Ram's தகவல் பெட்டகம்
|
|
Laya | Date: Sunday, 02 Feb 2014, 1:29 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| Ram's தகவல் பெட்டகம்
ராம் அவர்கள் நம்முடன் பகிரும் பயனுள்ள தகவல்களை இங்கு படித்து அறிந்துக்கொள்ளவும்
|
|
| |
rams | Date: Sunday, 02 Feb 2014, 7:59 PM | Message # 2 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே,
என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.
சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.
இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.
மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 02 Feb 2014, 7:59 PM | Message # 3 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!
1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
5.போலீஸ் sms :- ———————————-9500099100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு sms :——9840983832
7.போக்குவரத்து விதிமீறல் sms : ————-98400 00103
8.போலீஸ் : —————————————–100
9.தீயணைப்புத்துறை :—————————-101
10.போக்குவரத்துவிதிமீறல——————–103
11.விபத்து :——————————————–100, 103
12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
13.பெண்களுக்கானஅவசர உதவி : ———–1091
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919
21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 02 Feb 2014, 8:05 PM | Message # 4 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| 1.காதல் காட்சியே இல்லாமல் நாடகங்கள் எழுதியவர் பெர்னாட்ஷா.
2.மஞ்சள் காமாலை நோயால் இறந்தவர்கள் கண்களைத் தானம் செய்ய முடியாது.
3.வேர்க்கடலையிலிருந்து எண்ணெய் தவிர பால், தயிர், மாவு, வெண்ணெய் தயாரிக்கலாம்.
4.செவாலியர் விருதை உருவாக்கியவர் நெப்போலியன் போனபார்ட்.
5.உலகிலேயே முதன் முதலில் வெளிவந்த மாலை நாளிதழ் “தி ஸ்டார்’, இடம்: லண்டன். 6.பௌத்தர்களின் ஆண்டுக் கணக்கு கி.மு.543 வைசாக பௌர்ணமியிலிருந்து துவங்குகிறது.
7.என்றுமே கெட்டுப் போகாத உணவு தேன்.
8.முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
9.பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை
10.பூனைகள் இனிப்பைத் தொடாது.
11.பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.......
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 02 Feb 2014, 8:07 PM | Message # 5 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| சிறுபான்மைச் சமுதாய மாணவர்களுக்கு இலவச IAS பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. உரிய காலத்தில் இது பயன்படுத்தப்படாவிட்டால் வழக்கம்போல திரும்பிச் சென்று விடும்.. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதில் சேரத்தகுதி உடையோர். சென்னை மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வெளியூர் மாணவர்களுக்கு ரூ2000 உதவித்தொகையும் உண்டு.. ஆர்வமுடையோர் நமது கல்வி வழிகாட்டல் ஒருங்கிணப்பாளர் பேரா.எம்.எஃப்.கான் அவர்களைத் தொடர்பு கொள்க. அலைபேசி எண்கள் : 9840259611, 9677109759.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 02 Feb 2014, 10:03 PM | Message # 6 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.
* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 03 Feb 2014, 11:12 AM | Message # 7 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பிளாஸ்டிக் பைகளிலிருந்து கார் எரிபொருள்: புதிய தொழிநுட்பம்
வீணாகும் பிளாஸ்டிக் பைகளை கார் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அமெரிக்க சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலக நாடுகள் முழுவதிலுமே தவிர்க்க முடியாத பொருளாகி விட்டன பிளாஸ்டிக் பைகள்.
காய்கறி வாங்குவதில் தொடங்கி, கம்ப்யூட்டர் பேக்கிங் செய்வது வரை அனைத்துக்கும் பிளாஸ்டிக் கவர்கள்தான் பயன்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் மக்கும் தன்மையற்றவை.
இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று எவ்வளவோ எடுத்துக் கூறினாலும் யாராலும் தவிர்க்க முடியாத பொருளாக பிளாஸ்டிக் பைகள் மாறிவிட்டன.
இந்நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு வீணாகத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை காருக்கான எரி பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்.
இதுகுறித்து வாஷிங்டனில் வெளியாகும் "சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை இதழில்´ வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஒடிஸா மாநிலத்திலுள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் வேதியியல் நிபுணர் அச்யுத் குமார் பாண்டா மற்றும் ஒடிஸாவிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியாளர் ரகுபன்ஷ் குமார் சிங் ஆகிய இருவரும் இணைந்து பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வில், பிளாஸ்டிக் பைகளை வெண் களிமண் (அலுமினியம் சிலிக்கேட்) ஊக்கியுடன் 400 முதல் 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்டது.
அதன் காரணமாக பிளாஸ்டிக்கின் நீண்ட மூலக்கூறுத் தொடர் உடைந்து, எரி பொருளுக்குரிய கரியமிலம் நிறைந்த சிறிய மூலக்கூறுகளை வெளிப்படுத்துகின்றன.
அது, வேதிவினைக்கு உட்படுத்தப்படும்போது எரிபொருளாக மாற்றப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி வெற்றியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆங்காங்கே பூமியை நிரப்பி வரும் பாலிதீன் பைகளின் எண்ணிக்கை குறைவதேடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 03 Feb 2014, 11:14 AM | Message # 8 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமியுங்க!': தவறிய மழையால் தடுமாறும் நீராதாரம்..
கோவை :''தண்ணீர் தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப, நீரை சேமித்து மிச்சப்படுத்தும் பட்சத்தில், அடுத்த தலைமுறைக்கு, குறைந்தளவாவது தண்ணீரை விட்டுச் செல்ல முடியும்,'' என, ஊராட்சிகளில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்து வரும் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
தவறிப் போகும் பருவமழை; மறைந்து போகும் நீராதார சுவடுகளால், இன்றைக்கு தண்ணீரின் அருமையை பெரும்பாலானோர் உணரத் துவங்கி விட்ட்னர். கிடைக்கும் சொச்ச நீரையாவது சேமித்து வைத்தால் மட்டுமே, நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, ஊராட்சிகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.தண்ணீரின் முக்கியத்துவம், நீர் மேலாண்மை, நீரை எவ்வாறு கிடைக்கச் செய்வது, கிடைக்கும் நீரையும் எவ்வாறு பாதுகாப்பது என்பன உட்பட வழிமுறைகள் கற்றுத் தரப்படுகின்றன.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, சிறப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளராக, 'எய்ம்' தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை, கோவை ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள ஊராட்சிகளில், சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் வழிகாட்டுதல்படி, கோவை ஊராட்சிகளில் உள்ள கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், ஊராட்சித் தலைவர், செயலாளர், பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியை, கிராம சவெ?லியர், அங்கன்வாடி பணியாளர், குடிநீர் பணியாளர்கள் இருப்பர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றுவது இவர்களது கடமை.பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு கூறுகையில், ''கிராமந்தோறும் நடத்தி வரும் பயிற்சியில், பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற்றுள்ளனர். உற்பத்தி செய்ய முடியாத நீரை, எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துகிறோமே, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. வருங்கால சந்ததிக்கு, குறைந்த அளவாவது, தண்ணீரை விட்டுச் செல்ல முடியும்,'' என்றார்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 03 Feb 2014, 11:15 AM | Message # 9 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| யானை சாணத்தில் இருந்து காகிதம்
யானையின் சாணத்தை, தாவரங்களுக்கு போட்டால் நல்ல உரம். இலங்கையில் யானையின் சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்கின்றனர். யானை சாப்பிடும் உணவுக்கு ஏற்ப காகிதத்தின் நிறமும் இருக்கும். மக்காச்சோளம் சாப்பிடும் யானைகளின் சாணத்தில் இருந்து தயாரிக்கும் பேப்பர் அடர்த்தி யான வண்ணத்தில் உள்ளது. யானை சாணத்தில் தயாரிக்கும் பேப்பரில் இருந்து போட்டோ ஆல்பங்கள், பைல்கள், பேக்குகள் தயாரிக்கப் படுகின்றன. இந்தியாவில் தற்போது யானை சாண காகிதங்கள் தயாரிக்கப்பட்டு பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 03 Feb 2014, 11:15 AM | Message # 10 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| லைட்டை பயன்படுத்தி பூச்சிகளை விரட் டினேன்!
சூரிய ஒளியில் இயங்கும், பூச்சிக்கொல்லி கருவியை கண்டுபிடித்துள்ள, டேவிட் ராஜா:
நான், திருநெல்வேலி மாவட்டம், கடையம் தோட்டக்கலை உதவி இயக்குனராக பாணியாற்றுகிறேன். காய்கறிகளை பயிரிடத் துவங்கிய இப்பகுதி விவசாயிகள், முதலில் ஏராளமாக கத்திரிக்காய் போட்டனர். நல்ல காய்ப்புக்கு வந்த பருவத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கி அடித்தும், கத்திரிக்காயில் உள்ள காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த இயலவில்லை.விவசாயிகளை வயல்களில் சந்தித்த போது, 'சார், நீங்க சொல்லி தான், கத்தரிக்காய் போட்டோம்; இப்ப பூச்சிகள் தொல்லை தாங்க முடியல' என, வருத்தத்துடன் கூறினர். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்த நான், இயற்கை முறையிலான, பூச்சிக்கொல்லி கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.அதன் பயனாக, சூரியஒளியில் இயங்கும் பூச்சிக்கொல்லி கருவியை கண்டுபிடித்தேன். இக்கருவி, கத்திரிக்காயை தாக்கும் பூச்சிகளை மட்டுமின்றி, மல்லிகை செடியில் உள்ள வெள்ளை ஈ, மொட்டு ஈ மற்றும் நெல், ரோஜா, காபி, டீ என, எல்லாவித பயிர்களையும் தாக்கும், அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தது. பகல் நேரத்தில், சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வெப்பம், மின்சாரமாக மாற்றப்பட்டு, பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் இரவில், 'லைட்' எரிகிறது. இந்த லைட், பூச்சிகளை அதிக அளவு ஈர்க்க உதவும்.மேலும், லைட் டின் கீழ்ப்பகுதி யில், ஒரு பெரிய தட்டு இருக்கும். 1 லிட்டர் விளக்கெண்ணெயில், 3 மில்லி தலைக்கு பயன்படுத்தும், 'ஷாம்பூ'வை கலந்தால், அடர்த்தியான கலவை கிடைக்கும். இந்த கலவையை தட்டில் தடவினால், லைட்டால் கவரப்பட்ட பூச்சிகள் இந்த தட்டில் விழுந்து ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறை, இந்த தட்டை எடுத்து சுத்தம் செய்யலாம். சூரியஒளி பூச்சிக்கொல்லி மின்கருவியை, ஏக்கருக்கு, இரண்டு இடங்களில் வைக்கலாம். இதில், எவ்வித நச்சுத்தன்மையும் இல்லாததால், பறவைகள் சாப்பிட்டாலோ அல்லது குழந்தைகள் தெரியாமல் தொட்டு விட்டாலோ, எந்த பாதிப்பும் வராது.
இக்கருவியை பயன்படுத்துவதால், பூச்சிகளின் எண்ணிக்கை பாதியளவு குறைந்து விடும். எனவே, குறைந்த அளவு ரசாயன மருந்துகளை பயன் படுத்துவதால், காய்கறிகளின் தரமும் சுவையும் அதிகரிக்கிறது.
endrum anbudan
vijiram
|
|
| |