வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
|
|
Janvi | Date: Wednesday, 03 Sep 2014, 5:23 PM | Message # 31 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| போன்சாய் மரம் வளர்க்கலாம்!
"போன்சாய்' மரங்களின், நன்மை மற்றும் வளர்ப்பு முறை பற்றி விளக்கும், ராஜேந்திர குமார்: நான், சென்னை அருகே உள்ள படப்பையில், 18 ஆண்டுகளாக, 6 ஏக்கர் நிலத்தில், 3,000க்கும் அதிகமான செடி வகைகள் மற்றும் போன்சாய் மரங்களை, வளர்த்து வருகிறேன்.இக்கலையின் பிறப்பு நாடு, சீனா. சீன மொழியில், "போன்' என்றால், தட்டையான தொட்டி என்றும், "சாய்' என் றால், மரம் என்றும் பொருள். தட்டையான தொட்டியில், அதிக உயரமில்லாத குட்டையான மரங்களை வளர்க்கும் அபூர்வ கலையே, போன்சாய். என் விருப்பம் காரணமாகவே, இதை கற்றேன்.போன்சாய், இயற்கைக்கு எதிரான மரம் என்ற, எதிர்மறையான கருத்து உள்ளது; இது, முற்றிலும் தவறு. மனிதன் சுவாசிக்க தேவையான, சுத்தமான ஆக்சிஜனை போன்சாய் தருகிறது. குறிப்பாக, அழிந்து வரும் அரிய மரங்களை தேர்ந்தெடுத்து, போன்சாய் முறையில் பாதுகாக்கலாம்.பூச்செடிகள் போல், அளவில் மிக சிறியதாக இருப்பதால், நமக்கு பிடித்த மரங்களை, செராமிக் தொட்டியில் வைத்து, வீடு மற்றும் அலுவலகத்தின் உள்ளேயும் வளர்க்கலாம்.
எந்த விதமான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது.போன்சாய் மரம் வளர துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆனதும், வேர்களை கத்தரித்து, வேறு தொட்டிக்கு மாற்ற வேண்டும். குறுகிய வேர்களே, அகன்ற பலமான தண்டுப்பகுதியை உருவாக்கும். குறிப்பிட்ட வயது வந்தவுடன் வளர்ந்த கிளைகளை, நமக்கு தேவையான அளவிற்கு கத்தரித்து வளர்க்கலாம்.போன்சாய் மரங்கள், முழுமையான வடிவம் பெற, அதிகபட்சம், ஐந்து ஆண்டுகள் ஆகும். எனவே, போன்சாய் வளர்ப்பில், பொறுமை மிக அவசியம். முழு வடிவம் பெற்ற மரங்களை, வயதுக்கேற்ப, 500 ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாய் வரை, விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். போன்சாயை, தோட்டம் அமைத்து பராமரிக்க, வேலையாட்களே தேவையில்லை. பராமரிப்பு செலவும், மிக குறைவு.
-- நன்றி தினமலர்
|
|
| |
Janvi | Date: Wednesday, 03 Sep 2014, 5:29 PM | Message # 32 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| போன்சாய் மரம் வளர்ப்பு பற்றிய விஷயங்களை பகிர்ந்திருந்தாலும். அவற்றை வளர்ப்பது சரியா தவறா என்ற விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கலை என்று ஒரு சாரரும், 'யானையைப் பூனை சைசிற்க்கும், ஆலமரத்தை கொத்துமல்லி சைசிற்கும் சிறிதாக்குவது கொடுமை' என்று மற்றொரு சாரரும் சொல்கிறார்கள். நீங்கள் எந்தப் பக்கம்?
|
|
| |
Janvi | Date: Sunday, 07 Sep 2014, 4:24 PM | Message # 33 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| பால் மற்றும் பாலினால் செய்யப்பட்ட பொருட்களில் என்னென்ன கலப்படம் செய்கிறார்கள் என்று பார்ப்போம்:
பால்: கொழுப்பு நீக்கப்பட்ட பால் கலத்தல், ஸ்டார்ச், மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் மாவு, கரும்பு சர்க்கரை, குளூகோஸ், சர்க்கரை, யூரியா, பூச்சிகொல்லி மருந்து, உப்பு, பால் பதப்படுத்த உதவும் பொருட்கள், கார அமில நிலையை சமநிலைப்படுத்தும் பொருட்களை சேர்த்தல்.
பாலாடை: மற்ற கொழுப்புகள், பாலின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருட்கள்.
வெண்ணெய்: விலங்கு கொழுப்புகள், அடரூட்டும் பொருட்கள், செயற்கை வெண்ணெய்.
நெய்: காய்கறி எண்ணெய்கள், கொழுப்புகள், விலங்குகொழுப்புகள், அடரூட்டும் பொருட்கள், பூச்சிக்கொல்லிகள்.
பால்பொடி: ஸ்டார்ச், டெக்ஸ்டிரின்
சுண்டக்காய்ச்சி கெட்டியான பால்: கஞ்சிப்பசைகள், மாவு தயாரிக்க உதவும் பொருட்கள்.
|
|
| |
Janvi | Date: Sunday, 07 Sep 2014, 5:30 PM | Message # 34 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| வீட்டுத் தோட்டத்தில் கற்றாழை செடி வளர்ப்பு!
கற்றாழையானது வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. இது வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக மட்டுமின்றி முதலுதவி மருந்துப் பொருளாகவும் வளர்க்கின்றனர். இது வறட்சியைத் தாங்கி நன்கு வளரும். மருத்துவ குணம் கற்றாழையின் இலையில் 'அலோயின்" 'அலோசோன்" போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. 'அலோயின்" வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. வீட்டுதோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் எளிதில் மருத்துவ சிகிக்சை செய்துகொள்ளலாம் என்பதால் பெரும்பாலோனோர் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கின்றனர். மண் வளம் அவசியம் வீட்டுத் தோட்டங்களில் கற்றாழை வளர்ப்பது அழகுக்காக மட்டுமின்றி மருந்துக்காகவும்தான். எனவே அவற்றை சரியான முறையில் நடவு செய்து பாதுகாப்பது அவசியம். கற்றாழையில் குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை, என மூன்று வகை உள்ளது. கற்றாழை பயிரிட தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். காரத்தன்மை 7 முதல் 83.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை வளர்கின்றது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது. தொழு உரம் போதும் நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்காக செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவேண்டும். கற்றாழைச் செடிகளுக்க இராசயன உரங்கள் தேவைக்கேற்ப இடவேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு எரு இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இடுவது அவசியம். எக்டருக்கு 120 கிலோ உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் செடிகள் நன்கு செழித்து வளரும் வீட்டுத் தோட்டம் அழகு பெருவதோடு சரும பாதுகாப்பிற்குத் தேவையான அதிக கூழ் நிறைந்த கற்றாழையும் கிடைக்கும். ஆரோக்கியமான செடிகள் செடிகளை நடவு செய்யும் முன்பு தரமான செடிகளாக பார்த்து வாங்கவேண்டும். வேர்கள் சரியான முறையில் உள்ளதா? செடிகளை பூச்சிகள் எதுவும் தாக்கியுள்ளதா என்பதை பார்த்து வாங்கி நடவு செய்வது அவசியம். கற்றாழைச் செடிகளுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படாது. இரு வாரங்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானது. அடிக்கடி செடிகளின் வேர் பகுதிகளை கவனிக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் நோய் தாக்குதலை கண்டறிந்து அதற்கேற்ப மருந்து தெளிக்கமுடியும். தோட்டங்களின் நடுப்பகுதியில் கற்றாழை வளர்ப்பது அழகை அதிகரிக்கும் அதனைச் சுற்றி பல்வேறு செடிகளை வளர்க்கலாம். தோட்டத்திற்கு கூடுதல் அழகு தரும்.
-- நன்றி போல்ட்ஸ்கை
Read more at: http://tamil.boldsky.com/home-ga....74.html
|
|
| |
Janvi | Date: Sunday, 07 Sep 2014, 5:35 PM | Message # 35 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| கற்றாழை செடி ஆரோக்கியமாக வளர அவசியம் செய்ய வேண்டியவைகள்!!!
அனைவரது வீட்டிலும் கற்றாழை செடியானது இருக்கும். ஏனெனில் இது ஒருவகையான அலங்கார செடி. இத்தகைய செடி வீட்டை அலங்கரிக்க மட்டுமல்லாமல், பல்வேறு உடல் மற்றும் சரும பிரச்சனைகளையும் போக்கும் சக்தி கொண்டது. அதுமட்டுமின்றி, இந்த செடியை அதிகம் பராமரிக்க தேவையில்லை என்ற ஒரு கருத்தின் காரணமாகவும், பலர் இந்த செடியை வளர்த்து வருகின்றனர். இந்த செடியை வீட்டில் வளர்க்க ஆரம்பிக்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் நாட்கள் போக போக, கற்றாழை செடிக்கும் சரியான பராமரிப்புக்களை மேற்கொள்ளாவிட்டால், கற்றாழை செடி பாழாகிவிடும். குறிப்பாக கற்றாழை செடிக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும். அப்படி தண்ணீர் அதிகம் ஊற்றினால், கற்றாழையில் உள்ள ஜெல்லின் அளவு அதிகரிக்கும். சரி, இப்போது கற்றாழை செடியை பராமரிக்கும் போது என்னவெல்லாம் மனதில் கொள்ள வேண்டுமென்று பார்ப்போம். தண்ணீர் அவசியம் பெரும்பாலானோர் கற்றாழை செடிக்கு தண்ணீர் அவசியம் ஊற்ற தேவையில்லை என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் கற்றாழைக்கு நாட்கள் போக போகத்தான் தண்ணீர் அதிகம் தேவைப்படும். அப்படி தண்ணீர் ஊற்றினால், அதன் இலைகள் நன்கு மென்மையாக இருப்பதுடன், ஜெல்லும் அதிகம் கிடைக்கும். சூரிய வெளிச்சம் வேண்டும் கற்றாழையின் வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் இன்றியமையாதது. எனவே கற்றாழையை வீட்டின் உள்ளே வளர்க்காமல், சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வளர்க்க வேஷ்டும். ஆனால் அளவுக்கு அதிகமான சூரிய வெளிச்சமும் கற்றாழையின் மீது படக்கூடாது. எனவே அளவாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்து வளர்த்து வாருங்கள். குறிப்பு கற்றாழைக்கு காலநிலைக்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்ற வேண்டும். உதாரணமாக, கோடைக்காலம் என்றால் கற்றாழைக்கு சற்று அதிகப்படியான தண்ணீர் ஊற்ற வேண்டும். குளிர்காலம் என்றால் அளவாக ஊற்றினால் போதும். மேற்கூறியவற்றை மனதில் கொண்டு கற்றாழையை வீட்டில் வளர்த்து வந்தால், கற்றாழை நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
-- நன்றி போல்ட்ஸ்கை
Read more at: http://tamil.boldsky.com/home-ga....40.html
|
|
| |
Janvi | Date: Monday, 08 Sep 2014, 5:59 PM | Message # 36 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| வீட்டுத் தோட்டத்தில் பப்பாளி மரம் வளர்க்கலாம்
கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி. பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பப்பாயின் என்ற என்ஸைம் அதிக மருத்துவ குணம் கொண்டது.
பப்பாளிப் பழத்தில் குளுக்கோஸ், வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. பப்பாளி பழம், இலைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. பப்பாளிப் பழம் உணவை, குறிப்பாக பருப்புவகை உணவுகள், இறைச்சி போன்றவற்றை எளிதில் செரிக்க வைக்கும் குணம் கொண்டது. 35 கிராம் இறைச்சியை ஒரு கிராம் பப்பாளி செரிக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பப்பாளிப் பழம் பித்தத்தைப் போக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படுத்தும். ரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த பப்பாளியை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.
மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும். மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும். பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள். ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள். நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது. வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது.
பப்பாளி நாற்று தயாரிக்க
பப்பாளி நாற்று தயாரிக்க தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம். 60 நாள்களில் நாற்று தயாராகிவிடும். தொழுஉரம், மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் 1 செ.மீ. ஆழத்தில் விதைப்பது நல்லது. ஒரு பைக்கு 4 விதைகள் வீதம் ஊன்றி நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி மூலம் நீர் ஊற்ற வேண்டும். ஒரு பைக்கு 1 கிராம் வீதம் கார்போபியுரான் 3 கிராம் குருணை மருந்து இட்டு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.
பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. 45 செ.மீ. 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழு உரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது.
இருபால் மலர்கள்
ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும். 4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும் .
செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும். கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும். பப்பாளி மரங்களை சப்பாத்தி பூச்சி என்ற ஒரு வகை பூச்சிகள் தாக்கும். வெள்ளை பூச்சிகள் அதிகமாக இருந்தால் பப்பாளி மரத்தை அழித்து விடுங்கள். ஆஸ்த்துமா போன்ற சுவாச கோளாறுகள் உருவாகிவிடும்.
--- Thanks to boldsky
Read more at: http://tamil.boldsky.com/home-ga....74.html
Message edited by Janvi - Monday, 08 Sep 2014, 6:02 PM |
|
| |
Janvi | Date: Thursday, 11 Sep 2014, 5:50 PM | Message # 37 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| Help to raise a vegetable garden at homeHelp to raise a vegetable garden at home
Soon, you can raise your own vegetable garden on the terrace. As part of the Urban Horticulture Development Scheme, the State government is planning to introduce ‘Rooftop Garden – Do It Yourself Kit’ in Chennai and Coimbatore.
Dr. R. Aravindan, deputy director, The Tamil Nadu Horticulture Management Institute, Madhavaram, said, “One house will be allotted a minimum of one unit (1 kit) and a maximum of five units. One unit will cost Rs.3,300 approximately. A 16-square metre moisture polythene sheet will be provided per unit to protect the roof floor from the rainwater.
Apart from that, ultra-violet stabilised poly bags with coco peat compressed bricks and vegetables – brinjal, tomato, chilly, bush beans, cluster beans and different types of greens – will be provided. With two litres of water, the bags will expand five times higher. After seven to ten days, bio-fertilisers and bio-pesticides with compost (one kilogram) should be mixed and used,” he added.
Garden tools – one litre hand sprayer, rose can, scoop, hand fork and two pro tray (50 holes) – and a hand book will be given to the beneficiaries.
The scheme is likely to be implemented in the middle of this month.
For details, contact A. Mohammed Nazeer, horticulture officer (Anna Nagar) at 9841155808, C. H. Rajeevan at 9840255347 and P. Punniyakodi at 9444989715.
For Perambur, contact N. Annamalai at 9444926440, K. Babu at 9444227095. For Thiruvanmiyur, contact M. R. Rajasekar at 9486725197 and S.V. Shanmugam at 9940658899.
Hi-tech sensor poly green house
The institute is setting up a hi-tech sensor poly green house on 28 acres, including five acres of State horticulture farm, 20 acres of ornamental garden and a horticulture management centre.
The green house will have imported saplings of capsicum (yellow, green, red and orange), lettuce, European cucumber, orchids, Dutch roses and anthura.
The house would be maintained with a temperature of 24-28 degrees Celsius throughout the year. It would be fully-automatic with irrigation, climate control devisers, foggers, shade nets, fan patch system ventilator and natural ventilator green house fan. The scheme is a frontline demonstration of National Horticulture Mission and National Agriculture Development Programme.
--- Thanks to The Hindu
Message edited by Janvi - Thursday, 11 Sep 2014, 5:56 PM |
|
| |
Janvi | Date: Thursday, 11 Sep 2014, 5:57 PM | Message # 38 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| Hi, Some pblm with the post. MK please correct it.
|
|
| |
Janvi | Date: Monday, 15 Sep 2014, 8:36 PM | Message # 39 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| vivasayam karkalam blog link
|
|
| |
Janvi | Date: Wednesday, 17 Sep 2014, 3:08 PM | Message # 40 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| வரலாறு: உருளைக் கிழங்கு அ யர்லாந்து நாட்டில் 1845-ம் ஆண்டிலிருந்து 49-ம் ஆண்டு வரை கடும் பஞ்சம். இதனால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகம். இத்தனை பேரின் உயிரை பலி கொண்டது என்ன பஞ்சம் தெரியுமா... உருளைக் கிழங்கு பஞ்சம். உலக வரலாற்றிலேயே காய்கறி ஒன்றின் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு இதுதான் என்கிறது வரலாறு. என்னது உருளைக் கிழங்கு பஞ்சம் இவ்வளவு உயிர்களைப் பறித்ததா...? ஆம்... அயர்லாந்து மக்களின் உணவில் 90 % இடத்தைப் பிடித்திருப்பது உருளைக் கிழங்கு. பிளைட் ( Blight ) எனும் கிருமி தாக்குதலால் உருளைக்கிழங்கு விவசாயம் எகிடுதகிடாக பாதிக்கப் பட்டதே பஞ்சத்துக்கு காரணமாக அமைந்து போனது.
இப்படியரு சோக வரலாற்றை தனதாகக் கொண்டிருக்கும் உருளைக் கிழங்கின் இன்றைய நிலையே வேறு. உலகில் அதிகமாக பயிராகும் பொருட்களின் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கும் இந்த உருளை, எந்த தட்பவெட்ப சூழ்நிலை யிலும், உலகின் அனைத்து பகுதிகளி லும் வளரக்கூடிய தன்மை கொண்டது. இமயமலையின் பதினைந்தாயிரம் அடி உயரத்தில்... உலகிலேயே தாழ்வான பகுதியான ஹாலந்து நாட்டில் என பரவலாக பயிராகிறது உருளை.
2005-ம் ஆண்டு உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, உலக அளவில் ஆண்டொன்றுக்கு 32 கோடி டன் உருளை பயிர் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. உருளை விவசாயத்தில் முதலிடம் சீனாவுக்கு தான். உணவு தேவைக்கு மட்டுமின்றி மருந்துப் பொருளாகவும் உருளை பயன்படுகிறது. இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்றவை குடல் புற்று நோய் மற்றும் உடலில் தேவையில்லாத கொழுப்பு சத்துக்களைக் குறைப்பதற்கான மருந்துகளின் மூலப்பொருளாக பயன்படுகின்றன.
உருளையின் தாயகம் என்று தென்அமெரிக்காவின் பெரு நாடு என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. 15-ம் நூற்றாண்டில் பெரு நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு விசா வாங்கிய உருளை, 16-ம் நூற்றாண்டு வாக்கில் போர்த்துகீசியர்கள் மூலமாக இந்தியா வந்து சேர்ந்திருக்கிறது.
நம்நாட்டில் தற்போது 35 வகை உருளைக் கிழங்குகள், ஆண்டொன்றுக்கு சுமார் 30 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்படுகின்றன. சுமார் இரண்டரை கோடி டன் மகசூல் எடுக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் இது பயிரிடப்படுகிறது. நம் மாநிலத்தைப் பொறுத்தவரை நீலகிரி, பழனி ஆகிய பகுதிகளில் அதிகமாக பயிராகிறது.
எதற்கெடுத்தாலும் நம்ம ஊரில் கத்தரிக்காயை பயன்படுத்துவது போல... உலகம் முழுக்கவே பயன்படுத்தப்படுவது உருளைக் கிழங்கு. அதனாலயே அதற்கு 'ஏழையின் உணவு' என்றொரு பெயரும் இருக்கிறது.
--- Thanks to Puthiyatamil.net
http://www.puthiyatamil.net/t48093-topic
|
|
| |