புத்தக விமர்சனம் ! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » புத்தக விமர்சனம் ! (புத்தக விமர்சனம் !)
புத்தக விமர்சனம் !
LayaDate: Saturday, 15 Feb 2014, 2:20 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
புத்தக விமர்சனம் !
 
பல நல்ல புத்தகங்கள் பற்றிய ஓர் பார்வை
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:23 PM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:23 PM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:26 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஆண் - பெண் அந்தரங்கம்

நன்றி - விகடன் ஏ டு இஸட் அலசல்!ஆண்- பெண் அந்தரங்கம் பற்றிய பல உண்மைகளை, அற்புதமான தகவல்களுடன் சுவாரஸ்யமான நடையில் தந்துள்ளார், மனநல மருத்துவர் ஷாலினி. மனித இனத்தின் தொடக்கம், பரிணாம வளர்ச்சி, மரபணு அதிசயங்கள் போன்றவற்றை அறிவுபூர்வமாக அணுகியுள்ளார் ஷாலினி. காமம் இல்லை என்றால், இனப்பெருக்கம் என்பதே இருக்காது என்பதில் ஆரம்பித்து, காமத்தின் ஆதார குணங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார். காமம் சார்ந்த அந்தரங்கப் பிரச்னைகளை, உளவியல்பூர்வமாக அணுகியிருப்பது சிறப்பு.பொதுவாக காமம் என்றாலே, மனக்கிளர்ச்சி அடைவது மனித இயல்பு. கவர்ச்சியான இளம் பெண் எதிரில் வந்தால், சில நொடிகள் உற்றுப் பார்க்காத ஆண்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம், மரபணுவின் தூண்டல்தான்.  ஆண்- பெண் இனக்கவர்ச்சி என்பது இன விருத்திக்காக, பன்னெடுங்காலத்துக்கு முன்னர் மரபணுக்கள் செய்துவைத்த ஏற்பாடு. ஆண் - பெண் சேர்க்கை, மனிதகுலம் செழித்து வளர இயற்கையின் கட்டாய விதி என்பதை அழுத்தமாக விளக்குகிறார் ஆசிரியர்.மற்ற ஜீவராசிகளுக்கு ஒரே ஒரு வகைக் காமம்; மனிதர்களுக்கு மட்டும் ஒரு டஜன் வகைக் காமம் என்று அனைத்து வகைக் காமத்தையும் குட்டிக் கதைகள் மூலமாகவும், சம்பவங்களாகவும் விளக்குகிறார்.மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வரை, மனிதர்கள், வானரங்களாக இருந்தவர்கள். மனிதக் கூட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கான காரணம், டி.என்.ஏ. என்ற புரதச் சுருள். 'இந்த உலகில் வேறு எதற்கும் இல்லாத ஒரு மாபெரும் சக்தி, இந்த டி.என்.ஏ.வுக்கு மட்டும்தான் உண்டு’ என்கிறது ஆராய்ச்சி. இதற்கு மட்டும்தான் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உள்ளது. அந்த அதிசய ஆக்க சக்தி மூலம் மீண்டும் மீண்டும் இதே வேலையாக வாரிசுகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று மரபணு செயல்பாடுகளை விரிவாக அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.வரலாற்று உண்மைகள், குட்டிக் கதைகள், ஆராய்ச்சி முடிவுகள், பிரபல மனோதத்துவ நிபுணர்களின் பங்களிப்புகள் என, ஒரே மூச்சில் படிக்கவைத்துள்ள ஆசிரியரின் மொழி நடை இன்னும் சிறப்பு. அர்த்தமுள்ள தொகுப்பு!
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:27 PM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அவசியம் இருக்க வேண்டிய ஆரோக்கியப் புத்தகம்!

நன்றி - விகடன்
கல்லீரலில் சுரக்கும் பித்தநீர் நாம் உண்ணும் உணவுப் பொருளோடு கலப்பதால்தான் நாம் கழிக்கும் மலம் மஞ்சள் நிறமாக இருக்கிறது. சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். 'சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்கிறார் நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சௌ.ராஜன். அதற்கான காரணங்களையும் அடுக்கி உள்ளார். 

''தினமும் சுடுதண்ணீரைவிட பச்சைத் தண்ணீரில் நன்றாகத் தேய்த்துக் குளித்தால், ரத்த ஓட்டம் சீராகி உடல் புத்துணர்ச்சி பெறும்.  சாப்பிட்டவுடன் தண்ணீரால் வாயைக் கொப்பளிக்காமல்விட்டால், பல்லில் மாட்டியிருக்கும் உணவுத்துகள்கள் அழுகி, வாய் துர்நாற்றம், ஈறுகளில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகள் வரும்'' என்று சுத்தத்தைப் பற்றிய விஷயங்களை அக்கறையோடு சொல்கிறார்.தோல், எலும்பு, கல்லீரல், குடல், மலக்குழாய், மூத்திரக் குழாய் என நம் உடலின் எல்லா உறுப்புகளைப் பற்றியும் விரிவான விளக்கத்துடன் ஒரு புரிதலைத் தரும் புத்தகம்.உடல் உபாதைகளை எப்படித் தற்காத்துக்கொள்வது, பாம்பு, பூரான், தேள் ஆகிய விஷ ஜந்துக்கள் கடித்தால், அதற்கு என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்த தகவல்கள் பயனுள்ளவை.பெண்களுக்கும் மாதவிடாய், மகப்பேறு, குழந்தைப்பேறு, குழந்தையை வளர்க்கும் முறைகளையும் விளக்குகிறார். மருந்து மாத்திரைகளால் என்னென்ன நோய்கள் குணமாகும்.  எந்தெந்த நோய்களுக்கு அறுவைசிகிச்சை தேவை என விளக்குகிறது.பல நோய்களுக்கு பழைய மருத்துவமுறையை அடியற்றிக் கூறியிருந்தாலும், அதனுடைய தேவையை இன்றைக்கும் புரிந்துகொள்ளும் அளவுக்கு அனைவரும் பின்பற்றக் கூடிய வகையில் எளிய தமிழ் நடையில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர். சுவாரஸ்யமான ஒரு மருத்துவக் கதையைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது இந்த நூல். உங்கள் உடம்புக்கு நீங்களே வைத்தியர் என்ற நம்பிக்கை விதைக்கிற புத்தகம்.
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:29 PM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பருமனைக் குறைக்க... பாதை காட்டும் புத்தகம்!

நன்றி - விகடன் 
'மூன்றே மாதத்தில் முப்பது கிலோ எடையைக் குறைக்கலாம்’,  'ஸ்லிம் பாடிக்கு நீங்கள் சொந்தக்காரி ஆகலாம்’, 'உப்பிய வயிற்றை ஒட்டிய வயிறாக மாற்றலாம்’ போன்ற விளம்பரங்களே தொலைகாட்சி நிகழ்ச்சிகளாக வரிசைக்கட்டி வருகின்றன. உடல் பருமன் என்பது நம் ஆரோக்கியத்தைக் குலைத்து, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் போன்ற நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். 40 வயதுக்குள் பெரும்பாலான நோய்களுக்குப் பாதை அமைத்துக்கொடுப்பதில் உடல் பருமனுக்குத்தான் பெரும்பங்கு உண்டு.  உடல் பருமனுக்கான காரணங்கள், பாதிப்புகள் மற்றும் தீர்வுகளை தெளிவாக தந்திருக்கிறது இந்நூல்.  அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஏறக்குறைய இந்தியாவும் இந்த நிலையை எட்டிப் பிடித்துவிடும். இந்த  நிலையில், உடல் பருமனைக் குறைக்கும்போது ஆண்களும் பெண்களும் சந்திக்கும் சவால்களைப் பட்டியல் இடுகிறார் டாக்டர் மு.அருணாசலம். 'எப்படி உடல் பருமன் ஏற்பட்டது என்பதைத்தான் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். வேறு ஏதேனும் உடல் பிரச்னைகளின் காரணமாக உடல் பருமன் ஏற்படவில்லை என்பது மருத்துவச் சோதனைகளின் மூலம் உறுதியாகிவிட்டால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதே அவர்கள் குண்டாக இருப்பதற்குக் காரணம்’ என் கிறார் ஆசிரியர்.

இன்றைய தலைமுறைக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது 'சைல்ட் ஒபிசிட்டி’. இதற்கானத் தீர்வைத் தேடி, மருத்துவ உலகமும் தீவிரமாக ஆராய்ந்துவருகிறது. தற்காப்பு நடவடிக்கைகளை குழந்தை பிறந்தது முதல் மேற்கொண்டால்தான், அவர்கள் வளரும் போது, நல்ல சத்தான உணவுகளை சரியான அளவில் சாப்பிடப் பழகு வார்கள்.உடல் பருமனைக் குறைப்பது என்பது மந்திரமோ, மாயமோ அல்ல; உணவுக் கட்டுப்பாடு என்கிற விஷயத்தில்தான் நுணுக்கமான சங்கதிகள் இருக்கின்றன. எந்த உணவைக் குறைக்க வேண்டும், எப்படிக் குறைக்க வேண்டும், எந்த உணவை முற்றிலுமாகக் கைவிட வேண்டும், உடல் எடையைக் குறைக்க உதவும் பயிற்சிகள், எந்த நேரத்தில் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.படித்துவிட்டு நிச்சயம் பின்பற்ற தூண்டும் வகையிலும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் அற்புதமான நூல்!
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:31 PM | Message # 7
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இனிதே வாழ... வழிகாட்டும் புத்தகம்!
உடலும் மனமும் நலமாக இருக்க, சத்தான உணவுகளைத் தேடிப் பிடித்து உண்ண வேண்டும். ஆனால், 'எதைச் சாப்பிடுவது? எப்படி சாப்பிடுவது?’ என்ற கேள்விகளுக்கே, நம்மிடம் தெளிவான பதில்கள் இல்லையே. எதைச் சாப்பிட வேண்டும்... எதைத் தவிர்க்க வேண்டும்... என்ற அறிதல் இருந்தால், நோய்நொடியின்றி நிம்மதியாக வாழலாம் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும் புத்தகம் இது.  

 நிறம், மணம், கார்ப்பு... என மூன்று வகைக் குணங்கள் கொண்ட வெற்றிலையைப் போடுவதற்கு ஒரு முறை உண்டு என்று அருமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் வெ.தமிழழகன். வெற்றிலையுடன் மிளகு சேர்த்து தண்ணீருடன் புகட்டினால், சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை சரியாகிவிடும் என்று வியக்கவைக்கிறார். மேலும், இயற்கையாகவே நம் உடலில் நிறைந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியோடு இயற்கை உணவான காய்கனிகள், கிழங்குகள், கீரைகள் என அரிய சத்து சேரும்போது,  நீண்ட காலம் வாழ தேவையான ஆற்றல் நமக்கு எளிதில் கிடைக்கிறது என்பதை விளக்கியுள்ளார்.


ஒவ்வொரு உணவு வகையிலும் என்னென்ன மருத்துவப் பலன்கள் உள்ளன என்பதைத் தெரிவிக்கும் நூல் இது. அறுசுவை உணவும் அதற்கான அரிய பலன்களையும் பட்டியல் இடுகிறார். சுவை, ருசி, பசி இவற்றுக்காக மட்டும் நாம் சாப்பிடுவது இல்லை. நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்கள் - செல்களின் இயக்கம் மற்றும் உற்பத்தி சரிவர இருப்பதற்காகவும் உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கவும்தான் சாப்பிடுகிறோம். இயற்கை உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. ஆற்றலும் உருவாகிறது. நோய் உண்டாவதும் தடுக்கப்படுகிறது என்கிறார்.நார்ச் சத்தின் தேவை, அது என்னென்ன உணவுப் பொருட்களில் உள்ளது, அதை உட்கொள்வதால் ஏற்படும் பலன்கள் எல்லாம் தெளிவாகவும் சுவையாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.பழங்களைப் பற்றி ஆராய்ந்து எளிய மொழியில் ஒவ்வொரு பழத்தின் சத்துக்களை விரிவாக விளக்குகிறது இந்த நூல்.  மேலும், ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் முட்டை, பால், தேன், இளநீர் போன்றவற்றின் சிறப்பை விளக்கி நம் உடலுக்கும் உயிருக்கும் மிகத் தேவையான நீரைப் பற்றியும் எழுதியிருப்பது சிறப்பு.உயிர், உடல், உள்ளம்... இவை மூன்றுக்கும் புத்துணர்வை அளித்து, இயற்கை உணவே மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதை இந்தப் புத்தகம் மிக எளிமையாகப்  பதிவுசெய்கிறது!
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:32 PM | Message # 8
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வயிறைப் பற்றிய விரிவான புத்தகம்!

டாக்டர் விகடனில், இரா.சரவணனின் எழுத்தாக்கத்தில், டாக்டர் செல்வராஜனின் 'இப்படிக்கு வயிறு’ என்ற கட்டுரைத் தொடராக வெளிவந்து, வயிறு தொடர்பான பிரச்னை உள்ளவர்களின் பலருடைய வயிற்றுக்குப் பால் வார்த்தது. வயிறுப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தீர்வுகளையும் சொல்லும் இந்த அரிய நூல், அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளும்வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. செரிமான மண்டல உறுப்புக்கள், அவற்றின் செயல்பாடுகள், பணிகள், அவற்றைப் பாதிக்கும் நோய்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் டாக்டர் செல்வராஜன். இன்றைய தலைமுறையினர் பலருக்கு இருக்கும் பிரச்னை, குடல் புண். இரைப்பையின் இயக்கம் சீராக செயல்பட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதில் ஏதேனும் மாறுபாடு ஏற்பட்டு, ஹார்மோன் சுரப்பும் அதிகமாகி, அமிலமும் சமன்படுத்தப்படாத நிலையில் அதிகமானால்தான் ஆபத்து. அமிலம்தான் குடல் புண்ணை ஏற்படுத்தி, அல்சரில் கொண்டுவிடுகிறது என்று எச்சரிக்கிறது இந்தப் புத்தகம். எந்தப் பிரச்னைக்கும் சுயமருத்துவம் செய்வது தவறு, அதன் பக்கவிளைவாக பாதிக்கப்படுவது என்னவோ... வயிறுதான் என்ற செய்தி, எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது.

நாம் உணவை உட்கொள்ளும்போது, தீவிரமாக வேலை பார்க்கும் இரைப்பை, 20 நொடிகளுக்கு ஒருமுறை சுருங்கி விரியும். இரைப்பையானது பட்டினிக்கிடக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை சுருங்கி விரியும். பட்டினிக் கிடப்பவர்களுக்கு பசி மயக்கதோடு வலியும் வருவதற்கு காரணம்... வெறுமனே இப்படி சுருங்கி விரிவதால்தான். 'பட்டினியில் இருப்பவர்களுக்கு இரைப்பை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் சுருங்கி விரிவதால் உண்டாகும் வலியானது நான்கு நாட்கள் வரை விட்டு விட்டு நீடிக்கும்’ என்று வயிற்றைப் பட்டினிப் போடுவதால் ஏற்படும் பாதிப்பை விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.பல அரிய தகவல்களைக்கொண்டு, வயிறு தன் கதையைத் தானே சொல்லும் முறையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், புதுமையானது. படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதுடன் எளிதில் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:33 PM | Message # 9
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மூலிகையின் மகத்துவத்தை சொல்லும் அரிய புத்தகம்!

'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற பாடல் வரி, மூலிகை மருத்துவத்துக்கு மிகவும் பொருத்தமானது. 'நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் தீர்வு உண்டு. ஆனால், இன்றைய அவசர உலகில், எது எளிதாக உடனுக்குடன் தீர்வைத் தருகிறதோ, அதை நோக்கியே செல்கிறோம். நம்முடைய வேர்களை நாம் இழந்துவிடக் கூடாது’ என்ற அதீத அக்கறையோடு எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நம் கண் முன்னால் இருக்கக்கூடிய நந்தியாவட்டை, நாவல் மரம், செம்பரத்தை, ஆலமரம், வேம்பு, வல்லாரை, ஆடாதொடை, கீழாநெல்லி, சிறியாநங்கை, பிரண்டை, தூதுவளை ஆகிய தாவரங்களில் இலைகள், வேர்கள், பட்டைகள் என ஒவ்வொரு மூலிகையிலும் உள்ள மருத்துவ குணங்களை மிக அழகாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர் டாக்டர் கே.பி.அருச்சுனன்.  


'உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தூது செல்லும் தூதுவளை, 'நல்லாரையும் மிஞ்சும் வல்லாரை’, 'முடக்கை அறுக்கும் முடக்கறுத்தான்’, 'உணவை ஊட்டும் தாயைவிட உடலைத் தேற்றும் கடுக்காய்’, 'ஐம்பொறிகளில் தீயை உண்டாக்கும் அகத்திக் கீரை’ என்று ஒவ்வோர் அத்தியாயத்தின் பெயரிலேயே அதன் சிறப்பை, தெளிவுபடுத்திவிடுகிறார் ஆசிரியர்.வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் யானை நெருஞ்சில் ஏரி, ஆறு, குளம் ஆகிய இடங்களில் ஏராளமாக வளரும் செடியினம். இந்த இலையைத் தண்ணீரில் கலக்கினால் சில விநாடிகளுக்குள் தண்ணீரை விளக்கெண்ணெய்போல் தழைச் சத்தாக மாற்றி அமைக்கும் மிகச் சிறந்த சஞ்சீவி மூலிகை. இந்தக் கலவை, மனித உடலில் உள்ள ஜவ்வு மண்டலத்தை வளரவைக்கவும், ஏற்றத்தாழ்வைச் சமப்படுத்தவும், ஜவ்வு மண்டலத்தில் மூக்கு, காது, குரல்வளை ஆகிய உறுப்புகளை எலும்பின் பக்கத்தில் ஒவ்வோர் எலும்புக்கும் ஏற்றாற்போல் உள்ள இயக்கத்தில் ஏற்றத்தாழ்வை சமன்படுத்தி இயல்பாக்கும் அபூர்வ மூலிகை 'யானை நெருஞ்சில்’ என்றும், இதய நோய்க்கு செம்பருத்தி, ரத்த நாளத்தில் அடைப்பை நீக்கும் முருங்கை என்று ஒவ்வொரு மூலிகையின் மகத்துவத்தை விவரித்திருப்பது அருமை.
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 2:42 PM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மார்பகப் புற்று நோய் பற்றிய மருத்துவ கையேடு!

நன்றி - விகடன்

இந்தியாவில் சுமார் 80,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.  இதில் சரியான வழிக்காட்டுதலின்றி இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பது சதவிகிதம் உள்ளது. சாதிக்கத் துடிக்கும் பெண்களைச் சரிவடைய வைக்கிறது இந்த நோய்.  இதன் கோரப் பிடியிலிருந்து மீட்பதற்காக எழுதப்பட்டதுதான் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன் எழுதிய 'மார்பகப் புற்றுநோய்’ புத்தகம்.   
மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், அதைக் கண்டறியும் சுய பரிசோதனைகள், மருத்துவச் சோதனைகள், சிறப்பான சிகிச்சைகள்... என சக தோழியை போல் தோளில் கைப்போட்டு விலாவரியாகச் சொல்கிறார் டாக்டர் செல்வி. ராதாகிருஷ்ணன்.  எந்த நிலையில் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும், என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று எழுதப்பட்ட கட்டுரைகள்  ஆசிரியரின் சமுதாய உணர்வை பறைசாற்றுகிறது.



மார்பகக் காம்பு உள்வாங்கி இருத்தல், சிறிய மார்பகம் போன்றவற்றால் புற்றுநோய் வராது போன்ற பல அறியத் தகவல்களை எளிய தமிழில் சொல்லி இருக்கிறார்.  அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை நீக்கியபிறகு, சீப்பைக் கொண்டு தலை சீவுங்கள், துண்டின் இரு நுனியை பிடித்துக் கொண்டு முதுகு பக்கத்தில் மசாஜ் செய்யுங்கள் என்பது போன்ற சுலமான உடற்பயிற்சிகள், எடுத்து கொள்ள வேண்டிய உணவு, உடல் பராமரிப்பு மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய விதம் என பக்கத்திற்கு பக்கம் பயனுள்ள தகவல்களை தருகிறார்.  35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மேமோகிராபி அல்லது மார்பக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையை  செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று அன்போடு சொல்லும் ஆசிரியர், ஒருபோதும் கேன்சரை கண்டு பயப்படவே வேண்டாம் என்ற நம்பிக்கை டானிக்கையும் ஆங்காங்கே பன்னீர் துளிகளை போல தெளித்துள்ளார்.மார்பகப் புற்றுநோயை பற்றிய புரிதலை தருவதுடன், படிக்கும் போதே தன்னம்பிக்கையையும் விதைக்கிறது இந்நூல்.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » புத்தக விமர்சனம் ! (புத்தக விமர்சனம் !)
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: