KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Thursday, 10 Apr 2014, 1:48 PM | Message # 101 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| முள்ளங்கி மருத்துவக் குணங்கள்: முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சி uண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும். முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும். இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் என்பது பாடல் கருத்தாகும். சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது. இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும். கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது. இதன் விதையைக் குடிநீராக – காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
vaideesh | Date: Thursday, 10 Apr 2014, 7:39 PM | Message # 102 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Dear KVSuresh, thanks for your links about Radish.
|
|
| |
ArunMozhi | Date: Sunday, 13 Apr 2014, 5:53 PM | Message # 103 |
 Major general
Group: *Checked*
Messages: 442
Status: Offline
| HI,KV
THANKU FOR THE INFO
Arun
|
|
| |
kvsuresh | Date: Friday, 02 May 2014, 3:05 PM | Message # 104 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும் மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 02 May 2014, 3:05 PM | Message # 105 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 02 May 2014, 3:05 PM | Message # 106 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 02 May 2014, 3:06 PM | Message # 107 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 02 May 2014, 3:06 PM | Message # 108 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 02 May 2014, 3:06 PM | Message # 109 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| கோல யோகா !... கோலம் போடும் கலையும் மறைந்து வரும் கலைகளில் ஒன்றாகிவிட்டது. அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து, கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி! சிறந்த யோகாதான். இன்றைய நவீன யுத்தியில் கோலத்திற்கும் இடமுண்டு. ஃபாஸ்ட் புட் போல ஃபாஸ்ட் கலர் கோலங்களும் விற்பனை வந்துவிட்டது. சிலர் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும்கூட நிரந்தரமாக இருக்கும் வண்ணவண்ண கோல ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விட்டார்கள். நம் பழக்கவழக்கங்கள் சொன்னா தெரியாது. கோல யோகான்னு பயிற்சி வகுப்புல சொல்லி கொடுத்தா செய்வாங்க...
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 02 May 2014, 3:07 PM | Message # 110 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| முளைக்கீரையின் மருத்துவ குணங்கள்:-
*நாம் உண்ணும் உணவில் கீரை சேர்த்து கொண்டு சாப்பிடடால் நோயின்றி வாழமுடியும். தண்டுகீரையின் இளஞ்செடியே முளைக்கீரை ஆகும்
*இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும்.கால்சியம் சத்துகள் நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |