Ram's தகவல் பெட்டகம் - Page 20 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
Ram's தகவல் பெட்டகம்
ramsDate: Thursday, 20 Feb 2014, 10:29 AM | Message # 191
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
Learn to say thank you instantly – an old management lesson

When Jesus Christ cured 12 twelve lepers, only one stayed behind to thank him. In this Kaliyuga one in a hundred is fine. But think do you want to be THE one or one among ninety nine?

Showing gratitude for what others have done is characteristic of an outstanding person. And by making expression of appreciation more than a matter of ordinary politeness, it helps guarantee of an outstanding future. A thankful heart is not only virtue but also the father of all virtues.

Normally most of us are too miserly use the words Thank You (in any language-see the link). Each one of us behaves like rationing officer when it comes to this word. However psychologists believe these are stress reduction tools. Many of us are too shy to say these words instantly. We want to put them across nicely and when in a good mood. But remember Thank you is always more effective than a two page letter sent after a week later!

These two words are simple enough to say but yet very difficult for some to deliver. It's important to learn how to genuinely say "Thank You" to those who share their energy and resources with us as it helps repair the spirit and mend the fabric of our human interactions. Some may think it shows vulnerability but the reality is that the openness we exude lends itself to an outward pour, whether appreciated or not we must do to keep the essence of our own spirit healthy. Others may think it's arrogant or condescending, but if delivered properly it is a very humbling action that shows gratitude and appreciation. We talk about changing the word, but changing the world happens one person at a time. Why not start now from within.

HERE ARE FEW WEB LINKS FOR THANK YOU.

Worth watching Movie from U tube- on Gratitude Campaign (Saying thanks)
the gratitude campaign (full length) - YouTube

The world’s best Sales man, Mr. Joe Girard sends out 13,000 thank you letter in a month.
Joe Girard - Best Selling Author and Motivational Speaker

How to say thanks in different Languages
http://www.squidoo.com/say-tha....]

Thanks to the original uploader.


endrum anbudan

vijiram


Message edited by rams - Thursday, 20 Feb 2014, 10:30 AM
 
ramsDate: Thursday, 20 Feb 2014, 10:29 AM | Message # 192
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம். இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது. 
எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில், குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார். இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை. 

இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன் படுத்திட வேண்டும். ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல் வேண்டும். கணவணும், மனைவியும் ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும் சிறப்பு. இந்த ஹோமத்தினை எவ்வாறு செய்திட வேண்டுமென்பதை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
சித்ததான சித்துகளுக் குறுதியான
சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை
பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு
பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி
சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி
கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண
வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்
வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.

- அகத்தியர் -

கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூலமந்திரத்தை உச்சரித்து வரவேண்டும். 
அக்கினியின் மூலமந்திரம்... 

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா" 

தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின் மந்திரத்தைச் சொல்லி பசும்பால், சந்தனம், தேன் கலந்த கலவையினை நெருப்பில் விடவேண்டும் என்கிறார். இந்த முறையில் புவனையின் மந்திரத்தை 1008 தடவைகள் சொல்லிட வேண்டுமாம். புவனையின் மூல மந்திரம்... 

"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" 

இப்படி செய்தால் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறார் அகத்தியர். ஹோமம் செய்த மறு மாதமே கரு உண்டாகி பத்தாம் மாதத்தில் மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார். இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர். சுவாரசியமான தகவல்தானே...


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 20 Feb 2014, 10:30 AM | Message # 193
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
புத்திசாலித்தனம்...!

ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்.......

புத்திசாலி : என்ன சார்?

போலிஸ் : ஓவர் ஸ்பீட்?

புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.

போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.

புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.

போலிஸ் : லைசென்ஸ் இல்லையா?

புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.

புத்திசாலி : அதுவும் இல்ல.

போலிஸ் : என்ன?

புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.

போலிஸ் : இது திருட்டு வண்டியா?

புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.

போலிஸ் : கொன்னுட்டயா? அவர் பாடிய என்ன பண்ணுன?

புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....

பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.

உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.

புத்திசாலி : பிரச்சனையா சார்?

உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே?

புத்திசாலி : கொலையா?

உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.

புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.

உயர் அதிகாரி : இது யார் கார்?

புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.

உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.

புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.

உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல் சொல்லிட்டார்.நீங்க போகலாம்.

புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா?


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 20 Feb 2014, 10:31 AM | Message # 194
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க!!

பெரும்பாலான வீடுகளில் பூச்சித் தொல்லை ஓயாத பிரச்சினையாக இருக்கும். அதிலும் கரப்பான் பூசசிதான் முதலிடம் வகிக்கிறது.

கழிவு நீர் செல்லும் வழிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதுதான் கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் தொல்லைகளுக்கு முக்கியக் காரணம்.

இதன் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கரப்பான் பூச்சி எளிதாக வருகிறது.
பதினைந்து நாள்களுக்கு ஒரு தடவை ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து உங்கள் கழிவறையில் கழிவு நீர் செல்லும் சந்துகளில் ஊற்றலாம். ப்ளீச்சிங்

பவுடரின் நெடி பூச்சிகளுக்குப் பிடிக்காது.

அதே சமயம், இதனை சமையல் அறை மற்றும் வீ*ட்டிற்குள் இருக்கும் பாத்ரூம்களில் போடவேண்டாம். நமக்கு இந்த நெடி ஒத்து வராது.

இடுக்கானப் பகுதிகளை அவ்வப்போது சுத்தம் செய்து வையுங்கள். வீட்டில் தேவையற்றப் பொருட்களை வைத்திருக்க வேண்டாம்.


endrum anbudan

vijiram


Message edited by rams - Thursday, 20 Feb 2014, 10:35 AM
 
MeenatchiDate: Thursday, 20 Feb 2014, 10:49 AM | Message # 195
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
ஹாய் ராம்ஸ்,

  உங்களது தகவலுக்கு மிக்க நன்றி........


Meenatchi .S
 
NathasaaDate: Thursday, 20 Feb 2014, 12:10 PM | Message # 196
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Thnx much for the info Ram
 
ramsDate: Thursday, 20 Feb 2014, 11:39 PM | Message # 197
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 20 Feb 2014, 11:40 PM | Message # 198
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
எளிய மருத்துவக் குறிப்புகள் - 01

1)பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3)வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5)தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7)உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

  • குழந்தையை காப்பான் கரிப்பான்


கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 20 Feb 2014, 11:40 PM | Message # 199
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12)பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15)படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17)மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.



endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 20 Feb 2014, 11:41 PM | Message # 200
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.



endrum anbudan

vijiram
 
Search: