி 
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
 
RAWALIKADate: Sunday, 09 Mar 2014, 9:48 AM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஈஸியா செய்யலாம் யோகா! பிரேமா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

 நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.

வஜ்ராசனம்!

'எந்த ஆசனத்தையுமே சாப்பிட்டதும் செய்யக் கூடாது. ஆனால், வஜ்ராசனத்தை மட்டும் சாப்பிட்டதும் செய்யலாம். இந்த முறை நாம் செய்யப்போவது அதுதான்’ என்கிறார், உங்களுக்கு ஆசனங்களைக் கற்றுத் தரும் யோகாசன ஆசிரியை விஜயா ராமச்சந்திரன்.

 செய்முறை:

 விரிப்பின் மீது கால்களை நீட்டி அமர்ந்துகொள்ளவும். வலது காலை மடக்கி, வலது புட்டத்தின் அடியில் வைக்கவும். பிறகு, இடது காலை மடக்கி, இடது புட்டத்தின் அடியில் வைக்கவும். இரு கால்களின் கட்டை விரலும், ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு, நிமிர்ந்து உட்காரவும். உள்ளங்கையை மேல் நோக்கி விரித்து, விரல்களைப் பிணைத்து, படத்தில் காட்டியபடி, மடியில் வைத்துக்கொள்ளவும். இதற்குப் பெயர், 'தியான முத்திரை’. மூச்சு சீராக இருக்கட்டும். இந்த நிலையில் மனதுக்குள் 1 முதல் 25 எண்ணும் வரை இருக்கலாம். பிறகு, படிப்படியாக கால்களை நீட்டி, பழைய நிலைக்கு வரவும்.

 

பலன்கள்:

 நாம் சாப்பிட்ட உணவு சீரான முறையில் ஜீரணமாகும். தேவையில்லாத கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். அஜீரணத்தைப் போக்கும். இதய படபடப்பைப் போக்கும். கால் முட்டி வலி, இடுப்பு வலி இருந்தால், தொடர்ந்து வஜ்ராசனம் செய்யும்போது நீங்கிவிடும்.

 குறிப்பு: குழந்தைகளுக்கு கால்களை நன்கு மடக்கி நீட்ட முடியும். எனவே, படிக்கும்போதும் ஒரு விரிப்பின் மீது இந்த நிலையில் அமர்ந்து படிக்கலாம்.
 
RAWALIKADate: Sunday, 09 Mar 2014, 9:50 AM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
RAWALIKADate: Sunday, 09 Mar 2014, 9:50 AM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
  • Page 1 of 1
  • 1
Search: