பயனுள்ள தகவல்கள் - Page 5 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
பயனுள்ள தகவல்கள்
srkDate: Thursday, 23 Jan 2014, 9:48 AM | Message # 1
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்

Added (23 Jan 2014, 9:47 AM)
---------------------------------------------
பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

http://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்பதை கிளிக் செய்யலாம் அல்லது  Registration செய்ய https://portal2.passportindia.gov.in/AppOnli....cale=en என்ற லிங்க்ல் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

Added (23 Jan 2014, 9:48 AM)
---------------------------------------------
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால்

 “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், . அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· வாக்காளர் அடையாள அட்டை

· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்

· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.

பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.

போட்டோ பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே எடுப்பார்கள்.

நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்…


Life is God's Gift
 
RAWALIKADate: Tuesday, 25 Feb 2014, 3:22 PM | Message # 41
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
குழந்தை வளர்ப்பு.... குறையும் அக்கறை... குவியும் பிரச்னைகள்!

Thanks - Vikatanசைல்ட் கேர்கட்டுரை : வே.கிருஷ்ணவேணி, படம் : எம்.உசேன்
 தலைமுறைக்குத் தலைமுறை மாறி வருகிறது, குழந்தை வளர்ப்பு. அதை நம்முடன் பகிர்கிறார்கள், இந்த மூன்று தலைமுறை குழந்தைநல மருத்துவர்கள்...

அந்தக்கால மைனஸ்... ப்ளஸ்!

''100  பர்சன்ட் சுகப்பிரசவங்கள்தான் என்றாலும் தாய், சேய் மரணங்கள் அதிகமா இருந்த காலம் அது...'' என்று, குழந்தை வளர்ப்பில் 60-80களில் இருந்த அறியாமை பற்றிப் பேசினார், குழந்தைகள்நல சீனியர் மருத்துவர் பார்வதி.

''அப்போ எல்லாம் மருத்துவச்சினு சொல்லப்படுறவங்கதான் அதிகமா பிரசவம் பார்ப்பாங்க. ஓரளவுக்குமேல அவங்களால கவனம் செலுத்த முடியாதுங்கற நிலையில... பிரசவ கால மரணங்கள் அதிகமாவே இருந்துச்சு. அதேபோல, பிறந்த குழந்தையோட தொப்புள் கொடியை கத்தியையோ அல்லது கத்தரிக்கோலையோ பயன்படுத்தி கத்தரிச்சுட்டு, அந்த இடத்துல செங்கல் தூள், சுண்ணாம்பு, சாணினு இதுல ஏதாவது ஒண்ணை வெச்சு அடைச்சுடுவாங்க. இதனால, தொப்புள் கொடி தொற்று, ரண ஜன்னினு நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. குழந்தைக்கு நோய் ஏற்பட்டா, அதை மருத்துவரிடம் கொண்டு போகாம, மந்திரிக்கிறது, தாயத்து கட்டுறதுனு இருப்பாங்க.

குழந்தையைக் குளிப்பாட்டும்போது காது, மூக்கு, கண்ணுல எல்லாம் எண்ணெய்விட்டு, சளி வந்தா வாயால ஊதி எடுப்பாங்க. இதனால் கிருமி நேரடியா குழந்தையோட நுரையீரலுக்குப் போயி, நிறைய குழந்தைகள் நிமோனியாவால பாதிக்கப்பட்டாங்க. சாப்பாட்டை தன் வாயில் குழைச்சு, குழந்தைக்கு ஊட்டுற வேலையையும்கூட சிலர் செய்வாங்க.


ரத்த சொந்த திருமணங்கள் அதிகமா இருந்ததால, நிறைய குழந்தைகள் குறைபாட்டோட பிறந்திருக்கு. ஆனா, பொதுவா ஒரு வீட்டுல ஏழெட்டு குழந்தைகள் இருக்கும்கிறதால, ஒரு குழந்தை குறைபாட்டோட இருக்கிறது அவங்களுக்குப் பெரிய கவலையா இருக்காது. பெண் குழந்தை வேண்டாம்னு, பிறந்த குழந்தையைக் கொல்றதும், சில கிராமங்கள்ல சர்வசாதாரணமா நடந்துச்சு.
இப்படி மைனஸ்களை சொன்னாலும்... ப்ளஸ்களும் உண்டு... அந்தக்காலத்துல! ஓடி ஆடி வேலை செய்றதால பிரசவத்தை சுலபமாக்கிக்கறது; குழந்தை பிறந்தவொடன தாயையும் சேயையும் சடங்குங்கற பேர்ல 31 நாட்கள், வீட்டுலயே தனி இடத்துல தள்ளி வெக்கறதால, தொற்று ஏதும் ஏற்படாம தவிர்க்கறது; மருந்து, மாத்திரைகள் அதிகம் புழங்காத அந்தக் காலத்தில் சத்தான உணவுகளின் மூலமே ஆரோக்கிய மான குழந்தைகளை வளர்த்ததுனு... இதெல்லாமே ப்ளஸ்தான்!''
கோல்டன் பீரியட்!

''குழந்தை வளப்பைப் பொறுத்தவரை 80-90களை 'கோல்டன் பீரியட்’ என்று சொல்லலாம்...'' என்கிறார், குழந்தைநல மருத்துவர், பேராசியர், ரமா சந்திரமோகன்.

''நோய்கள் பற்றியும் மருத்துவம் பற்றியும் அதிகமாக விழிப்பு உணர்வு பரவ ஆரம்பித்த காலம் இது. அப்போ இருந்த ஃபேமிலி டாக்டர் நடைமுறையால, பெரும்பாலும் குழந்தைகளின் எல்லா நோய்களும் கவனிக்கப்பட்டு குணமாக்கப்பட்டது. அதையும் மீறி நிமோனியா, டயரியா உள்ளிட்ட நோய்கள் சில குழந்தைகளைப் பலியாக்கினது. போலியோ பாதிப்பு அதிகமா இருந்ததும், அதை பற்றிய விழிப்பு உணர்வு அதிகமா பரவ ஆரம்பிச்சதும் இந்தக் காலகட்டத்தில்தான்.



பிரசவத்தைப் பொறுத்தவரை, அது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்த ஆரம்ப காலம். 25-30 சதவிகிதம் சிசேரியன் பிர சவங்கள் நிகழ்ந்தன. பெண் பட்டதாரிகள் அதிகம் உருவான இந்தக் காலத்தில், தாய்ப் பால், தடுப்பூசி, நோய்த்தொற்றுனு குழந்தை வளர்ப்பைப் பற்றிய தகவல்கள் அறிந்த வர்களா நிறைய அம்மாக்கள் இருந்தாங்க.கூட்டுக் குடும்ப வாழ்க்கை, குழந்தைகளை அறிவு, ஆரோக்கியம்னு இரண்டிலும் மெருகேற்றியது. தன் முந்தைய தலைமுறை போல அதிக அடக்குமுறையும் இல்லாம, தனக்குப் பிந்தைய தலைமுறை போல அளவில்லாத சுதந்திரமும் இல்லாம... சரி யான அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்தாங்க. மிக முக்கியமான விஷயம், சோஷி யல் பிஹேவியர் நிறைந்த இந்த தலைமுறை குழந்தைகள் சீக்கிரமே பேசினாங்க. குழந் தைகள் தனித்துவிடப்படும் சூழல் இல்லை என்பதால, எப்பவும் அதுக்கு ஒரு பாது காப்புக் கவசம் கிடைச்சுது, குழந்தை விபத் துகள் அதிக அளவில் குறைஞ்சுது.  
மொத்தத்தில், வசதிகள் இல்லை என் றாலும், நோய் எதிர்ப்பு, கல்வி, சமூகப் பழக்கவழக்கங்கள்னு எல்லா தளங்களிலும் குழந்தைகள் சரியான விகிதத்தில் வளர்ந்த காலகட்டம் இது!''

மன ஆரோக்கியம் காணாமல் போயிடுச்சே!

''குழந்தை வளர்ப்பில் அதிக மாற்றங்கள் ஏற்பட்ட காலம் இது!'' என்று குழந்தைகள் நலம் மற்றும் மரபணுத்துறை சிறப்பு மருத்துவர் ஸ்ரீலஷ்மி குறிப்பிட்டுச் சொல்வது, 90 டு சமகாலத்தை!''சொந்தத்தில் திருமணம் செய்வது குறைய ஆரம்பித்த காலகட்டம் இது. தவிர, பிறக்கப்போற குழந்தையோட குறைபாட்டை கருவில் இருக்கும்போதே கண்டறியும், சரிசெய்ய வழிவகுக்கும் 'ஸ்கேன்’ பரிசோதனை எல்லா தட்டு மக்களுக்கும் பரவலா கிடைக்க ஆரம்பித்தது, இந்த காலத்தின் முக்கிய வளர்ச்சி. தடுப்பூசி பற்றிய 100 சதவிகித விழிப்பு உணர்வு கிட்டத்தட்ட கிராமங்களை வரை சென்றடைந்துவிட்டது. கர்ப்பக்காலத்தில் இருந்தே மருத்துவர்களோட வழிகாட்டுதலோட தடுப்பூசிகளை பெண்கள் தவறாம போட்டுக்கறாங்க. இதனால் அம்மை, மூளைக்காய்ச்சல்னு பல நோய்கள் தடுக்கப்பட்டிருக்கு. ஆனா, சத்தில்லாத மற்றும் ஜங்க் ஃபுட் பழக்கத்தால குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதையும் குறிப்பிட்டாகணும். டயாபர் அதிகமா பயன்பாட்டுக்கு வந்த இந்தக் காலத்தில், குழந்தையின் மேனியை இயல்பாக காக்கும் பருத்தித் துணி பாதுகாப்பு காணாமல் போனது.
நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்தது, குழந்தை மனநல வளர்ப்பில் சரிவை ஏற்படுத்தியது. காசை நோக்கி அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு ஓட, குழந்தையோட உரிமையான தாய்ப்பாலே அதுக்குக் கிடைக்காமப் போனது முதல் சோகம். வீட்டில் தனியாக இருக்க நேரும் குழந்தைகள் ஓடியாடி விளையாடாம டி.வி, கம்ப்யூட்டர் முன் அமர ஆரம்பித்து ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கிட்டதோட, மனதளவிலும் பாதிக்கப்பட்டாங்க. இப்போ குழந்தை மனநல மருத்துவர்களின் கிளினிக்கில் குடும்பங்கள் குவிய ஆரம்பித்திருக்கும் காட்சி, கவலை தருவதா இருக்கு.படிப்பின் பின்னாடியே துரத்தாம, குழந்தைகளோட உணவுப் பழக்கம், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய தருணத்தில் இருக்கிறார்கள் இந்தத் தலைமுறை பெற்றோர்கள்!''
 
lakshmiDate: Tuesday, 04 Mar 2014, 6:32 PM | Message # 42
Major
Group: Users
Messages: 92
Status: Offline
Hi Friend,

Thanks for the useful infos.
 
RAWALIKADate: Sunday, 06 Apr 2014, 5:11 PM | Message # 43
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மனை VS அபார்ட்மென்ட் சாதகங்கள்... பாதகங்கள்!
Thanks - Vikatan

ஏ.சங்கர நாராயணன் நிறுவனர், ரியல்டி கேம்பஸ்டாட்காம்

முதலீட்டு நோக்கில் சொத்து வாங்கும் பலர் புறநகர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். நகருக்குள் அபார்ட்மென்ட்டும், மனை விலையும் மிக அதிகமாக இருப்பதால் புறநகர்களுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. அதுவும் புறநகர்களில் அபார்ட்மென்ட்டைவிட மனையைப் பெரிதும் விரும்பி வாங்குகிறார்கள். இதற்கு, அபார்ட்மென்ட்களின் விலை, மனையின் விலையைவிட அதிகமாக இருப்பது மற்றும் ஃப்ளாட்டைவிட பிளாட் விலை வேகமாக உயர்ந்துவருவதும் காரணமாக இருக்கிறது.



முதலீடு செய்ய வேண்டும் என்று கையில் ரொக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் மனைகளை வாங்கலாம். ஏனெனில், முதலீட்டின் மீதான வருமானம் இதில் அதிகம். மனை மற்றும் அபார்ட்மென்ட் வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்களை இனி விளக்கமாகப் பார்ப்போம்.





Message edited by RAWALIKA - Sunday, 06 Apr 2014, 5:13 PM
 
shanDate: Sunday, 06 Apr 2014, 8:21 PM | Message # 44
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
pattimanra talaipu ........ippo ilaya talaimurai flat than viumburanga.
 
lakshmiDate: Wednesday, 09 Apr 2014, 10:45 PM | Message # 45
Major
Group: Users
Messages: 92
Status: Offline
Hi Rawalika,

Thanks for the Infos.

Added (06 Apr 2014, 10:47 PM)
------------
---------------------------------

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு
வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் உணவு விஷயத்தில் சரியாக அக்கறை செலுத்துவதில்லை. காலை சிற்றுண்டி சாப்பிடாமல் அவசரம், அவசரமாக அலுவலகம் செல்வது உடல் நலக் குறைவுக்கு அஸ்திவாரம் போட ஆரம்பிக்கும்.
காலை சிற்றுண்டியை தொடர்ந்து சாப்பிடாமல் வேலைக்குப் போகும் நிலையில், வயிற்றுப் புண் பிரச்னை ஆரம்பிக்கும். பின்னர் அதிக பசி எடுக்க ஆரம்பித்து, கோபம் - எரிச்சல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
தொடர் விளைவுகளாக உடல் சோர்வடையும். நடந்தால் மூச்சு வாங்கும். கால் வீக்கம், மனப் பதற்றம் ஏற்படும். இறுதியில் ரத்த சோகையும் ஏற்படும்.
எனவே பெண்கள் காலை நேர அலுவல்களை முன் தினம் இரவே திட்டமிட்டு, சிற்றுண்டியைப் புறக்கணிக்காமல் இருந்தால் இந்த விளைவுகள் ஏற்படாது.
சிலர் `டயட்'டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு காலை டிபனை தவிர்ப்பார்கள். இப்படிச் செய்வது நல்லதல்ல என்று ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.     இங்கிலாந்தைச் சேர்ந்த சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வில், மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்பதும், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவது உடலுக்கு நோய் இல்லாத பாதுகாப்பைத் தருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. 19 முதல் 64 வயது வரையிலானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.இந்த ஆய்வில், பெரும்பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக காபி அல்லது டீ போன்றவற்றை அருந்த விரும்புவதும் தெரிய வந்தது. ஆய்வு முடிவு குறித்து சிக்ரிட் கிப்சன் கூறும்போது, `பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால்,அவற்றை காலை டிபனாக எடுத்துக் கொள்வது நல்லது' என்றார்.

Added (09 Apr 2014, 10:45 PM)
---------------------------------------------
ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த  உணவுகள்

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள். இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம். தானியங்கள் மற்றும் நட்ஸ் தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன. கடல் சிப்பி நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும். ப்ளூபெர்ரி ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது. செர்ரி செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. மீன்கள் மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது. தக்காளி தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன. முட்டைகள் முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது. ப்ராக்கோலி ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மாட்டுக்கறி கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன. தயிர் தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சாக்லெட் அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. காபி டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.


Message edited by lakshmi - Wednesday, 09 Apr 2014, 10:47 PM
 
RAWALIKADate: Tuesday, 15 Apr 2014, 9:24 AM | Message # 46
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சர்க்கரை பயன்பாட்டை குறைக்கலாமே!

Thanks - Dinamalar

செயற்கை சர்க்கரை, கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தீங்கானது

என்கிறார், மருத்துவர் ஜெயஸ்ரீ:

நான், அப்பல்லோ மருத்துவமனையில், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றுகிறேன்.


'அஸ்பார்ட்டம்' என்ற செயற்கை சர்க்கரை, சதுர வடிவ வில்லைகளாக கிடைக்கின்றன. காபி மற்றும் டீயில், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, தற்போது இவற்றை தான் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்.ஏனெனில், இது வெள்ளை சர்க்கரையை விட, 200 மடங்கு இனிப்புச் சுவை அதிகம் என்பதுடன், எளிதில் கரையக் கூடியது. குளிர் பானம் மற்றும் சர்க்கரை இல்லாத உணவு பொருட்களிலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகம் முழுவதும் செயற்கை சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.கடந்த 2005ல், இத்தாலியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், தொடர்ந்து செயற்கை சர்க்கரையை சாப்பிடக் கொடுத்த சுண்டெலிகளின் உடலில், பலவகையான கட்டிகள் உருவாவது உறுதி செய்யப்பட்டது.கண், காது, மூக்கு, நரம்பு மண்டலம், தோல் என, உடலின் எந்தப் பாகத்தையும் செயற்கை சர்க்கரை விட்டு வைப்பதில்லை. நவீன நோய்களில், 90 வகையான அறிகுறிகள் செயற்கை சர்க்கரை பயன்படுத்துவதாலேயே வருகின்றன.உலகம் முழுவதிலும் நடத்தப்பட்ட ஆய்வில், 10ல், ஒன்பது நோயாளிகள் செயற்கை சர்க்கரை பயன்படுத்துவதை நிறுத்தியவுடனேயே, நோய் அறிகுறிகள் குறைந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், செயற்கை சர்க்கரையை, கலோரி குறைந்த குளிர்பானங்களில் பயன்படுத்துவதால், புற்றுநோய் வருவதாக, 'அமெரிக்க கேன்சர் சொசைட்டி'யின் இணையதளம் செய்தி வெளியிட்டது.சூடான பானங்களிலோ அல்லது சமைக்கும் போதோ, கண்டிப்பாக செயற்கை சர்க்கரையை பயன்படுத்தக் கூடாது. தற்போது நிறைய ஓட்டல்களில் காபி, டீக்கு இதைத் தான் தருகின்றனர். அப்படிச் செய்தால் ஏற்படும் வேதி மாற்றங்கள், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் எந்த உணவுப் பொருளும், உடல் நலத்திற்குத் தீங்கானது. செயற்கை சர்க்கரை அல்லது வெள்ளைச் சர்க்கரை என இரண்டிலும், வெறும் கலோரி மட்டுமே உள்ளதே தவிர, உடலுக்குத் தேவையான எந்த சத்தும், துளி கூட கிடையாது.மேலும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கும் செயற்கை சர்க்கரை தீங்கானது. எனவே, யாருக்குமே இதை நான் சிபாரிசு செய்வதில்லை. அதைவிட, கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெல்லத்தில், இரும்பு சத்தை தரும், 'சுக்ரோஸ்' உள்ளது.உலக சுகாதார மையம் நிர்ணயத்தின் படி, 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு, 12 கிராம் அதாவது, 3 ஸ்பூன் சர்க்கரையும், பெரியவர்கள், 24 கிராமும் பயன்படுத்தலாம்.


Message edited by RAWALIKA - Tuesday, 15 Apr 2014, 9:25 AM
 
lakshmiDate: Thursday, 24 Apr 2014, 12:00 PM | Message # 47
Major
Group: Users
Messages: 92
Status: Offline
கீரைகள்: சில அரிய தகவல்கள்



ஒரு கிலோ முளைக்கீரையில் உள்ள "அ' வைட்டமின் சத்தைப் பெற சுமார் 70 கிலோ வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்புத் சத்தைப் பெற சுமார் 113 கிலோ ஆப்பிள் சாப்பிட வேண்டும். அகத்திக் கீரையில் 63 விதமான சத்துக்கள் உள்ளன என்கிறது சித்தர் பாடல்.

 ஒரு கிலோ அரைக்கீரையில் உள்ள இரும்புச் சத்தைப் பெற சுமார் 32 கிலோ அன்னாசிப்பழம் சாப்பிட வேண்டும்.

ஐங்குறுநூறுப் பாடலான "மனை நடு வயலை வேழம் சுற்றும்' என்பதில் வயலைக்கீரை பற்றி குறிப்பு வருகிறது.

 100 கிராம் முருங்கைக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, மணிச் சத்து, மாங்கனீசியச் சத்து, சாம்பல் சத்து, தாமிரச் சத்து, கந்தகச் சத்து, குளோரின் சத்து, இரும்புச் சத்து மற்றும் ஆக்சாலிக் அமிலம் ஆகியவை அடக்கம்.

 எகிப்தில் உள்ள பிரமிடுகளில் வெந்தயக்கீரை,கொத்துமல்லி பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

 புளிச்சக்கீரை ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஜாவா, சீனா, கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றில் பெருமளவு பயிரிடப்படுகிறது.

அசோகர் வழிப்போக்கர்களுக்காக சாலைகளில் மருத்துவமனைகளை நிறுவியபோது புதினாக்கீரையை பயிரிட்டதாக பௌத்த நூல்கள் புகழ்கின்றன.

 சத்து நிறைந்த கீரைகள்!

 சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள கீரைகள்: அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை, கறிவேப்பிலை, மணத்தக்காளிக்கீரை ஆகியன.

 இரும்புச் சத்து அதிகமுள்ள கீரைகள்: முளைக்கீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, பசலைக் கீரை, வல்லாரை, மணத்தக்காளிக் கீரை, கொத்துமல்லி ஆகியன.

 கீரைகளின் வேறுசில பெயர்கள்!

 கரிசலாங்கண்ணிக் கீரை: கையார்ந்த கீரை, கரிப்பான், கரிசாலை, கரியசாலை, கைவீசி, கரிக்கை, கரிக்கண்டு, கரிச்சால், கரிச்சான், பொற்றிழைக் கரிப்பான், பொற்பாலை, பொற்றிலைப் பாலை, பொற்கொடி, மஞ்சள் பாவை.

 முருங்கைக் கீரை: கிரஞ்சனம்,கிளவி,சோபாஞ்சளம், சிக்குரு.

 புளிச்சக்கீரை: காய்ச்சினி, புளிச்சிறுகீரை, காய்ச்செறி, காய்ச்சுரை, காய்ச்சக் கீரை, காச்சிரங்கு, சீமைக்காசினி.

 பசலைக்கீரை: கொடியலை, கொடிவசலை, கொடிப்பயலை, கொடிப்பச்சறை, கொடிவயலை, கொடிலை.

 வல்லாரைக் கீரை: மண்டூகபரணி, பிண்டீரி, சண்டகி, யோசனை வல்லி.
 
NathasaaDate: Friday, 25 Apr 2014, 2:14 PM | Message # 48
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Informative Infos
thnx for posting friends
 
lakshmiDate: Monday, 12 May 2014, 11:45 PM | Message # 49
Major
Group: Users
Messages: 92
Status: Offline
வாழைப் பழத்தின்  புதிய அவதாரம்!



வாழைப்பழத்தை சிப்ஸ் செய்து உண்பதைக் காட்டிலும் உலர வைத்து அத்தியாக மாற்றி உணவுப் பொருளாகப் பயன்படுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
 வாழைப் பழத்தை உலர வைக்கும் புதிய முறையாக தற்போது அறிமுகமாகியுள்ளது பாலிகார்பனேட் சீட் மூலம் அமைக்கப்பட்ட சஸ்டெய்ன் பசுமை இல்ல சூரிய வெப்ப உலர்விப்பான்.
 இதைப் பற்றிக் கூறுகிறார் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஜி. அஜிதன்:
 ""இந்தியாவிலேயே முன்மாதிரி திட்டமாக தொட்டியத்தில் பசுமை இல்ல சூரிய வெப்ப உலர்விப்பான் அமைக்கப்பட்டுள்ளது. 
 இந்த அமைப்பில் பாலிகார்பனேட் சீட்டால் அறைமுழுவதும் மூடப்படுவதால், இந்த சீட் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்களை வடிகட்டி வெப்பத்தை மட்டும் உள்ளே அனுமதிக்கிறது. இதனால், வாழைப்பழம் நேரடி சூரிய ஒளியால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களுக்கு எந்த பாதிப்புமின்றி அப்படியே நமக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
 இந்த அமைப்பில் ஒருமுறை 300 கிலோ பழத்தை உலர வைக்கமுடியும். 1 முறை வைக்கப்படும் பழங்கள் மூன்றாவது நாளில் முழுமையாக உலர்ந்துவிடும். இவ்வாறு பல யூனிட்டுகளை நிறுவுவதன் மூலம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் வாழைப் பழங்களை உலர்வித்து மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்'' என்றார்.
 இதுகுறித்து தொட்டியம் வாழை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சுகுமார், செயலாளர் மணிக்குட்டி (எ) சுப்பிரமணியன் ஆகியோர் கூறியது:
 ""தொட்டியம் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள வாழை குளிர்ப்பதன மற்றும் பழுக்கவைக்கும் கிடங்கில் பழங்களைச் சீராக பழுக்க வைத்து பசுமைஇல்ல உலர்விப்பானுக்கு எடுத்து வருகிறோம். இங்கு தோலை நீக்கிவிட்டு பழத்தை தேன் கலந்து நீரில் முக்கி எடுத்து உலர்விப்பானில் உள்ள வலைத் தட்டுகளில் உலர்த்துகிறோம். பழம் நன்றாக உலர்ந்து பிறகு உருவ அமைப்பிற்காக கையால் தட்டையாக அமுக்கப்பட்டு முழு அத்தியாகவும், சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டும் சுகாதாரமாக பேக்கிங் செய்கிறோம். வேறு எந்தவிதமான வேதியியல் பொருளும் சேர்க்கப்படுவதில்லை. இவை 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
 இவற்றை சாக்லேட், பஞ்சாமிர்தம் செய்யவும், திண்பண்டமாகவும் பயன்படுத்தலாம் என்பதோடு, திருமண வீடுகளில் தாம்பூலப் பைகளில் இட்டும் கொடுக்கலாம். இவ்வாறு தயாராகும் உலர் வாழைப்பழ அத்தியை சத்துணவுத் திட்டத்தில் சேர்க்கவும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த உலர்விப்பான் மூலம் அண்ணாசி, மா, திராட்சை, சப்போட்டா, நெல்லி போன்றவற்றை சத்து இழப்பின்றி உலர்விக்கலாம். தண்ணீரின் பயன்பாடு மிகக் குறைவு. பேரீச்சம் பழங்களைப் போல் சுவையாக இருக்கும் '' என்றார். - இரா.மகாதேவன்.
 
shanDate: Tuesday, 13 May 2014, 5:50 PM | Message # 50
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அருமையான
தகவல் லஷ்மி ........
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
Search: