Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Monday, 10 Mar 2014, 3:17 PM | Message # 241 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| மினுமினுக்கும் நட்சத்திரங்கள்!
இரவு நேரத்தில் நாம் வானவெளியில் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவை மினுமினுக்கின்றன. அணைந்து அணைந்து எரிவது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறதல்லவா? உண்மையில் சில விநாடிகள் கூட அவற்றின் வெளிச்சம் மறைவதில்லை. அதாவது நட்சத்திரங்கள் மினுமினுப்பதில்லை. அவை சூரியனைப் போல விடாமல் ஒளி வீசிக்கொண்டிருப்பவை. அவற்றின் ஒளி வாயு மண்டலத்தின் வழியாக ஊடுருவி வரும்போது வாயு மண்டலத்தில் ஏற்படக்கூடிய அசைவுகளுக்கு ஏற்ப அசைவதால் நம் கண்களுக்கு நட்சத்திரங்கள் மினுமினுப்பது போலத் தோன்றுகின்றன.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 10 Mar 2014, 3:17 PM | Message # 242 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| நத்தையின் எடை 15 கிராம்தான் இருக்கும். ஆனால், 450 கிராம் எடையைக் கூட இழுத்துச் செல்லும் வலிமை உடையது. • ஒரு சராசரி மனிதனுக்கு ஒருநாளைக்கு 1.5 லிட்டர் அளவுக்கு உமிழ்நீர் சுரக்கிறது என்று கணக்கிட்டுள்ளனர். • நட்டுவாக்கிளி எனப்படும் பெரிய தேளின் கொடுக்கில் சுமார் 0.5. மில்லிகிராம் நஞ்சு உள்ளது. • நிலவின் ஒளியிலும் வானவில் தோன்றும். ஆனால், அது இரவில் தோன்றுவதால் நமது கண் களுக்குத் தெரிவதில்லை. • தொலைநோக்கியின் உதவியின்றிப் பார்க்க முடியாத கிரகம் நெப்டியூன். • பெரிய ஈக்கள் மணிக்கு 60 மைல் வேகத்தில் பறக்கும். சாதாரண ஈக்கள் மணிக்கு 50 மைல் வேகத்தில் பறக்கும். தேனீக்களின் வேகம் மணிக்கு 20 மைல். • மனித உடலில் அதிக வளைவும் அதிக வலுவும் உள்ள தசை - நாக்குதான்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 10 Mar 2014, 3:21 PM | Message # 243 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| சகுனத்திற்கு அறிவியல் காரணம்.
பூனை குறுக்கே போனால், திரும்ப வேண்டும் என்பது சகுனமாக உள்ளது.பூனைகள், எப்போதும் மனிதர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தான் இருக்கும். மன்னர்கள் போருக்குச் செல்லும் போது குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்ல மாட்டார்கள். பூனையை குறுக்கே பார்த்தால், குடியிருப்பு பகுதிகள் என நினைத்து பாதையை மாற்றுவர். குடியிருப்பு பகுதிகளின் வழியே கட்டாயம் செல்ல நேரிட்டால், குதிரையின் வேகத்தை கட்டுப்படுத்தி தயங்கி செல்வர். இதுவே நாளடைவில் பூனை குறுக்கே போனால், கெட்ட சகுனம் என ஆனது.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 10 Mar 2014, 3:24 PM | Message # 244 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| கல்வி ஏற்படுத்திய திருப்புமுனை!
குழந்தை தொழிலாளியாக, 8 வயதில் பள்ளிக்குள் நுழைந்தாலும், வறுமை காரணமாக, 'டியூஷன்' போகாமலும், 10௦ம் வகுப்பில், 500க்கு, 454 மதிப்பெண்கள் பெற்ற, தீபா:
நான், விருதுநகர் மாவட்டம், சாத்துாரை அடுத்த, லட்சுமியாபுரத்தை சேர்ந்தவள். அப்பா, இரண்டாவது திருமணம் செய்து, தனியே போய்விட்டார். அதனால், குடும்பம் வறுமையில் வாடியது.எங்கள் வீட்டில் என்னையும் சேர்த்து, மொத்தம் மூன்று பெண் குழந்தைகள் என்பதால், பாட்டி வீட்டின் ஒரு, 'போர்ஷனில்' தங்க இடம் கிடைத்தது. அம்மா குருவம்மாள், தீப்பெட்டி ஆபீசில் கட்டு ஒட்டி தான், எங்களை வளர்த்தார். நாங்களும் தீப்பெட்டி வேலை செய்ததால், பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. 'குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதம்,100௦௦ ரூபாய் தருவதாக அறிந்தேன். அதனால், 8 வயதில் அப்பள்ளியில் சேர்ந்து, 5ம் வகுப்பு வரை படித்தேன்.பின், எச்.எச்.என்., எத்தல் ஹார்வி மகளிர் மேல்நிலை பள்ளியில், 6ம் வகுப்பு சேர்ந்தேன். குடும்பத்தின் வறுமை காரணமாக, படிப்பை தொடர முடியாமல், மீண்டும் வேலைக்கு சென்றேன்.பின், மீண்டும் பள்ளியில் சேர்ந்தேன். தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதுடன், வறுமை காரணமாக, டியூஷனுக்கும் செல்லவில்லை. இந்நிலையிலும், 10௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், 500௦௦க்கு, 454 மதிப்பெண்கள் பெற்று, என் திறமையை நிரூபித்தேன். பிளஸ் 1ல், அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தேன். பிளஸ் 2வில், 938 மதிப்பெண்கள் எடுத்தேன். கல்லுாரியில் சேர, வீட்டில் வசதியில்லை. விருதுநகரில் இருந்த, குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு திட்ட மாவட்ட இயக்குனர் ஜெயப்பிரகாஷ், கள அதிகாரி நாராயணசாமி ஆகியோரின் உதவியால், சாத்துார் ராமசாமி நாயுடு கல்லுாரியில், பி.எஸ்சி., கணிதம் படித்தேன்.என் திறமையை அறிந்த, அக்கல்லுாரி பேராசிரியர் ராஜாராமும், அவரது நண்பர்கள் உதவியுடன், அக்கல்லுாரியிலேயே, எம்.எஸ்சி., முடித்தேன். பின், நாமக்கல் ஸ்ரீவள்ளி கல்லுாரியில், பி.எட்., படித்தேன். அங்கு படிக்கும் போதே, பகுதி நேரமாக டியூஷன் எடுத்து, அப்பணத்தை படிப்பு செலவிற்காக பயன்படுத்தினேன்.படிப்பு முடிந்ததும், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், 13 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம், உணவு, தங்குமிடத்துடன், ஆசிரியர் பணி கிடைத்தது. தற்போது திருமணமாகி, வேளச்சேரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். பட்ட படிப்பு படிக்க ஆலோசனையும், அதற்கான பண உதவியும் கிடைத்தது தான், என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Mar 2014, 9:19 AM | Message # 245 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பொது அறிவு *அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
*உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
*மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
*போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
*அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
*இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
*இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
*பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
*உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்..
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 19 Mar 2014, 2:56 PM | Message # 246 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| மிகச் சிறிய கிரகமான புதன் மேலும் சுருங்குகிறது : ஆய்வில் அதிர்ச்சி
சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களில் முதல் கோளாகவும், மிகச் சிறிய கோளாகவும் விளங்கும் புதன் கிரகம், கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக நாசாவின் ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.
பாறைகளால் ஆன புதன் கிரகத்தில் பகல் மூன்று மாதமும், இரவு மூன்று மாதமும் இருக்கும். புதன் கிரகத்தில் பகலில் வெயில் 400 டிகிரி செல்சியசில் இருக்கும். இரவாக உள்ள பகுதியில் குளிர் ஆளைக் கொன்று விடும். மைனஸ் 173 டிகிரியாக இருக்கும். புதன் கிரகத்தில் செடி, கொடி, மரம என எதுவும் இல்லை. எந்த உயிரினமும் வாழும் சூழ்நிலையும் இல்லை.
அமெரிக்கவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2004 ஆம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் 2008 ஆம் ஆண்டுகளில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராய்ந்து அரிய தகவல்களை அனுப்பி வருகிறது. மெசஞ்சர் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் புதன் கிரகம் கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Friday, 21 Mar 2014, 11:35 AM | Message # 247 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான். ஆனால், தற்போது, சில மாநிலங்களில் நடக்கும் பால் கலப்படம், உயிரையே பறித்து விடும் ஆபத்து கொண்டது இத்துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர் கூறுகிறார்.சில வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருவதாகவும் கூறினார் நண்பர்! "சிந்தெடிக்' பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா? * காஸ்டிக் சோடா. * தண்ணீர். * ரீபைன்ட் ஆயில். * உப்பு. * சர்க்கரை. * யூரியா. இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்! பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்! இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, "ஹோமோஜினைஸ்' என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, "குளோபுயூல்ஸ்' - சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Friday, 21 Mar 2014, 11:37 AM | Message # 248 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| இன்று கண்ணுக்குத் தெரியாத கொலை காரர்கள் சிலர் இருக்கின்றனர். இவர்கள் பல வீடுகளின் சமையல் அறையில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பணம் தந்து விரும்பி வாங்கப்படுகின்றனர். இவர்களுக்குச் சிறப்பான வரவேற்பும் தரப்படுகின்றது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்தக் கொலைகாரர்களைப் பாராட்டி மகிழ்கின்றனர். இந்தக் கொலைகாரர்கள் மெதுவாகக் கொல்கின்றனர். இரத்தம் வெளிப் படாமல் கொலை செய்கின்றனர். இந்தக் கொலை காரர்கள் பரவலாகி வருகின்றனர். உயிரில்லாத இந்தக் கொலைகாரர்கள் மனித உயிர்களை மென்மை நிலையில் மாய்க்கின்றனர்.
வசதி படைத்தவர்கள் வீட்டில் இன்று பிளாஸ்டிக் புட்டிகள் அலமாரிகளில் அலங்கார மாக அமர்ந்திருக்கும். அவை, தமக்குள் சில உணவுப் பொருள்களைக் கொண்டிருக்கும். இந்தப் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தர வரிசை எண் உள்ளது. இந்த எண் 1 முதல் 7 வரை இருக்கின்றது. இந்த எண்கள் பிளாஸ்டிக் பொருளின் நச்சுத் தன்மையின் அளவைக் குறிக்கின்றன.
தோசை சுடுவதற்குக் கடாய் எனப்படும் பாத்திரம் பயன்படுகிறது. தற்போது எண்ணெய் தடவப்படாமல் - தோசை மாவு ஒட்டாத - புதுமையான கடாய் கடைகளில் விற்கப்படுகிறது. இது மிகப் பலரால் விரும்பப் படுகிறது. இதனால் எண்ணெய் மிச்சமாகிறது. எண்ணெய் தடவும் நேரம் மிச்சமாகிறது. இந்தக் கடாயின் மேல் வேதியியல் பூச்சு படிந்துள்ளது. அடுப்பின் மேல் வைத்துக் கடாயைச் சூடாக்கும்போது, அந்த வேதியியல் பூச்சு டாக்சின் (நச்சுப்பொருளை) வெளிப்படுத்துகிறது. இது, மனிதனின் கணையம், கல்லீரல் முதலியவற்றைப் பாதிக்கிறது. இது உடல் நலத்தைக் கெடுக்கிறது. மெல்ல மரணத்தை அழைக்கிறது.
பீங்கான் கோப்பைகள் நாகரிகத்தின் சின்னமாகப் போற்றப்படுகின்றன. இவை பள பளப்புடன் காணப்படுகின்றன. பார்ப்பவரின் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன. இவற்றின் தயாரிப்பில் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காரீயக் கலப்பு, முறைப்படி நடை பெறாவிட்டால், உடல் நலம் கெடும் நிலை அமையும். இப்படிப்பட்ட பீங்கான் கோப்பையில் சூடான பானம் ஊற்றப் பட்டால் இளகும். காரீயம், மெதுவாகப் பானத்துடன் கலக்கும். குடிப்பவர் உடலைக் கெடுக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாக்கும்.
அலுமினியப் பாத்திரங்கள் இன்று குடிசையிலும் குடியேறிவிட்டன. முறையான அழுத்தம் பெறாத (Anodized Aluminium) ஆகாத அலுமினியப் பாத்திரம் உடம்பைக் கெடுத்துவிடும். அல்ஹிமர் (Alzhemer) நோய்க்கு வரவேற்பு மாலை போடும்.
வசதியற்றவர்களின் வீட்டில் போதிய இடப்பரப்பு இல்லாதவர் வீட்டில் சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வீற்றிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பத்து அடி தூரத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். குடிசைக்குள் அல்லது மிகச் சிறிய வீட்டில் இது நடைபெறுவதில்லை. இதனால், முதல் நிலையில் கண்பார்வை கெடுகிறது. உடல் பயிற்சி செய்யமுடியாத நிலை ஏற்படுவதால், உடல் நலமும் பாதிக்கிறது.
புகை பிடிப்பதால், (பீடி, சுருட்டு, சிகரெட் பிடிப்பதால் வரும்) தீமைகளுக்கு இணையான உடல்நலக் கேடுகள் வருகின்றன என்று ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. (அறிவியல் ஒளி இதழில் வெளியானது)
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Saturday, 22 Mar 2014, 10:32 AM | Message # 249 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| வெயிலே வெயிலே ஓடிப்போ! --
மழை ஒழுங்கா பெய்யுறதில்ல, ஆனா வெயில் மட்டும் வெளுத்து வாங்குது. பருவ காலங்கள் முன்ன மாதிரி இல்லை, ஏறுக்கு மாறா... ஏட்டிக்கு போட்டியா போய்க்கிட்டு இருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம். வெயில் இப்பவே வறுத்தெடுக்கத் தொடங்கிட்டு. ஏற்கனவே வெயில் காலங்கள்ல அம்மை, வேர்க்குரு, கொப்புளம், வயித்துக்கடுப்பு, வயித்துவலினு வந்து பாடாப்படுத்தும். ஆனா இப்போ புதுசு புதுசா... தினுசு தினுசா நோய்கள் வந்து மனுசன ஒருவழி பண்ணிட்டு போயிருது. அறிவியல் என்னதான் வளர்ச்சி அடைஞ்சாலும் இந்த நோய்களை கண்டுபிடிக்க முடியலை. இந்த நோய்கள் வர்றதுக்கு ரெண்டே காரணந்தான். ஒண்ணு உடல் உழைப்பு குறைஞ்சு போனது, ரெண்டாவது நாம சாப்பிடுற சாப்பாடு.
சரி நேரடியா விஷயத்துக்கு வருவோமா?...
வறுத்தெடுக்கும் கோடை வெயில்ல இருந்து நம்மளை காத்துக்கிடணும்னா கீழே சொல்லப்பட்டிருக்கிறதல சிலதை மட்டும் பின்பற்றினாலே போதும், கைமேல் பலன். கோடை வர்றதுக்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துட்டு. விலை குறைவா உள்ள இந்த தர்பூசணியை சாப்பிட்டா உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கிறதோட தாகம் தணியும். என்ன ஒண்ணு அடிக்கடி சிறுநீர் போகும், அவ்வளவுதான். அதேபோல எல்லா காலத்துலயும் தாராளமா கிடைக்கக்கூடிய இளநீரை குடிக்கலாம். இதுவும் சூட்டை தணிக்கும். ஆனா என்ன... விலைதான் விர்ருன்னு தென்னைமரம் மாதிரி ஏறிப்போச்சு.
இளநீர் குடிக்கிறதுல தப்பில்லை, கடைக்குப்போனா எளநி வியாபாரி, ‘வழுக்கையா, தண்ணியா’ன்னு கேப்பாரு. சிலபேரு வழுக்கையா பாத்து போடுங்கன்னு வாங்கி ‘மடக் மடக்’குனு குடிப்போம். லேசான வழுக்கை ருசியாத்தான் இருக்கும். ஆனா இப்பிடி தொடர்ந்து வழுக்கையா வாங்கி சாப்பிட்டா காலப்போக்குல அது பசியைக்குறைச்சி குன்மம்னு சொல்லக்கூடிய வயித்து நோய் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால எப்பவுமே புதுசா பறிச்ச இளநீரை வாங்கி குடிச்சா உடம்புக்கு நல்லது, அதாவது வெறும் தண்ணியா உள்ள இளநீரா பார்த்து வாங்கி குடிங்க. கூல் கூல்..!
வெயில் காலத்துல வீட்டுக்கு வீடு மண்பானையில தண்ணி ஊத்தி வச்சி குடிப்போம், நல்லதுதான். சும்மா வெறுமனே தண்ணியை ஊத்தாம காய்ச்சி ஆற வச்ச தண்ணியை மண்பானையில ஊத்தி வச்சி குடிக்கலாம். தண்ணியை ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம். தண்ணி கொதிக்கும்போது கொஞ்சம் சீரகத்தை அள்ளிப்போடுங்க. உடம்புக்கு குளிர்ச்சி தர்றதோட உள்உறுப்புகள் சரியாகும். மண்பானையில வெட்டிவேரை ஊறப்போட்டு குடிச்சாலும் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது நாட்டு மருந்துக்கடைகள்ல கிடைக்கும். ஜன்னல் ஓரங்கள்ல வெட்டிவேர்ல செஞ்ச தட்டியை பயன்படுத்தினா குளிர்ச்சியான காத்து கிடைக்குறதோட நல்ல வாசமா இருக்கும்.
வெட்டிவேர் மாதிரியே நன்னாரி வேரும் நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. இதை வாங்கி இடிச்சி தண்ணியில போட்டு கொதிக்க வச்சி சூடு ஆறுன உடனே சீனி (சர்க்கரை) சேர்த்து குடிச்சா ஒண்ணுக்கு போகும்போது வரக்கூடிய எரிச்சல் சரியாகும். கடைகள்ல விற்கக்கூடிய நன்னாரி சர்பத் குடிக்க டேஸ்டா இருக்கலாம், ஆனா சுகம் கிடைக்காது. இது எந்தவித கலப்பு இல்லாத சூப்பர் சர்பத்.
கோடை காலத்துல புழுக்கம் வர்றது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிலபேருக்கு எரிச்சல், கோபம், படபடப்பு, குழப்பம் வரும். சிலபேருக்கு தலைசுத்தலும், மயக்கமும் வரும். இந்த மாதிரி பிரச்னை வந்தா செம்பருத்திப்பூ சர்பத் குடிச்சா நல்லது. அதென்ன செம்பருத்தி பூ சர்பத்துன்னு கேக்குறீங்களா? எங்க ஊர்ப்பக்கம் தடியங்காய்னு சொல்வாங்க, அதோட பேரு கல்யாணபூசணிக்காய். திருஷ்டிக்கு உடைப்பாங்களே, அதே காய்தான். அதுல ஒரு ஓட்டை போட்டு 50 இல்லைனா 100 செம்பருத்திபூவை உள்ள திணிச்சி மூடி வச்சிரணும். மறுநாள் அதை உடைச்சி சதை பகுதியை எடுத்து சாறு பிழிஞ்சி சம அளவு சீனி (சர்க்கரை) சேர்த்து தேன் பதத்துல காய்ச்சி ஆற வச்சா செம்பருத்தி பூ சர்பத் ரெடி. இதுல 4 ஸ்பூன் சர்பத் 4 ஸ்பூன் தண்ணி சேர்த்து குடிச்சா படபடப்புல தொடங்கி ஆயாசம், கண் எரிச்சல்னு எல்லாம் ஓடிப்போயிரும்.
இதுபோக வெயில் காலத்துல கிடைக்கக்கூடிய நொங்கு (பனைநுங்கு), எலுமிச்சை ஜூஸ் சாப்பிடறதால பிரச்னைகள்ல இருந்து தப்பிக்கலாம். எலுமிச்சை ஜூஸை தண்ணி, சீனி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து குடிங்க. அதிகமா புளிப்பு இருந்தா அமிலம் இருக்குன்னு அர்த்தம். அது உடம்புக்கு அவ்வளவு நல்லதில்லை. மத்தபடி வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம், பானகம் குடிக்கலாம். பானகம் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேருக்கு தெரியாது.
புளியை தண்ணியில ஊறப்போடுங்க. ஊறின தண்ணியோட கொஞ்சம் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து கரைச்சி குடியுங்க. வயித்துக்கடுப்பு, சொட்டு மூத்திரம்னு அது தொடர்பான எல்லா கோளாறுகளும் சரியாயிரும். சூடும் தணியும். அந்த காலத்துல சனிக்கிழமையானா எண்ணெய் தேய்ச்சி குளிப்பாங்க. இப்போ அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குன்னு சொல்லி சமாளிக்கிறாங்க. உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரை குளிரக்குளிர நல்லெண்ணெய் தேய்ச்சிட்டு ஒரு மணி நேரம் கழிச்சி குளிச்சி பாருங்க, அப்பிடியே சொர்க்க லோகம் தெரியும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Saturday, 22 Mar 2014, 10:32 AM | Message # 250 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| தர்பூசணி
தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் ‘அர்ஜனைன்’ (Arginine)என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது.
இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது.
தர்ப்பூசணியில், ‘ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்-பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது.
தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும்.
இதில், மகிழ்ச்சிக்கான ‘டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
endrum anbudan
vijiram
|
|
| |