KV's தகவல் பெட்டகம் - Page 7 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
KV's தகவல் பெட்டகம்
kvsureshDate: Wednesday, 19 Feb 2014, 1:13 PM | Message # 61
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Inline image 1

மாரடப்பை தடுக்கும் திராட்சை..

இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது.

ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார்.

இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.

பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம்.

காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை ரசத்தால் பலப்படுத்தலாம்!


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Wednesday, 19 Feb 2014, 1:16 PM | Message # 62
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Inline image 1

சுக்கு மருத்துவ குணங்கள்:-

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Friday, 21 Feb 2014, 1:09 PM | Message # 63
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Karuvalarcheri near Kumbakonam

Please read this link –

http://www.agasthiar.org/AUMzine/0022-Karuvalarcheri.htm


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Friday, 21 Feb 2014, 1:14 PM | Message # 64
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Inline image 1

வெள்ளைப் பூண்டு :

நாம் தினசரி சமையலில் பூண்டை அளவாக பயன்படுத்தினாலே போதும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்

1)நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது,

2)இரத்தத்தில் வெள்ளை அணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது

4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது,

5)மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது,

6)உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),

7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்

9)சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது,

10)வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,

11)அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,

12)புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது,

13)வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

14)நன்கு பசியைத் தூண்டும்.

15)குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது

16)மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

17)வியர்வையை பெருக்கி கழிவுகளி வெளியேற்றுகிறது,

18)பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,

19)ஒற்றைத்தலைவலியை போக்குகிறது,

20)மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது

21)கருப்பையை வலுப்படுத்தும்.

22)சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது,

23)மூளையை பலம்பெறச் செய்கிறது

24)சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது,

25)தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது,

26)தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது,

27)கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது,

28)தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.

29)(சக்கரை) நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது,

30)தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

பூண்டை உபயோகப்படுத்தும் முறை :

1)பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

2)நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள்.சைனா பூண்டை விட
நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது

3)பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது

4)பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது.அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

5)பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பிலை

6)அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல ரோம்பவும் அதிகமாக சேர்த்துக் கொல்லாதீர்கள்

7)தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Friday, 21 Feb 2014, 1:15 PM | Message # 65
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Inline image 1

அத்திக்காய்:

வைட்டமின் C , சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியது அத்திக்காய்.

மாதம் ஒரு முறையாவது அத்திக்காய் அவியல் சாப்பிட்டு வந்தால் மூல நோயில் இருந்து விடுபடலாம்.


Regards and Thanks

Kothai Suresh
 
MeenatchiDate: Friday, 21 Feb 2014, 1:37 PM | Message # 66
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
ஹாய் kvsuresh ,
  பூண்டு பற்றிய தகவலுக்கு நன்றி......


Meenatchi .S
 
NathasaaDate: Friday, 21 Feb 2014, 8:24 PM | Message # 67
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Many thnx for the sharing kothai aunty
 
shanDate: Friday, 21 Feb 2014, 8:50 PM | Message # 68
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
மிக அருமையான தகவல்கள் கோதை
 
kvsureshDate: Tuesday, 25 Feb 2014, 1:16 PM | Message # 69
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline


அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..!

*சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம்குறையும்.

பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும்நல்லது.

இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர்போன்றவற்றிற்கு நல்லது. 

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்றஎலும்பு பலம் பெறும்.


Regards and Thanks

Kothai Suresh
 
shanDate: Tuesday, 25 Feb 2014, 9:13 PM | Message # 70
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
naan vaarathil 2 murai kudipen.......noi kanjiyum ougaayum super combination.........
 
Search: