கல்விக் கடன் உதவி செய்யும் அமைப்பு...
Posted Date : 17:05 (31/05/2014)Last updated : 17:05 (31/05/2014)
கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அமைப்பு.
ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழி வகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை.
பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். அவர்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். கல்விக் கடன் கிடைக்காமல் கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும்.