KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:37 PM | Message # 11 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சர்க்கரை நோயை உறுதிப்படுத்தும் ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:38 PM | Message # 12 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச்சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டுமுதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்தசிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல்ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும்.பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரைநோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:38 PM | Message # 13 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தேசரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக்கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில்சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனைசெய்வதன்- மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:43 PM | Message # 14 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| Inline image 1
காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்:
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:44 PM | Message # 15 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?’ இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:46 PM | Message # 16 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு (antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:46 PM | Message # 17 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| காதுக்குடுமி
(Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால் (Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, பாணிபோலவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:47 PM | Message # 18 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாற்றமுறும். தலை முடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்பதும், எவ்வளவு நீண்ட காலம் வெளியேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:47 PM | Message # 19 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு. காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம். சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 2:47 PM | Message # 20 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| காதுக் குடுமிப் பிரச்சனை என மருத்துவர்களிடம் வருபவர்கள் அனேகர். வருடாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இப்பிரச்சனைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதாவது 8 மில்லியன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |