KV's தகவல் பெட்டகம்
|
|
shan | Date: Thursday, 20 Mar 2014, 6:29 PM | Message # 91 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| கோதை ஒரு போஸ்டும் கண்ணில் படலை ????????
|
|
| |
shan | Date: Thursday, 20 Mar 2014, 8:44 PM | Message # 92 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ippo ella tagavalum terikirathu kothai...........
|
|
| |
Meenatchi | Date: Saturday, 22 Mar 2014, 7:44 PM | Message # 93 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| hi kv suresh,
thanks for ur useful info....
Meenatchi .S
|
|
| |
kvsuresh | Date: Thursday, 10 Apr 2014, 1:43 PM | Message # 94 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சமையலறை சமாளிப்புகள் :
இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத்தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள்.இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு.இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர்தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள்கெட்டிப்பட்டுவிடும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 10 Apr 2014, 1:43 PM | Message # 95 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டிசப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.
கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவுதேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல்அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம். சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியைதோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ளஉப்பின் சுவை குறைந்துவிடும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 10 Apr 2014, 1:45 PM | Message # 96 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
|
வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும். தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.
தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 10 Apr 2014, 1:46 PM | Message # 97 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| உடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப் தேவையானவை : வாழைத்தண்டு – ஒரு துண்டு கொத்தமல்லி – 1/2 கட்டு மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: • வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். • கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். • வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். • வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். • கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும். • வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 10 Apr 2014, 1:47 PM | Message # 98 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| காய்கறியில் என்ன இருக்கு? வாழைத் தண்டு: கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும். வாழைப்பூ: கால்ஷியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும். வாழைக்காய்: இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும். பீட்ரூட்: இதில் துத்தநாகம், கால்ஷியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது. உருளைக்கிழங்கு: இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. பாகற்காய்: இந்த காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 10 Apr 2014, 1:48 PM | Message # 99 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| கேரட்: இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும். கத்தரிக்காய்: பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும். வெண்டைக்காய்: போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம். பீன்ஸ்: புரதச்சத்து, கால்ஷியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும். புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்ஷியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம். அவரைக்காய்: புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும். முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 10 Apr 2014, 1:48 PM | Message # 100 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| வெங்காயம்: இரும்புச்சத்து, கால்ஷியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும். சுண்டைக்காய்: புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும். கருணைக் கிழங்கு: கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், மூலத்தை கட்டுப்படுத்தவும் உதவும். தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |