Ram's தகவல் பெட்டகம் - Page 26 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
Ram's தகவல் பெட்டகம்
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:33 AM | Message # 251
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
உடற்பயிற்சி தேவையா? 
- ஒரு டெஸ்ட்!

* ஒரு மைல் தூரம் நடக்கும்போதோ, இரண்டு மாடிகள் ஏறும்போதோ உங்களுக்குக் களைப்பு, மூச்சு வாங்குவது இருக்கிறதா? 
* கால்களை அருகருகே வைத்து முழங்கால் முட்டிகளை மடக்காமல் குனிந்து உங்கள் இரு கைகளாலும் உங்கள் கால்களின் பெருவிரல்களைத் தொட முடிகிறதா?
* வேகமாக நடக்கும்போது உங்களால் தயக்கமின்றிப் பேசிக் கொண்டே வரமுடிகிறதா? அல்லது தடையின்றி பாடமுடிகிறதா?

இதெல்லாம் முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமான உடல் திறனாளிகள்தான்! நீங்கள் தினந்தோறும் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. அன்றாட வேலைகளே போதுமானது.


endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:33 AM | Message # 252
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
நோய்க்கு ‘நோ’ சொல்லும்
‘எக்ஸ்ட்ரா’ எதிர்ப்பு சக்தி

வெள்ளைப் பூண்டும் வெங்காயமும்

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்லதோர் மருந்து. நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை பூண்டுக்கு உண்டு.

பாக்டீரியாவுக்கு எதிராக செயலாற்றும் தன்மை பூண்டுக்கு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. 

பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பைக் குறைக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் இருப்பதால் கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் ‘ஆன்டி- ஆக்சிடன்ட்’ இருப்பதால் உடலுக்கு கூடுதல் நலம்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:34 AM | Message # 253
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
வாய்வுத் தொல்லை நீங்க:

வெந்தயக்கீரை சிறிதளவு கழுவி எடுத்துக்கொண்டு தண்டோடு சேர்த்து எடுத்துக்கொள்ளவும். ஒரு குவளை தண்ணீரில் போட்டு அதனுடம் சிறிதளவு மிளகு,இரண்டு பூண்டு, சிறிது இன்சு, சிறிது ம் சீறகம் அனைத்தையும் லேசாக தட்டி கீரையோடு சேர்த்து போட்டு கொதிக்க விடவும் , தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடிகட்டி பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்.



endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:34 AM | Message # 254
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
அகத்திக்கீரை மருத்துவ பயன்கள்

அகத்திக்கீரை கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.

கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

இலைச்சாறும் நல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:35 AM | Message # 255
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
உடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும். ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் ‘சீசன்’ ஆகும்.

இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் மங்குஸ்தான் பழத்தில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.

பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது.கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளது. உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.

இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.




endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:36 AM | Message # 256
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உமாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்லர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்




endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:37 AM | Message # 257
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
பசியின்மையைப் போக்கும் கறிவேப்பிலை

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும்.

இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது.

ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும். கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, திப்பிலி, காயம், இந்துப்பு சம அளவு எடுத்து பொடி செய்து, சுடுசாதத்தில் கலந்து நெய் விட்டு பிசைந்து சாப்பிட பசியின்மை,

உணவில் வெறுப்பு, புளியேப்பம், வாய் குமட்டல் ஆகியவை குணமாகும். குழந்தைகளுக்கும் இந்த சாதத்தை சிறிய அளவில் கொடுத்து வரலாம். கறிவேப்பிலை ஈர்க்குடன் சேர்த்து இடித்து சாறு பிழிந்து கிராம்பு, திப்பிலி பொடியை சேர்த்து குழைத்து தர குழந்தைகளுக்கு உண்டாகும் வாந்தி நிற்கும். நன்கு பசியெடுக்கும்.

கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம், சுண்டை வற்றல், சூரணத்து உப்பு சேர்த்து உணவில் கலந்து சாப்பிட்டு வர மந்தம் நீங்கி பசி உண்டாகும். கறிவேப்பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செய்து தினமும் உட்கொண்டு வர, செரியாமை, பசியின்மை, கழிச்சல் இவற்றைப் போக்கும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:37 AM | Message # 258
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
தினமும் காலையில் வெறும் வயிற்றில்ஒரு கிளாஸ் இளஞ்சூடானஎலுமிச்சை சாறு குடிப்பதால்கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.. .எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீஅடங்கியுள்ளதால் , தடிமன் முதலியசிறு நோய்களில்இருந்து பாதுகாக்கிறது.. .பொட்டாசியம் மூளை,நரம்பு கடத்துகையை சீராக்கிறது.குருதிச்சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம்இருக்கிறது. ஆயினும்,சமிபாட்டு செயன்முறையால்,அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின்அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...எலுமிச்சையில் உள்ள பெக்டின்நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது.மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம்உண்பவர்கள் மெலிவானஉடல்வாகை கொண்டிருப்பதுநி ருபணமானஉண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச்சுத்திகரிக்கிறத ு.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள்,சுருக்கங்களைக்க ுறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரானசுவாசம் தருகிறது...

8. நுரையீரல்தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம்என்பது தியறி... ஆனால்நிருபிக்கப்படவி ல்லை.

10. காலையில் டீஅல்லது கோப்பி குடிக்கும் கெட்டபழக்கத்தை நீக்குகிறது.


endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:38 AM | Message # 259
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
மைதா உணவுக்கு மயங்காதீங்க! 

கோதுமையிலிருந்தும், மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த முழுகோதுமை, மாவாக அரைக்கப்படும். இந்த மாவு இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை வெண்மையாக்க, 'பென்சாயில் குளோரைடு" என்ற வேதிப் பொருளும், மிருதுவாக்க 'அலாக்சன்' என்ற வேதிப் பொருளும் சேர்க்கப்படுகின்றன. அதன்பின்தான் மைதா மாவு கடைகளில் விற்பனைக்கு வருகிறது. 
மாவில் உள்ள புரோட்டினுடன், இந்த வேதிப் பொருட்கள் சேரும்போது, நம் கணையத்தில் உள்ள 'பீட்டா' செல்கள் அழிக்கப்பட்டு நீரழிவு நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 
பர்கர், சமோசா, கேக், பிட்சா, நூடுல்ஸ், பரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி வகைகள் என பெரும்பான்மையான எல்லாவற்றிலுமே மைதான்தான் மூலப் பொருள். 
இந்த உணவுகளை அடிக்கடி, அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். மேலும், ஜீரண உறுப்புகள் படிப்படியாக செயலிழக்கும் அபாயமும் உள்ளதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.
இனி, ரோட்டோர பரோட்டாக் கடைக்கு.... டாட்டா சொல்லிடுவீங்கதானே...


endrum anbudan

vijiram
 
ramsDate: Saturday, 22 Mar 2014, 10:39 AM | Message # 260
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
பெருங்காயம்

பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும். 

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது. 

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது. 

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது. 
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும். 

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும். 

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.



endrum anbudan

vijiram
 
Search: