Ram's தகவல் பெட்டகம் - Page 29 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » Ram's தகவல் பெட்டகம் (Ram's தகவல் பெட்டகம்)
Ram's தகவல் பெட்டகம்
lakshmiDate: Monday, 12 May 2014, 11:34 PM | Message # 281
Major
Group: Users
Messages: 92
Status: Offline
Hi Ram,

Thanks for the Infos.
 
ram2858Date: Monday, 19 May 2014, 9:42 AM | Message # 282
Sergeant
Group: *Checked*
Messages: 30
Status: Offline
கொழுப்பு உணவை பெண்கள் தவிர்க்கக் கூடாது

உணவுக்கும் உற்பத்தித்திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. பெண்களின் உடலில் நடக்கும் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் 'ஈஸ்ட்ரஜன்' என்ற ஹார்மோன் அத்தியாவசியமாகும்.

ஆனால், பெண்களின் உடலில் ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன் உள்ளது. இந்த ஆண் ஹார்மோனில் இருந்துதான் பெண் ஹார்மோன் ஈஸ்ட்ரஜன் உருவாகிறது. இந்த உருவாக்கம் நிகழ கொழுப்பின் உதவி தேவைப்படுகிறது.

உணவின் மூலம் கொழுப்பு கிடைக்காதபோது உடலில் சரியான செயல்பாடு நடைபெறாது. இத்தகைய பெண்கள் கர்ப்பிணியாகும் வாய்ப்பு குறைவு. மாதவிலக்கிலும் கோளாறு ஏற்பட்டு ஈஸ்ட்ரஜன் அளவு குறைந்து மாதவிலக்கு நின்று போகும் அளவுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு கர்ப்பப்பை சுருங்கி சிறிதாகிவிடும். இதனால் குண்டான பெண்களைப் போலவே ஒல்லியான பெண்களும் குழந்தை பெறுவது கஷ்டமாகிவிடுகிறது. இந்த உண்மைகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஷ்பிரிஷ் என்ற மருத்துவர் பல பெண்களை ஆராய்ந்து 2001 இல் இந்த உண்மைகளை வெளியிட்டார்.

எனவே அளவுடன் கொழுப்புள்ள உணவுகளை பெண்கள் சேர்த்து வரவேண்டும். இத்துடன் கல்சியம் அதிகமுள்ள ராகி, முருங்கைக் கீரை, தயிர் முதலியவற்றையும் சேர்த்துவந்தால் கொழுப்பு உணவு அதிகம் சாப்பிட்டிருந்தாலும் உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Added (19 May 2014, 9:40 AM)
---------------------------------------------
சுற்றுலாவின் போது கவனிக்க வேண்டியவை! 

ஆறு, அருவி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது, ஏற்படும் பாதிப்பு மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை கூறும், புருஷோத்தமன்: 

நான், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், திண்டுக்கல் நிலைய அலுவலராக பணியாற்றுகிறேன். கோடைக்கால சுற்றுலா என்றாலே, ஆறு, அருவி என, நிறைய தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு செல்வது மகிழ்ச்சியை தரும். ஆனால், காவல் துறையின் எச்சரிக்கை பலகைகளை மதிக்க தவறுவது, பாதுகாப்பு முறைகளை மீறுவது போன்றவையே, உயிருக்கு உலை வைக்கின்றன. ஏனெனில், நீர் நிலைகளில் ஏற்படும் பெரும்பாலான மரணங்களுக்கு, சுய தவறுகள் தான் காரணம். கோவில் குளம் மற்றும் நீர் வீழ்ச்சிகளுக்கு செல்லும் போது, உடனே இறங்க கூடாது. ஏனெனில், அங்கு இருக்கும் பாசி, சட்டென்று வழுக்கி, உயிரையே காவு வாங்கி விடும். பொதுவாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் இடத்தில், அதிக பாசி இருக்காது. பயன்பாடு குறைவான இடத்தில் தான், அதிக பாசி இருக்கும். எனவே, அவ்விடத்தின் தன்மை, படிகள் வழுக்குமா என்பதை, அங்குள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. ஏரி, குளம் என, தேங்கி கிடக்கும் நீர்நிலைகளில் ஒருவர் தவறி விழுந்து விட்டால், பதற்றத்தில் அனைவருமே உள்ளே குதிப்பதும் தவறு. மேலே இருப்பவர்களில், யாருக்காவது நீச்சல் தெரிந்தால் மட்டுமே முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், உதவிக்கு வேறு யாரையாவது தான் அழைக்க வேண்டும். ஆறுகளின் ஆழம் தெரியாமல், காலை விடக் கூடாது. ஏனெனில், ஆறுகளின் வேகம் காரணமாக, 'நீர்சுழல்கள்' ஏற்படும். அதிலும், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி என்றால், கேட்கவே தேவையில்லை. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கல்லணை, அணைக்கரை உள்ளிட்ட பல இடங்களிலும் முதலை கள் நிறைந்திருப்பதால், ஆபத்துகள் அதிகம். மேலும், அணைகளின் கரைகளில், 'புதைமணல் குழிகள்' இருக்கும். இது தெரியாமல் கால் வைத்தால், அதோகதி தான். குறிப்பாக, திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு அணைப் பகுதியில், இப்படிப்பட்ட புதைமணல் குழிகள், நிறையவே உள்ளன. இப்படி புதை குழியில் சிக்கிக் கொள்பவர்கள், உடனடியாக உள்ளே போய்விட மாட்டார்கள். காப்பாற்ற அவகாசம் கிடைக்கும். இச்சமயத்தில், நீச்சல் தெரிந்தாலும் நேரடியாக குதித்து காப்பாற்றக் கூடாது. நீளமான கம்பு, கயிறு போன்றவற்றை கொடுத்து தான் காப்பாற்ற வேண்டும். புடவை, துப்பட்டா போன்றவற்றையும் பயன்படுத்தலாம். வேறு வழியே இல்லாத நேரத்தில், நீச்சல் தெரிந்தவர்கள் கயிற்றின் ஒரு முனையை கரையில் இருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு, மறுமுனையை இடுப்பில் கட்டி, காப்பாற்ற முயற்சிக்கலாம்.

Added (19 May 2014, 9:42 AM)
---------------------------------------------

ரத்த தான ஃபேஸ்புக்

உங்கள் ஸ்மார்ட் போனில் இதை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால் போதும்... அவசர நேரத்தில் இது உதவும்! ஆண்ட்ராய்டு ஆப்னு சொன்னாலே, ‘என்னவோ ஜாலி மேட்டர்... பசங்க - பொண்ணுங்க கடலைக்காகவே உருவானது’ன்னு ஒரு எண்ணம் இருக்கு. ஆனா, எங்க உதிரம் ஆப் அப்படியில்ல. ஆபத்தான நேரங்கள்ல உங்க உயிரைக் காப்பாத்துற ஆப் இது!’’ என்கிறார் மகேஷ். சென்னை தி.நகரில் ஆப் உருவாக்கத்துக்காகவே ‘க்ரேயோன் டிஜிட்டல் ரீச்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர். இவர்களின் உருவாக்கமான உதிரம் ஆப் ரத்த தானம் செய்வோரையும் ரத்தம் தேவைப்படுவோரையும் ஒரே குடையின் கீழ் இணைக்கிறது.

‘‘இப்ப காலம் நிறைய மாறியிருக்கு. ரத்த தானம் உடம்புக்கு நல்லதுங்கற மருத்துவ உண்மை எல்லாருக்கும் தெரியுது. இளைஞர்கள் ரத்த தானம் செய்யத் தயாரா இருக்காங்க. ஆனாலும், சரியான நேரத்தில் அவங்களைப் பிடிக்க முடியாததால நிறைய உயிரிழப்புகள் ஏற்படுறதா சொல்றாங்க. இனி அந்த இழப்புகளை ‘உதிரம்’ குறைக்கும்’’ என நம்பிக்கையோடு பேசும் மகேஷ், அப்படி என்ன செய்கிறது இந்த ஆப் என்பதையும் விவரிக்கிறார்...

‘‘கூகுள் ப்ளேவுல இந்த ஆப் இலவசமா கிடைக்குது. ஆண்ட்ராய்டு போன்ல டவுன்லோட் பண்ணிட்டா அதுக்கப்புறம் உங்க கூடவே ஆயிரக்கணக்கான ப்ளட் டோனர்ஸ் இருக்குறதா நினைச்சுக்கலாம். இந்த ஆப் வச்சிருக்குற எல்லாரையும் இது எந்நேரமும் தொடர்புலயே வச்சிருக்கும். ஏதாச்சும் ஆபத்துன்னா, எனக்கு இந்த குரூப் ரத்தம் தேவைப்படுதுன்னு இதுல ஒரு போஸ்ட் போட்டா போதும். அந்த குரூப் ரத்தம் கொண்டவங்க எல்லாருக்கும் அது ஒரு ரிக்வெஸ்டா போகும். உடனே வந்து ரத்தம் தர நினைக்கிறவங்க அதை அக்செப்ட் பண்ணுவாங்க. சில குரூப் ரத்தத்துக்கு வேற குரூப்பும் சேரும்னு கணக்கு இருக்கு. அந்தக் கணக்குப்படி யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்னு அதுவே கணக்குப் போட்டுக் காட்டும்.



ஒருவேளை இந்த ஆப்ல உறுப்பினரா இருக்குறவங்களால அந்த நேரத்தில் ரத்த தானம் செய்ய முடியலைன்னாலும், தெரிஞ்ச நண்பர்கள்கிட்ட கேட்டு அவங்க சம்மதத்தோட அவங்க நம்பரைக் கொடுக்கலாம். அதுமட்டுமில்லாம, இந்த ரத்த ரிக்வெஸ்டை ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் மூலமா ஃபார்வேர்டு செய்யும்போது, இன்னும் நிறைய பேரோட உதவிகள் கிடைக்கும். ரத்த தானம் செய்யிறவங்க மூணு மாசம் கழிச்சுதான் ரத்த தானம் செய்யணும். அதனால, உறுப்பினர்கள் எப்ப கடைசியா ரத்த தானம் செஞ்சாங்கன்னும் இந்த ஆப் கணக்கு வச்சுக்கும்!’’ என்று முடிக்கிறார் மகேஷ். உயிரை வாங்குகிற பல ஆப்களுக்கு மத்தியில் உயிரைக் கொடுக்கிறது இந்த ‘உதிரம்’ ஆப்!


 
shanDate: Monday, 19 May 2014, 5:40 PM | Message # 283
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அருமையான தகவல்கள் ராம் ..............
 
ram2858Date: Tuesday, 20 May 2014, 10:01 AM | Message # 284
Sergeant
Group: *Checked*
Messages: 30
Status: Offline
பாதம் தொட்டால் ஒலியெழுப்பும் விநோதம்

சாருவி டிசைன் லேப் என்ற தனியார் அமைப்பு, தாங்கள் தயாரித்துள்ள ஹனுமான் அனிமேஷன் படத்துக்காக, துளசிதாசரின் ஹனுமான் சாலிசா என்ற 40 வரிப் பாடலைப் பாடி பிரபலப்படுத்தியது. அப்போது, அந்த நிறுவனத்துக்குத் தோன்றிய வித்தியாசமான கருத்தின் விளைவாக, 16,500 மணிகள் மூலம் ஹனுமான் வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டது. வெவ்வெறு நீள அகலங்களில் மணிகளைக் கோத்து, அவற்றை மேலிருந்து கீழாக கட்டித் தொங்கவிட்டு, அவற்றுக்கு ஒரு உருவம் வருமாறு அமைக்கப்பட்டது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த உருவம், நம் மனதுக்கு ரம்யமாக இருக்கும் வகையில் ஒலியெழுப்பும்.இந்த ஹனுமனின் பாதுகைகளைத் தொட்டால் போதும்… அதன் அதிர்வலைகள் ஒரு மணிக்குக் கடத்தப்பட்டு, பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து மணிகளும் ஒலிக்கும். அந்த ஒலி, மனதுக்கு ரம்யமாக இருப்பதுடன், நம்மை தியான நிலைக்கும் அழைத்துச் செல்கிறது. மணி ஒலி என்பது இந்து மதத்தில் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
ஹனுமான் சாலீஸா அனிமேஷன் படத்தின் விளம்பரத்துக்காக இது அமைக்கப்பட்டாலும் இது மக்கள் மனதில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பெரும்பாலானோர் இதனை வணங்கி, ரசித்துச் சென்றனர்.

26 அடி உயரத்தில் மணிகளால் ஆன இந்த ஹனுமான் வடிவம், மிகச் சிறந்த கலைநுணுக்க வேலைபாடாகக் கருதப் படுகிறது. இதற்காக, பொறியாளர்கள் 48 மணி நேரத்துக்கும் மேல் உழைத்துள்ளனர்.
 
lakshmiDate: Tuesday, 20 May 2014, 2:46 PM | Message # 285
Major
Group: Users
Messages: 92
Status: Offline
Hi Ram,

Arumaiyanathagavalugku nanri.
 
ram2858Date: Wednesday, 16 Jul 2014, 7:16 PM | Message # 286
Sergeant
Group: *Checked*
Messages: 30
Status: Offline
கேளுங்கள் குறைக்கப்படும்!

சாலையோரம் பூ விற்கும் பெண்ணிடம், பேரம் பேசி இரண்டு முழம் பூ வாங்குவோம். பத்து ரூபாய் விஷயத்தில் உஷாராக இருக்கும் நாம், பல லட்சம் பெறுமானமுள்ள ஒரு காரை வாங்கும்போது பேரம் பேசுவதே இல்லை. பிறகு, நம் கௌரவம் என்னாவது! ஆனால், அப்படி வாங்க முடியுமா? முடியும்!

கார்களுக்குப் பல தள்ளுபடிகள் தருகிறார்களே, என்னென்ன தள்ளுபடி? எப்போது தருகிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பண்டிகை காலச் சலுகை மற்றும் ஆடி மாதச் சலுகை மட்டுமே இருந்துவந்தது. ஆனால், தற்போது நாள்தோறும் சலுகைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக, பொருட்களைச் சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவிக்கிறார்கள். இதனால், பண்டிகை காலம் மட்டுமல்லாது, வருடம் முழுவதும் பெரிய பெரிய விளம்பர பேனர்களைப் பார்க்க முடிகிறது!

வாங்கத் தூண்டும் அதிரடி தள்ளுபடிகள்!

சில கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கும் எண்ணத்திலேயே இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், ‘தள்ளுபடி விலை!’ என்கிற கவர்ச்சி விளம்பரம், அந்த கார்களை வாங்கச்செய்துவிடும். இது ஒரு வியாபார யுக்தி. அதே சமயம், இந்தச் சலுகை அறிவிப்பு, வேறுவிதமான விளைவுகளையும் உருவாக்கலாம். அதாவது, அந்த கார் நிறுவனத்தின் உயர்ந்த மதிப்பை சரிவை நோக்கித் தள்ளலாம். இந்தியாவில் இந்தச் சலுகை விஷயத்தைக் கையில் எடுக்காதது இரண்டே நிறுவனங்கள்தான். ஒன்று ஹோண்டா, மற்றொன்று மெர்சிடீஸ்.

புதிய கார்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை விலை, பழைய கார்களின் விலையையும் பாதிக்கும். விலை குறைப்புக்கு முன்பு கார் வாங்கியவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவே கருதுவார்கள். உதாரணமாக, மாருதியின் விலை குறைப்பைக் குறிப்பிடலாம். 2004-ம் ஆண்டு மாருதி எஸ்டீமின் விலை குறைக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட பழைய மாருதி ஜென்னின் விலை அளவு குறைந்துவிட்டது.

அதெல்லாம் சரி, இந்தப் போட்டியில் நாம் எவ்வாறு பயன்பெறுவது? இதோ உங்களுக்காக சில வழிகள்….

விளம்பரத்தில் விழியுங்கள்!

தினசரி செய்தித்தாள் விளம்பரங்களை நன்றாகக் கவனியுங்கள். அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உள்ளூர் டீலரின் விளம்பரத்தில் உள்ள விலையையும் அவர் பெயரையும் குறித்துக்கொள்ளுங்கள். யார் குறைவாகத் தருகிறார்கள் என்பதை ஒப்பிட்டு, முடிவெடுக்கலாம்!

நல்ல தருணம் வரணும்!

பொதுவாக, டிசம்பர் மாத இறுதியில் கார் விற்பனை அதிகம் இருக்கும். காரணம், புத்தாண்டில் காரைப் பதிவு செய்தால்தான், மறு விற்பனையின்போது நல்ல விலை கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், அதே சமயம் மாதாந்தர விற்பனை அளவை எட்ட முடியாமல் இருக்கும் டீலர்களுக்கு, மாத இறுதியில் நீங்கள் பிஸினஸ் கொடுப்பதால், நிச்சயம் நிறைய தள்ளுபடி கிடைக்கும்.

சில மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, புதிய மாடல் வெளிவர ஆரம்பித்துவிடும். அப்போது டீலர்களிடம் பழைய மாடல் ஸ்டாக் இருக்கும். அவற்றைக் காலி செய்ய குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள். இத்தகைய மாடல் கார்களை வாங்குவதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. மிகக் குறைந்த விலைக்கு கார் கிடைப்பது நன்மை. மறு விற்பனை மதிப்பு மிகவும் மோசமாக இருப்பது தீமை.

விற்பனை குறைந்தால் சலுகைகள் அதிகமாகும்!

அதிகமாக விற்பனையாகாத கார்கள் மிகவும் குறைந்த விலைக்கே விற்கப்படும். இதற்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த 100 bhp திறன் கொண்ட 1.6 லிட்டர் காரை உதாரணமாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட கார்களை வாங்கும்போது, நன்றாக இருக்கும். ஆனால், அவற்றை மறு விற்பனை செய்யும்போது அவ்வளவாக நல்ல விலை கிடைக்காது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

விற்கிற இடத்தில் விற்கணும்!

பழைய காரை விற்றுவிட்டு புதிய கார் வாங்க நினைத்தால், அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் போவதே சிறந்தது. அவர்கள் உங்கள் பழைய காரை நல்ல விலைக்கு வாங்குவதோடு மட்டுமல்லாது, புதிய காரின் விலையில் தள்ளுபடியும் கொடுப்பார்கள்.

‘உங்களின் பழைய காருக்கு இதைவிட நல்ல விலை யாரும் கொடுக்க முடியாது’ என்று நீங்கள் உறுதியாக நம்பினால் மட்டுமே, வேற்று நபர்களிடம் நீங்கள் உங்கள் பழைய காரை விற்பனை செய்யலாம்.

இலவசங்களுக்கு மயங்காதீர்!

இலவச வீல் கவர், இலவச விரிப்பு, இலவச ஆடியோ செட் போன்றவற்றுக்கு மயங்காதீர்கள். அவை தரம் குறைந்தவையாகவும் உங்கள் ரசனைக்கு ஏற்றவையாக இல்லாமலும் இருக்கும். இவற்றுக்குப் பதிலாக விலையைக் குறைக்கச் சொல்லிக் கேளுங்கள். முதலில் சிலர் தயங்குவார்கள். விடாமல் கேளுங்கள், நிச்சயம் விலையைக் குறைப்பார்கள்.

கடன்களும் சலுகை அளிக்கும்!

வங்கியில் கடன் வாங்கி கார் வாங்கும்போது, டீலரிடம் கடனில் தள்ளுபடியைக் கேளுங்கள். இரண்டு முதல் ஐந்து சதவிகிதம் வரை கிடைக்கும். இவ்வாறு தள்ளுபடி வாங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஏனென்றால், மறைமுகக் கட்டணங்களின் மூலம் குறைக்கப்பட்ட தொகையை வசூலித்து விடுவர். சில சமயம், கடன் தொகைக்கு மேலும், நமக்குத் தெரியாமல் நாமே பணம் கட்டிவிடுவோம். ஆகையால், கடன் வாங்கும்போது தெளிவாக எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சரியான தருணத்தில், சரியான இடத்தில், திறமையாகப் பேசினால்… பலன் நிச்சயம். கேளுங்கள் தரப்படும்!

Added (03 Jun 2014, 9:42 AM)
---------------------------------------------
அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்!

ஆரோக்கியமாக வாழ நமக்கு நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 2,800 கலோரிகள் தேவை. ஆனால், மாறிவிட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு போன்ற காரணங்களால் 2,800-க்கும் அதிகமான கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோம். இப்படி அதிகப்படியான கலோரிகள் உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இதன், விளைவாக உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

என்னதான் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தும் நம்மால் போதுமான அளவு கலோரிகளை எரிக்க முடிவது இல்லை. வீட்டில், நாம் செய்யும் அன்றாட வேலைகளை அதிகக் கவனத்துடன் செய்வதாலும் அல்லது வாழ்வில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலமும் கூடுதலாகச் சில கலோரிகளை எரிக்க முடியும்” என்கிற திருநெல்வேலியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் சாம், அதற்கான அசத்தல் வழிமுறைகளை விவரித்தார்.
 வீட்டில் பாத்திரம் கழுவுவது, தரை துடைப்பதன் மூலம் எவ்வளவு கலோரி செலவிடப்படுகிறது என்பது அவரவர் உடல் எடையைப் பொருத்தது. ஒருவரின் எடை 45 கிலோவாக இருந்து, 15 நிமிடங்கள் பாத்திரம் கழுவினால் 38 கலோரிகள் வரை எரிக்கப்படும். தரையை சுத்தம் செய்தால் 65 கலோரிகள் வரை எரிக்கலாம்.
 வீட்டுச் சுவற்றில் பந்து வீசிப் பிடிப்பதன் மூலம், அரை மணி நேரத்தில் 105 முதல் 285 கலோரி வரை எரிக்கலாம். 
 வீட்டில் தினமும் 50 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் விளையாடினால், 500 கலோரிகளை எரிக்கலாம்.
 ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு போன் பேசுவதற்குப் பதில், பாதுகாப்பாக நடந்தபடியே பேசுங்கள். அவ்வப்போது எழுந்து உட்காருங்கள். இதனால், கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும்.
 வீட்டில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு, சில நிமிடங்கள் நடனம் ஆடலாம்.
 மணிக்கணக்கில் உட்கார்ந்த நிலையில் இல்லாமல், ஃபைல், பேப்பர் படிக்கும்போதுகூட எழுந்து நின்று படிக்கலாம். காலாற ஓய்வு அறைக்கு நடந்து ஐந்து நிமிடங்கள் புஷ் அப்ஸ் அல்லது ஜம்ப் செய்யலாம். இதனால், உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன் 50 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
 துடிப்பான வேகத்துடன் அதாவது மணிக்கு 4 மைல் வேகத்தில் 90 நிமிடங்கள் நடந்தால், 500 கலோரிகளை எரிக்கலாம்.
 அலுவலகத்தைச் சுற்றிலும் ஒரு 10 நிமிடத்துக்கு நடந்தாலே, குறைந்தது 80 முதல் 100 கலோரிகளை எரிக்க முடியும்.
 இளைஞர்கள், மூட்டுப் பிரச்னை இல்லாதவர்கள் மணிக்கு 6 மைல் வேகத்தில் ஓடலாம். இதன் மூலம் 42 நிமிடங்களில் 500 கலோரிகளை எரித்துவிடலாம்.
 குழந்தைகளுடன் விளையாடுங்கள். குழந்தைகளுடன் ஒரு ஒன்றரை மணி நேரத்தை செலவிடுவதன் மூலம் 500 கலோரிகளை எரிக்கலாம். இதனால், மன அழுத்தமும் குறையும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.
 தினசரி 65 நிமிடங்கள் நீச்சல் செய்யலாம். நீச்சல் செய்யும் திறன், என்ன மாதிரியான நீச்சல் பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து, ஒரு மணி நேரத்தில் 450 முதல் 950 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
 சைக்கிளிங் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பெடல் மிதிப்பதைப் பொருத்து 75 முதல் 670 கலோரிகளை வெறும் அரை மணி நேரத்திலேயே கூடுதலாக எரிக்க முடியும்.

Added (03 Jun 2014, 8:05 PM)
---------------------------------------------
Wanna Know the ways To Make your Mehndi Dark??Get Quick tips here on how to make it dark..


  • Apply a small amount ofcoconut oilto your palms before drawing mehndi designs.


  • Once the Mehndi dried, apply a Mixture oflemon juice and a pinch of sugarto your hands.
  • You can use this liquid by dabbing with a cotton ball.
  • Leave it for about 15 Minutes.

  • In the intervening period of time, put a few cloves in the Pan and warm it up.
  • Keep your hands away and let the Clove smoke come up to them.

  • Scrape the Mehndi off with your nails after 2-3 hours. 

  • Then Rub Mustard Oil/Baby Oil/Vicks(Pick any one of these) on your hands to improvise the color of Mehndi.

  • Next Day in the Morning you can apply Olive oil to your hands.

  • Apply little amount of Vaseline on your Skin before taking a bath.

    Notes
  • Don’t Wash your hands with Water at all for atleast 10-12 hours.
  • Design of Mehndi does Matters in deciding the final Shade.
  • The Broader/thicker the mehndi design is, the more there is color.
  • Allow the henna flakes off on its own.
  • At the beginning it will be light orange, then it will become dark orange and after 2 days it will be dark brown to deep red depending upon the skin type.

Added (15 Jul 2014, 2:56 AM)
---------------------------------------------
* குழந்தைகள் ஓராண்டில் ஏறக்குறைய 50 லட்சம் முறை கண் இமைக்கிறார்கள்.
* சிங்கங்களை விட நீர்யானைகள் அபாயமானவை.
* இமயமலைத் தொடர் ஆண்டுக்கு அரை இன்ச் உயரம் என்கிற அளவில் வளர்கிறது.
* துருக்கியில் 8,891 அடி நீளமுள்ள கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது 114 டென்னிஸ் கோர்ட்டுகளின் நீளத்துக்குச் சமம்!
* மிக வேகமான வல்லூறுவால் ஒரு ரேஸ் கார் வேகத்துக்குப் பறக்க முடியும்.
* கடந்த 5 நிமிடங்களில் நம் பூமி 5 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்திருக்கிறது.
* பண்டைய எகிப்தில் மம்மிகளின் மூக்கு வழியாக மூளை வெளியே எடுக்கப்பட்டு விடும்.
* மனிதர்களால் 10 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளைப் பிரித்து உணர முடியும்!
* சீனாவில் நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
* 3 கோடியே 30 லட்சம் மக்கள் கைகோர்த்து நின்றால் நிலநடுக்கோட்டை ஒரு சுற்று சுற்றி விடலாம்!
* சராசரியாக ஒரு 500 ரூபாய் நோட்டு 9 ஆண்டு காலம் புழங்குகிறது.

Added (16 Jul 2014, 7:13 PM)
---------------------------------------------
ரயில் முன்பதிவு: ஆக. 15 முதல் விரும்பிய இருக்கையை பெறும் வசதி அறிமுகம்!

ரயிலில் விரும்பிய இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் புதிய மென்பொருளை இணைத்து ‘அப்கிரேட்’ செய்யும் பணி நடந்து வருகிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பயணத்திற்கான முன்பதிவை இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் செய்து ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது.

அதிகபட்சமாக சைட் பெர்த், லோயர் பெர்த் அல்லது மிடில் பெர்த் என்ற விருப்பத்தை மட்டுமே குறிப்பிட முடியும். நாம் குறிப்பிடும் அந்த இருக்கை, அதிக இடங்கள் காலியாக இருந்தால் மட்டுமே கிடைக்கும். அதாவது முதலில் எஸ்-1 பெட்டிக்கான முன்பதிவு நடைபெற்றால் அதில் உள்ள இருக்கைகள் அனைத்தும் காலியான பின்னரே அடுத்த பெட்டிக்கான முன்பதிவு எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், எஸ்- 2 பெட்டியில் நாம் விரும்பும் இருக்கை காலியாக இருந்தாலும் கிடைக்காது.

இந்நிலையில் ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ‘‘ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே தங்களுக்கு விரும்பிய இருக்கை, படுக்கை வசதி, பெட்டி ஆகியவற்றை பயணிகள் தேர்ந்தெடுக்கலாம். பயணிகளுக்கு விருப்பமான உணவுகள் ரயில்களில் வினியோகிக்கப்படும். பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு தேவையான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் உணவு வழங்கப்படும்போது அதற்கான பணம் பெறப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் உள்ள மென்பொருளில், புதிய மென்பொருளை இணைத்து ‘அப்கிரேட்’ செய்யும் பணி நடந்து வருகிறது. இதன்மூலம் விரும்பிய இருக்கைகள் கிடைப்பதோடு, நிமிடத்துக்கு 2 ஆயிரம் முதல் 7200 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படும்.

மேலும் பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்காக அந்தந்த பகுதிகளில் பிரபலமாக திகழும் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் பெறும் பணியும் நடந்து வருகிறது. ரூ.100 கோடி செலவில் நடைபெறும் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் இந்த வசதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Added (16 Jul 2014, 7:16 PM)
---------------------------------------------
நமது மத்திய அரசு  வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்றை நிறுவி உள்ளது. 

NAUKRI SERVICE BY NIESBUD

 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » Ram's தகவல் பெட்டகம் (Ram's தகவல் பெட்டகம்)
Search: