Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Monday, 24 Mar 2014, 11:55 PM | Message # 261 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலம் பால் பெருகும்.
நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும்.
பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள்.
சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டால் அவர்களது தாம்பத்ய சக்தி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள்.
அந்த பாதிப்புளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என் சைம்க்கு இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 24 Mar 2014, 11:55 PM | Message # 262 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| தலைவலிக்கான ஆலோசனைகள்
காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.
தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.
தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 24 Mar 2014, 11:56 PM | Message # 263 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| இதய நோயாளிகளின் உணவு முறை
இதயத் துடிப்பு உயிருக்கு முக்கியம். இதயம் நன்றாக வேலை செய்ய வேண்டுமானால், இதயத் தசைகள் நன்றாக வேலை செய்வது அவசியம். வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இதய நோய் பிரச்னை பல பேருக்கு உள்ளது.
வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இன்றைய இளைஞர்களும் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளனர். பெரியவர்களுக்கு ரத்தக் குழாயின் குறுக்கு விட்ட அளவு குறையத் தொடங்கி, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
இந்த இடத்தில்தான் இதய நோயாளிகளுக்கு கொழுப்புச் சத்து குறைவான உணவு முக்கியத்துவம் பெறுகிறது. சர்க்கரை நோயாளிகளும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குளிர் பானங்கள், சர்க்கரை உள்ளிட்ட இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகி, கொழுப்புச் சத்தாக உருமாறும்.
இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும். இவ்வாறு ரத்தக் குழாய்களில் அடைப்பு – அதைத் தடுப்புதற்கு உணவு முறை முக்கியப் பங்காற்றுகிறது.
ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் – காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி உள்ளிட்ட பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம்.
உணவில் உள்ள கரையும் நார்ச்சத்து (பருப்பு, ஓட்ஸ் உள்ளிட்ட தானிய வகைகள், பழ வகைகளில் இத்தகைய நார்ச்சத்து உள்ளது.) ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிப்பதைத் தடுக்கிறது. எனவே இத்ககைய உணவு இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சர்க்கரை நோயாளிகளைப் போலவே இதய நோயாளிகளும் உணவு ஆலோசனை நிபுணன் மதிப்பீட்டீன்படி, தேவையான கலோரிச் சத்தைக் கொண்ட உணவுத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏனெனில் இதய நோயாளி இஷ்டம்போல் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் – இதயம் திணறும். தீவிர உடற்பயிற்சியை இதய நோயாளிகள் செய்ய முடியாது. இதனால்தான் உணவில் அக்கறை செலுத்தி உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதய நோயாளிகள் காலை எழுந்தவுடன் ஒரே நேரத்தில் அதிக அளவு குடிநீர் குடிக்கக் கூடாது. நாள் முழுவதும் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக குடிநீர் குடிக்கலாம். இதய நோயாளிகள் சப்பாத்தி மட்டுமே சாப்பிட வேண்டும் என நினைக்க வேண்டாம்.
கலோரிச் சத்து குறைவான-ஊட்டச்சத்து நிறைந்த உணவை இடைவெளி விட்டுச் சாப்பிடலாம். இதய நோயாளிகள் வாக்கிங் உள்பட உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ரத்த அழுத்தம் உயரும் அளவுக்கு இதை பதற்றத்துடன் செய்யக் கூடாது.
endrum anbudan
vijiram
|
|
| |
ArunMozhi | Date: Tuesday, 25 Mar 2014, 3:22 PM | Message # 264 |
Major general
Group: *Checked*
Messages: 442
Status: Offline
| HI,RAMS
THANKU FOR THE INFO
Arun
|
|
| |
rams | Date: Tuesday, 08 Apr 2014, 7:57 PM | Message # 265 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| லேடிஸ் ஸ்பெஷல்:
மாதவிலக்கின் போது வெளியேறுகிற ரத்தம் அசுத்தமானது என்றும் அது எத்தனை அதிகமாக வெளியேறுகிறதோ அத்தனை நல்லது என்றும் பலருக்கு தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால் அதிக ரத்தப்போக்கு ஆரோக்கியமானதில்லை ஆபத்தானது என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.
25 முதல் 30 நாட்களுக்குள் மாதவிலக்கு வர்றதும் 5 நாட்கள் நீடிக்கிறதும் தான் இயல்பானது. அந்த 5 நாட்கள்ல 25 முதல் 80மி.லி ரத்தம் வெளியேறலாம். 80 மி.லிக்கு கூடுதலாகவோ, 5 நாட்களைத் தாண்டியோ, ரத்தபோக்கு இருந்தா அது அசாதாரணமானது சந்தேகப்படணும். அதிகப்படியான ரத்தப்போக்கை மெனரேஜியானு சொல்றோம்.
13-14 வயசுல வயசுக்கு வர்ற ஒரு பெண்ணுக்கு முதல் சில மாசங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி மற்றும் வெளியேறுகிற ரத்த போக்கின் அளவுல மாற்றம் இருக்கலாம். அது கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். அதுவே 18-19 வயதிலும் தொடர்ந்தாலோ, மாதவிலக்கு நாட்கள்ல அந்தப்பெண் ரொம்பக் களைச்சு சோர்ந்து போனாலோ அலட்சியப்படுத்தாம மருத்துவரை பார்க்கணும். அதிக படியான ரத்தப் போக்குக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.
ரத்த தட்டணுக்கள்ல ஏதாவது குறைபாடு இருக்கலாம். சிலர் இதய நோய்க்கு மருந்துகள் எடுப்பாங்க. ரத்தம் உறைதலை தடுக்கிற அந்த மருந்துக்களோட பக்க விளைவாக இருக்கலாம். கர்ப்பபையோட உள்பக்க லைனிங் பாகம் அப்படியே உதிரும் போது தான் அது ரத்தப்போக்கா வெளியேறும். பிறகு புது திசுக்கள் உருவாகும். இந்த இயக்கத்துல கோளாறு இருக்கலாம். கர்ப்பப்பைல தொற்று அல்லது கட்டி, காப்பர்டி யோட விளைவு, என்டோமெட்ரியாசிஸ்னு சொல்லக்கூடிய கர்ப்பப்பை வீக்கம்னு பல காரணங்களால உதிரப்போக்கு அதிகமாக இருக்கலாம்.
வயசான, நாலஞ்சு பிள்ளைங்க பெற்றெடுத்த, குண்டான உடல்வாகுள்ள பெண்களுக்கு இப்படி இருந்தா அது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாங்குறதையும் சோதிக்கணும். கர்ப்பபைக்கு வெளியில உருவாகிற கர்ப்பம் கர்ப்பப்பை வாய் கட்டி, மற்றும் தொற்று தைராய்டுனு இன்னும் சில காரணங்களையும் குறிப்பிடலாம். அதனால ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறப்ப சின்னப் பொண்ணுங்களுக்கு அப்படித்தான் இருக்கும் போக போக சரியாயிடும்னு நினைக்க வேண்டாம். உடனடியாக மகப்பேறு மருத்துவரை பார்த்த பரிசோதிக்கிறது நல்லது.
முதல்ல கர்ப்பப்பையை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும் பிறகு ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும், தைராயிடும் சரி பார்க்கப் படணும். அளவுக்கதிக ரத்தப்போக்கு இருந்தா, தேவைப்பட்டா டி அன்ட் சி செய்து திசுக்களை பயாப்சி சோதனைக்கும் அனுப்ப வேண்டியிருக்கும். அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்த, ஹார்மோன் கலக்காத அருமையான மருந்துகள் இப்ப நிறைய இருக்கு என்கிறார் மருத்துவர் மகேஸ்வரி
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 08 Apr 2014, 7:59 PM | Message # 266 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| செல்போனில் ஆட்டோ மீட்டர் கட்டணம் தெரியணுமா?
ஆட்டோ கட்டணம் தொடர்பாக, மக்களுக்கு உதவும் வகையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்று ஆட்டோ கட்டணங்களை செல்போன்களில் தெரிந்து கொள்ளும் வசதியை அறிவித்து உள்ளது.
"சுவாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ்" நிறுவனம் வடிவமைத்துள்ள "சென்னை ஆட்டோ கட்டணம்" (chennai autofare) https://play.google.com/store....n&hl=en என்ற ஆண்ட்ராய்ட் செயலியில் (ஆப்ஸ்) புறப்படும் இடத்தையும் போய்ச் சேரும் இடத்தையும் டைப் செய்தால் போதும். பயணத்துக்கான கட்டணத்தை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இந்த செயலியில் புகார் எண்ணும் சேர்க்கப்பட உள்ளது. கட்டணங்களைப் பற்றியோ அல்லது பயணத்தின்போது வேறெந்த இடையூறு ஏற்பட்டாலோ இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதைப் பற்றி போக்குவரத்து இணை ஆணையரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக "சுவாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ்" நிறுவனர் கே.எஸ். சுதாகர் தெரிவித்தார்.
இந்தச் செயலி சென்னையின் போக்குவரத்து நெரிசல்களையும் அதனால் ஏற்படும் தாமதத்தையும் கணக்கில் கொள்ளும் சாமார்த்தியமான செயலி. இது சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காசிமேடு செல்வதற்கு ரூ.225.40-ல் இருந்து ரூ.235 வரை ஆகக்கூடும் என்று காட்டும். ஆட்டோ மீட்டர் இந்த விலை எல்லையில் எவ்வளவு காட்டினாலும் அது சரி என்று தெரிந்துக்கொள்ளலாம். இதில் சராசரி காத்திருப்பு கட்டணத்தையும் அறியலாம்.
இதுதவிர, bookmycallauto.com என்னும் மற்றொரு ஆண்ட்ராய்ட் செயலியல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போனில் இருந்தே ஆட்டோக்களை நாம் இருக்கும் இடத்துக்கு வரவழைத்து கொள்ளலாம்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 08 Apr 2014, 8:02 PM | Message # 267 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதசெயல்கள் சில!
1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுதெரியக் கூடாது. அவர்கள்முன்னிலையில், சண்டையிட்டுக்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
2. குழந்தைகள் முன்னிலையில்,பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக,"உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள்கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர்வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்'என்று சொல்ல நேரிடலாம்.
3. தீயசொற்களை பேசுவதை தவிருங்கள்.அதிலும் குழந்தைகள் முன்னிலையில்பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள்குழந்தை பேசுகிறது என்பதை நினைவிகொள்ளுங்கள்.
4. சிறு குழந்தைகளை மிரட்டும்போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன்,கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
5. சில தாய்மார்கள் சிலவிஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே,குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே'என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள்குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர்முன்னிலையிலேயே "அப்பாக்கிட்டசொல்லிடுவேன்' என்று மிரட்டும்.
6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப்பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேறவேலை இல்லை; உங்கடீச்சருக்கே ஒண்ணும் தெரியலே'போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால்,குழந்தைகள் அவர்கள் ஆசிரியர்மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து,அவர்கள் படிப்பை பாதிக்கவழிவகுக்கும்.
7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும்காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன்கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப்போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்ககாசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள்.இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும்புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
10. படிப்பு விஷயத்தில்குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும்."நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்;நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்'என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன்வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்'என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடையசெய்யக் கூடாது.
11. குழந்தை முன்னிலையில் உங்கள்கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள்சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது,புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 08 Apr 2014, 8:07 PM | Message # 268 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பல்லாயிரம்கோடி ரூபாய் விளம்பரங்களில் விளையாடுகிறது. இந்தப்பணம் எங்கே இருந்து வருகிறது..?
ஒருகாலத்தில் விளம்பரங்கள் என்றால் அது நடிகைகள்தான் என்று இருந்தது. அது இப்போது அடியோடு மாறிவிட்டது.
தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் நடிகர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது.
ரஜனி, கமல், தவிர மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருமே விளம்பரத்துக்கு வந்துவிட்டார்கள்.
பெண்கள்தான் வாங்கும்ஆசைகொண்டவர்கள் என்றாலும், அதை தீர்மானிப்பவர்கள் ஆண்கள் என்பதால் இந்த மாற்றம் என்று சொல்கிறார்கள்.
அரசியலுக்கு வந்து மேடைதோறும் முழுங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரபு, ஒரு நகைக்கடைக்காக இப்போது புரட்சி போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். அந்த விளம்பரம் பெற்றவெற்றியால் இப்போது அமிதாப்பச்சனோடு இணைந்து நடித்துவிட்டார்.
"இன்னொருத்தர் தயாரிக்கிற பொருளை நான் விற்பனைசெய்வதா?" என்று விளம்பரவாய்ப்பு வந்தபோதெல்லாம் தட்டிக்கழித்த இளையராஜா, இப்போது ராகத்தோடு ஒரு நகைக்கடைபெருமையை பாடுகிறார்.
விளம்பரப்படங்கள் பக்கம் வராமல் இருந்த சரத்குமார், வெண்மை புரட்சி என்று வேட்டி விளம்பரத்தில் மோகன்லாலுடன் புஜம்காட்டுகிறார்.
பாக்யராஜும், பூர்ணிமாவும் கணவன் மனைவியாகவே விளம்பரத்தில் நடிக்கிறார்கள்.
மனைவி சினேகா நடித்த கடைவிளம்பரத்தில் இப்போது பிரசன்னா நடிக்கிறார். (மனைவிசிபாரிசாக இருக்குமோ..!) இருவரும் சேர்ந்து ஆடிமாதப்பிரிவையே செல்போன் விளம்பரமாக்கி காசு பார்த்தார்கள்.
மாதவன் விளம்பரத்திலிருந்துதான் சினிமாவுக்கு வந்தார். அவர்பற்றி சொல்லத்தேவையே இல்லை.
விளம்பரத்தை விட்டு ஒதுங்கி இருந்த விஜய் ஒரு நகைக்கடையை நல்ல கடை என்று சிபாரிசு செய்தார். இப்போது அம்மாவுடன் சேர்ந்து நகையுடன் செண்டிமெண்டையும் தருகிறார். விஜய் தங்கம்வாங்கச்சொன்னால், விக்ரம் அதை அடகுவைக்கச்சொல்கிறார்.
இன்றைக்கு விளம்பர உலகின் மோஸ்ட் வாண்டட் பேமிலி சிவகுமார் பேமிலிதான்.
சூர்யா, கார்த்தி, ஜோதிகா என்ற அந்த குடும்பமே விளம்பரசேவைசெய்துவருகிறது.
ஒரு காப்பி நிறுவனம் சூர்யாமனைவி ஜோதிகாவுக்கு, இரவில் சூரியனை உதிக்கவைத்தது. இருவரும் வீட்டில் மணக்கமணக்க காப்பிகுடித்து எல்லோரையும் குடிக்கச்சொன்னார்கள்.
ஒரு செல்போன் நிறுனத்தின் அத்தனை புதிய திட்டங்களையும் சூர்யா சிரித்தபடி அறிவித்துக்கொண்டிருக்கிறார்.
பிரபல கூல்டிரிங்சை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கச்சொல்கிறார். பற்களை சுத்தமாக வைத்திருந்தால், பஸ்சில் காதலி கிடைப்பாள் என்கிறார்.
அண்ணன் காப்பிகுடிக்கச்சொன்னால், தம்பி கார்த்தி டீகுடிக்கச்சொல்கிறார்.
பிரகாஷ்ராஜ் விளம்பரத்துக்கு விளம்பரம் பிரசங்கம் செய்கிறார்.
சந்தானம் சோப்பு விளம்பரத்தில் கைகழுவுகிறார்.
அப்பாஸ் ஆர்பிட் ஊற்றி கக்கூஸ்கழுவுகிறார்.
பார்த்திபன் கொஞ்ச நாளாக ஈமு கோழிக்கறி சாப்பிடச்சொன்னார்.
இப்படி எல்லோருமே மக்களை அதைவாங்குங்கள், இதைவாங்குங்கள் என்று அறிவுரைசொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரிய நடிகர்கள்தான் விளம்பரபடத்தில் நடிக்கவேண்டுமா..?
சிறிய நடிகர்கள் நடிக்ககூடாதா என்று கேட்டு, அவர்களும் உசிலம்பட்டி உஷா சில்க் முதல் சுடர்மணி ஜட்டி விளம்பரம்வரை நடிக்கத்தொடங்கிவிட்டார்கள்.
டி.வி.நடிகர்கள், தொகுப்பாளர்கள் சும்மா இருந்து விட முடியுமா..?
விழுப்புரத்தை தாண்டி நின்றுகொண்டு "சென்னைக்கு மிகஅருகில், விமான நிலையத்திலிருந்து 200கிலோமீட்டர் அருகில் அருமையான பிளாட். ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த காலத்தில் விளம்பரம் இல்லாமல் எந்த வியாபாரமும் செய்யமுடியாது என்பதும் உண்மைதான். ஆனால் அதில் குறைந்த பட்சம் நியாயம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டியது நடிகர்களின் கடமை.
அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் "ஒரு பொருளின் தரம்குறித்து பிரச்சினைவந்தாலோ, அல்லது அந்த நிறுவனம் மக்களை ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றினாலோ அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக விளம்பரப்படத்தில் நடிப்பவர்களுக்கும் அதில் பங்கு உண்டு, அவர்களையும் வழக்கில் சேர்க்கலாம்" என்று கூறியிருக்கிறது.
இதை நடிகர்கள் கவனதில் கொண்டால் அவர்களுக்கும் நல்லது. வாடிக்கையாளர்களுக்கும் நல்லது.
ஆக இப்படி எல்லா நடிகர்களும் விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் என்ன காரணம்..?
நல்லபொருளை மக்களிடம் கொண்டுபோய்சேர்க்கவா? இல்லை. தங்களின் வருமானத்தை பெருக்கிக்கொள்ள. சூரியாவிற்கு கோடிக்கணக்கில் தொடங்கி, பிளாட் போண்டாமணிக்கு சில ஆயிரங்கள் வரை ஆண்டுக்கு பல்லாயிரம்கோடி ரூபாய் இந்த விளம்பரத்தில் விளையாடுகிறது.
இந்தப்பணம் எங்கே இருந்து வருகிறது..?
நம்முடைய பாக்கெட்டிலிருந்துதான்.
இந்த விளம்பரங்களை பார்த்து கடைக்கு செல்லும்போது நீங்கள் வாங்கும் பொருளின் விலையில் இருக்கிறது இந்தப்பணம்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 08 Apr 2014, 8:09 PM | Message # 269 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| எந்த வகையான கேன்சராக இருந்தாலும், டாக்டர்களால் கை விடப்பட்ட நோயாளியா.? இங்கு பூரண குணம் அடைந்து தீர்வு காணப்படுகிறது04:16Tamil Fireஎந்த வகையான கேன்சராக இருந்தாலும், டாக்டர்களால் கை விடப்பட்ட நோயாளியா.? இங்கு பூரண குணம் அடைந்து தீர்வு காணப்படுகிறது..
மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். உங்கள் நண்பர்களுக்கு இதை தெரிய படுத்தவும் கிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவரா? இனி டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, எந்த வகையான கேன்சராக இருந்தாலும், டாக்டர்களால் கை விடப்பட்ட நோயாளியா.? இங்கு பூரண குணம் அடைந்து தீர்வு காணப்படுகிறது நோயாளிகள் நேரில் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை அவர்களை சார்ந்து மற்றொருவர் சென்றால் போதும்.
பார்வை நாள் ;- வியாழன், ஞாயிறு நாட்களில் மட்டும் . வைத்தியர் மற்றும் மருந்தின் செலவு 100 மட்டுமே. வைத்தியத்திற்கு செல்லும் ரயில் வழி (கர்நாடக மாநிலம்) பெங்களூர் to சிமோகா toஆனந்த புரம் to நரசிபுரா ஈஸ்வர் குமார் 09840012852http://www.youtube.com/watch?v=76819p5OIJY
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 08 Apr 2014, 8:10 PM | Message # 270 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...!
மக்களே எச்சரிக்கையாக இருங்கள்..!
ஆரோக்கியமான உணவுகள் அனைத்தையும் எப்போதுமே நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்ற நினைத்தால் அது தவறு. ஏனெனில் சில உணவுகள் உயிர் போகும் அளவிலான தீமையை கூட விளைவிக்கலாம். < எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அந்த உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு..
பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.
மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும்.
அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.
ஆப்பிள்
என்ன அதிர்ச்சியாக உள்ளதா? தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.
ருபார்ப்
இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும்.
பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.
செர்ரி
பெரும்பாலான மருத்துவர்கள் செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த பழங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் தான் விஷம் உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.
பாதாம்
பாதாம் ஆபத்தான உணவுப் பொருள் என்று சொன்னால், பலரும் நம்ப மாட்டார்கள்.
ஆனால் உண்மையில் கசப்பாக இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம்.
ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.
ப்பர் மீன் (Puffer Fish)
மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படின்னா பஃப்பர் மீன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.
ஏனெனில் இந்த மீனின் கல்லீரலில் மிகவும் கொடிய விஷம் உள்ளது. இதனை ஈரலுடன் எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த விஷம் மீனில் பரவி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
காளான்
காளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன.
அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது.
ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள், இல்லாவிட்டால் உயிரை விட நேரிடும்.
endrum anbudan
vijiram
|
|
| |