வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் - Page 6 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
JanviDate: Wednesday, 24 Sep 2014, 10:46 PM | Message # 51
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
நன்றி அருள்செல்வி
 
JanviDate: Sunday, 28 Sep 2014, 0:20 AM | Message # 52
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 
JanviDate: Sunday, 28 Sep 2014, 0:25 AM | Message # 53
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தோட்டத்தில் மலர்வகைகள் பற்றிய குறிப்புகள் 



Message edited by Janvi - Sunday, 28 Sep 2014, 0:29 AM
 
JanviDate: Sunday, 28 Sep 2014, 0:28 AM | Message # 54
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
காய்கறி தோட்டம் பற்றிய குறிப்புகள் 

 
JanviDate: Tuesday, 30 Sep 2014, 5:38 PM | Message # 55
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஹவ் ஓல்ட் ஆர் யூ... ஒரு பசுமைத் திரைப்படம்!

 
நாடகம், சினிமா போன்றவையெல்லாம், இன்றைக்கு பொழுதுபோக்கு என்பதாகவே மாறிக் கிடக்கின்றன. ஆனால், நல்ல விஷயங்களை மக்களின் மனதில் பதிய வைப்பதற்காக மட்டுமே இவையெல்லாம் பிறந்தன என்பது உலக வரலாறு. சுதந்திரப் போராட்டங்கள் தொடங்கி எத்தனையோ விஷயங்களில் மக்களை ஒருமுகப்படுத்திய பெருமை... நாடகத்துக்கும் சினிமாவுக்கும் உண்டு. காலப்போக்கில், அவற்றின் நோக்கம் மாறிப்போனாலும், அத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒரு படம் மக்களின் மண்டையில் ஓங்கிக் குட்டும்! அந்த வகையிலான படங்கள் தமிழில் வருவது, கிட்டத்தட்ட அருகியே விட்டது. ஆனால், மலையாள மொழியில் அவ்வப்போது எட்டிப்பார்த்துக் கொண்டுதான் இருக் கின்றன. இந்த வரிசையில் வந்திருக்கும் 'ஹவ் ஓல்டு ஆர் யூ', எனும் திரைப்படம் இயற்கை விவசாயத்தின் தேவையை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது... குறிப்பிடத்தக்கது!
'தினமும் புதுப்புது நோய்கள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன. இதற்கு முக்கியக் காரணம்... ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் விவசாயத்தில் அதிகளவில் பயன்படுத்துவதுதான். இயற்கை முறையில் பயிர் செய்து, இயற்கைச் சூழலை உருவாக்க... நம் வீட்டு மொட்டை மாடியே போதும்’ என்று பொட்டில் அடித்தாற்போலச் சொல்லி விழிகளை விரிய வைக்கிறது, இத்திரைப்படம்!

மஞ்சு வாரியர், 'நிருபமா’ என்கிற பாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கிறார். அவருடைய கணவனும் மகளும் நிருபமாவைப் பிரிந்து வெளிநாடு செல்கிறார்கள். இதனால், வெறுமையான சூழலுக்குத் தள்ளப்படுகிறார் நிருபமா. இந்நிலையில், மொட்டை மாடித் தோட்டத்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் காய்கறிகளை, தனக்குத் தெரிந்த ஒரு பெண்மணிக்கு ஒரு தடவை அன்பளிப்பாகத் தருகிறார். அந்தப் பெண்மணியோ... தான் வேலை பார்க்கும் வீட்டிலுள்ளவர்களிடம் அவற்றைக் கொடுக்கிறார். அது, மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் வீடு. அந்தக் காய்கறிகளைச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு... நிருபமாவுக்கு அழைப்பு விடுக்கிறார் அந்தத் தொழிலதிபர். 'நீங்கள் கொடுத்த இயற்கைக் காய்கறிக்கு இணையே இல்லை. என் வீட்டில் இன்னும் நான்கு மாதங்களில் திருமணம் வரவிருக்கிறது. 2 ஆயிரம் பேருக்கு சமைக்கும் அளவுக்கு இயற்கைக் காய்கறிகள் வேண்டும். நீங்கள்தான் ஒரு ஏக்கரில் தோட்டம் வைத்திருக்கிறீர்களே...’ என்று கடகடவென தொழிலதிபர் கேட்க... திகைத்துப் போகும் நிருபமா, யோசித்துச் சொல்வதாக சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்.
'ஒரு ஏக்கர்ல விவசாயம்னு ஒரு பந்தாவுக்காக அவங்ககிட்ட சொல்லிட்டேன்' என்று அந்த வேலைக்கார பெண்மணி, நிருபமாவிடம் மன்னிப்பு கேட்க, 'சரி சமாளிப்போம்' என்றபடி, அந்த ஊரில் உள்ள பெரிய காய்கறி மண்டியை அணுகுகிறார். ரசாயன விவசாயத்தில் விளைந்த காய்கறிகளை குவித்து வைத்திருக்கும் மண்டிக்காரர், காய்கள், பழங்கள் கெட்டுப்போகாமல் தளதளவென்றிருப்பதற்காக பூச்சிக்கொல்லி உள்ளிட்ட ரசாயனங்களை, நிருபமாவின் கண்முன்பாகவே அடிக்கிறார். மாம்பழங்களை கல் வைத்து பழுக்க வைக்கிறார். இதையெல்லாம் நியாயமும்படுத்துகிறார். அதிர்ச்சியாகும் நிருபமா... 'உங்க வீட்டுக்கும் இதையேதான் கொண்டு போவீங்களா?' என்று கேட்க...
'அதுக்கு வேற வரும்... இயற்கை விவசாயத்துல விளைஞ்சது!'' என்று பதில் தருகிறார் மண்டிக்காரர்.
கொதித்தெழுந்து வெளியேறும் நிருபமா, தன் மொட்டை மாடியில் வந்து நின்று செடி, கொடிகளை வாஞ்சையோடு பார்க்கிறார். அப்படியே சுற்றியிருக்கும் மொட்டை மாடிகளெல்லாம் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்க்கும் நிருபமாவுக்கு... புதிய எண்ணம் பிறக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களிடம் மாடித்தோட்டம் பற்றி சொல்லி... 2,000 ஆயிரம் பேருக்கான காய்கறி தரவேண்டியிருப்பதையும் இதையே ஒரு தொழிலாகச் செய்யலாம் என்பதையும் எடுத்துச் சொல்லி, பலருடனும் கைகோக்கிறார். மொட்டை மாடிகள் எங்கும் இயற்கை முறையில் விளையும் காய்கறித் தோட்டங்கள் சிலுசிலுக்கின்றன!
தொடர்ச்சியாக, கட்டடக்கலை நிபுணர்களுக்கான கருத்தரங்கில் பேசுவதற்கு, கல்லூரி கால தோழி மூலமாக வாய்ப்பு கிடைக்க... ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகளில் உள்ள நச்சுத்தன்மை, கேரளாவின் காசர்கோடு பகுதியில் முந்திரி மரங்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் விஷமருந்து தெளித்ததால், அந்தப் பகுதி மக்கள் இன்றளவிலும் பாதிக்கப்பட்டிருப்பது என்று பலவற்றையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டு, 'இன்றைக்கு மக்கள் கேன்சரின் பிடியில் சிக்கியிருப்பதற்கு காரணமே ரசாயன உரங்களில் விளைந்த காய்கறிகள்தான். அதனால், கட்டடங்களில் வீட்டுத் தோட்டத்துக்கும் இடம் ஒதுக்குங்கள்' என்று வேண்டுகோள் வைக்கிறார்.
முன்வரிசையில் அமர்ந்திருக்கும் மாநில அமைச்சர், நெகிழ்ந்து போய், 'கேன்சரை உருவாக்கிவிட்டு, ஊருக்கு ஊர் கேன்சர் மருத்துவமனைகளைக் கட்டுவதைவிட, அந்த நோய் வராமல் தடுக்கும் வீட்டுத் தோட்டத்தை வீட்டுக்கு வீடு அமைக்கலாம். இதற்கு நீங்களே தலைமை ஏற்பதாக இருந்தால், உங் களிடம் ஒப்படைக்கத் தயார்' என்கிறார். அதை ஏற்று, சாதிக்கிறார் நிருபமா. விஷயம், குடியரசுத் தலைவர் வரை எட்டுகிறது. அதன் பிறகு, நாடு முழுக்க பிரபலமாகிறார், நிருபமா.
படத்தின் கரு, இயற்கை விவசாயம் அல்ல. 35 வயதைக் கடக்கும் பெண்களுக்கே இருக்கும் சில முக்கியமான பிரச்னைகளில் வயதும் ஒன்று. இந்த வயதுப் பிரச்னையை வைத்து, கணவன் மற்றும் மகளுடன் போராடும் நடுத்தர வயதுப் பெண்மணியின் வாழ்க்கைதான் கதைக்கரு. தனித்து நின்று வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் அந்தப் பெண், இயற்கை விவசாயத்தைக் கையில் எடுப்பதை, எந்தவித பிரசார நெடியும் இல்லாமல், கதையோடு கதையாக வெகு இயல்பாக ஓடவிட்டிருப்பது... அழகோ அழகு! மொத்தத்தில், மொட்டைமாடியில் இருந்தே இயற்கை விவசாயப் புரட்சியை ஏற்படுத்தலாம் என்கிற இயற்கை சிந்தனையை அனைவர் மீதும் அள்ளித் தெளிக்கிறது, படம்!


 
JanviDate: Thursday, 16 Oct 2014, 9:22 PM | Message # 56
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பசுமைப் புரட்சி
 
1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய கால கட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. தொலைநோக்கில் இந்தப் பயிர்ச்செய்கையின் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்வது தேவையானாலும், பசுமைப் புரட்சி உலக சமூக தொழில்நுட்ப பொருளாதார அரசியல் தளங்களில் நிகழ்ந்த முக்கிய புரட்சிகளுள் ஒன்று என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூற்று[சான்று தேவை]. பசுமைப் புரட்சியானது "உயர்-மகசூல் வகைகளை" உருவாக்கியதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க பழமையான கலப்பின முறையைப் பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 1900 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஹெக்டேருக்கு 2.5 டன்களாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9.4 டன்களாக அதிகரித்தது. அதேபோன்று, உலகளாவிய சராசரி கோதுமை மகசூல் 1900 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 1 டன்னுக்கும் குறைவாக இருந்தது. 1990 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 2.5 டன்னுக்கும் அதிகமாக இருந்தது.

 
 
JanviDate: Thursday, 16 Oct 2014, 9:23 PM | Message # 57
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தென் அமெரிக்க சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 2 டன்னுக்கு குறைவாகவும், ஆப்பிரிக்காவில் ஹெக்டேருக்கு 1 டன்னுக்கு குறைவாகவும், எகிப்து மற்றும் அரேபியாவில் நீர்ப்பாசனத்தைக் கொண்டு ஹெக்டேருக்கு 3.5 முதல் 4 வரையிலுமாக இருந்தது. இதற்கு முரணாக, பிரான்ஸ் போன்ற நாடுகளின் சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 8 டன்னுக்கும் அதிகமாக இருந்தது. மகசூலில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலை, மரபணுக்கள், மற்றும் தீவிர விவசாய உத்திகள் (உரங்கள், ரசாயன பூச்சிக் கட்டுப்பாடு,தேக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வளர்ச்சிக் கட்டுப்பாடு) ஆகியவற்றால் ஏற்படுகின்றன. [1] [2]
[url=http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Agriculture_(Plowing)_CNE-v1-p58-H.jpg][/url]
1921 ஆம் ஆண்டின் என்சைக்ளோபீடியாவிலுள்ள இந்தப் படம் ஆல்பால்பா நிலத்தை ஒரு டிராக்டர் உழுவதைக் காட்டுகிறது.

இந்த புரட்சி அமெரிக்காவின் Rockfeller Foudation, Ford Foundation ஆகியவற்றின் உதவிடன் தொடங்கியது. விரைவில் அமெரிக்க அரசு, இந்திய அரசு, மெக்சிக்கோ அரசு போன்ற பல்வேரு நாடுகள் பசுமைப் புரட்சியை தமது நாடுகளில் நடைமுறைப்படுத்தின. Norman Borlaug பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். சாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவர்களில் ஒருவர்.
 
JanviDate: Thursday, 16 Oct 2014, 9:25 PM | Message # 58
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பூச்சி மேலாண்மை

 
 
இருப்பினும், தீவிர விவசாயத்தின் நீடிப்புத்தன்மை குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. தீவிர விவசாயம் தரம் குறைந்த மண்ணுடன் சம்பந்தப்பட்டவையாயின, அத்துடன் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், குறிப்பாக மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் உணவுத் தேவை விரிவடைவது ஆகியவற்றின் விளைவுகள் குறித்த விவாதங்களை அதிகரித்துள்ளன. தீவிர விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட ஒற்றைக்கலாச்சார முறைகள் பூச்சிக்கொல்லிகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படக்கூடிய பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. "பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டும், குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் கொண்டிருந்த" ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கவில்லை, ஏனென்றால் கொள்கைகள் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தின என்பதோடு IPM வலுவான அறிவு கொண்டதாக இருந்தது.[3] இருப்பினும் "பசுமைப் புரட்சி" ஆசியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அரிசி விளைச்சலை அதிகரித்துள்ளது.


Message edited by Janvi - Thursday, 16 Oct 2014, 9:25 PM
 
JanviDate: Thursday, 16 Oct 2014, 9:26 PM | Message # 59
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
விதைகள்
 
மகசூல் அதிகரிப்பு கடந்த 15–20 ஆண்டுகளில் ஏற்படவே இல்லை.அரிசிக்கான மரபணு மகசூல் திறன் 1966 ஆம் ஆண்டிலிருந்து அதிகரிக்கவில்லை, மக்காச்சோளத்திற்கான மகசூலை கடந்த 35 ஆண்டுகளில் சற்றே அதிகரிக்கச் செய்துள்ளது. மூலிகை தடுப்புத் திறனுள்ள களைகளை உருவாவதற்கு ஒன்று அல்லது இரண்டு பத்தாண்டுகள் ஆனது, பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் பூச்சிகள் உருவாவதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆனது. பயிர் சுழற்சி எதிர்ப்புத்திறன்களை தடுக்க உதவியது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து விவசாய கண்டுபிடிப்புகள் துரிதப்படுத்தப்பட்டன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் புதிய உயிரினங்களும் புதிய விவசாய முறைகளும் உருவாவதற்கு வழிவகுத்துள்ளன.
 
JanviDate: Thursday, 16 Oct 2014, 9:27 PM | Message # 60
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
உற்பத்தித் திறன்
 
2005 ஆம் ஆண்டு சீனாவின் விவசாய உற்பத்தி உலகிலேயே பெரியதாக இருந்தது. உலக வங்கியின் கூற்றுப்படி ஐரோப்பிய யூனியன், இந்தியா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உலகின் ஆறில் ஒரு பகுதி பங்கை சீனா பெற்றிருந்தது. விவசாயத்தின் மொத்த காரணி உற்பத்தித்திறனை பொருளாதாரவியலாளர்கள் அளவிட்டுள்ளனர், இந்த அளவீட்டின்படி அமெரிக்க விவசாயம் 1948 ஆம் ஆண்டு இருந்ததைவிட அதிக உற்பத்தித் திறனைக் கொண்டு ஏறத்தாழ 2.6 மடங்கு அதிகரித்திருந்தது.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட ஆறு நாடுகள் 90 சதவிகித தானிய ஏற்றுமதியை வழங்கின
 
Search: