ஆன்மீக ஞானம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » ஆன்மீக ஞானம் (ஆன்மீக கருத்துக்கள் மற்றும் குறிப்புகள்)
ஆன்மீக ஞானம்
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:22 PM | Message # 1
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நன்மைகள் தரும் நான்கு வகை விநாயகர்

அனைவருக்கும் பிடித்த கடவுள் விநாயகர் என்றால் அது மிகையில்லை. வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகையான செல்வங்களும்
(பொருட்கள்) பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம்.


1. கன்னிமூல உச்சிஷ்ட கணபதி:-

இவர் ஆலயங்களில் தென்மேற்கு மூலையில் அமர்ந்து (கன்னிமூலை) பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பூமியில் தாழ்வான மேடான பகுதிகள் உண்டு. ஈசானி மூலை
தாழ்வாக இருப்பதால் அதை சமன் செய்யும் வகையில் கன்னிமூலையில்
அமர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.


பலன்:-

இவரை வழிபட்டால் யோகா சம்பந்தப்பட்ட அறிவை மேம்படுத்தும். வியாபாரம், தொழில் அபிவிருத்தியையும், மேலான நல்லெண்ணத்தையும் சக்தியையும்
அதிகரிப்பார். எதிர்காலத்தை அறியக்கூடிய ஞானத்தையும் கொடுப்பார்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:23 PM | Message # 2
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
2. வ்யாகர சக்தி விநாயகர்:-

இவருடைய உருவம் மற்ற விநாயகரை விட வித்தியாசமானது. கால் பாத்தில் இருந்து இடுப்பு வரை புலி கால்களையும் இடுப்பு முதல் கழுத்து வரை சக்தி (அம்பாள்)
உருவிலும், கழுத்துக்கு மேல் விநாயகர் தலையுடனும் காட்சி அளிப்பார்.
அசுரர்களை சம்காரம் செய்ய இந்த உருவத்தில் தோன்றியதாக சொல்லப்படுகிறது.


பலன்:-

பக்தர்களுக்கு மோட்சம் கொடுப்பார். இன்னல்களை தீர்த்து வைப்பார்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:25 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
3. வன்னிமரத்தடி விநாயகர்:-

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது ஆயுதங்களை வன்னி மரத்தடி விநாயகர் பக்கத்தில் மறைத்து வைத்ததாகவும் போர் முடிந்து நாடு திரும்பியபோது
களவுபோகாமல் அந்த ஆயுதம் அப்படியே இருந்ததாகவும் அதை விநாயகர் காத்ததாகவும்
கூறப்படுகிறது.


வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும். சனி தோஷம் ஏற்படாமல் இருக்க இவர் இந்த மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதாகவும்
கூறுகிறார்கள்.


பலன்:-

சனி திசை, சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:28 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
4. முக்குருணி விநாயகர்:-

மதுரை தெப்பக்குளம், வண்டியூர், அனுப்பானடி ஆகிய 3 சந்திகள் (முக்கு தெருக்கள்) கூடும் இடத்தில் ஊரணி தோண்டும்போது 7 அடி உயரமுள்ள ராட்சத
விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், அதை மன்னர் திருமலை நாயக்கர்
மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. (முக்கு
தெருக்களில் ஊரணி தோண்டும்போது கிடைத்ததால் முக்குருணி விநாயகராக
வணங்கப்பட்டார்) 3 குருணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைத்து
விநாயகர் சதுர்த்தியின்போது வழிப்படுவதால் முக்குருணி விநாயகர் என பெயர்
வந்ததாகவும் கூறப்படுகிறது.


பலன்:-

இவ்விநாயகர் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் கண் திருஷ்டி விலகும். இடையூறுகள் விலகி காரியம் ஜெயம் ஆகும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:33 PM | Message # 5
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
துளசி

வீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் துளசிச் செடியை
வளர்ப்பது புண்ணியச் செயல். துளசி இலையின் நுனியில் பிரம்மாவும்,
அடிப்பாகத்தில் சிவனும், மத்தியில் விஷ்ணுவும், இருக்கின்றனர்.

12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 லசுக்கள், அசுவினித் தேவர் இருவர்
ஆகியோர் துளசி இலையில் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. துளசி
இலை, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகும். விஷக்கடிக்கு துளசி அருமருந்து.

துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அண்டாது. துளசி தீர்த்தம்
கங்கை நீருக்குச் சமம். இவ்வளவு புண்ணியம் வாய்ந்த துளசிச் செடி ஒவ்வொருவர்
வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம்



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:34 PM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம்

வெறும் நெற்றி பாழ் என்பது முன்னோர் சொல். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் திருமண்ணால் நாமமும் இட்டுக்கொள்வது மரபு. இதன் தத்துவத்தை தெரிந்து கொள்வோம்.

திருநீறு

"மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் .

வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது!

விறகுக்கட்டையை நெருப்பு சாம்பலாக்குகிறது. அது போல ஞானம் என்னும் நெருப்பு, எல்லாக் கர்மாக்களையும், எரித்து விடும். என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறார். நாம் நெற்றியில் பூசும் விபூதி ஞானத்தின் அடையாளம் என்பது சமய நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

திருமண்

நெற்றியில் திருமண் இடுவதற்கு நாமம் போடுவது என்று பெயர். திருமண் என்னும் திருநாமம் நாராயணனின் பாதங்களை குறிக்கும். நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கருத்து.

ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது. இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும். துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண்.

இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின் முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருநாமத்தின் ரகசிய தத்துவம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:36 PM | Message # 7
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
காசிக்கு தம்பதியராகத்தான் போக வேண்டுமா?

தம்பதியராகப் போவது தான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு.

ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டும்.

இருவரும் இல்லாத பட்சத்தில் பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:37 PM | Message # 8
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
ஏன் வடக்கு நோக்கி தலைவைத்துப்படுக்கக்கூடாது?

பூமியின் காந்தப்புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. 24 மணி நேரமும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காந்த அலைகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு மனித உடலிலும் சிறு அளவில் காந்த புலம் உள்ளது.நாம் தினமும் வடக்கு நோக்கித் தூங்கும்போது மனித காந்த புலத்திற்கும் பூமியின் காந்தபுலத்திற்கும் மோதல் உருவாகி மனித ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம் என நமது முன்னோர்கள் நம்பினர்.

இன்றைய மருத்துவத்துறை ஏராளமான ஆய்வுகள் செய்து சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, நீண்ட நாட்களாக ஒரு மனிதன் வடக்கு நோக்கி தூங்கினால் அவனுக்கு ஹிஸ்டீரியா-மன நோய் பாதிப்பு நிச்சயம் ஏற்படும் என கண்டறிந்துள்ளனர்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:41 PM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும்

விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது
அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும்
இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள்.
எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும்
இருக்கிறாள் அவள்.

தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி
மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில்
லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.

எப்படி போடுவது?

கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து
போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு பகவானும்,
லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப
காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும்
போது கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும்
என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும்
கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.

யோகாசனம்?

குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக
வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து
கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில்
ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.

எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:44 PM | Message # 10
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?

அருட்திரு இராமலிங்க அடிகளார் தீபம் இல்லாத வீட்டில் இரவில் கூட
தூங்கக்கூடாது என அருளியுள்ளார்.வீட்டில் விடி விளக்கு எரியச்செய்து
சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே தூங்கச்
செல்லவேண்டும்.இல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல்
இருக்கும்.

சில நிறுவனங்கள்,கடைகள்,வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லாவிளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்திருக்கும்.அங்கேல்லாம்
மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம்.

துர்வாடை,அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல்(இன்றைய
கல்லூரி மாணவிகள் விடுதிகளில் தினமும் செய்வது),எதிர்மறையான
எண்ணங்கள்(அதான் அடுத்தவரை கெடுக்க நினைப்பது,தவறான ஆலோசனை
தருவது)

அடிக்கடி கொட்டாவி விடுதல்,தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்தும் மூதேவியின் அடையாளங்களாகும்.இவற்றில் ஒன்று
இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும்.

மூதேவி வராமலிருக்க நாம் நமது வீட்டில்/அலுவலகத்தில்/கடைகளில் வைத்திருக்கவேண்டியவை:
தீபம், தூபம், உப்பு,மஞ்சள்,கண்ணாடி,பட்டு ஆடைகள்,தேங்காய்,பால்,வெண்ணெய்,மாவிலை,கோமியம்(பசுவின் சிறுநீர்)



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » ஆன்மீக ஞானம் (ஆன்மீக கருத்துக்கள் மற்றும் குறிப்புகள்)
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Search: