Ram's தகவல் பெட்டகம் - Page 28 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » Ram's தகவல் பெட்டகம் (Ram's தகவல் பெட்டகம்)
Ram's தகவல் பெட்டகம்
shanDate: Wednesday, 09 Apr 2014, 7:17 AM | Message # 271
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai ram ,
thidukidum tagavaluku nanri...........
 
NathasaaDate: Wednesday, 09 Apr 2014, 8:08 PM | Message # 272
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
பகிர்வுக்கு நன்றி ராம்
 
lakshmiDate: Wednesday, 09 Apr 2014, 10:16 PM | Message # 273
Major
Group: Users
Messages: 92
Status: Offline
Hi Ram,

Thanks for infos.
 
vaideeshDate: Thursday, 10 Apr 2014, 7:41 PM | Message # 274
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Dear Rams,
thanks for all the useful informations.
 
ramsDate: Friday, 11 Apr 2014, 2:17 PM | Message # 275
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
ஊழல் ஆணையம்
ஊழலை ஒழிப்பதற்கு இந்திய
அரசு மத்திய விழிப்புணர்வு
ஆணையத்தை
ஏற்படுத்தியுள்ளது. மத்திய
அரசுத் துறைகளில் ஊழல்
குறித்த வழக்குகளை மத்திய
புலனாய்வு குழுவும்
மாநில அரசுத் துறைகளில்
ஊழல் குறித்த
வழக்குகளை கண்காணிப்பு
மற்றும் ஊழல்
தடுப்பு போலீசும் வழக்குப்
பதிவு செய்து
விசாரிக்கிறார்கள்.
தமிழகத்தில் இந்த
அமைப்பு இயக்குநர்
சென்னை மல்லிகை
மாளிகையில்
செயப்பட்டு வருகிறது. சர்தார்
வல்லபாய் பட்டேல் பிறந்த
நாளை முன்னிட்டு
ஒவ்வொரு ஆண்டும்
அக்டோபர் 31ஆம் நாள் முதல்
ஒரு வார காலம் ஊழல்
கண்காணிப்பு மற்றும்
விழிப்புணர்வு வாரமாக
இந்தியா முழுவதும்
அரசு அலுவலகங்களில்
கொண்டாடப்பட்டு வருகிறது.....

Anti Corruption india - ACI

https://www.facebook.com/pages....3560620

Community
லஞ்சம் தப்புனு
நினைச்சா வாங்க..


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 13 Apr 2014, 12:18 PM | Message # 276
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
State Bank Of India Announced the post for PO ( Probationary officer ) 2014

Here is the official link for the ad. 

Online application only...

Last date : 25 - 4 - 2014

https://www.sbi.co.in/user.htm


endrum anbudan

vijiram
 
ram2858Date: Sunday, 27 Apr 2014, 1:14 PM | Message # 277
Sergeant
Group: *Checked*
Messages: 30
Status: Offline
இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க

2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்

3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..

4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க!

5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.

6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.

7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்
 
shanDate: Sunday, 27 Apr 2014, 9:15 PM | Message # 278
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
tagavaluku nanri ram.
 
NathasaaDate: Sunday, 27 Apr 2014, 10:11 PM | Message # 279
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnx for the info Ram
 
ram2858Date: Monday, 12 May 2014, 10:07 PM | Message # 280
Sergeant
Group: *Checked*
Messages: 30
Status: Offline
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.
தமிழர் பெருமையை பரப்ப இதை share செய்யுங்கள்..

Added (11 May 2014, 9:31 AM)
---------------------------------------------
எட்டு லட்சம் மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்த, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நேற்று காலை வெளியானது. பிளஸ் 1, பிளஸ் 2 கல்வி முறை அமல்படுத்தப்பட்ட, 36 ஆண்டுகளில், முதல் முறையாக, இந்த ஆண்டு, தேர்ச்சி, 90 சதவீதத்தைத் தாண்டி, தமிழகம், அபார சாதனை படைத்தது. முதல் முறையாக, அதிகம் பேர் தேர்வாகி, புதிய சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில், மேல்நிலை கல்வி பாடத் திட்டம், 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பொதுத் தேர்வு, 1980ல் நடந்தது. அதில் இருந்து, 2013 வரை நடந்த, 33 ஆண்டு பொதுத் தேர்வுகளில், ஒருமுறை கூட, பிளஸ் 2 தேர்ச்சி, 90 சதவீதத்தை எட்டியதில்லை.கடந்த மார்ச், 3 முதல், 25 வரை நடந்த பிளஸ் 2 தேர்வை, 8.21 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவை, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று காலை, 10:00 மணிக்கு சென்னையில் வெளியிட்டார். தேர்வெழுதிய, 8.21 லட்சம் மாணவ, மாணவியரில், 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தனர். கடந்த ஆண்டு, 88.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 2.5 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். முதல் முறையாக, இந்த ஆண்டு, 90.6 சதவீத தேர்ச்சியை தொட்டு, தமிழகம், சாதனை படைத்துள்ளது. 'இந்த ஆண்டு, பொதுத் தேர்வில், பெரிய அளவிற்கு, எந்த குளறுபடியும் நடக்காததால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்' என, 'தினமலர்' நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. 90 சதவீதம் முதல், 95 சதவீதம் வரை, தேர்ச்சி அதிகரிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் முறையாக, தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியுள்ளது.

மாணவியர் அசத்தல்

தேர்வெழுதிய, 3.78 லட்சம் மாணவர்களில், 3.30 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 87.4. அதே நேரத்தில், 4.43 லட்சம் மாணவியர் தேர்வெழுதியதில், 4.14 லட்சம் மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.4.

சாதனையில் சரிவு:

தமிழை முதற்பாடமாக எடுத்து, மாநில அளவில்,முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, பெரும்பாலும், 10க்கும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு, 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.ஆனால், இந்த ஆண்டு, நான்கு மாணவர்கள் மட்டுமே, மூன்று இடங்களைப் பிடித்தனர்

.* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, சுஷாந்தி, 1,193 மதிப்பெண் எடுத்து, முதலிடத்தைப் பிடித்தார்.

* தர்மபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி, அலமேலு, 1,192 மதிப்பெண் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார்.

* நாமக்கல், கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர், துளசிராஜன், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை அருகில் உள்ள மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, நித்யா ஆகியோர், 1,191 மதிப்பெண் எடுத்து, மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.

முதல், மூன்று இடங்களில், அரசு பள்ளி, ஒன்றுகூட இடம்பெறவில்லை. இந்த ஆண்டு, அரசு பள்ளிகளில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டும், அப்பள்ளி மாணவர்கள், மாநில அளவில், 'ரேங்க்' பெறாதது, கல்வித் துறையை, கவலை அடையச் செய்துள்ளது.

தமிழ்: :

பெயர்: ஸ்ருதி; பள்ளி: விஜய்வித்யாலயா பள்ளி, ஓசூர்.ரேங்க்: முதல் இடம்.

பெயர்: அஸ்வத்; பள்ளி: வித்யாமந்திர்பள்ளி, ஊத்தங்கரை. ரேங்க்: இரண்டாம் இடம்.

பெயர்: ரஞ்சித்; பள்ளி: வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர், சென்னை. ரேங்க்: மூன்றாம் இடம்.

தமிழ் அல்லாத பிறமொழி:

பெயர்: அபிநயா; பள்ளி: சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, தாம்பரம், சென்னை: ரேங்க்: இரண்டாம் இடம்.

பெயர்: கனக பார்த்திபன் இலக்கியா; பள்ளி : ஸ்ரீ வித்யோதயா மேல்நிலைப் பள்ளி, தி.நகர், சென்னை: ரேங்க்: மூன்றாம் இடம்.

தாவரவியல், விலங்கியல்:

பெயர்: ஆசிகாபானு; பள்ளி: டி.எஸ்.டி.ராஜா பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தண்டையார்பேட்டை, சென்னை; ரேங்க்: தாவரவியல், விலங்கியல் பாடங்களில் முதல் இடம்.

தாவரவியல்:

பெயர்: அபிநயா; பள்ளி: டி.எஸ்.டி.ராஜா பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தண்டையார்பேட்டை, சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

உணவு மேலாண்மை:

பெயர்: அஞ்சு; பள்ளி: சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி; ரேங்க்: இரண்டாம் இடம்.

பெயர்: சாய் சரண்யா; பள்ளி: சி.எஸ்.ஐ., பேன்ஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

நுண் உயிரியல்:

பெயர்: சேக சிவானி காந்த்; பள்ளி: சி.எஸ்.ஐ., ஜெசி மோசஸ்மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணா நகர்; ரேங்க்: முதல் இடம்.

பெயர்: சினேகா எலிசபெத்; பள்ளி: சி.எஸ்.ஐ., பேன்ஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

புள்ளியியல்:

பெயர்: ஆர்.விஜயலட்சுமி; பள்ளி: ஸ்ரீஅகோபிலமடம் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை; ரேங்க்: முதல் இடம்.

பெயர்: எம்.விஜயலட்சுமி; பள்ளி: ஸ்ரீஅகோபிலமடம் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை; ரேங்க்: இரண்டாம் இடம்.

வரலாறு:

பெயர்: திவ்யபாரதி; பள்ளி: முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தண்டையார்பேட்டை, சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

உயிரிவேதியியல்:

பெயர்: ஷாரத்; பள்ளி: ஸ்ரீசங்கர வித்யாஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருவான்மியூர், சென்னை. ரேங்க்: முதல் இடம்.

பெயர்: ஹரிதா; பள்ளி: ஸ்ரீசங்கர வித்யாஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருவான்மியூர், சென்னை. ரேங்க்: இரண்டாம் இடம்.

பெயர்: ரோஷிணி; பள்ளி: செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, செம்பியம், சென்னை; ரேங்க்: இரண்டாம் இடம்.

பெயர்: ஸ்ருதி; பள்ளி: ஸ்ரீசங்கர வித்யாஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருவான்மியூர், சென்னை. ரேங்க்: மூன்றாம் இடம்.

சமஸ்கிருதம்:

பெயர்: அகன்ஷா அஜீத்; பள்ளி: வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர், சென்னை; ரேங்க்: இரண்டாம் இடம்.

பெயர்: அட்சயா; பள்ளி: ஸ்ரீஅகோபில மடம் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை; ரேங்க்: மூன்றாம் இடம்.

பிரெஞ்ச்:

பெயர்: கார்த்திகா; பள்ளி: டி.எஸ்.டி., ராஜா பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தண்டையார்பேட்டை, சென்னை; ரேங்க்: முதல் இடம்.

பெயர்: கோகி ஸ்ரீ; பள்ளி: டி.எஸ்.டி., ராஜா பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தண்டையார்பேட்டை, 

சென்னை; ரேங்க்முதல் இடம்.

97.05 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம்: 

74.4 சதவீதத்துடன் தி.மலைக்கு கடைசி இடம்:

பிளஸ் 2 தேர்வில், 97.05 சதவீத தேர்ச்சியுடன், ஈரோடு மாவட்டம், முதலிடத்தை பிடித்தது. திருவண்ணாமலை மாவட்டம், 74.4 சதவீத தேர்ச்சி பெற்று, கடைசியிடத்தில் உள்ளது. 

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், விருதுநகர் மாவட்டம், எப்போதும் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இந்த முறை, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் சுருதி குறைந்தது:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை முதற்பாடமாக எடுத்து படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களை பிடிப்போர் பட்டியலில், நாமக்கல் மாவட்டம், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.2012: பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களை, நாமக்கல் மாவட்ட மாணவர்கள், நான்கு பேர் பிடித்தனர்.

Added (11 May 2014, 9:32 AM)
---------------------------------------------
2013: பிளஸ் 2தேர்வில், 1,200க்கு, 1,189 மதிப்பெண் எடுத்து, நாமக்கல் மாவட்ட மாணவர் இருவர், முதலிடம் பிடித்தனர். இரண்டாம் இடத்தில், ஒரு மாணவர், மூன்றாம் இடத்தில் நான்கு பேர் என, ஏழு பேர், மாநில அளவில் இடம் பிடித்தனர். இப்படி தொடர்ந்து சாதனை படைத்து வந்த நாமக்கல் மாவட்டத்தின் சுருதி, இந்த ஆண்டு குறைந்துள்ளது.இந்த ஆண்டு, மாநில அளவில், முதல் மூன்று இடங்களை நான்கு பேர் தான் பெற்றனர். முதல் இடம், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும்; இரண்டாம் இடம், தர்மபுரிக்கும் சென்றது. மூன்றாம் இடத்தை, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்ட மாணவர் இருவர் தட்டிச் சென்றனர். நாமக்கல் மாவட்ட மாணவர் துளசிராஜன் (1,191 மதிப்பெண்) கூட, இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிடையாது. இவர், சேலம் மாவட்டம், பெருமாள் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேறும் வட மாவட்டங்கள்

பொதுத் தேர்வு தேர்ச்சியில், தொடர்ந்து பின்தங்கியிருந்த வட மாவட்டங்கள், இந்த ஆண்டு, நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளன. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம், தென் மாவட்டங்களை விட, குறைவாகவே இருந்து வருகின்றன. ஆனால், இந்த ஆண்டு, கணிசமாக தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.

'கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி':

தமிழக கல்வித் துறை வரலாற்றில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சியைப் பெற்றிருப்பது, இதுவே முதல் முறை.இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா கூறுகையில், ''அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர் என, அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஆரம்பத்தில் இருந்து திட்டமிட்டு, தலைமை ஆசிரியர்களை ஊக்குவித்து, செயல்பட வைத்தோம். அதற்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது,'' என்றார்.

Added (12 May 2014, 11:48 AM)
---------------------------------------------

"நாசா' ஆய்வுக்கு விருதுநகர் மாணவர் தேர்வு

விருதுநகர்: அமெரிக்காவின் "நாசா' ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்திற்கு, விண்கலத்தை அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான, திட்ட வடிவமைப்பு குழுவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விஷ்ணுராம் பரத் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் விண்?வளி ஆய்வு மையமான "நாசா' நிறுவனம், 2018 ல், 2 விண்வெளி பயணிகளுடன், செவ்வாய் கிரகத்திற்கு, ஒரு விண்கலத்தை அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான திட்ட வடிவமைப்பில், ஆலோசனை வழங்க, உலக அளவில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஆய்வ க்கை சமர்ப்பிக்கும் போட்டியை நடத்தியது. பல்வேறு நாடுகளின், 40 கல்லூரிகளைச் சேர்ந்த, மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், இந்தியாவிலிருந்து, சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரி மட்டும் தேர்வு செய்யப்பட்டது. இங்கு மாணவர்கள் ஏ.விஷ்ணுராம் பரத், மோஹித் ஆர். தாகூர், வி. சத்தியா சுப்பிரமணியன், சுந்தரராஜன் ஆனந்த், விஷூ எல். ஷா, வி. விஷால், எஸ்.பி. விஷ்ணு கேதார், எஸ். விஸ்வநாதன் ஆகிய 8 மாணவர்கள், ஒரு குழுவாக, செலவை குறைத்தல், வடிவமைப்பின் தரம், திட்டம் இயக்குவதில் எளிமை, விண்வெளி பயணிகளின் பாதுகாப்பு குறித்து சமர்ப்பித்த, 50 பக்க ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தனர். அது சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த 8 மாணவர்களில், விஷ்ணுராம் பரத், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர். அவருக்கு, நேற்று, விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. 

விஷ்ணுராம் பரத் கூறுகையில், "பி.இ. மூன்றாமாண்டு இயந்திரவியல் படிக்கிறேன். "நாசா', செவ்வாய் கிரகத்திற்கு, மனிதனை அனுப்புதற்கு உரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்கான, பாதுகாப்பு மற்றும் திட்டமிடுதல் குறித்த ஆய்வு அறிக்கையை, மாணவர்களிடம் கேட்டனர். நாங்கள் 8 பேர் கொண்ட குழு, மார்ச் 15 ல், அந்த ஆய்வு அறிக்கை சமர்பித்தோம். அதில், பொதுவாக, எரிபொருள் மூலம் பூமியில் இருந்து செல்லும் விண்கலம், செவ்வாய் கிரகம் சென்றதும், அதன் ஈர்ப்பு விசை காரணமாக, மிதந்து செல்லும். பின், பூமியின், புவி ஈர்ப்பு சக்தியை கொண்டு, பூமியை வந்தடையும். இதற்காக, பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் சென்று, மீண்டும் பூமிக்கு திரும்ப, 501 நாட்கள் ஆகும். பூமியிலிருந்து செலுத்தப்படும் விண்கலம், செவ்வாய் கிரகத்தை அடைந்ததும், அங்கு, இன்ஜின் மூலம் மீண்டும் இயக்கினால், அது, வேகமாக சுற்றி வரும். இதனால், பூமியை 70 நாட்களுக்கு முன்பே வந்தடையும், என அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இதில், விண்வெளி பயணத்தில் ஈடுபட்டிருப்போருக்கு கதிரியக்கம் தாக்காது, கேன்சர் வராது. குறைவான உணவு பொருட்கள் கொண்டு செல்வதால், ஆய்வக கருவிகளை அதிகமாக எடுத்து செல்லலாம். மேலும், கேன்சரிலிருந்து பாதுகாக்க, கன உலோகம் மற்றும் வேதிப்பொருளால் ஆன கவச உடை அணிந்து கொள்ளலாம். இதை தான் அறிக்கையாக சமர்பித்துள்ளோம். அப்பணிக்காக, ஆக., 9 ல், நாங்கள் "நாசா' செல்ல உள்ளோம், என்றார்.

Added (12 May 2014, 11:49 AM)
---------------------------------------------
எதிர்கால தேவை அறிந்து பாட பிரிவை தேர்வு செய்யுங்கள் : கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை

சென்னை: ""தற்போதைய நிலை பற்றி யோசிக்காமல், எதிர்காலத்தில் எந்த துறையில் தேவை இருக்கும் என, அறிந்து இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்வது அவசியம். எந்த பிரிவை எடுத்தாலும், தனித்திறனை வளர்த்துக் கொண்டால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

சென்னையில், "தினமலர்' நாளிதழ் நடத்திய, "உங்களால் முடியும்' என்ற, இன்ஜினியரிங், கவுன்சிலிங்கிற்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது: 

தேவை இருந்தால் தான்...: பிளஸ் 2 முடித்து, எதிர்கால கனவோடு வந்துள்ளீர்கள். "எனக்கு இந்த பிரிவில் தான் ஆர்வம்' என்று, கற்பனையில் மிதந்து, தவறான முடிவு எடுத்து விடாதீர்கள். என்ன தான் ஒரு பிரிவில் சாதித்து விட்டு, ஒரு நிறுவனத்திற்குச் சென்றாலும், தேவை இருந்தால் தான் ஆட்களை எடுப்பர். எனவே, தற்போது எந்த மாதிரி தேவை என யோசிக்காமல், எதிர்காலத்தில் எதில் தேவை ஏற்படும் என, ஆலோசித்து, பாடப்பிரிவை தேர்வு செய்வது அவசியம். சிவில் இன்ஜி., பிரிவில், அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தயக்கமின்றி, சிவில் இன்ஜி., பிரிவை தேர்வு செய்யலாம். சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும், சிவில் இன்ஜி., படித்த யாருக்கும் வேலை இல்லை என்ற நிலை இல்லை.

இரண்டாவதாக, எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜி., தேர்வு செய்யலாம். இதிலும், நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ஐ.டி., துறையிலும் நிறைய வேலை உண்டு. இத்துறை நலிவடைந்து விட்டது என்று யாராவது கூறினால் நம்ப வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் படிப்பை விட இது சிறந்தது. காரணம் கம்யூனிகேசன் சார்ந்த, நோக்கியா, மோட்டரோலா போன்ற நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன.அடுத்தாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தேர்வு செய்யலாம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில், பெண்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. தேவையில், 10 சதவீதம் கூட தற்போது இல்லை. மாணவியர் தாராளமாக இந்த துறையை தேர்வு செய்யலாம். "ஏரோ நாட்டிக்கல்' படிப்பில் சேரப்போவதாக பலரும் கூறுகின்றனர். அதில் வேலை வாய்ப்புகள் மிக குறைவு என்பதை நீங்கள் உணர வேண்டும். "பயோ டெக்' பொருத்தவரை, தொடர்ந்து, 10, 12 ஆண்டுகள் அதைச் சார்ந்த உயர் படிப்புகள் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம். அப்படி தொடர்ந்து படிக்க முடியும் என்போர், ஆராய்ச்சித்துறையில் ஈடுபட விரும்புவோர், நிறைய செலவு செய்யும் வகையில் வசதியுள்ளோர் இந்த துறையை தேர்வு செய்யலாம்.

சிறந்த எதிர்காலம் : மாணவியருக்கு, "பயோ டெக்' சிறப்பானது அல்ல; அவர்கள் "ஆர்க்கிடெக்' போன்ற பாடப்பிரிவுகளை செய்தால், சிறந்த எதிர்காலம் உண்டு. பாடப்பிரிவுகள் தேர்வு செய்வதோடு, கல்லுாரி தேர்வு முக்கியம். ஊருக்கு முக்கியத்துவம் தராதீர்கள்; வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; நல்ல கல்லுாரிகள் எங்கிருந்தாலும் சேருங்கள். வேலை வாய்ப்புகளின்போது, எந்த கல்லுாரியில் படித்தார் என்பதை பார்த்து சம்பளம் நிர்ணயம் செய்கின்றனர்.சிறந்த கல்லுாரிகள் கிடைக்கிறது என்றால், அடுத்த நிலை படிப்புக்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அதுதான் புத்திசாலித்தனம்.

இப்படி என்ன தான் ஆலோசித்து பாடப்பிரிவுகளை தேர்வு செய்தாலும், உங்களின் தனித்திறனை வளர்ப்பதுடன், தற்காலத்திற்கேற்ப உங்களை "அப்டேட்' செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் ஜொலிக்க முடியாது. இரண்டாம் ஆண்டிலேயே, "கேட்' நுழைவு தேர்வுக்கு தயாராக வேண்டும். தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு ஆங்கிலம் பேசுவது முக்கியம் அல்ல; சாமர்த்தியமாக பேசும் திறனும் முக்கியம். இவ்வாறு, அவர் பேசினார்.

"கட்-ஆப்' மார்க் உயரும் - புத்திசாலியாக இருங்கள் : ""இந்த ஆண்டு, "சென்டம்' அதிகரித்து உள்ளதால் கட்-ஆப் மதிப்பெண் உயரும். 197.25 ஆக இருந்த எம்.பி.பி.எஸ்., கட்-ஆப், 198 ஆக இருந்தாலும் கிடைக்குமா என்பது சந்தேகம். 192 முதல் 196 வரை கட்-ஆப் இருந்தால், பி.எஸ்.சி., அக்ரி கிடைக்கும். 196 வரை இருந்தால்தான், பி.வி.எஸ்.சி., கிடைக்கும்,'' என்றார். மேலும், ""கட்-ஆப்' 182க்குள் இருந்தால், பி.பார்ம்., 180க்குள் இருந்தால் பிசியோதரபி கிடைக்கும். அதற்குள் இல்லை என்றால், புத்திசாலித்தனமாக யோசித்து அடுத்த படிப்புகளை தேர்வு செய்யுங்கள்; விரும்பிய பாடம் கிடைக்கும் என, காத்துஇருந்து பின் வருந்தாதீர்,'' என்றும், அவர் தெரிவித்தார்.

Added (12 May 2014, 10:07 PM)
---------------------------------------------
கொழுப்பு உணவை பெண்கள் தவிர்க்கக் கூடாது

உணவுக்கும் உற்பத்தித்திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. பெண்களின் உடலில் நடக்கும் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் 'ஈஸ்ட்ரஜன்' என்ற ஹார்மோன் அத்தியாவசியமாகும்.

ஆனால், பெண்களின் உடலில் ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன் உள்ளது. இந்த ஆண் ஹார்மோனில் இருந்துதான் பெண் ஹார்மோன் ஈஸ்ட்ரஜன் உருவாகிறது. இந்த உருவாக்கம் நிகழ கொழுப்பின் உதவி தேவைப்படுகிறது.

உணவின் மூலம் கொழுப்பு கிடைக்காதபோது உடலில் சரியான செயல்பாடு நடைபெறாது. இத்தகைய பெண்கள் கர்ப்பிணியாகும் வாய்ப்பு குறைவு. மாதவிலக்கிலும் கோளாறு ஏற்பட்டு ஈஸ்ட்ரஜன் அளவு குறைந்து மாதவிலக்கு நின்று போகும் அளவுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு கர்ப்பப்பை சுருங்கி சிறிதாகிவிடும். இதனால் குண்டான பெண்களைப் போலவே ஒல்லியான பெண்களும் குழந்தை பெறுவது கஷ்டமாகிவிடுகிறது. இந்த உண்மைகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஷ்பிரிஷ் என்ற மருத்துவர் பல பெண்களை ஆராய்ந்து 2001 இல் இந்த உண்மைகளை வெளியிட்டார்.

எனவே அளவுடன் கொழுப்புள்ள உணவுகளை பெண்கள் சேர்த்து வரவேண்டும். இத்துடன் கல்சியம் அதிகமுள்ள ராகி, முருங்கைக் கீரை, தயிர் முதலியவற்றையும் சேர்த்துவந்தால் கொழுப்பு உணவு அதிகம் சாப்பிட்டிருந்தாலும் உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » Ram's தகவல் பெட்டகம் (Ram's தகவல் பெட்டகம்)
Search: