தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 22 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
MeenatchiDate: Monday, 24 Feb 2014, 9:30 AM | Message # 211
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hey frds,
 2days online  pakkam varala.partha orey story update ahh iruku.


Meenatchi .S
 
shanDate: Monday, 24 Feb 2014, 9:38 AM | Message # 212
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நீயின்றி நான் இல்லை -31
விமானத்தில் நந்தனின் அடுத்த இருக்கையில் மாயா அமர்ந்திர்ந்தால் .....
ஹாய் நந்து , என்ன விஷயமா மும்பை போறே .....
நான் ஓடி உழைபவன் நீ எங்கே ........சக பயணி முறையில் கேட்க
நான் விளம்பர திற்கு மாடல் செய்ய வந்துருக்கேன் ............
உன் நந்தினி எப்படி இருக்காங்க என கேட்க .......
காதலியின் நினைவில் அவன் முகம் மலர்ந்து பேச அதை மனதில் குரோதத்துடன் நினைத்து உன் காதல் கை கூட இந்த மாயா விடமட்ட . என மனதினுள் சபதம் எடுத்தாள்....

அவன் தங்கி இருந்த ஹொடெலிலெயெ அவள் அறையும் இருந்ததால் ஆவலுடன் சேர்ந்தே அங்கே வந்தான் .இதை மாயா தன போனில் videova எடுத்துட்ட .நாளை என் பர்த்டே maalai oru chinna treat வா நந்தன் என .....ஓகே பாய் என அவன் அறைக்கு செல்கிறான் ........evening கேக் வெட்டி முடிக்க அவள் கையில் கிபிட் கொடுக்க ...அதை வாங்கி அவன் கன்னத்தில் முத்தமிடுகிறாள் ......நீ வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்ல ...........நந்தனும் அதை சாதரணமா எடுத்து விடை பெற்று செல்கிறான் .....அனைத்தும் மாயா கையில் ஆதரமாக .........நந்தனை பார்த்து விதி கை கொட்டி சிரித்தது
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
 
MeenatchiDate: Monday, 24 Feb 2014, 9:49 AM | Message # 213
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote shan ()
நந்தனும் அதை சாதரணமா எடுத்து விடை பெற்று செல்கிறான் .....அனைத்தும் மாயா கையில் ஆதரமாக .........நந்தனை பார்த்து விதி கை கொட்டி சிரித்தது உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குதம் சொல்ல ?
நந்து க்குஅடுத்த ஆப்பு ரரெடி போல


Meenatchi .S
 
MeenatchiDate: Monday, 24 Feb 2014, 10:15 AM | Message # 214
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
பாகம் - 3 2

நிதி வீட்டுல கெளதம் பற்றி யோசித்து கொண்டு இரூந்தால்.நம்ப டேன் அவன் மேல கோவமா சின்னபுள்ள தனமா இருத்து இருக்கோமா .யாரு நல்லா படிகுரகளோ அவக தான் முதல் இதுல என்ன இருக்கு அவன் எடுத்தா என்ன நாம எடுத்தா என்னனு யோசித்தது....

 கெளதம் இந்த பொண்ணு இன்னிக்கு என்ன ஏன் அப்படி பாத்துட்டு போச்சு அவக வீட்ல அவல ட்ரோப் பண்ணி இருக்க கூடாதா....

இந்த அக்காக்கு வேற பையனே கிடைகாத மாதரி அவனை போய் லவ் பண்ற.....என்ன பண்ணுறது இப்போ யோசிக்க.........

flashback :1
      ஆதி அவரது ரூம்ல அவரது அண்ணன் தங்கை பற்றி யோசித்து கொண்டு இருதார்.அப்பவும் இந்த சொத்துக்கு ஆசை பட்டு தான் என்னோட தங்கை ku அவ ஆசை பட்ட பையன் கூட கல்யாணம் பண்ணி வைச்சேன் .தங்கை கிட்ட மட்டும் தான் நல்லா பேரு வாங்குனோம் ஆனா அண்ணன் வீட்ட விட்டு தொரத்தி விட்டுட்டான் .இத வெள்ள சொல்ல முடியாம நாமளா வந்த மாதரி வெள்ள சொல்ல வச்சுடா தங்கை னு அவ மேல இப்போ கோவமா வந்தது அவருக்கு .....அப்போ விட்ட சொத்த இப்போ எப்படியும் புடிச்சு ஆகணும் அதுக்கு ஒரே வழி மாயா சொன்ன படி ரகுவீர் க்கு சம்பந்தி ஆகுறது தான் ஒரே வழி னு யோசிக்க............


Meenatchi .S
 
JayDate: Monday, 24 Feb 2014, 1:20 PM | Message # 215
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Shanthi Meenakshi super updates. Ippo naama aduthu nandhanukku aapu ready pannalaama
 
shanDate: Monday, 24 Feb 2014, 2:35 PM | Message # 216
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai meenu,
fb poitiyaa good.........
jay,
nanthuku ella pakkamum appu varum pol iruku ......
 
SSDate: Monday, 24 Feb 2014, 9:11 PM | Message # 217
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Meenatchi and Shan .. nice updates...

shan .. gowtham and nandanukku oru periya sandai irukku pola... waiting to read.... v
 
shanDate: Monday, 24 Feb 2014, 9:54 PM | Message # 218
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
.. gowtham and nandanukku oru periya sandai irukku pola... waiting to read....

avan kaluthu ivanidamum,ivan kaluthu avanidamum ........


Message edited by shan - Monday, 24 Feb 2014, 9:59 PM
 
SSDate: Tuesday, 25 Feb 2014, 3:31 AM | Message # 219
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பாகம் -33

ஞாயிறன்று நந்தனை சந்திக்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் விழித்தாள்  நந்தினி. மதியம் சாப்பாடு என்னோடு தான் என்று message அனுப்பி இருந்தான் நந்தன். ஆர்வகோளாரில் சீக்கிரமே கிளம்பிவிட்டனர் இருவரும். அங்கே தாஜில் சென்று அவனுக்காக காத்துகொண்டு இருக்கும் போது அங்கிருந்த தொலைகாட்சியில் செய்திகள் ஓடி கொண்டு இருந்தன. அதில் ...

"மாய மாடலுக்கும் மந்திரி மகனுக்கும் காதல். விரைவில் திருமணம்" என்ற செய்தி ஓடி மாயாவின் பிறந்த நாள் காட்சிகள் ஒளிபரப்பாகின..

அதனை பார்த்து அதிர்ந்து எழுந்து நிற்கும் வேளையில் அங்கே வந்த நந்தனும் ஒரு நொடி அதிர்ந்தான். அவனுக்கு இரண்டு அதிர்ச்சிகள். ஒன்று நந்தினி கௌதமொடு வந்தது இன்னொன்று தொலைகாட்சி செய்தி....

நந்தனை பார்த்த கெளதம் அவனது சட்டையை பிடித்து... " ஏன்டா உனக்கு இருக்கற பொண்ணுங்க பத்தாதுன்னு என்னோட அக்கா மனச ஏன் கெடுத்த? " என்று உறும..

ஒரு நொடி சந்தோஷ பட்டான் நந்தன், பிறகு, " கெளதம் இங்கே வேண்டாம், என்னுடைய தோட்ட வீட்டிற்கு போய்விடலாம்... இன்னும் பத்திரிக்கைகளுக்கு தவறான செய்திகளை  தீனி போட நாம் வழிவகுக்க கூடாது, மேலும் இதில் நந்தினியின் பெயரும் கெடும் ... சொல்வதை கேள், ப்ளீஸ் " என்றான்.

அவன் சொன்னதில் ஒரு நியாயம் இருக்கவே சட்டையில் இருந்து கையை எடுத்து, "சரி, அட்ரஸ் குடுங்கள்.நாங்கள் என்னுடைய வண்டியில் வருகிறோம்" என்றான்.

அதனை கேட்டு நந்தன் நந்தினியை பார்க்க, அவளோ அவனை கண்கொண்டு  பார்க்கவில்லை. மேலும் கௌதமிடம், " போகலாமா கெளதம். அதான் தொலைகாட்சியில் பார்த்தோமே , இனிமேல் எனக்கு இங்கே என்ன வேளை" என்று இருவருக்கும் அதிர்ச்சி கொடுத்தாள்.

நந்தனோ எதுவும் பேச முடியாமல் அமைதியாய் இருக்க.. கெளதம் தமக்கையை  பார்த்தான். அவளது கண்களில் இருந்த கலக்கம் மற்றும் வெறுமை அவனுக்கு இன்னும் நந்தனின் மீதி வெறி ஏற்றியது. இவனை சும்மா விட கூடாது என்று நினைத்திருந்தான்.

பேசியது போலவே மூவரும் கிளம்பி நந்தனின் பார்ம் ஹவுஸ் வந்தனர். நந்தினி, " இங்கே ஏன் வந்தோம் கெளதம்? " என்று வினவ நந்தன் அவளை கோபிக்க, கெளதம் நந்தனின் சட்டையை மறுபடியும் பிடித்தான். நந்தினி யாருக்கு வந்த விருந்தோ என்று எதையும் கவனிக்காமல் அந்த செய்தியையே நினைத்து கொண்டிருந்தாள்.

திடீரென " கையை எடு கெளதம்" என்று உள்ளிருந்து குரல் கேட்டது, கௌதமை மிரட்டிய படி வந்தது நிதி.

" உன் அண்ணனை என்ன செய்தாலும் தகும் . இன்றைய செய்திகளை பார்த்தாயா? என் அக்காவிடம் நடித்து அவளது மனதை கெடுத்து வைத்திருக்கிறான் உன்னோட அண்ணன். நான் இது போல பல பெண்களுடன் சுற்றினால் நீ சும்மா இருப்பாயா இல்லை உனது அண்ணன் தான் உனது வாழ்க்கைகாக என்னிடம் எதுவும் கேட்காமல் சும்மா இருப்பானா " என்று கத்த ஆரம்பித்தான். அவன் சொல்லிய விஷயத்திலிருந்து அவன் நதியை நேசிப்பதை நந்தனும் நிதியும் உணர்ந்தனர். சொன்ன பிறகே தான் சொன்னது புரிந்த கெளதம் நந்தனின் சட்டையிலிருந்து கையை எடுத்து தலைக்கு முட்டு கொடுத்து அமர்ந்தான்.

" அண்ணா , என்னது இது? " என்று நிதி  கூற... ஒரு நிமிடம் அமைதியாக இருந்த நந்தன் பேச ஆரம்பித்தான்.


Message edited by SS - Tuesday, 25 Feb 2014, 4:14 AM
 
JayDate: Tuesday, 25 Feb 2014, 7:53 AM | Message # 220
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
பாகம் - 34

நந்தன் பேச ஆரம்பித்தாலும் அவன் பக்கம் பார்க்காமலேயே உட்கார்ந்திருந்தாள் நந்தினி.

அவள் தன்னைத் திரும்பிப் பார்க்க போவதில்லை என்று அறிந்த நந்தன் ஒரு பெருமூச்சுடன், "இங்கப் பாரு கெளதம், உனக்கும் எனக்கும் முன்னாடி பிரச்சனை வந்தது என்பதை மறந்துவிட்டு நான் சொல்வதைக் கேள்.  இப்போ வந்த வீடியோவில் என் தவறு எதுவுமே இல்லை.  நான் சென்ற விமானத்தில் அவளும் வந்தா.  அதே மாதிரி அவளுக்கு பிறந்த நாள் அப்படின்னு என்னைக் கூப்பிட்டவுடன், தெரிந்த பெண் என்ற முறையில்தான் சென்றேன்.  அங்கே அவளே வந்து எனக்கு முத்தம் கொடுத்தற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்", என்று பொறுமையாக விளக்கினான். 

யாரிடமும் விளக்கம் சொல்லாத தன் அண்ணன் இத்தனை பொறுமையாக கௌதமிடம் பேசுகிறானே என்று நதி ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

"அன்று நான் நகைக் கடையில் பார்த்த பெண் இவள்தானே" என்று கெளதம் கேட்க, ஆமாம் என்று தலை அசைத்தான் நந்தன்.

அதுவரை எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்த நந்தினி, நந்தன்  பக்கம் திரும்பி, "நீங்கள் விளக்கம் சொல்லி முடித்து விட்டீர்களா.  இனி நாங்கள் போகலாமா", என்று கேட்க

"என்ன நந்தினி இது, நான் இத்தனை சொல்லியும் என்னை நீ நம்பவில்லையா"

"எப்படி நம்ப சொல்கிறீர்கள், தெரு என்றும் பாராமல் அவள் கட்டி அணைத்ததை அனுமதித்து இருக்கிறீர்கள்.  அத்தனை பேருக்கு நடுவில் அவள் கொடுத்த முத்தத்தையும் வாங்கி இருக்கிறீர்கள்.  இதையே நான் செய்தால் ஒத்துக் கொள்வீர்களா", என்று நந்தினி கேட்க.

நந்தன் "என்னடி சொன்ன", என்று அடிக்க வர

"அக்கா, இந்தத் தரம் கெட்டவங்களுக்காக உன்னையே நீ ஏன் தாழ்த்திக்கற.  வா நம்ம போகலாம்.  இந்த ஆள் கூட பழகினதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திடு", என்று நதி தடுத்தும் கேளாமல் கெளதம் நந்தினியுடன் கிளம்ப.

"அவங்க போகட்டும் நதி, விடு.  ஆனால் ஒண்ணே ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ.  நீயே ஒரு நாள் உண்மை தெரிஞ்சு வருவ, அதுவரை நான் உனக்காக காத்திருப்பேன்", என்று வாசலை நோக்கி சென்றவர்களிடம் கூறினான் நந்தன்.

 
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போக இறகு இல்லையே
 
Search: