Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Monday, 24 Feb 2014, 2:50 PM | Message # 211 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.
தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.
யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.
ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.
நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும். யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.
ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.
ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும்.
யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் (அமைப்பு) மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும். யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.
சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்
யானையின் தகவல் தொடர்பு பூனையை போன்றே இருக்கும்.
பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.
பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும். நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.
24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.
யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.
தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 24 Feb 2014, 3:10 PM | Message # 212 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| கோதுமை தரும் பயன்கள்...!
* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
* வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.
கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 24 Feb 2014, 4:17 PM | Message # 213 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| வளரி அழிந்து போன பண்டைய தமிழர்களின் ஆயுதம்.
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
மருது பாண்டிய மன்னர்கள் இந்த ஆயுதத்தை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள்
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 24 Feb 2014, 4:17 PM | Message # 214 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
|
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 24 Feb 2014, 4:18 PM | Message # 215 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர். ரெடி, ஸ்டிடி, கோ விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது. ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"இப்போ வலி போயிடிச்சா" அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர். பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள். பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினா கள்.கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை. அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள். ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள். ஆனால் குணத்தால்? இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன? மனித ஒற்றுமை மனித நேயம் மனித சமத்துவம்.
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.
நம்மில் பலர் இதை செய்வதில்லை. ஏன். நமக்கு மூளை இருப்பதனால்.
அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 24 Feb 2014, 4:18 PM | Message # 216 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| செவ்வாய் கிரகத்தில் ஒளிரும் பொருள்.
செவ்வாய்க் கிரகத்தில் தற்போது தங்கியிருக்கும் கியூரியோசிட்டி விண் வண்டி அங்கு நுண்ணுயிர்கள் இருக்கிறதா என்பதை அறிவதே பிரதான நோக்கமாகக் கருதி செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் அதன் தரை மேற்பரப்பில் பிரகாசமாக ஒளிரும் பொருள் ஒன்றிருப்பதை அதன் காமிராக்கள் கண்டுபிடித்ததை அடுத்து அது மண்ணுக்குக் கீழும் காணப் படலாம் எனும் நோக்கத்தில் தற்போது அது மண்ணைத் தோண்டி ஆய்வு செய்து வருகின்றது.
நுண்ணுயிர் வாழ்க்கை இருக்கிறதா என்பதை அறிவதற்கு அது சேகரித்த மண் மாதிரிகளின் மத்தியில் தான் அந்த ஒளிரும் பொருள் காணப்பட்டது என்பதுடன் இதற்கு முன் சென்ற வாரம் பிளாஸ்டிக் பாகங்களும் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது . எனினும் இவையிரண்டும் கியூரியோசிட்டி விண் ஓடத்தில் இருந்து சிந்திய பொருட்கள் எனவும் கட்டுப் பாட்டு மையத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கருதுகின்றனர்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 24 Feb 2014, 4:20 PM | Message # 217 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| ஒவ்வொரு மனிதர்களுமே ஆச்சரியமானவர்கள் தான்….
உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.. உங்களுக்கு ஒரு பெற்றோர், அதாவது இரண்டு பேர்….
அந்த இரண்டு பேருக்கும் அப்பா, அம்மா உண்டு… அப்படியே போய்க்கொண்டிருந்தால்… ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட 500 ஆண்டுகளுக்கு முன்புவரை சென்றால் உங்களை உருவாக்கியவர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா…………………………? 1,48,576 பேர். இந்த வரிசையில் ஏதாவது ஒரு ஜோடி மிஸ் பண்ணியிருந்தால் கூட நான் உங்களை மிஸ் பண்ணியிருப்பேன்”
அப்படி சிந்தித்துப்பார்த்தால், உலகில் எவரும் அன்னியர் இல்லை
endrum anbudan
vijiram
|
|
| |
Meenatchi | Date: Tuesday, 25 Feb 2014, 9:02 AM | Message # 218 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| hi rams,
thanks for ur info...........
Meenatchi .S
|
|
| |
rams | Date: Tuesday, 25 Feb 2014, 5:14 PM | Message # 219 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 25 Feb 2014, 7:34 PM | Message # 220 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பாதாம் பற்றி குறிப்பு ??
நல்லதா, கெட்டதா? சாப்பிடலாமா, கூடாதா எனக் குழம்ப வைக்கிற ஒரு சில உணவுகளில் பாதாமும் ஒன்று. உண்மைதான் என்ன?
பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும, கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது.
100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!
இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம்.
‘அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்... இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்?
ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம். இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம்.
அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம். பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளவயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.
நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது.
அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு.
பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும். பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.
endrum anbudan
vijiram
|
|
| |