RAWALIKA | Date: Thursday, 12 Jun 2014, 9:54 AM | Message # 1 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| ஆறாம் திணை
மருத்துவர் கு.சிவராமன்
நன்றி விகடன்
'ஆறாம் திணை’ சொல்ல விளைந்தது இதைத்தான். இயற்கைக்கு இணையான ஆசான் எவரும் இல்லை. மனிதனின் எண்ணம், அறிவு, வளம், எல்லாவற்றையும்விட இயற்கையின் நுணுக்கம் பெரிது. இங்கே இந்தப் பூமியில் வாழும் உயிரினங்களில் 14 சதவிகித உயிரினங்களுக்குத்தான் பெயரே வைத்திருக்கிறோம். ஒட்டுமொத்த ஜீவராசிகளையும் சக பயணிகளாக நினைத்து அவர்களோடு குதூகலித்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த நம் மூத்தக்குடியைப் போல் இல்லாமல், 'எனக்கானதுதானே இந்த உலகம்; என் களிப்புக்கும் சொகுசுக்கும், நான் ஐம்பூதங்களை, ஐந்திணைகளைச் சிதைப்பதுதானே என் அறிவின் உச்சம்’ என்று நகர்வதின் விளைவுதான் பெருகும் நோய்க் கூட்டமும் பேரழிவு நிகழ்வுகளும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
'மனிதன் இல்லாத பூமியில் பறவை வாழ முடியும்; ஆனால், பறவை இல்லாத பூமியில் மனிதன் வாழ முடியாது’ என்ற சூழலியலாளர் சலீம் அலியின் கூற்றும்,
'கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசிச் சொட்டு நீரும் விஷமேறி, கடைசி மீனும் பிடிபட... அப்போதுதான் தெரியும் மனிதனுக்கு, பணத்தைச் சாப்பிட முடியாது என்று...’ எனச் சொல்லிய செவ்விந்தியப் பழமொழியும் நாம் மீண்டும் மீண்டும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய சிந்தனைகள்.
|
|
| |