தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 20 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
SSDate: Saturday, 22 Feb 2014, 1:53 PM | Message # 191
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பாகம்  -26

ஆசிரியர் அவர்களது பேப்பரினை தர, இம்முறையும் கௌதமே முதலாவதாக வந்தான். அவனுக்கு நதிக்கும் 1/2 மார்க் வித்யாசம் தான் இருந்தது. இருந்தாலும் அவனே முதல்.( ஆம்பள தான் பா எப்பவுமே first....)

இம்முறை தோல்வியினை ஏற்றுகொள்ள முடியவில்லை நதியால், பள்ளியில் யாரிடமும் பேசவே இல்லை. மாலையில் அவள் தனியாகவே புறப்பட்டாள்.

கெளதமோ நதியை கவனித்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவன் வென்றாலும் அந்த வெற்றி அவனுக்கு இனிக்கவில்லை, மாறாக நதியின் அழுத முகமே நினைவுக்கு வந்தது. பாவம் அவள் சின்ன குழந்தை போன்ற முகம்... நிமிடத்தில் சுருங்கி போய் விட்டது.. மாலை அவள் தனியாக செல்வதை கவனித்து... அவள் பின்னே சென்றான்.

அவள் ஒரு குறுக்கு சந்தில் செல்லும் போது (கதைல வர எல்லா பொண்ணுகளுக்கும் குறுக்கு சந்து தான் பா..), ஒரு பள்ளதை கவனிக்காமல் அவள்  வண்டியை உள்ளே இறக்க அது அவளை கீழே தள்ளி விட்டது.. இதனை பார்த்ததும் கெளதம் தன் வண்டியை நிறுத்தி அவளருகே ஓடி அவளின் கை பற்றி தூக்கி விட்டான். தனக்கு உதவுவது யார் என்று பார்த்த நதி அப்படியே ஆச்சரிய பட்டு விட்டாள்... கெளதமோ அவளது கண்களுக்குள் பார்த்து கொண்டே..(அப்படி என்ன தான் தெரியுமோ....) அவளை தூக்கி நிறுத்தினான். அவளது கன்னங்கள் செம்மை கொண்டன. அவனது கண்களை நேராக பார்ப்பதை தவிர்த்து மண்ணை பார்த்தாள். கௌதமிற்கு கர்வம் வந்தது....

"கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் ..."

ஆஹ என்ற முனகல் அவர்களை நிகழ்விற்கு கொண்டு வந்தது.. அப்படி சொல்லியது நம் நதி தான். வண்டி சாய்ந்ததில்.. silencer பட்டு அவளது மலர் பாதங்கள் புண்ணாகியது... அவளது வண்டியை அருகினில் உள்ள mechanic கடையில் விட்டு அவளை அழைத்து கொண்டு டாக்டரிடம் காட்டி அவளது வீட்டிற்கு தன் வண்டியிலேயே அழைத்து சென்றான்.

" பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே...."

இவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த இரு விழிகள் .... அதிர்ந்து விட்டன .. நதியின் சிவந்த முகம் மேலும் அந்த கண்களை கொண்ட முகத்தை சிவக்க வைத்தன கோபத்தில்...... அப்படியே அவளை  கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு கொலை வெறியில் இருந்தான் நந்தன்.


Message edited by SS - Saturday, 22 Feb 2014, 2:02 PM
 
JayDate: Saturday, 22 Feb 2014, 7:34 PM | Message # 192
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Shanthi, SS super update. Ada Gowthamaiyum, Nadhiyaiyum korthu vittuteengala.  Inga adutha thamthana thamthanaavaa, Acho yethanai pair serkkanum.  oru 200, 300 updates pogum pola irukke.
 
shanDate: Saturday, 22 Feb 2014, 8:25 PM | Message # 193
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
நதியின் சிவந்த முகம் மேலும் அந்த கண்களை கொண்ட முகத்தை சிவக்க வைத்தன கோபத்தில்...... அப்படியே அவளை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு கொலை வெறியில் இருந்தான் நந்தன்.

hai ss,
இவர் பண்ணா காதல் .....
தங்கை பண்ணால் கொலை வெறியா ??????????????????
 
shanDate: Saturday, 22 Feb 2014, 8:26 PM | Message # 194
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அடுத்து யாரவது கொஞ்சம் flashback போங்கப்பா.........
கொஞ்சம் சண்டையும் பார்க்கலாமே yahoo ......


Message edited by shan - Saturday, 22 Feb 2014, 8:27 PM
 
SSDate: Saturday, 22 Feb 2014, 10:09 PM | Message # 195
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote Jay ()
Shanthi, SS super update. Ada Gowthamaiyum, Nadhiyaiyum korthu vittuteengala. Inga adutha thamthana thamthanaavaa, Acho yethanai pair serkkanum. oru 200, 300 updates pogum pola irukke.
Quote shan ()
hai ss,இவர் பண்ணா காதல் .....
தங்கை பண்ணால் கொலை வெறியா ??????????????????
jay .. நமக்கெல்லாம் நிறைய புண்ணியம் உண்டு... இததனை காதல் ஜோடிகளை சேர்கின்றோம் இல்லையா angel2

shan அது எப்பவுமே அப்படி தானே பா.. கௌதம்க்கு அப்படி தானே.. பெரிய வீட்டு பொண்ண அவன் ரூட் விடலாம்.. ஆனா அக்கா அப்படி செய்ய கூடாது இல்லையா. கதைகள்ல இதெல்லாம் சகஜமப்பா .....
Quote shan ()
அடுத்து யாரவது கொஞ்சம் flashback போங்கப்பா.........கொஞ்சம் சண்டையும் பார்க்கலாமே yahoo ......


என்னாச்சு.. ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை.. சண்டை என்றாலே ஹீரோயினோ இல்லாட்டி  வேற எதாவது பொண்ணு கன்னமோ தான் பழுக்க போகுது... பாவம்...பா..


Message edited by SS - Saturday, 22 Feb 2014, 10:09 PM
 
shanDate: Saturday, 22 Feb 2014, 10:25 PM | Message # 196
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
என்னாச்சு.. ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை.. சண்டை என்றாலே ஹீரோயினோ இல்லாட்டி வேற எதாவது பொண்ணு கன்னமோ தான் பழுக்க போகுது... பாவம்...பா..
எவ்வளோ தான் கன்னம் சிவக்கிறது ss ''''''கொஞ்சம் மசாலாவா இருக்கட்டுமேனு தான் .நாயகியை அடிப்பது சண்டை இல்லை அது அவனது உடமை (நேரில் கதையே வேற )
 
vaideeshDate: Sunday, 23 Feb 2014, 6:33 AM | Message # 197
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Dear Rawalika,
I cannot stop laughing.
A mathematics formula for a love story.You can only do it.
Now the story is very clear.
thanks to all others for their updates.
Rather than the story update which is awesome,the comments keep us laughing all day.
Keep rocking!
 
srkDate: Sunday, 23 Feb 2014, 9:09 AM | Message # 198
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
hi friends,

உங்க எல்லோருடைய எபிசோடும் சூப்பர். கலக்குறீங்கப்பா.......

சாமார்த்தியமா வரவிருந்த வன்முறையை தடுத்தி நிறுத்திய சாந்தி உங்களுக்கு......... snack

ss உங்களுடைய situvation songs ரொம்ப சூப்பர்.... specool

(நதியோட அம்மா ஸ்ரீ பிரபா ன்னு எழுத வந்து அப்படியே கை ஸ்லிப் ஆகி ஹேமா ன்னு வந்துடுச்சு....... yes )


Life is God's Gift
 
shanDate: Sunday, 23 Feb 2014, 9:15 AM | Message # 199
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நீயின்றி நான் இல்லை -27
சந்தோசமா குதிதுகொண்டெ உள்ளே வந்த நதி சோபாவில் கோபமாக உட்கார்ந்திருந்த அண்ணனை பார்த்து என்ன அண்ணா இந்நேரம் வீட்டில் கம்பெனி போகலை என கேட்க ........
உன் வண்டி எங்கே என அவன் உறும /.......(.சிங்கம்னு நினைப்பு எப்பவும் உருமிகிட்டே )
அவன் குரல் கேட்டு அவன் அம்மா வேகமா இறங்கி வந்து என்ன நந்தன் சத்தம் .வாசல் வரை கேட்குது என்று கேட்க .......
வண்டி எங்கேனு தான் கேட்டேன் ...........
எங்கடி ?இல்லைம வண்டி ரிப்பேர் ....பள்ளியில் விட்டுட்டு நண்பன் கொண்டு வந்து விட்டன என ..........
ஓஹ சரி என அம்மா உள்ளே சென்று விடுகிறார்கள் ......நதியும் அண்ணனிடம் இருந்து மேலும் கேள்வி வரும் முன் அவள் அறைக்கு சென்று விடுகிறாள் .........இரவு உணவு முடிந்ததும்
நதி அறையை தட்டி மாலை உன்னை வீட்டில் விட்டது யார் என கேட்க ..அண்ணா வண்டி ரிப்பேர் நண்பன் வீட்டில் விட்டான் இதில் என்ன தவறு என கேட்க ...........நீ அமைசர் மகள் பார்த்து நடந்துக்கோ என சொல்லி அவன் மும்பை flaight ஏற கிளம்பினான் ..
ஆதித்ய வீட்டில் நுழைந்தவுடன் கோபமாக பைலை தூக்கி எறிந்தார் .......
அந்த contract கை நழுவி போச்சு .எல்லாம் உன்னால் தான் .உன்னால் ஒரு வேலையை சரியா செய்ய முடியலை ........இதில் அவன் ஆஷ்திகே
சொன்ந்தகாரி ஆகிறேனு வெட்டி ஜம்பம் வேறு என புலம்ப .....
அப்பா இந்த மாயா சொன்னதை தான் செய்வா .இப்போ என்ன நான் அவனை கல்யாணம் செய்தால் இதை போல் பல தொழில் செய்யலாம் .....நான் இப்போ மும்பை கிளம்புறேன் .......பாய் என கிளம்ப ........

யசோத சோகமாக வந்து ஏங்க இப்படி செய்றீங்க .......பணத்திற்காக கல்யாணமா?கேட்கவே அசிங்கமா இருக்கு .என கண்ணீர் விட ......
யசோ நாம் வீட்டை விட்டு வெளியில் வந்து எவ்வளவு அவதி பட்டோம்
அது உனக்கு புரியலையா என மேஜையில் கவிழ்ந்து
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்
 
srkDate: Sunday, 23 Feb 2014, 9:36 AM | Message # 200
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
பாகம் - 28

கௌதமுடன் நதி ஒன்றாக பைக்கில் வருவதை கண்ட நந்தனில் விழிகளில் அனல் பறந்தது. நல்லவேளை அருகில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் இல்லாததால் மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது. (நல்லவேளை, இல்லன்னா தமிழ் நாடே பத்தி எரிஞ்சிருக்கும்)

பைக்கிலிருந்து இறங்கிய இருவரும் நந்தனை கண்டதும் அதிர்ந்தனர். அய்யோ அண்ணன் பார்த்துட்டாரே எதாவது சொல்வாரோ என்று நதியும், இவனா!! எவனை ஏன் வாழ்க்கையில் மறுபடியும் பார்க்கக்கூடாதுன்னு இருந்தேனோ அவனையே மறுபடியும் பார்க்க வச்சிட்டயே ஆண்டவான்னு கௌதமும் எண்ணினர்.

நதியை இறக்கி விட்டுவிட்டு தன் வீட்டிற்கு செல்லும் வழியில் தான் முதன்முதலாக நந்தனை சந்தித்த வேளையை வெறுப்புடன் நினைத்தான் கௌதம்.

ஒருமுறை நண்பர்களுடன் கல்வி சுற்றுலாவிற்காக கௌதம் சென்றிருந்த போதுதான் எதிர்பாராத விதமாக நந்தனை சந்திக்க நேர்ந்தது.

சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஷாப்பிங் அனுமதித்து இருந்தார் உடன் சென்ற ஆசிரியர். அம்மா, அப்பா மற்றும் நந்தினிக்கும் சில பொருட்களை வாங்கிய கௌதமும் நண்பர்களும் ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் இருந்த போது எதிரில் இருந்த பளபளக்கும் பிரபல நம்பிக்கையான நகைக்கடையில் நந்தனைக் கண்டான். அதுவும் எப்படி??

அதீத மேக்கபில் இருந்த அரைகுறை ஆடை பெண் அவன் தோளில் சுற்றுபுறம் மறந்து தொங்கிக் கொண்டிருந்தாள். நந்தனின் கரம் அவளின் வெற்றிடையை அணைத்திருந்தது. அதே நிலையில் வெளியில் வந்த அவர்களின் கை நிறைய நகை பைகள் இருந்தது. அவற்றை நந்தனிடம் இருந்து வாங்கிய அந்த பெண் நந்தனை இறுக அணைத்து முத்தமிட்டு தன்னுடைய புகார்டி காரில் (ஹப்பா.... இந்த காரையும் இன்ட்ரோ கொடுத்தாச்சு) ஏறி பறந்தாள்.

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட அவர்களை கண்ட கௌதம் தன் நண்பர்களிடம் "பணம் இருந்தா எப்படி வேணும்னாலும் இருக்கலாமா! நம்ம கலாசாரமே இதுங்க மாதிரி ஆளுங்களாலதான் கேள்விகுறியா போயிட்டு இருக்குது. என்ன ஜென்மங்களோ!! இதெல்லாம் அவங்க ரூமுக்குள்ள வச்சுக்க வேண்டியதுதானே" என்று விட்டு திரும்பியவன் முன்பு அனல் கக்கும் விழிகளுடன் நின்றான் நந்தன்.

ஒருவார்த்தை கூட பேசாமல் அவனையே சில நிமிடங்கள் வெறித்த நந்தன் பின் ஸ்டைலாக தன் தோளை குலுக்கிக்கொண்டு நகர்ந்தான்.

ச்சே..என்ன மனிதன் இவன். இவ்வளோ நேரம் சொன்னதை கேட்டுட்டு ஒன்னுமே சொல்லாம போறானே..இதெல்லாம் இவனுக்கு சகஜம் போல. இவனை மாதிரி!! ஆளுங்களை மறுபடியும் பார்க்கவே கூடாதுன்னு நினைத்தான் கௌதம்...


Life is God's Gift

Message edited by srk - Sunday, 23 Feb 2014, 10:00 AM
 
Search: