தெரிந்த புராணம் தெரியாத கதை
|
|
Pattu | Date: Thursday, 13 Feb 2014, 6:38 PM | Message # 31 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| தட்சன் செய்த வேள்வி!
“பக்திக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய அம்சம் வைராக்கியம். அப்படிப்பட்ட வைராக்கியம் இல்லாததால்தான், தட்சன் பல பாவங்களுக்கு துணை போனான்.
தனது கடும் தவத்தால், வரங்கள் பெற்று ஆணவத்தோடு வாழ்ந்தான் தட்சன். இதைப் பார்த்த வியாழ பகவான், அவனுடைய செருக்கு அடங்க வேண்டும் என நினைத்து, வேதவல்லி (மறைக்கொடி) என்னும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்.
அவர்களுடைய வாழ்க்கை நன்றாக அமைந்தது. 1000 குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தன. ஆனாலும் தட்சனின் திமிர் அடங்கவில்லை. அவன், படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு சவாலாக அமைந்தான்.
தன்னுடைய பிள்ளைகளை அழைத்து, “படைக்கும் தொழிலை இனி நீங்கள் தான் பார்க்கவேண்டும், சிறிது காலம் பிரம்மாவுக்கு ஓய்வு வேண்டும்.
நீங்கள் உங்களுடைய கடும் தவத்தால் பிரம்மாவிடம் இருந்து இவ்வரத்தை பெறலாம்” என்றான்.
அவர்களும் தந்தை சொன்னதுபோல், தவத்தை ஆரம்பித்தனர். இதைப்பார்த்த நாரதருக்கு பயம் வந்துவிட்டது. அவர்களின் தவத்தை திசைதிருப்ப எண்ணினார்.
“நீங்கள் கடவுளை சேரும் நிலைக்கான தவத்தை செய்யுங்கள். படைத்தல் என்பது பிரம்மரின் தொழில். உங்கள் தந்தை சொன்னதைக் கேட்டு பாவங்களை சேர்க்காதீர்கள்” என்று அறிவுறுத்தினார். அதன்படியே தவம் செய்து, அவர்கள் கடவுளை சேர்ந்தனர்.
இதைக் கேள்விப்பட்ட தட்சன், “உனக்கு, எந்த உலகிலும் நிலையான இடம் இல்லாமல், அங்கும் இங்குமாய் திரிவாய்” என்று நாரதருக்குச் சாபமிட்டான். அதனால்தான் நாரதர் ஒரு இடத்தில் தங்காமல் திரிந்துகொண்டு இருக்கிறார்.
தட்சனுக்கு மீண்டும் 23 பெண்கள் பிறக்கிறார்கள். அதில் 13 பெண்களை தர்மத்துக்கு திருமணம் செய்து வைக்கிறான். மற்ற 10 பெண்களை, 10 முனிவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
அதன்பிறகு, 27 நட்சத்திர தேவதைகள் பிறக்கிறார்கள். இந்த 27 நட்சத்திர தேவதைகளை சந்திரனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
இந்தத் திருமணத்தில்தான் தட்சனின் ஆணவம் இன்னும் அதிகமாகிறது. சந்திரனுக்கு ரோஹினி, கார்த்திகை தேவதைகள் மீதுதான் அதிகம் காதல். அவர்களுடன் மட்டுமே இருப்பார்.
இது தெரிந்து மற்ற 25 பெண்களும் தட்சனிடத்தில் முறையிட்டார்கள். இது தெரிந்த தட்சன் மிகவும் கோபப்பட்டு, சந்திரனுக்கு “உன் அழகு அழியட்டும், நீ மறைந்து போவாய்” என சாபமிட்டான். சந்திரன், பிரம்மாவிடம் சென்று, தட்சன் சாபத்தைப் பற்றி கூறினார். பிரம்மா அவரை, சிவனிடம் சென்று வேண்டுமாறு அனுப்பி வைத்தார்.
சந்திரன் கயிலைக்குச் சென்று, சிவனைப் பார்த்து, தட்சன் சாபத்தைப் பற்றி விளக்கினார். சிவன் அதை கேட்டு, “உன் அழகு மீண்டும் கிடைக்கும். ஆனால், ஒருநாள் நீ உலகுக்கு தோன்றாமல், ஓய்வில் இருப்பாய். தேய்ந்து மீண்டும் 15 நாட்கள் கழித்து, முழு நிலவாய் வளர்வாய்,” எனக் கூறி சந்திரனை அனுப்பி வைத்தார்.
இதனால் தட்சன், சிவனிடம் சண்டையிடுகிறான். அச்சூழலில், சிவன் உமா தேவிக்கு வேதசாரத்தைப் பற்றி கூறுகிறார். “சக்தி என்பவள் வடிவம்; சிவம் என்பது ஜீவன்” என்கிறார் சிவன்.
உமா தேவி, “வடிவம் இல்லை என்றால், ஜீவன் எப்படி வரும்?” என்று சிவனை கேட்கும் போது, சிவன் “இதைப்பற்றி நீ தெரிந்து கொள்ள, பூமிக்கு போக வேண்டும்” என்றார். அம்பிகையும் சம்மதம் தெரிவித்து, பூமிக்கு அவதாரம் எடுக்கிறாள்.
காளிந்தி நதிக்கரையில் (இன்றைய யமுனை நதி), அழகான சங்கு நிறத்தில் ஒரு சிறு குழந்தையாக அவள் பிறந்தாள். தட்சனுக்கு அந்தக் குழந்தையை பார்த்ததும் அவ்வளவு ஆசை வந்துவிட்டது.
தட்சன்-வேதவல்லி, அந்தக் குழந்தையை வளர்த்தனர். தட்சனின் குழந்தை என்பதால், அந்த குழந்தைக்கு ‘தாட்சாயணி’ என பெயரிட்டனர்.
வேதவல்லிக்கு எல்லாக் குழந்தைகளைவிட, தாட்சாயணி மீது அதிக பாசம். அவளை மிகுந்த பாசத்துடன் வளர்த்தாள்.
சிவன் ஏழை பிரம்மாச்சாரி வேடமிட்டு, தாட்சாயணியை மணக்க பூமிக்கு வந்தார். அவருக்கு தன் மகளை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை செய்தான் தட்சன். ஆனால், சிவன் முகூர்த்த நேரத்தில் மறைந்துவிட்டார். இதனால் தட்சன் பெரிதும் சினம் கொண்டு, சிவனை கடுஞ்சொற்களால் பேசினான்.
மேலும், படைகளை போருக்காக ஏற்பாடு செய்தான். அத்தருணத்தில் சிவன், தாட்சாயணியை தூக்கிக்கொண்டு கயிலை சென்றுவிட்டார். படைகளை கூட்டிக்கொண்டு, கயிலைக்குப் புறப்பட்டான் தட்சன். அங்கு நந்தி அவனைப் போகவிடாமல் தடுத்தார்.
இது தட்சனின் சினத்தை தணிக்காமல், இன்னும் கடுமையாக்கியது. அவன் அங்கிருந்து புறப்பட்டு, ‘சிவன் இனி என் தெய்வம் இல்லை. அவரை யாரும் எக்காரணத்துக்கும் வணங்குதல் கூடாது’ என்றெல்லாம் உத்தரவு போட்டான். மேலும், சிவகணங்களையும் எதிரியாகவே கருதினான்.
‘தட்சனின் ஆணவம், அவனுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்; மீண்டும் மீண்டும் பிறக்கின்ற சூழ்நிலையையும் ஏற்படுத்திவிடும்’ என்று வருந்தினாள் உமாதேவி. எனவே, தட்சனின் ஆணவத்தை அடக்கி, மோட்சத்தை கொடுக்கும்படி, சிவனிடம் கேட்கிறாள். சிவன் பார்வதியை, பூலோகத்தில் தட்சன் நடத்தும் யாகத்தில் பங்கெடுத்து வரும்படி அனுப்பி வைக்கிறார்.
தட்சன் யாகத்தில் அனைவரும் இருக்கலாயினர், சிவனை தவிர. பார்வதி இதைப் பார்த்து சினம் கொண்டு, தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கிறார். தட்சன் பார்வதியை அவமானப்படுத்துகிறான். அதனால், பார்வதி அவமானம் தாங்காமல், தன் சரீரத்தை யோகத்தால் துறக்கிறாள். அதை அறிந்த சிவன் பெருங்கோபம் அடைகிறார்.
வீரபத்ரரை தட்சனுடன் போர் புரிய அனுப்பி வைக்கிறார் சிவன். வீரபத்ரர் தட்சனின் தலையை வெட்டி கயிலைக்குத் திரும்புகிறார். தட்சனின் உடம்பு சிவனை தேடிச் சென்று, பாதங்களில் விழுந்து மன்னிப்பும், மோட்சமும் கேட்கிறது.
சிவபூதங்கள் தட்சன் தலையை விழுங்கியதால், சிவன் ஆட்டின் தலையை வெட்டி தட்சனுக்கு வைக்கிறார். தட்சனுக்கு மோட்சம் கிடைக்கிறது.
தவம் சிறந்தது; வரம் சிறந்தது; ஞானம் சிறந்தது; பக்தி சிறந்தது; வேள்வி சிறந்தது... என்று சிறந்த அனைத்தும் ஒன்று சேர்ந்திருந்தது தட்சனிடம். ஆனால், அறவே இருக்கக்கூடாத ஆணவம் - திமிர் அதுவும் அதிகமாகவே சேர்ந்திருந்தது. அது அழிவைத் தரும் என்பதைத்தான் தட்ச வேள்வி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
Added (13 Feb 2014, 6:38 PM) ---------------------------------------------
பத்மநாப ஸ்வாமி வந்த கதை!
வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக வந்து அந்த சந்நியாசிக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கட்டிப் பிடித்து விளையாடுவதும், பூஜை சாமான்களைக் கலைத்தபடியும் கஷ்டங்களைக் கொடுத்தார்.
ஒரு நாள்... கண்ணனின் தொந்தரவுகளைத் தாங்க முடியாத சந்நியாசி கோபத்தில், ''உண்ணீ (சின்னக் கண்ணா)... தொந்தரவு செய்யாதே'' என்று கூறி அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டார். கோபமுற்ற கண்ணன் சுயரூபத்தில் அவர் முன் தோன்றி, ''பக்திக்கும் துறவுக்கும் பொறுமை தேவை.
உன்னிடம் அது இருக்கிறதா என்று சோதிக்கவே இவ்வாறெல்லாம் நடந்து கொண்டேன். இனி, நீ என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டுக்குத்தான் வர வேண்டும்'' என்று கூறி விட்டு மறைந்தார்.
தனது தவறை உணர்ந்த சந்நி யாசி, அனந்தன் காடு எங்கே இருக்கிறது என்பது தெரியாமல், கவலையுடன் புறப்பட்டார்.
பல நாட்கள் அலைந்து திரிந்தும் அவரால் அந்தக் காட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள், வெயிலில் நடந்து வந்த தளர்ச்சியுடன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். அருகில் இருந்த குடிசை வீட்டில் தம்பதியிடையே ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.
அதன் முடிவில் கணவன், ''நீ இப்படி அடிக்கடி என்னிடம் சண்டை போட்டால் உன்னை அனந்தன் காட்டில் விட்டு விடுவேன்'' என்றான் மனைவியிடம். இதைக் கேட்ட சந்நியாசி ஆவலுடன் அந்த வீட்டுக்குச் சென்று அவர்களை சமாதானம் செய்ததுடன், அனந்தன் காட்டைப் பற்றி விசாரித்தார்.
அந்தக் கணவனும் காட்டைக் காட்டினான். கற்களும் முட்புதர்களும் அதிகம் இருந்தன. எனினும், பகவானைக் காணும் ஆவலில் இடர்களைக் கடந்து முன்னேறினார் சந்நியாசி. கடைசியில் பகவானைக் கண்டார். தனக்கு ஏற்கெனவே காட்சி தந்த உண்ணிக் கண்ணனாக பகவான் இப்போது காட்சி தரவில்லை!
ஓர் இலுப்ப மரத்தின் அடியில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அனந்தன் என்ற பாம்பின் மீது பரந்தாமன் பள்ளி கொண் டிருப்பதைக் கண்ட சந்நியாசி, மகிழ்வுடன் அவரை வணங்கினார்.
தனக்குப் பசியெடுப்பதாகக் கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் சிறிது உப்பு சேர்த்து சமர்ப்பித்தார் சந்நியாசி. பிறகு, திருவிதாங்கூர் மன்னருக்குத் தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள அந்தணர் களை அழைத்துக் கொண்டு அனந்தன் காட்டுக்குப் புறப்பட்டார்.
ஆனால், அங்கே ஸ்வாமி இல்லை. எனினும், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்தார் திருவிதாங்கூர் மன்னர்.கோயிலுக்குள், அனந்தன் பாம்பு மீது பள்ளிகொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 'பத்மநாப ஸ்வாமி' எனும் திருநாமம் சூட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இலுப்ப மரத்தில் செய்யப்பட்ட மூல விக்கிரகம் கி.பி. 1686-ல் தீப்பிடித்தது. அதன் பின்னர், கடு சர்க்கரை யோகம் என்னும் கலவை யால் பன்னிரண்டாயிரம் சாளக்கிராமக் கற்களை இணைத்து புதிய சிலை உருவாக்கப்பட்டது.இது ஓர் அபூர்வ சிலையாகும்.
18 அடி நீளமுடையவராகக் காட்சி தரும் ஸ்ரீஅனந்த பத்ம நாப ஸ்வாமியின் திருமேனி முழுவதும் தங்கத் தகடு வேயப் பட்டிருக்கிறது. இந்தச் சிலையை திருவனந்த புரத்தில் இப்போதும் தரிசிக்கலாம்!
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Friday, 14 Feb 2014, 4:36 PM | Message # 32 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| பாதுகா பட்டாபிஷேகம்!
மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தெய்வமே மனிதராக வந்து வாழ்ந்தும் காட்டியது. தர்மம் இருந்தால்தான் உலகம் காப்பாற்றப்படும். ராமர் வேறு, தர்மம் வேறு அல்ல. சரணாகதி தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது ராமாயணம்தான்.
பகவானுடைய கல்யாண குணங்களை முதலில் பேசிய காவியம், ராமாயணம்தான். இவ்வளவு அற்புதங்களை உள்ளடக்கிய ஆதி காவியமான ராமாயணத்தில், மிக உயர்ந்த பாத்திரம், பரதர்.
ஒரு விஷ்ணு பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக விளங்கியவர் பரதர். தவறே செய்யாமல், அனைவரிடமும் வேண்டாத பேச்சுக்களை வாங்கிக் கொண்டவர் அவர்.
ராமருக்கு பட்டாபிஷேகம் நின்று போய்விட்டது என்பதைக் கூட அறியாமல் பரதர் வரும் பொழுது, அவரைப் பார்த்து வசிஷ்டர், ‘ராஜ்யம் உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது. பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்’என்றார்.
‘எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இந்தச் செய்தி எனக்குத் தெரியவே தெரியாதே’ என்றார் பரதர். உடனே கௌசல்யை, ‘உனக்குத் தெரியாது என்பதை என்னை நம்பச் சொல்கிறாயா?’ என கடுமையாகச் சொல்கிறாள்.
எல்லோரும் இப்படி சந்தேகப்பட காரணமாக இருந்தது மூன்றே மூன்று வார்த்தைகள் தான். மானம், அபிமானம், பஹுமானம். ராம பக்திதான் மற்றவர்கள் அனைவரையுமே பரதர் மேல் சந்தேகப்பட வைத்தது.
ராமரை தன்னோடு எப்படியாவது திரும்ப அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு பரதர் ராமரைத் தேடிக்கொண்டு காட்டிற்குள் வருகிறார். அவரது வருகையைப் பார்த்து முதலில் அவரைச் சந்தேகப்பட்டு அவரது மனம் புண்படும்படி பேசிய குகனிடம், ‘எம்பெருமானுக்கு வேண்டியவனாக இருக்கும் நீ, என்னைச் சந்தேகப்படக் கூடாது.
ராமருக்குத் தோழனாக இருக்கும் உனக்கே இவ்வளவு உணர்வுகள் இருக்கும் பொழுது, எனது தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவர் ராமர். அவரை திரும்ப அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான் வந்திருக்கிறேன்’ என்றார் பரதர். அடுத்து அவர் பரத்வாஜ ஆசிரமத்துக்குச் செல்ல, அங்கே பரத்வாஜரும் அவரைச் சந்தேகப்பட்டு, ‘ஏன்டாப்பா, எதுக்கு வந்திருக்கே? உனக்குதான் ராஜ்யம் கிடைச்சு போச்சே.
நீ நல்லவனா இருக்கலாம். ஆனால், உன் வருகையைப் பார்த்து என் மனம் நிலை கொள்ளவில்லையே‘ என்கிறார். அதற்கு ‘எனக்கு துளி கூட சம்பந்தமே இல்லை. எங்கம்மா என்னிடம் கேட்காமலேயே இதெல்லாம் பண்ணிட்டா. ராமரை, திரும்பவும் அழைத்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன்’ என்றார் சாந்தமாக.
அடுத்து லட்சுமணர், பரதர் வருவதைப் பார்த்துவிடுகிறார். சுர்ருன்னு கோபப்படும் லட்சுமணர் ராமரிடம், ‘இந்த ராஜ்யம் தனக்கே நிரந்தரமாய் இருக்கணும்னு கேட்கத்தான் பரதர் இங்கே வந்திருக்கிறார். நம்மைக் கொல்லணும்னுதான் அவர் வந்திருக்கிறார். நீங்கள் எனக்கு உத்தரவு கொடுங்கள்.
இதோ நான் பரதனைக் கொன்றுவிட்டு வருகிறேன்’ எனக் கொந்தளிக்கிறார். லட்சுமணரைப் பார்த்து ராமர், ‘பரதன் யார் தெரியுமா? தமையன் என்கிற வார்த்தையைக் கேட்டாலே பாசம் பொழிபவன் அவன். அவன் வேறு, நான் வேறு என்று கிடையாது. என்னிடத்தில் இருக்கும் பாசத்தால் ஈர்க்கப்பட்டு, ராஜ்யமே வேண்டாம் என்று உதறிவிட்டு வந்திருக்கிறான். எங்கேயாவது அப்பாவை மகன் கொல்லுவானா?’ எனக் கேட்கிறார்.
பரதர் ஏன் ராமரை சரணாகதி செய்தார் தெரியுமா? தன்னுடைய இயலாமையை எடுத்துச் சொல்லி, எம்பெருமானிடத்தில் நீயே சரண் என்று சொல்லி விடுவதுதான் சரணாகதி. ஒரு ஜீவனுக்கு மிகப்பெரிய தொல்லையாக இருப்பது, ‘தான் சுதந்திரன்’ என்று நினைத்துக் கொள்வது.
அப்படிப்பட்ட சுதந்திரனாக தான் ஆகிவிடக் கூடாது. ராமரின் கட்டளைப்படியேதான் தன் வாழ்க்கை என்பது நடக்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு சரணாகதி செய்தார் பரதர். அதற்கேற்ப பரதனின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு தமது பாதுகைகளைக் கொடுத்து அதற்கு பட்டாபிஷேகம் செய்ய வைத்தார் ராமர்.
‘பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும். ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்."
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Saturday, 15 Feb 2014, 6:08 PM | Message # 33 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| கைகேயி கொடியவளா?
தசரத சக்கரவர்த்தியின் மூன்று மனைவியரில் இளையவள் கைகேயி. அசுரன் சம்பாசுரனுக்கும் தசரதருக்கும் இடையில் போர் நடந்த தருணத்தில், தசரத மன்னரின் தேருக்குச் சாரதியாக இருந்து உதவினாள் கைகேயி.
தேரின் அச்சு முறிந்த நிலையில், தனது விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதனின் உயிரைக் காத்தாள். இதில் மகிழ்ந்த தசரதன், இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான்.
கணவனுக்குச் செய்த சேவை தனது கடமையே என்று உணர்ந்ததால், ‘வரங்கள் இப்போது வேண்டாம். பிறகு தேவைப்பட்டால் கேட்கிறேன்’ என்று கூறினாள்.
அத்தனை குணவதியான கைகேயி, பிறகு ஏன், தன் மகன் பரதனுக்கு அயோத்தியின் சக்கரவர்த்தியாக முடிசூட்ட வேண்டும்? ஸ்ரீராமன் எதற்காகக் கானகம் செல்ல வேண்டும் என வரங்கள் கேட்டாள்.
ஒரு முறை, வேட்டைக்குச் சென்ற தசரதர், சிறுவன் சிரவணகுமாரனை யானையென்று தவறுதலாக நினைத்து அம்பெய்திக் கொன்றார். சிரவணனது பெற்றோர், "எங்களைப் போலவே புத்திரனைப் பிரிந்து, அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய்" எனச் சாபமிட்டு உயிர் துறந்தனர்.
இதைகைகேயி, இதன் உண்மைகளை ஆராய்ந்து அறிய விரும்பி, ஆஸ்தான ஜோதிடர்களிடம் தசரதர் மற்றும் நான்கு பிள்ளைகளின் ஜாதகங்களைக் கொடுத்து விளக்கம் கேட்டாள்.
"அப்போதைய கிரக அமைப்பின்படி, அயோத்தி சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும்… அவர், சில நாட்களில் மரணிக்க நேரும்.
புத்திரனைப்பிரிந்து என்று சொல்லிச் சாபம் இட்டதால், புத்திரன் தந்தையை விட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டால், மகன் உயிர் பிழைப்பான். தந்தை மட்டுமே உயிர் துறக்க நேரும்" என்று விளக்கம் அளித்தனர்.
மனைவியின் கடமையைவிட, தாய்மையின் அன்பே தலை தூக்கி நிற்க, யோசித்த கைகேயி, ” என் மகன் பரதன் அயோத்திக்கு மன்னனாக வேண்டும், ஸ்ரீராமன் தசரதரைப் பிரிந்து வனவாசம் செல்ல வேண்டும்” என வரங்களைக் கேட்டாள்.
தசரதரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும், ஸ்ரீராமர் நலமுடன் இருந்து, அவரது அவதார நோக்கமும் நிறைவேற வேண்டும் என்பதற்காக, தான் பெற்ற மகனான பரதனது உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை எனத் துணிந்து தியாகம் செய்தாள் அன்னை கைகேயி!
கைகேயியை ஊரும் உலகமும் நிந்தித்தது. பெற்ற மகன் பரதனே தாயின் தியாகம் தெரியாது அவளை வெறுத்தான். இருந்தும், ஸ்ரீராமருக்கும் ஆரண்ய முனிவர்களுக்கும் தேவர்களுக்கும், அன்புத் தாய் கைகேயி செய்த தியாகம் தெரியும்.
இப்போது சிந்தியுங்கள்… கைகேயி கொடியவளா?
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Nathasaa | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 34 |
 Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| Hi latha kaa thnx for the stories
|
|
| |
Pattu | Date: Monday, 17 Feb 2014, 5:03 PM | Message # 35 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| கடமையை வலியுறுத்திய பரசுராமர்!
அறங்காவலராக இருக்க வேண்டிய அரசர்களே அதர்மத்தில் திளைத்த வேளையில்தான்... பரசுராம அவதாரம் நிகழ்ந்தது. துஷ்ட க்ஷத்திரியர்களை வேருடன் அழித்து அறத்தை நிலைநாட்டினார் பரசுராமன்.
மற்ற அவதாரங்களை விட பரசுராம அவதாரத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. ரக்ஷகர்கள், பக்ஷகராக மாறியதைத் திருத்துவதற்காக ஏற்பட்ட இந்த அவதாரம், உலக சுகங்களில் ஈடுபடவில்லை;
லீலா வினோதங்களில் ஈடுபட்டுதனது பெருமையை வெளிப்படுத்தவில்லை. சாதாரண குடிமகனாகத் தோன்றி அறம் காத்த அவதாரம் இது.
மற்ற அவதாரங்கள் கடமை முடிந்ததும் மறைந்து விடும். ஆனால், சிரஞ்ஜீவியாக என்றென்றும் நிலைத்திருக்கும் அற்புத அவதாரம் ஸ்ரீபரசுராமன். இவரை ராமாவதாரத்திலும் தரிசிக்கலாம்;
ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலும் தரிசிக்கலாம். ஸ்ரீராமனுக்கு வைஷ்ணவ தனுசை அளித்தருளினார்ஸ்ரீபரசுராமன். அறம் தவறிய அரசனான ராவணனை அழிக்க ஸ்ரீராமனுக்கு உதவி புரிந்தார்.
ஸ்ரீராமன் அறத்தை நடைமுறைப்படுத்திக் காட்டினார்; ஸ்ரீகிருஷ்ணன் தத்துவ விளக்கம் தந்தான். அதேநேரம்... அறத்தின் இயக்கத்தை இடையூறு இன்றி பாதுகாக்கவும் வேண்டுமே?
அப்போதுதானே அறம் தழைத்திருக்க முடியும்.அதைத்தான் செய்தார் ஸ்ரீபரசுராமன். அறத்தைப் பாதுகாக்கத் தவறிய க்ஷத்திரியர்களை தண்டித்தார் அவர்.
மற்ற அவதாரங்களுக்கு கிடைத்தஅங்கீகாரம் இவருக்கு இல்லையே என்பதுகூட குறை அல்ல; நிறைதான். நிறைபொருள் அங்கீகாரத்தை எதிர்பார்க்காது.
பகவானின் அவதாரங்களில் 6-வதான ஸ்ரீபரசுராம அவதாரம்...எவரது தூண்டுதலும் இல்லாமல், கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தும் அவதாரம்!
ஜமதக்னி முனிவருக்கு புதல்வனாகத் தோன்றிய ஸ்ரீபரசு ராமனிடம், அந்தணருக்கு உரிய அமைதியும் க்ஷத்திரியர்களுக்கான ஆற்றலும் குடிகொண்டிருந்தன. எனவே, வெற்றி அவரைத் தேடி வந்தது.
ஹைஹய தேசத்து அரசன் கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்டவன். இவன், ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவை கவர்ந்து சென்றான்.
தெய்வப் பசுவை மீட்டு வருமாறுமகனுக்கு உத்தரவிட்டார் ஜமதக்னி. இதை ஏற்று, கார்த்தவீர்யார்ஜுனனை அழித்து பசுவை மீட்டு வந்தார் பரசுராமன்.
மற்றொருமுறை... ஸ்ரீபரசுராமனின் தாயார் ரேணுகை நீர் எடுத்துவரச் சென்றாள். அங்கே, சித்திநாதன் என்பவன் மனைவியருடன் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு மெய் மறந்தாள்.
மனைவிநீர் எடுத்து வர காலதாமதமாவது கண்ட ஜமதக்னி முனிவர், அவள் மனம் தடுமாறி நிற்பதை அறிந்தார். அவளை அழிக்கும்படி மகனுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, தாயை வதம் செய்தார்பரசுராமன். இதனால் மகிழ்ந்த முனிவர், 'என்ன வரம் வேண்டும் கேள்?' என்றார். உடனே, 'அன்னையை உயிர்ப்பியுங்கள்' என்று வரம் கேட்டு தாயைக் காப்பாற்றினார்.
இந்த நிலையில், கார்த்த வீர்யார்ஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப் புறப்பட்ட அவனின் புதல்வர்கள், ஜமதக்னி முனிவரை கொன்றனர்.
இதனால் கோபம் கொண்டபரசுராமன், அறம் தவறிய க்ஷத்திரியர்களைக் கொன்று குவித்தார். பிறகு தனது பாவங்கள் தீர, தீர்த்தாடனம் சென்று தவத்தில் ஆழ்ந்தார் என்கின்றன புராணங்கள்.
தந்தையின் சொல்லுக்கு அர்த்தம் உண்டு; அதை விமர்சிக்கக்கூடாது என்பதை நடைமுறைப் படுத்தினார் பரசுராமன். மனத் தூய்மை இழந்த ரேணுகையை தூய்மையாக்கும்படி கட்டளையிட்டார் ஜமதக்னி.
அதன்படியே செய்தார் பரசுராமன். இதன் பலனால் பரசுராமன்பெற்ற வரம், அவரின் அன்னையை தூய்மை யானவளாக உயிர்ப்பித்தது!
ஆம்... வாழ்க்கையின் குறிக்கோளும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் தெரிந்துவிட்டால் வெற்றி நிச்சயம். இளமையிலேயே இவற்றை அடையாளம் கண்டு மனதில் இருத்துவது சுலபம்.
இதற்கு உறுதுணையாக இருக்கும்இதிகாசங்களையும் புராணங்களையும் உறுதியாகப் பற்றிக் கொண்டால் நீங்களும் ஜெயிக்கலாம் ஸ்ரீபரசுராமனைப் போல!
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Nathasaa | Date: Monday, 17 Feb 2014, 11:25 PM | Message # 36 |
 Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| thnQ for the story latha kaa
|
|
| |
Pattu | Date: Tuesday, 18 Feb 2014, 5:08 PM | Message # 37 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| பூஜைக்கு எது அவசியம்.?
மகா பாரதத்தில் ஒரு கதை வரும். அர்ஜுனனுக்கு தான்தான் பெரிய சிவ பக்தன் என்ற கர்வம்.
ஒருநாள் அவன் கண்ணனுடன் கைலாயத்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தபோது சிவ கணங்கள் மலை மலையாய் பூக்களை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில கொட்டிக்கொண்டிருந்ததை கண்டான்.
அதைக் கண்ட அர்ஜுனன் யார் இவ்வளவு மலர்களை சிவபெருமானுக்கு அர்ச்சிக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டான்.
யாரோ பூலோகத்தில் பீமனாம் அவன் செய்யும் பூஜையில்தான் இவ்வளவு மலர்கள் குவிகின்றன ,
இன்னும் நிறைய குவிந்துள்ளதை அப்புறப்படுத்தவேண்டும் , உங்களிடம் பேசக்கூட நேரமில்லை நாங்கள் வருகிறோம். என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்றுவிட்டனர்.
அவனுக்கு தெரிந்து பீமன் என்றும் சிவ பூஜை செய்து பார்த்ததே கிடையாது.
வயிறு முட்டத் தின்றுவிட்டு உறங்குவதைத்தான் பார்த்திருக்கிறான். அர்ஜுனன்.
உடனே அவன் கண்ணனை இது எப்படி சாத்தியம் என்று கேட்டான்.
அது மிக எளிது.
பீமன் மனதினாலேயே இந்த அகிலத்தில் பூக்கும் அத்தனை மலர்களையும் சிவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான்.
அவை முழுவதும் சிவனின் திருவடிகளில் போய் விழுந்துவிடுகின்றன என்றான்
அத்துடன் அர்ஜுனன் கர்வம் அகன்றது.
இறைவனை பூஜிக்கும்போது அர்ப்பணிப்புத்தான் முக்கியமே அன்றி. கர்வம் கொள்ளுதல் கூடாது என்பதை உணர்ந்தான்..
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
lulu | Date: Tuesday, 18 Feb 2014, 9:07 PM | Message # 38 |
Private
Group: Users
Messages: 15
Status: Offline
| pattu ungal kathaigal arumai! bharathanin saranagathiyum, bheemanin unmaiyana bhakthiyum vazhvil eppadi irukka vendum endru nunukkamaga koorugindrana! nandri! lakshmi.
|
|
| |
Pattu | Date: Wednesday, 19 Feb 2014, 4:53 PM | Message # 39 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!
உதங்கர் ஒரு மகரிஷி. மாபெரும் ஞானி. பாரத யுத்தத்தின்போது குருக்ஷேத்திரத்தில் பகவான் கண்ணன் விஸ்வரூபம் எடுத்ததை அறிந்து, தான் அந்தக் காட்சியைக் காணக் கொடுத்துவைக்கவில்லையே என்று வருந்தினார்.
அதையறிந்த கண்ணபிரான் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தந்தருள, ஆனந்த பரவசத்தில் மூழ்கினார் உதங்கர். 'வேறென்ன வேண்டும்?'' என்று உதங்கரிடம் கேட்டார் கண்ணன்.
'இதைவிட வேறென்ன வேண்டும்?'' என்று மெய்சிலிர்த்தார் உதங்கர். எனினும், கண்ணன் மீண்டும் வற்புறுத்தவே, 'எனக்கு எப்போது தாகம் எடுத்தாலும், நான் வேண்டும்போது தண்ணீர் கிடைக்க வேண்டும்'' என்றார். இந்த எளிய வரத்தை உடனடியாக வழங்கினார் கண்ணன்.
நாட்கள் கடந்தன. ஒருநாள், பரந்த மணல்வெளிப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தார் உதங்கர். அப்போது அவருக்குக் கடும் தாகம் எடுத்தது. 'கண்ணா, தாகம்’ என்று கண்களை மூடித் துதித்தார்.
அடுத்த நிமிடமே அவர் எதிரில் ஒரு புலையர் வந்தார். பார்க்கவே அருவருப்பாக இருந்தது அவரது தோற்றம். அவர் கையில் ஒரு குவளை இருந்தது. 'தண்ணீர் அருந்துகிறீர்களா?'' என்று கேட்டார்.
உதங்கருக்கு அவரைப் பார்க்கப் பார்க்க வெறுப்பு அதிகரித்தது. 'வேண்டாம்’ என்று மறுத்துவிட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்தார். பின்பு, 'கண்ணா, இது என்ன அநியாயம்!'' என்று குமுறினார் உதங்கர்.
கண்ணன் உடனே அங்கு காட்சி தந்து, ''எதை அநியாயம் என்கிறாய்?'' என்று கேட்டார். 'வரம் வழங்கிவிட்டு, அதைப் பயன்படுத்த முடியாதபடி செய்யலாமா?'' என்றார் உதங்கர்.
'தாகம் எடுக்கும்போது தண்ணீர் வேண்டும் என்றீர்கள். அதற்கு ஏற்பாடு செய்தேன். நீங்கள்தானே அந்தத் தண்ணீரை மறுத்தீர்கள்?'' என்றார் கண்ணன்.
'சாமர்த்தியமாகப் பேசுவதாக எண்ணவேண்டாம், கண்ணா! அந்தத் தண்ணீரை ஒரு தீண்டத்தகாதவன் கையிலா கொடுத்து அனுப்பது? தண்ணீர் கொடுத்தனுப்ப உனக்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா?'' என்று கோபப்பட்டார் உதங்கர்.
'அடடா, நீங்கள் இதையெல்லாம் தாண்டியவர், மேம்பட்டவர் என்று நினைத்தேனே! அது தவறாகி விட்டதே!'' என்றார். உதங்கர் மௌனம் சாதித்தார்.
'உதங்கரே, உங்கள்மீது இருந்த அபிமானம் காரணமாக, உங்களுக்குத் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீருக்குப் பதிலாக அமிர்தத்தையே வழங்கலாம் என முடிவு செய்தேன்.
இந்திரனை அழைத்து, உங்களுக்கு அமிர்தம் அளிக்கச் சொன்னேன். அவன் தயங்கினான். 'அமிர்தத்தைப் பெறக்கூடிய அளவுக்கு அவர் என்ன அத்தனை உயர்ந்தவரா?’ என்று கேட்டான்.
நீங்கள் மாபெரும் ஞானி என்று அவனிடம் உங்களுக்காகப் பரிந்துரைத்தேன். 'அப்படியானால் அதை நானே சோதித்துத் தெரிந்துகொள்கிறேன்’ என்றபடி புலையனின் உருவில் உங்களிடம் வந்தான்.
ஆனால், உருவத்தில் வேற்றுமை பாராட்டி, உயர்வு தாழ்வு எனப் பாகுபாடு பார்த்து, நீங்கள்தான் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்!'' என்றார் கண்ணன்.
உதங்கர் தலைகுனிந்தார்.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Nathasaa | Date: Wednesday, 19 Feb 2014, 8:35 PM | Message # 40 |
 Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| thnQ latha kaa
|
|
| |