தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 21 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
JayDate: Sunday, 23 Feb 2014, 3:53 PM | Message # 201
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Shanthi and Sudha super updates.
 
JayDate: Sunday, 23 Feb 2014, 4:23 PM | Message # 202
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
பாகம் 29

தன் வீட்டுக்குள் கோபத்துடன் நுழையும் கௌதமைப் பார்த்து நந்தினி என்னவென்று கேட்க,  அவன் ஒன்றும் இல்லை என்று சொல்லி அவன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொள்கிறான் .

"கௌதம்க்கு என்னம்மா ஆச்சு. வந்த உடனே என்கிட்ட வம்பிழுக்காம இருக்க மாட்டான். இன்னைக்கு ஒண்ணுமே சொல்லாம போறான்",  என்று தன் அன்னையிடம் கேட்க்க

"ஆமாம் கழுதை கெட்டா குட்டி சுவரு,  இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனே வருவான் பாரு" என்று விளக்கேற்ற சென்றார் ஹேமா .

இரவு 7 மணி ஆகியும் ரூமை விட்டு கெளதம் வெளி வராமல் இருக்க, நந்தினி சென்று அவன் அறைக்  கதவைத் தட்டினாள்.

"அம்மா எனக்கு பசிக்கலை எதுவும் வேணாம்,தொந்தரவு பண்ணாதீங்க."

"டேய் நான் நந்தினி,முதல்ல கதவைத் தொற"

"என்னக்கா என்ன வேணும்  உனக்கு, எதுக்கு இப்போ கதவு உடையர அளவு தட்டற"

"எனக்கு உண்மை வேணும்.  உனக்கு என்ன ஆச்சு . ஏன் ஸ்கூல்ல இருந்து வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்க.டெஸ்ட்ல இரண்டாவது மார்க் வந்துட்டியா. அந்த நந்திதா first வந்துட்டாளா. (நம்ம நந்தினி அவங்க வீட்டுக்குப் போகும்போது இவளை பார்க்கலை)"

"அதெல்லாம் இல்லைக்கா, எப்பவும் போல நான்தான் முதல்.  அவ செகண்ட்தான்.ஏன் மூட் அவுட்ன்னா,இன்னைக்கு அவ வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு. அதனால நான்தான் அவளைக் கொண்டு போய் அவங்க வீட்டுல விட்டுட்டு வந்தேன். அங்க அவங்க அண்ணனைப் பார்த்தேன்."

"ஏண்டா ,  அது அவங்க வீடு .  அங்க அவங்க அண்ணன் இருக்காங்க. இதுக்கு எதுக்கு நீ மூட் அவுட் ஆகணும்"

"சொல்றத முழுசா கேளுக்கா .  நான் கொஞ்ச நாள் முன்னால  ஒரு  நகைக் கடை முன்னாடி ஒரு ஜோடி ரொம்ப கேவலமா நடந்துகிட்டாங்கன்னு சொன்னேன் இல்லை. அது அவங்க அண்ணன்தான். பண்ற தப்பெல்லாம் அவன் பண்ணிட்டு இன்னைக்கு என்னைய மொறச்சுப் பார்க்கிறான் ராஸ்கல். எல்லாம் அவங்க அப்பா மினிஸ்டர்  அப்படிங்கற திமிருதான் "

"நீ யாரை சொல்ற "
"அதுதான் அந்த சென்ட்ரல் மினிஸ்டர் ரகுவீர் இருக்கார் இல்லை,  அவர் பையன் நந்தனைதான் சொல்றேன். ஆனால் சரியாதான் பேரு வச்சிருக்காங்க. அவனும் அந்தக் கண்ணன் மாதிரியே பொண்ணுங்க பின்னாடிதான் சுத்தறான். நான் என் வாழ்க்கையில ஒருத்தனை கடலளவு வெருக்கறேன்னா அது இவனாதான் இருக்கும்"
மின்னாமல்,  முழங்காமல் தன் தலையில் விழுந்த இடியில் பிரமைப் பிடித்து உட்கார்ந்தாள் நந்தினி.
 
shanDate: Sunday, 23 Feb 2014, 6:03 PM | Message # 203
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் சுதா,
இது செம திருப்பம் ........வாவ் .இனி நந்தினிக்கு கௌதமின் அறிவுரை மழையா கொட்டும் .......
 
shanDate: Sunday, 23 Feb 2014, 6:10 PM | Message # 204
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Jay ()
அதுதான் அந்த சென்ட்ரல் மினிஸ்டர் ரகுவீர் இருக்கார் இல்லை, அவர் பையன் நந்தனைதான் சொல்றேன். ஆனால் சரியாதான் பேரு வச்சிருக்காங்க. அவனும் அந்தக் கண்ணன் மாதிரியே பொண்ணுங்க பின்னாடிதான் சுத்தறான். நான் என் வாழ்க்கையில ஒருத்தனை கடலளவு வெருக்கறேன்னா அது இவனாதான் இருக்கும்"
மின்னாமல், முழங்காமல் தன் தலையில் விழுந்த இடியில் பிரமைப் பிடித்து உட்கார்ந்தாள் நந்தினி.


காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
 
JayDate: Sunday, 23 Feb 2014, 7:36 PM | Message # 205
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Shanthi paatu super
 
SSDate: Sunday, 23 Feb 2014, 9:44 PM | Message # 206
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Jay amazing episode and super paatu shan
 
SSDate: Sunday, 23 Feb 2014, 10:03 PM | Message # 207
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பாகம் - 30

நந்தினி அதிர்ந்து நின்ற போது அவளது கைபேசி "பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன் " என்று பாடியது. அதனை உணரும் நிலையில் நந்தினி இல்லை. அது அவளுக்காக நந்தன் அடிக்கடி பாடும் பாட்டு, அவன் பாடியதால் அவளுக்கும் அது ரொம்ப பிடித்த ஒன்று, அதனால் அதையே அவளது கைபேசியில் நந்தன் அழைப்பிற்கு ரிங்க்டோனாக வைத்திருந்தாள்.

அப்போது அவளது கைபேசியை கெளதம் எடுத்தான், எடுத்தவன் அதிர்ந்தான். அங்கே திரையில் நந்தனும் நந்தினியும் மிகவும் அருகே நிற்பது போல உள்ளது படம், மேலும் நந்தினி  மை ஹப்பி என்று நந்தனின் நம்பரை பதித்து வைத்திருந்தாள். இப்போது கெளதம் அதிர்ச்சி அடைந்தான். சிறிது நேரத்தில் கைபேசி அடங்கி, ஒரு message வந்தது " லவ் யு ஹனி , நாளை பேசுகிறேன்" என்று.

இப்போது நந்தினியும் கௌதமும் தெளிந்து விட்டனர். நந்தினிக்கு குற்ற உணர்வு உச்சத்தில் இருந்தது. "மன்னிச்சிக்கோ டா கெளதம், என்னால முடியல. நான் அவரை என்னோட கணவரா தான் நினைக்கறேன். நீ பார்த்தது அவரோட கடந்த காலம். அவர் மாறிட்டார் , இப்போ நான் தான் அவருக்கு எல்லாமே. அவர் ரொம்ப நல்லவர் டா" என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்து கொண்டே இருந்தான் கெளதம். "சரிக்கா, பார்த்துக்கலாம். நான் தான் எப்படியும் அவர மீட் பண்ண போறேனே அப்போவே பேசிக்கறேன். எப்போ மீட் பண்றோம் " என்றான். "சண்டே" என்று கூறி விட்டு அமைதியாக தன் அறைக்கு போய் விட்டாள்.

சிறிது நேரம் கழித்து கெளதம் அவளது அறைக்கு வந்தான். அழுது கொண்டே தூங்கும் அக்காவை பார்த்த அவனது மனது வலித்தது. எதையுமே கேட்காதவள் இன்று நந்தனை கேட்கிறாள். நந்தனிடம் பேசி அவனை மாற வேண்டும் என்று எச்சரிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு தூங்கும் அக்காவின் தலையினை தடவி கொடுத்தான்." கெளதம் அவர் நல்லவர் டா, என்னால உங்க ரெண்டு பேரையும் விட முடியாது" என்று தூக்கத்திலே சொன்னாள். அதனை கேட்டு அவளையே பார்த்து கொண்டு  நின்றிருந்தான் கெளதம்.

மலர்களை போல அக்கா உறங்குகிறாள் தம்பி வாழவைப்பான் என்றே அமைதி கொண்டாள் (இங்கே ஆள் மாறி போச்சு இல்லையா அதான் அக்கா தம்பின்னு மாறி போச்சு.. பாவம் கவிஞர் , இப்போ இத படிச்சிருந்தா ரொம்ப நொந்து போயிருப்பார். மன்னித்து கொள்ளுங்கள் கவிஞரே...)


Message edited by SS - Sunday, 23 Feb 2014, 10:09 PM
 
shanDate: Sunday, 23 Feb 2014, 10:13 PM | Message # 208
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai ss,
kalthuketra kolam un paadal...........
so ini meeting nandanukum&gowtamukum bash
 
JayDate: Monday, 24 Feb 2014, 6:31 AM | Message # 209
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Nice update SS.  Oh samaadhanamaa yeduthuttu poiteengala.  Naan  gowthamkkaaga Nandhini pongi yezhunthu Nandhan kitta sandaikku povaannu ninaichen.  Paattu super.  Intha maathiri kathai yezhutharavangalaiye mannikkumbothu paattu yezhutharavangalaithaana mannikka maattaru,

Message edited by Jay - Monday, 24 Feb 2014, 6:32 AM
 
SSDate: Monday, 24 Feb 2014, 7:35 AM | Message # 210
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote Jay ()
Nice update SS. Oh samaadhanamaa yeduthuttu poiteengala. Naan gowthamkkaaga Nandhini pongi yezhunthu Nandhan kitta sandaikku povaannu ninaichen. Paattu super. Intha maathiri kathai yezhutharavangalaiye mannikkumbothu paattu yezhutharavangalaithaana mannikka maattaru,
Enna Jay neenga.. tamil story heroine rules ellame mathareenga.. avanga eppadi  kadhalan/purushan kitta sandaikku povanga..  naan namma guidelines follow panni ezudaren pa smile
 
Search: