Ram's தகவல் பெட்டகம் - Page 14 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
Ram's தகவல் பெட்டகம்
ramsDate: Sunday, 16 Feb 2014, 11:49 AM | Message # 131
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
பப்பாளி பற்றிய தகவல்களும் மருத்துவ குணங்களும்...!

ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம் -

யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம்:

கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள்:

சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

1.பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2.பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

3.பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

4.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

5.பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

6.பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

7.பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

8.பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

9.பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

10.பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

11.பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும.

12.பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 3:11 PM | Message # 132
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
பெண்களைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமலேயே பெரும் பாலான ஆண்கள் “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்’ என, அவர்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். ஆனால் பெண்கள் அப்ப டிப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் புறக்கணிக்கப்படுவதாலேயே வெறுப்படைகின்றனர். பெண்கள் உற்சாகமாக இருந்தா லே குடும்பம் உற்சாகமாக இருக்கும்.

• மனைவி என்பவள் வேலைக்காரி அல்ல, அதேபோல் சம்பாதி த்து கொடுக்கும் மிசினும் அல்ல. அவ ளும் உணர்வு பூர்வமானவள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சரிசமமாக நடத்த வேண்டும் என்பதையே ஒரு பெண் எதிர்பார்ப்பாள்.

• அம்மா போல யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனால் மனைவி யின் சமையலை ஆகா, ஓகோ என்று பாராட்டுங்கள். அவர்கள் உச்சிக்குளிர்ந்து போவார்கள்.

• விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

• எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக்கூடாது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

• மனைவி உடுத்தும் உடைகளைப் பார்த்து இந்த உடை உனக்கு நன்றாகஇருக்கிறது’ என பாராட்ட வேண்டும்.

• வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தினமும் ஒரு முறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

• நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்லவேண்டும். குழந்தைகளை அடிமை போல்நடத்தக் கூடாது. இதில் கண வர்களின் பங்கு முக்கியம்.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவர் நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.


endrum anbudan

vijiram


Message edited by rams - Sunday, 16 Feb 2014, 3:14 PM
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 4:34 PM | Message # 133
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
56 புராதன இந்திய தேசங்கள் 

இந்தியா என்பது எந்த காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை என்று கூறுவர். ஆனாலும் பழைய புராணக் கதைகளிலும் நூல்களிலும், ’56 தேசத்தைச் சேர்ந்த அரசர்கள்’ என்ற ஒரு சொல் விரவி வரும். அவ்வப்போது, பல (நூற்றுக்கணக்கான) சிறிய அரசாங்கங்களூம், சிற்றரசர்களும் ஆண்டு வந்திருந்தாலும், பெரிய ராஜ்ஜியங்கள் என்று 56 தேச அரசர்கள் என்று தான் அனைத்து கதைகளிலும் கூறப்பட்டிருக்கும்.


அந்த காலத்திலேயே இந்தியர்கள் பாரசீகம், சீனம், கடாரம், ரோமாபுரி, துருக்கி ஆகிய நாட்டுடன் (வாணிகத்) தொடர்புடன் இருந்து வந்துள்ளார்கள்.

ஆனாலும், அந்த கதைகளில் சொல்லும் 56 தேச அரசர்களில் இந்த துணைக்கண்டத்தைச் சேராதவர்கள் இருந்ததில்லை. அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை மட்டுமே சேர்ந்தவர்கள். தனித்தனி நாடாக இருந்தாலும் (தங்களுக்குள் சண்டையிட்டு வந்திருந்தாலும்) அவர்கள் கலாசார அடிப்படையில், ஒரே நாடாக இல்லாவிட்டலும், ஒரே சமூகமாகவே இருந்து வந்துள்ளனர்.

நம் புராண இதிகாசங்களிலும் (ராமாயணம், மஹாபாரதம்), பழைய கதைகளிலிருந்தும் (விக்ரமாதித்யன் கதைகள், மதன காமராசன் கதைகள் போன்றவை) அந்த 56 புராதன இந்திய தேசங்களைத் தொகுத்துள்ளேன். (தவறுகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக் காட்டவும்)
எண்பழய பெயர்தற்போதய பெயர் (அ) இடம்1.காம்போஜம் (Kamboja)ஹிந்து குஷ் பகுதி2.தராடம் (Darada)வட காஷ்மீரம் – கில்கிட் பகுதி (POK)3.காந்தாரம் (Gandhara)காந்தஹார் (ஆஃப்கானிஸ்தானம்)4.காச்மீரம்காஷ்மீர்5.பஹாலிகா (Bahlika)மேற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்)6.மத்ர (Madra) தேசம்பஞ்சாப் (குறிப்பாக சியால்கோட் (பாக்) பகுதி)7.த்ரிகர்தம் (Trikada)ஹிமாசல பிரதேசம் (குறிப்பாக காங்டா பகுதி)8.கேகயம்கிழக்கு பலூசிஸ்தான் (பாக்)9.ஸிந்து தேசம்சிந்து பகுதி (பாகிஸ்தான்)10.ஸௌவீர தேசம்முல்தான், மிதான்கோட் கராச்சி(!!!)11.நிஷாதம்ஆரவல்லி மலைப் பகுதி (ராஜஸ்தான்)12.மாளவ தேசம்மால்வா பகுதி [தென்கிழக்கு ராஜஸ்தானும் மேற்கு மத்திய பிரதேசமும் இணையும் பகுதி]13.அவந்திஉஜ்ஜயினி பகுதி (மத்திய பிரதேசம் மால்வாவிற்கு அருகில்)14.ஸௌராஷ்ட்ரம்தென் குஜராத்15.கூர்ஜா தேசம்வட குஜராத், தெற்கு ராஜஸ்தான்


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 4:35 PM | Message # 134
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
16.அம்வதசம்கோதாவரி நதிக்கரை பகுதி17.ஹேஹய (ஹேயய) தேசம்நர்மதா பள்ளத்தாக்கு18.அனுப தேசம்நர்மதை தபதிக்கு இடைபட்ட பகுதி19.கருஷ தேசம்குவாலியர் பகுதி20.சேடி (Chedi) தேசம்புந்தேல் கண்ட்21.ஆபீர (யாதவ) தேசம்ஆக்ரா பகுதி22.சூரசேனம்மதுரா புகுதி (உத்திர பிரதேசம்)23.மத்ஸ்ய தேசம்ஜெய்பூர் (ராஜஸ்தான்)24.ஸால்வ தேசம்ஹரியானா25.குரு தேசம்தில்லி + பச்சிம் ப்ரதேஷ்(மேற்கு உத்திர பிரதேசம்)26.பாஞ்சாலம்ஆவாத் ப்ரதேசம் (மத்திய உத்திர பிரதேசம்)27.வத்ஸ தேசம்அலஹாபாத் பகுதி28.கோசலம்பூர்வாஞ்சல் (கிழக்கு உத்திர பிரதேசம்)29.விதேஹம்பீஹார் நேபாள எல்லை மாவட்டங்கள்30.மகதம்பிஹார் - குறிப்பாக பாட்னா (பாடலிபுத்திரம்) அதைச் சுற்றிய பகுதி31.அங்க தேசம்தென் கிழக்கு பிஹார் (முங்கேர் மாவட்டம்)32.காசி தேசம்காசி33.வங்கம்வங்காளம்34.நேபாளம்நேபாளம்35.கிம்பூருஷம்திபெத் எல்லை பகுதி36.பார்வத தேசம்பூடான்37.புலந்த தேசம்மேற்கு உத்ராஞ்சல்38.காமரூபம் / ப்ராக்ஜோதிஷபுரம்அஸ்ஸாம்39.புண்டர தேசம்பிரம்மபுத்திரா நதிக்கரை (அருணாசல பிரதேசம்!!)40.ஸுஹ்ம (ஸிம்ம!!) தேசம்பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கு இந்தியா41.கலிங்கம்கரையோர ஒதிஸா42.உத்கலம்மேற்கு ஒதிசா43.விதர்பம்நாக்பூர்44.அஸ்மகம்விந்திய பிரதேசம் (தெற்கு மத்தியபிரதேசம்)45.தண்டகம்ஔரங்காபாத், நாசிக் பகுதி46.மராட்டியம்மேற்கு மஹாராஷ்ட்ரா47.சாளுக்ய தேசம் (கர்நாடகம்)வடகர்நாடகம்48.கிஷ்கிந்தாதென் கர்நாடகம்49.கொங்கணம்கோவா50.ஆந்த்ரம்(தெலுங்கானா நீங்கிய கரையோர) ஆந்திரம்51.யவன தேசம்தெலுங்கானா52.த்ராவிட தேசம்ராயல் சீமா + வட தமிழகம்
(திருவேங்கடம், - பாலாறு பகுதி)53.சோழ தேசம்மத்திய தமிழ் நாடு54.பாண்டிய தேசம்தென் தமிழ் நாடு55.கேரளம் /
சேர தேசம்கேரளம்56.ஸிம்ம (அ) ஸிங்கள தேசம்இலங்கை

மேற்கூறிய அரசாங்கங்களில் சில நேரங்களில் மாற்றமும் இருந்துள்ளது. சமயங்களில், சில ராஜ்ஜியங்கள் சேர்ந்து ஒரே பெயரிலும், வேறு சில பிரிந்து வேறு பெயர்களிலும் வழங்கப் பட்டுள்ளன. உதாரணமாகக் கூறுவதென்றால், கிஷ்கிந்தை தனி நாடாக வழங்கப் படாமல் சாளுக்கிய ராஜ்ஜியத்தின் பகுதியாக இருந்துள்ளது. ஆபீர தேசம் (யாதவர் நாடு) முதலில் ஆக்ரா பகுதியில் இருந்தாலும் பின்னர் (கிருஷ்ணர் காளத்தில்) த்வாரகைக்கு மாறியது. சில நேரங்களில் அது குந்திநாடு என்றும் வழங்கப் பட்டுள்ளது. (குந்தி தேசமும் ஆபீர தேசமும் வேறு என்ற கருத்தும் உண்டு). த்ராவிட தேசம் பின்னர் பல்லவப் பேரரசாக மாறியது. அதே போல் கோசல தேசம் வட கோசலம் (தசரதரால் ஆளப்பட்டது), ஆனால் தென் கோசலம் (தற்போதைய சதீஸ்கர் பகுதி) என தனி தேசமாக இருந்தது (ராமரின் தாயார் கௌசல்யா இந்த கோசலத்தையே சேர்ந்தவர்).


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 4:35 PM | Message # 135
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
1. காம்போஜம்


இந்திய வரலாறு மட்டுமன்றி மத்திய ஆசியா மற்றும் இந்தோனேசிய (குறிப்பாக கம்பூஜியா (தற்போது கம்போடியா) வரலாற்றிலும் காம்போஜம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

காம்போஜம் பற்றிய பல குறிப்புகள் இருந்தாலும் இது இந்தியாவில் இருந்ததா (அதாவது காம்போஜர்கள் இந்திய ஆரிய வம்சமா அல்லது இந்தோ-ஐரோப்பிய வம்சமா அல்லது இந்தோ-இரானிய வம்சமா) என்பது வரலாற்று ஆசிரியர்களிடையே பல ஆண்டுகளாக விவாதிக்கப் பட்டு வந்துள்ளது. 

காம்போஜர்களை இந்திய வம்சத்தினராகக் கருதுபவர்களிலும் காம்போஜம் எந்த பகுதியைச் சேர்ந்த்து என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு.தற்போது காம்போஜம் என்பது ஹிந்து குஷ் பகுதியிலுள்ள ஒரு பகுதி என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

இந்திய பாரம்பரியத்தில் மேருமலைக்கு ஒரு பெரிய இடம் உண்டு. மேருமலை உலகத்தின் மையமாக இருப்பதாகத் தொன்மம் கூறுகிறது. சில இடங்களில், இது இமயமலைக்கு வடக்கில் இருப்பதாகக் குறிப்பிடப்படுவதும் உண்டு. இந்த மேருமலையின் சிகரங்களில் முக்கியமானது கௌமோதகி (விஷ்ணுவின் ’கதை’க்கும் கௌமோதகி என்ற பெயர் உண்டு; ஒருவேளை, மலைபோல உறுதி வாய்ந்தது என்பதைக் குறிப்பதற்காகக் கூட அப்பெயர் சூட்டியிருக்கலாம் அல்லது நேர் மாறாக விஷ்ணுவின் கதையின் பெயரை மேருவின் சிகரத்திற்கு வைத்திருக்கலாம்!!!). 

கௌமோதகி, கௌமோதகியைச் சுற்றிய பகுதிக்கு கோமுத த்வீபம் என்ற பெயர் உண்டு. [ஆசியப் பகுதிக்கு ஜம்பூத்வீபம் என்று பெயர், அதில் மேருவின் தென் பகுதியில் இருப்பது பாரத வர்ஷம் (அ) பாரத நாடு]. கோமுத த்வீபம் – கோமேத் – கோம்தேஷ் – காம் தேஷ் – காம்போதேஷ் என்று திரிந்து காம்போஜமாக மாறியிருக்கக் கூடும் என்பது பொதுவான கருத்து.

கிரேக்க வரலாற்று அறிஞர் டால்மி (Ptolemy) மத்திய ஆசியாவின் கிழக்குப் பகுதியில் (அதாவது, இந்து குஷ் மலைப் பகுதியை கோம்தேய் என்று குறிப்பிடுகிறார். யுவாங் சுவாங்-கும் இப்பகுதியை கியூமிதோ என்றே குறிப்பிடுகிறார். அரேபியர்கள் இதை குமேத் (அ) குமாத் என்று அழைப்பர். கிரேக்கர்கள் கம்பைசாஸ் என்று அழைப்பர் (அஹமேனியன் (இலியாத்-இல் ட்ராய்களின் வில்லன்) வழித்தோன்றலிலும் ஒரு அரசனின் பெயர் கம்பேசாஸ் என்று தொடர்புபடுத்துகிறார்கள்)

பொதுவாக இந்த பகுதி வடமொழியில் காம் என்ற வேர் சொல்லினாலேயேக் குறிப்பிடப்படுகிறது. காம்பேலா என்ற (தற்கால) காபூல், கமாதோல், கம்மஷில்மான், கம்மாதக்கா போன்ற இதை ஒட்டியுள்ள இடங்களின் பெயர்கள் இந்த வேர் சொல்லிலிருந்தே எழுந்தவை. 

மார்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவி மாஹாத்ம்யமத்தில் இதைப் பற்றியக் குறிப்பு உள்ளது. தேவியுடன் சும்ப-நிசும்பர்கள் போரிட்டபோது, சும்பனுக்கு உதவியாக அசுர சேனையில் மற்ற சாமுண்டன் போன்ற மற்ற அசுர சேனையுடன் 74 கம்பாசுரர்கள் தங்கள் சேனையுடன் குதிரை ஏறிப் போரிட்டதாகக் குறிப்பிடப் படுகிறது.

இந்திய வேத/புராணக் குறிப்புகளில் மிகப் பழமையானதாகக் கூறப்படும் ரிக் வேதத்தில் காம்போஜம் பற்றிய குறிப்பு இல்லை. ஆனால், ரிக் வேதத்தில் மிக முக்கியமான ரிஷியாகக் கூறப்படுபவர் உபமன்யு என்பவர். அவருடைய வம்சத்தைச் சேர்ந்த (அ) அவருடைய சிஷ்யரான ‘காம்போஜ அவுபமன்யு’ என்பவர் சாம வேதத்தின் வம்ச ப்ரஹ்மானத்தில் குறிப்பிடப் படுகிறார். [பொதுவாக ரிக் - சாம வேதங்களில் பெரும்பாலான சூக்தங்களும், கர்மானுஷ்டங்களில் வேறுபாடு இல்லை; ஆனால் உச்சரிப்பு சுர பேதங்கள் அதிகம் என்று கேள்விபட்டது நினைவுக்கு வருகிறது] அவுபமன்யு, பெரிய இலக்கண சூக்தர் என்றும் நிகண்டு-ம் எழுதியுள்ளார் என்றும் கூறுவர். அக்காலத்தில் சாதாரணமாக ஒரே ஆசிரியரிடம் தான் கல்வி பயில்வர். ஆனால், அனந்தஜர் என்பவர் முதலில் சாம்ப முனிவரிடம் கல்வி பயின்று பின் அவுபமன்யு-விடம் கல்வி பயின்றதாக வம்ச ப்ரஹ்மானம் கூறுகிறது.

காம்போஜர்கள் ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறுப்பவர்கள் பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தில் “ஷவதி” (பொருள் – செல்) என்ற வினைச்சொல் காம்போஜத்தில் உபயோகப் படுகிறது; ஆனால், அது ஸம்ஸ்க்ருதத்தில் மாறுதல் என்ற பொருளில் மிகக் குறைவாக உபயோகப் படுகிறது” என்று கூறுவதைக் குறிப்பிடுகின்றனர். இந்த பொருள் வேறுபாடு வடமொழி இலக்கண நுலான யாசகரின் ’நிருக்த(ம்)’-த்திலும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வார்த்தை (ஷவதி) இரானியர்களின் பொது உபயோகத்தில் இருப்பதையும் குறிப்பிடுகின்றனர். ஆனால், யாசகரின் நிருக்தத்தில் பல இடங்களில் அவுபமன்யு மேற்கோள் காட்டப்படுகிறார். இதிலிருந்து காம்போஜர்களின் வடமொழி அறிவு இருந்துள்ளது என்பது புலனாகிறது.

பொதுவாக, இந்த பகுதி மக்கள் (காம்போஜம், மத்ரா, காந்தாரம் போன்றவை) ‘பஹாலிகா’ (அதாவது வேற்றாள் அல்லது வெளி ஆள்) என்று ராமாயண-மஹாபாரதங்களில் குறிப்பிடப்படுகின்றன.குறிப்பாக, போதாயனரின் தர்ம சாஸ்த்திரத்தில் காம்போஜர்கள் மிலேச்சர்கள் தஸ்யூகள் சூத்திரர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள் 

மஹாபாரதப் போரில், மத்ர தேச மன்னன் சல்லியனால் சூதப் புத்திரன் என்று இகழப்படும் கர்ணன், திரும்ப அவனை பஹாலிகா என்றும் மிலேச்சர்கள் என்றும் திரும்ப இகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் இந்த மறுப்பாளர்கள் தங்கள் வாதத்தில் குறிப்பிடுகிறார்கள். 

பொதுவாக ஆரியவர்தம் அல்லது வேதகால ஆரியர்களின் இருப்பிடம் என்பது சப்த-சிந்துவிற்கும் யமுனைக்கும் இடைப்பட்ட பகுதி என்று புராண இதிகாசங்களில் கூறப்படுகிறது; இது பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. எனவே சில வரலாற்று ஆசிரியர்கள், தொடர்ந்த எல்லைப் பகுதி படையெடுப்புகளாலும் க்ரேக்க இராணியத் தொடர்பாலும் கிழக்கில் இருந்த ஆரியர்கள் போலல்லாமல் இவர்கள் வேதநெறிமுறைகளில் இருந்து விலகியிருக்கலாம்; எனவே, இவர்கள் கங்கைப் பகுதி ஆரியர்களால் ”மிலேச்சர்கள்” என்று இகழப் பட்டிருக்கலாம், என்று கருதுகிறார்கள். 

ஆனால், இதே மஹாபாரதத்தில், பீஷ்ம பர்வத்திலும், இந்நாட்டு அரசன் (சுதக்ஷிண காம்போஜன்) தன் 6000 படை வீரர்களுடன் போரிட்டதைக் கூறும் பொழுது ’வேத ஒழுக்கத்தில் சிறந்த’ என்று குறிப்பிடப் படுகிறான். 15-ம் நாள் போரில் அர்ஜுனன் அம்பால் சுதக்ஷிணன் வீழ்ந்தது மேருமலையே வீழ்ந்தது என்று குறிப்பிடப் படுகிறது. சுதக்ஷிணனின் தம்பி பரபக்ஷ காம்போஜன் 17-ம் நாள் போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். அதே போல போருக்கு முன் பீஷ்மர் அணிவகுப்பில் கர்ணனைத் தவிர்த்து மற்றவர்களை வரிசைப் படுத்தும் பொழுது மகாரதர்களின் வரிசையில் சுதக்ஷிணளையும் குறிப்பிடுகிறார். யவனர்கள் ஷாகர்கள் காம்போஜர்களின் அணியில் ஒன்றிணைணந்து போரிட்டதாகக் குறிப்பிடுகிறது. சபா பர்வம் காமத காம்போஜன், அர்ஜுனனின் காண்டவ ப்ரஸ்த வெற்றி விழாவில் கலந்து கொண்டதாகக் கூறுகிறது. கர்ணன் திக் விஜயத்தின் போது காம்போஜனுடன் ராஜபுரத்தில் (தற்போதைய ரஜோரி (காஷ்மீர்)) போரிட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால், இறுதி போரின் போது சுதக்ஷிணனே துரியோதனன் பக்கம் போரிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சுதக்ஷிணன், காமத காம்போஜனின் மகனாக இருக்கலாம் அல்லது கர்ணனால் காமத காம்போஜன் நீக்கப்பட்டு அதன்பின் அரசனாக நியமிக்கப் பட்டிருக்கலாம்; இது பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை.


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 4:36 PM | Message # 136
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
ஆனால், பரசுராமரால் வதம் செய்யப்பட்ட கார்த்தவீர்யார்ஜுணன் மற்றும் 21 தலைமுறை ஷத்ரியர்கள் காம்போஜர்கள் என்று சில இடங்களில் குறிப்பிடப்படுவதும் உண்டு. கார்த்தவீர்யார்ஜுணன் இருந்த்தாக்க் கருதப்படும் இடம் இன்றைய கொங்கணம் மற்றும் மராட்டிய தேசம். 

அதேபோல, அக்னி புராணம் காம்போஜ தேசம் என்று குஜராத்தின் தென்பகுதியைக் குறிப்பிடுகிறது. ஆனால், அக்னி புராணம் குப்தர்களின் காலத்திற்கும் பின்னர் (குப்தர்காலத்தவர்களான சிஷ்ருஷர் எழுதிய ஆயுர்வேதக் குறிப்புகள், தன்வந்த்ரியின் மருத்துவகுறிப்புகள் அக்னி புராணத்தில் இடம் பெறுவதால்) கி.பி.8-11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதுகிறார்கள். காம்போஜர்கள் இடம் பெயர்ந்த பொழுது 8-11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் இருந்திருக்கலாம். 

காம்போஜர்கள் பிற்காலத்தில் அந்நிய படையெடுப்புகளாலும் சீன வழியாக (திபெத் பர்மிய குறிப்புகள்) அல்லது குஜராத், தமிழகம் (தில்லை கல்வெட்டுக் குறிப்புகள்) இலங்கை (மகாவம்ச குறிப்புகள்) வழியாகவும் இந்தோனேசியா சென்றிருக்கலாம். கம்போடிய அரச இனத்தவர்கள் தாங்கள் கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். 

வசிஷ்டரும் அகத்தியரும் சகோதரர்கள். இவர்களில் வசிஷ்டரின் புதல்வர்கள் கௌண்டின்யரும் இந்திர-பிரமாதியும். இந்திர-பிரமாதியின் மகன் வசு முனிவர். வசுமுனிவரின் மகன் தான் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் உபமன்யு என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

விஸ்வாமித்திரர் (கௌசிகராக இருந்த பொழுது) வசிஷ்டரிடமிருந்து காமதேனுவைக் கவர வந்தபோது காமதேனுவிலிருந்து வசிஷ்டருக்கு உதவியாக வந்து போரிட்டவர்கள் காம்போஜர்கள் என்று வால்மிகி ராமயணக் குறிப்புகள் கூறுகின்றன. வசிஷ்டரின் மகன் கௌண்டின்யர் என்பதால் அவர் வம்சத்தைச் காம்போஜர்கள் ஏற்றிருக்கலாம். அல்லது, அவர்களின் (காமதேனுவிலிருந்து) தோற்றம் ஒரு உருவகமாகவே எடுத்துக் கொண்டால், காம்போஜர்கள் கௌண்டின்யரின் வம்சமாக அல்லது கௌண்டின்யர் அவர்ளுக்கு ராஜகுருவாக இருந்து பின்னர், அந்த குருவின் பெயராலும் கோத்திரங்கள் ஏற்பட்டிருக்கலாம். வர்ண வேறுபாடுகள் அச்சமயத்தில் தொழில் வழியாக (குலவழியாக பின்பு மாறியது) இருந்ததால் சிலர் பிராமணர்களாகவும் சிலர் க்ஷத்ரியர்களாகவும் மாறியிருக்க* வாய்ப்புள்ளது. 

[* H.A.Rose எழுதிய Glossary of Tribes and Castes of Punjab and North-West Province என்ற புத்தகத்தில் காம்போஜர்களில் இரு பிரிவுகளாக 52 மற்றும் 84 வம்சங்கள் (1880 சென்ஸஸ் படி) இருந்ததாகவும் அதில் பல பிராமணர்-க்ஷத்ரிய-ராஜபுத்திர கோத்ரங்களுடனும் ஒத்து இருப்பதாகக் கூறுகிறார்.]

ரதசப்தமி விளக்கக் கதையிலும் காம்போஜ மன்னனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. [யஷோவர்மன் என்ற காம்போஜ அரசன் நீண்ட காலமாக குழந்தையில்லாமல் இருந்து இறைவன் அருளால் மகவு ஈன்றதாகவும் ஆனால் அக்குழந்தை நோய் வாய் பட்டிருந்ததாகவும், அப்பொழுது வினித முனிவர் கூறிய படி ரதசப்தமி விரதமிருந்து சூரியனை வழிபட்டதாகக் கதை] 

ஆக, சில வரலாற்று ஆசிரியர்கள் இதை இந்தியாவின் பகுதியாக ஏற்க மறுத்தாலும், புராண இதிகாசங்களில் இது இந்திய தேசமாகவேக் கருதப்பட்டு வந்துள்ளது. 

இடையில் வங்கத்திலும் காம்போஜர்கள் ஆண்டிருக்கிறார்கள். [வங்க மன்னன் தர்மபால காம்போஜனுக்கு உதவியாக இராஜேந்திர சோழன் படையனுப்பி வென்று ‘கங்கை கொண்ட சோழன்’ பட்டப் பெயர் கிட்டியது வரலாறு].

பொதுவாக, புராணங்களில் உயர்சாதிக் குதிரைகள் என்றால் அவை காம்போஜ குதிரைகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. (சாண்டில்யனின் அரேபியக் குதிரைகள் நினைவுக்கு வந்து அரேபியத் தொடர்பிற்கு வலு சேர்க்கிறதா?). காம்போஜர்களும் அஸ்வகர்கள் (குதிரைவீரர்கள்) என்றே குறிப்பிடப் படுகிறார்கள். அதே போல் பட்டுக்கும் காம்போஜம் பிரசித்தி பெற்றது. கிருஷ்ணரின் ரதம், காம்போஜ குதிரைகள் பூட்டப்பட்டு அதன் பட்டு துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக வர்ணிக்கப் படுகிறது.

பௌத்தர்கள், வட இந்தியாவில் மஹாபாதங்கள் (ராஜபாட்டைகள்) என்று 16 நாடுகளைக் கூறுகிறார்கள். அதில் காம்போஜம் செல்லும் பாதை உத்தர (வடக்கு) மஹாபாதமாகக் குறிப்பிடப் படுகிறது


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 4:36 PM | Message # 137
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
2. தராடம் (Daradam)


இது தற்போதைய பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள வடக்குக் காஷ்மீர பகுதியாகும். இதன் தலைநகர் கல்லதா. இது, தற்போது கில்கிட் (Gilgit) என்று அழைக்கப்படுகிறது. இது முன் காலத்தில் பட்டு வணிகப் பகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, சீன மற்றும் காஷ்மீர பட்டு வணிகம் நடைபெற்று வந்துள்ளது. 

வாயு புராணம், ப்ரஹ்மாண்ட புராணம், வாமன புராணங்களில் இந்த தராட தேசம் காம்போஜ காஷ்மீர நாடுகளின் அண்டை நாடாகக் குறிப்பிடப்படுகிறது. 

மஹாபாரதத்தில், இது ஒரு ஹிமவாத (இமயமலை) பிரதேசமாகக் குறிப்பிடப்படுகிறது. சபா பர்வத்தம், யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் நடத்திய பொழுது வட இந்திய பகுதிகளில் அர்ஜுனன் தலைமையில் சேனையை அனுப்பியதாகக் கூறுகிறது. [பீமன் கிழக்கிலும், நகுலன் மேற்கிலும் சகாதேவன் தெற்கிலும் சென்றார்கள்] அதில், அர்ஜுனன், பனிஹல் கணவாய் வழியாக காம்போஜர்களின் தலைநகராகக் குறிப்பிடப்படும் சிம்ஹபுரம் வரை வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. (பனிஹல் கணவாய் தற்போது ஆஃப்கானிஸ்தான் – தஜாகிஸ்தான் பகுதியில் இருக்கிறது.) விஜயனின் இந்த வட நாட்டு விஜயத்தின் முக்கியத்துவமே ராஜசூய யாகத்திற்கு பொருள் சேர்ப்பதுதான். சிம்ஹபுரி அந்த காலத்தில் முக்கிய வணிக நகரமாக இருந்துள்ளது. இந்த பாதையே உலகின் பட்டு வணிகப் பாதையின் மையமாகக் குறிக்கப்படுகிறது. சீனாவில் தயாராகிய பட்டுத் துணிகள் மற்றும் ஆடைகள் காம்போஜம் வந்து அங்கிருந்து தராடம் வழியாகத் தான் இந்தியா வந்துள்ளது. இந்த விஜயத்தின் பொழுது அர்ஜுனன் பெரும் பொருள் திரட்டியதினாலேயே அவனுக்கு “தனஞ்ஜயன்” என்ற சிறப்புப் பெயர் கிட்டியது.

அதே போல், துரோண பர்வதத்தில் கிருஷ்ணர் வென்றதாகப் பட்டியலிடப்படும் நாடுகளிலும் இது குறிப்பிடப்படுகிறது. மேலும், யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் பரிசளித்தவர்களிலும், மஹாபாரதப் போரில் துரியோதனன் சார்பில் போரிட்டவர்களிலும் தராடம் குறிப்பிடப் படுகிறது.

தராடம் தனி தேசமாகக் குறிப்பிடப்பட்ட போதிலும், காம்போஜம் போன்றோ அல்லது காந்தாரம் போன்றோ இந்த தேசத்திற்கு பெரிய அளவில் குறிப்புகள் இல்லை. குறிக்கப் படும் இடங்களிலும் இந்த தேசத்தின் அரசன் பெயரோ அல்லது அரச வம்சத்தின் பெயரோ குறிப்புகளில் இல்லை. ஆனாலும் இது தனி தேசமாகவே கருதப் பட்டு வந்துள்ளது. 

தராடர்களைப் பற்றி திபெத்தியரின் முக்கிய புத்தகங்களிலும் காஷ்மீர தேச வரலாற்றைக் கூறும் 'ராஜ தரங்கினி'யிலும் குறிப்புகள் உள்ளன. 

காஷ்மீரத்தின் டர் (Dar) வம்சத்தினர் இவர்களின் சந்ததியாகக் கூட இருக்கலாம். அதே போல் சந்திர வம்ச ஜாட்-களிலும் தராட் (दराड) கோத்திரம் என்று உண்டு; அதனால், அவர்களும் இந்த வம்சத்தினர் என்ற கருத்தும் உண்டு. ஜாட் வீர கதைகளில் திலிப் சிங் அஹ்லாவத், ஜாட்கள் மத்திய ஆசியா வரை ஆண்டதாகக் கூறுவார். அவர்கள், தராதர தேசத்தை மையமாகக் கொண்டு ஆண்டிருந்தால் இதற்கு சாத்தியம் உண்டு. [ஏனென்றால் காம்போஜத்தின் வடபகுதி மத்திய ஆசியாவை ஒட்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த தராத மன்னன் காம்போஜத்தை வென்றிருக்க சாத்தியம் உண்டு என்பதே.]

சாணக்கியரின் ‘அர்த்த்சாஸ்த்திர’த்தில், காம்போஜப் பகுதியில் ஒரு மன்னனின் தலைமையில் இல்லாமல் ஒரு குழுவின் தலைமையில் (மந்திரிகளின் தலைமையில் Limited Monarchy-ஆக இருக்கலாம்) அரசு நடந்ததாகக் குறிக்கப் பட்டுள்ளது. ஒருவேளை, அது இந்த தராட தேசப் பகுதியாக இருந்திருக்கலாம்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 4:37 PM | Message # 138
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
2. தராடம் (Daradam)


இது தற்போதைய பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள வடக்குக் காஷ்மீர பகுதியாகும். இதன் தலைநகர் கல்லதா. இது, தற்போது கில்கிட் (Gilgit) என்று அழைக்கப்படுகிறது. இது முன் காலத்தில் பட்டு வணிகப் பகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, சீன மற்றும் காஷ்மீர பட்டு வணிகம் நடைபெற்று வந்துள்ளது. 

வாயு புராணம், ப்ரஹ்மாண்ட புராணம், வாமன புராணங்களில் இந்த தராட தேசம் காம்போஜ காஷ்மீர நாடுகளின் அண்டை நாடாகக் குறிப்பிடப்படுகிறது. 

மஹாபாரதத்தில், இது ஒரு ஹிமவாத (இமயமலை) பிரதேசமாகக் குறிப்பிடப்படுகிறது. சபா பர்வத்தம், யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் நடத்திய பொழுது வட இந்திய பகுதிகளில் அர்ஜுனன் தலைமையில் சேனையை அனுப்பியதாகக் கூறுகிறது. [பீமன் கிழக்கிலும், நகுலன் மேற்கிலும் சகாதேவன் தெற்கிலும் சென்றார்கள்] அதில், அர்ஜுனன், பனிஹல் கணவாய் வழியாக காம்போஜர்களின் தலைநகராகக் குறிப்பிடப்படும் சிம்ஹபுரம் வரை வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. (பனிஹல் கணவாய் தற்போது ஆஃப்கானிஸ்தான் – தஜாகிஸ்தான் பகுதியில் இருக்கிறது.) விஜயனின் இந்த வட நாட்டு விஜயத்தின் முக்கியத்துவமே ராஜசூய யாகத்திற்கு பொருள் சேர்ப்பதுதான். சிம்ஹபுரி அந்த காலத்தில் முக்கிய வணிக நகரமாக இருந்துள்ளது. இந்த பாதையே உலகின் பட்டு வணிகப் பாதையின் மையமாகக் குறிக்கப்படுகிறது. சீனாவில் தயாராகிய பட்டுத் துணிகள் மற்றும் ஆடைகள் காம்போஜம் வந்து அங்கிருந்து தராடம் வழியாகத் தான் இந்தியா வந்துள்ளது. இந்த விஜயத்தின் பொழுது அர்ஜுனன் பெரும் பொருள் திரட்டியதினாலேயே அவனுக்கு “தனஞ்ஜயன்” என்ற சிறப்புப் பெயர் கிட்டியது.

அதே போல், துரோண பர்வதத்தில் கிருஷ்ணர் வென்றதாகப் பட்டியலிடப்படும் நாடுகளிலும் இது குறிப்பிடப்படுகிறது. மேலும், யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் பரிசளித்தவர்களிலும், மஹாபாரதப் போரில் துரியோதனன் சார்பில் போரிட்டவர்களிலும் தராடம் குறிப்பிடப் படுகிறது.

தராடம் தனி தேசமாகக் குறிப்பிடப்பட்ட போதிலும், காம்போஜம் போன்றோ அல்லது காந்தாரம் போன்றோ இந்த தேசத்திற்கு பெரிய அளவில் குறிப்புகள் இல்லை. குறிக்கப் படும் இடங்களிலும் இந்த தேசத்தின் அரசன் பெயரோ அல்லது அரச வம்சத்தின் பெயரோ குறிப்புகளில் இல்லை. ஆனாலும் இது தனி தேசமாகவே கருதப் பட்டு வந்துள்ளது. 

தராடர்களைப் பற்றி திபெத்தியரின் முக்கிய புத்தகங்களிலும் காஷ்மீர தேச வரலாற்றைக் கூறும் 'ராஜ தரங்கினி'யிலும் குறிப்புகள் உள்ளன. 

காஷ்மீரத்தின் டர் (Dar) வம்சத்தினர் இவர்களின் சந்ததியாகக் கூட இருக்கலாம். அதே போல் சந்திர வம்ச ஜாட்-களிலும் தராட் (दराड) கோத்திரம் என்று உண்டு; அதனால், அவர்களும் இந்த வம்சத்தினர் என்ற கருத்தும் உண்டு. ஜாட் வீர கதைகளில் திலிப் சிங் அஹ்லாவத், ஜாட்கள் மத்திய ஆசியா வரை ஆண்டதாகக் கூறுவார். அவர்கள், தராதர தேசத்தை மையமாகக் கொண்டு ஆண்டிருந்தால் இதற்கு சாத்தியம் உண்டு. [ஏனென்றால் காம்போஜத்தின் வடபகுதி மத்திய ஆசியாவை ஒட்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த தராத மன்னன் காம்போஜத்தை வென்றிருக்க சாத்தியம் உண்டு என்பதே.]

சாணக்கியரின் ‘அர்த்த்சாஸ்த்திர’த்தில், காம்போஜப் பகுதியில் ஒரு மன்னனின் தலைமையில் இல்லாமல் ஒரு குழுவின் தலைமையில் (மந்திரிகளின் தலைமையில் Limited Monarchy-ஆக இருக்கலாம்) அரசு நடந்ததாகக் குறிக்கப் பட்டுள்ளது. ஒருவேளை, அது இந்த தராட தேசப் பகுதியாக இருந்திருக்கலாம்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 4:37 PM | Message # 139
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
3. காந்தாரம்.

காந்தாரம் தற்போது ஆஃப்கானிஸ்தானில் காந்தஹார் என்ற பெயரில் வழங்கப் பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே


அலெக்ஸாந்தர் காலத்திலிருந்தே காந்தாரமும், குபா நதி என்கிற காபுல் நதிக்கரையில் அமைந்த அதன் புருஷபுரமும் (தற்போதைய பெஷாவர்) தக்ஷசீலமும் (தற்போது டக்ஸிலா) பெயர் பெற்ற நகரங்கள். கிட்டத்தட்ட 11-ம் நூற்றாண்டு வரை, அதாவது முகமது கஜினி அதைக் கைப்பற்றும் வரை அது தனி நாடாகவே இருந்து வந்துள்ளது. பின் அது துருக்கியர்களாலும், மங்கோலியர்களாலும், முகலாயர்களாலும் கைப்பற்றப்பட்டு தனி அரச வம்சத்தினரால் ஆளப்படாமல் அவர்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின், அது ஆஃப்கானிஸ்தானின் பகுதியாக ஆகியது.

இப்பகுதிக்கு ஸ்வட் (Swat) பள்ளத்தாக்கு என்ற பெயரும் உண்டு. இதை சமஸ்க்ருத சொல்லான சுவஸ்து என்பதன் திரிபு என்றும் கூறிவர். 

வேதங்களைப் பொருத்தவரை மிகவும் பழமையான ரிக் வேதத்திலேயே காந்தாரத்தைப் பற்றிப் பல குறிப்புகள் உண்டு. யயாதியின் வம்சத்தைச் சேர்ந்தவன் அருதன்; அவனுடைய மகன் காந்தாரன். அவன் தான் இந்த அரசைத் தோற்றுவித்ததாக ரிக் வேதம் கூறுகிறது. இவர்கள் த்ருஹுயு என்ற குழுவை/ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அதே நேரம், வருண புராணத்தில் கலியுக முடிவில் காந்தாரம், காலிகா என்ற பிரமதியால் அழிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐத்ரேய ப்ரமாணத்தில் காந்தார அரசன் நகனஜித், ஜனக ராஜனின் சமகாலத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதர்வண வேதம் காந்தார தேசத்தவர்களையும் மத்ர பஹாலிக தேசத்தவர்களுடன் இவர்களையும் தூர தேசத்தவர்கள் என்று கூறுகிறது.

புராணங்களில், ராமாயணத்தில் ராமர் அரசாண்ட பொழுது வட மேற்கு பகுதியின் (குறிப்பாக, கேகேய நாட்டின்) ஆளுமை பரதனின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. அப்பொழுது, பரதன் அருகிலுள்ள நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் இணைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பரதனுக்குப் பின் இப்பகுதிகள் அவனுடைய மகன்களான தக்ஷன், புஷ்கரன் ஆகியவர்களின் அரசாட்சியைக் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. [தலைநகரங்களான தக்ஷசீலமும், புஷ்கலாவதியும் (தற்போதைய சர்ஸத்தா) அவர்களின் பெயராலேயே வழங்கப்பட்டதாகவும் கூறுவர்]. புஷ்கலாவதியில் காபுல் நதியின் மூன்று கிளைகள் இணையும் இடமும் முன் காலத்தில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பகுதியை இன்றும் ப்ராங் (ப்ரயாகை என்பதன் மரூஉ) என்றே அழைக்கப்படுகிறது. காஷ்மீரத்திலும் இதுபோல மூன்று நதிகள் கூடும் ‘ப்ராங்’ என்ற இடம் இருக்கிறது. ஆனால், ராமாயணத்தில் காந்தாரப் பகுதிகள் குறிக்கப்பட்டாலும் காந்தாரம் என்ற பெயர் குறிப்பிடபப்டவில்லை. வருண புராணத்தில் காந்தாரம் (தேசம்) அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலம் இதுவாக இருக்கலாம்.

மகாபாரதத்தில் காந்தாரத்தின் பங்கு நாம் அறிந்ததே. திருதராஷ்டரரின் மனைவி காந்தாரி (பெயர் காரணமே காந்தாரத்தைச் சேர்ந்தவள் என்பது தான்), அவளின் தமையன் சகுனி ஆகியோர் காந்தாரத்தைச் சேர்ந்தவர்கள். 

அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புப் பற்றியக் குறிப்புகளில் காம்போஜம், காந்தாரம் ஆகியவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அலெக்ஸாண்டரிடம் பணிந்த அம்பி குமாரனைக் குறிப்பிடும் பொழுது அவன் பரதன், சகுனி ஆகியோரின் வம்ச வழி என்று குறிப்பிடப்படுகிறான். அப்பொழுது, காந்தாரம் 5 அல்லது 6 தனிதனி மன்னர்ளால் ஆளப்பட்டு வந்தது. குபேசன், ஹஸ்தின், அஸ்வஜித், அஸ்வகாயன் என்பவை மற்ற அரசர்களின் பெயர்கள.

பௌத்தர்களைப் பொறுத்தவரை, திபெத்திய புத்தமதப் பிரிவைத் தோற்றுவித்தவர் என்று கருதப்படும் பத்மசம்பவர் என்பவர் தோன்றியதாகக் கூறப்படும் தனகோசம் என்ற ஏரி காந்தாரத்தில் இருப்பதாக அவர்களின் தொன்மக் கதைகளில் உள்ளது. திபெத்தின் ‘ககயூ’ புத்த மதப் பிரிவின் தொன்மங்களில் இந்த ஸ்வட் பள்ளத்தாக்கின் ஊற்று ஏரியில் ‘அந்தன் தேரி’ ஸ்தூபி இப்பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. [தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் இப்பகுதியின் சக்தாரா என்னும் இடத்தில் இந்த ஸ்தூபி-யைக் கண்டுபிடித்துள்ளனர்; ஆனால் ஏரி இருப்பதற்கான அடையாளம் கிட்டவில்லை].

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அஹமேனியன் (கிரேக்கர்) வரலாறுகளிலும் குறிப்பாக சைப்ரஸின் ஆளுகையின் கீழ் காந்தாரம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 

இந்திய வரலாற்றின் முதல் பேரரசான மகதத்தில் அமைந்த மௌரியப் பேரரசு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் தலைநகரம் பாடலிபுத்திரம் என்பதும் அது இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகரமான ‘பாட்னா’-வின் பழைய பெயர் என்பது நாம் அனைவரும் படித்ததே. இந்த மௌரியப் பேரரசை நிறுவியவர் சந்த்ர குப்த மௌரியர். இவர் தக்ஷசீலத்தைச் சேர்ந்தவர்/வாழ்ந்தவர். மகத்த்தை ஆண்ட நந்த வம்சத்தினரால் கைது செய்யப்பட இருந்த சாணக்கியர் அங்கிருந்து தப்பி கால் நடையாகவே தக்ஷசீலத்தை அடைந்து சந்திரகுப்த மௌரியரைச் சந்தித்ததாகக் கூறுவர். அலெக்ஸாண்டருக்குப் அவருடைய இந்தியப் பகுதிகளை ஆண்ட செல்யூக்கஸ் நிகோடரை சந்திரகுப்த மௌரியர் வென்று அவரிடமிருந்த காந்தார பகுதிகளையும் காம்போஜத்தையும் ஆண்டார் என்று மெகஸ்தனிஸ்-இன் (செல்யூகஸ்-ஆல் பின்னர் அனுப்பிவைக்கப்பட்ட தூதர்) குறிப்புகள் கூறுகின்றன. 

இவ்வளவு சிறப்புகள் பெற்றிருந்தாலும் கொண்டியரின் (சாணக்கியரின்) அர்த்த சாஸ்த்திரத்தில் காந்தரத்தின் பலப்பகுதிகள் சொல்லப்பட்டு சிறப்பிக்கப்பட்டாலும் காந்தாரம் என்று தனி நாடாகச் சொல்லப் படவில்லை என்பதுதான் வியப்பளிகிறது. அந்த காலகட்டத்தில் காந்தாரம் வாரிசுப் போட்டிகளால் சிற்றரசுகளாகச் சிதறியோ அல்லது தராடம் பற்றிச் சொல்லியது போல் குழுக்களால் ஆளப்பட்டோ அல்லது காம்போஜ ராஜபாட்டையுடன் இணைந்தோ இருந்திருக்கலாம்.

பின்னர், அசோகர் காலத்தில் காந்தாரத்திலும், காம்போஜத்திலும் பல ஸ்தூபிகள் நிறுவப் பட்டன. பானினி-யும் காந்தாரத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. அசோகருக்குப் பின்னர் கி.மு முதலாம் நூற்றாண்டில் பாரசீக-க்ரேக்க (Greeko-bactarian) வம்சத்தைச் சேர்ந்த டெமுட்ரிஸ் காந்தாரத்தையும் காம்போஜத்தையும் கைப்பற்றினார். அவரது தலைநகராக சாகலம் (தற்போதைய சியால்கோட் நகரம் (பாக்)) இருந்தது.

பின்னர் கி.பி. 1-2 ஆம் நூற்றாண்டுகளில் காந்தாரம் குஷானர்களின் வசம் வந்தது. இதுதான் காந்தாரம் மிகவும் புகழ் மிக்கதாகவும் சிறப்புடனும் விளங்கியது காலம் ஆகும். அதன் பின்னர், அங்கு நிரந்தரமான அமைதி என்பதே இல்லாமல் போனது; போர் என்றால் முதலில் பாதிக்கப்படும் பகுதி இதுதான். காரணம் இந்தியாவில் நுழைய வேண்டும் என்றால் இந்த இடத்தின் கட்டுப்பாடு மிகவும் அவசியம். மங்கோலிய, துருக்கிய, அரேபியர்கள் என்று போர்கலப் பகுதியாகவே உள்ளது. இந்த 20-21 ஆம் நூற்றாண்டிலும் இங்கு அமைதி திரும்ப வாய்ப்பு இருப்பதாகக் கூடத் தெரியவில்லை 


endrum anbudan

vijiram
 
ramsDate: Sunday, 16 Feb 2014, 4:39 PM | Message # 140
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
காச்மீரம்

இந்திய புராதன தேசங்களைப் பொறுத்தவரைப் புராணங்களைத் தவிர்த்துத் தொடர்ச்சியான எழுத்து வடிவான பரம்பரை வரலாறு உள்ள நாடுகளில் காச்மீரம்-உம் ஒன்று. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கல்ஹணர்’ எழுதிய ராஜதரங்கிணி மகதத்தின் ஜராசந்தன் காலத்தைச் சேர்ந்த முதலாம் கோநந்தன் காலத்திலிருந்து பரம்பரையான வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் [இதில் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சில கூறுகள் இல்லாமல் இல்லை; உதாரணமாக, ராமாதித்யன் என்ற மன்னரின் காலம் 300 ஆண்டுகளாகக் கூறப்பட்டுள்ளது. தோரோமனு என்ற ஹூண வம்ச மன்னனின் தந்தை என்று வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் கூறும் மிஹிரகுலன் அவருக்கு 700 வருடங்கள் முந்தைய அரசனாகக் குறிப்பிடப் பட்டுள்ளது].

நிலமத புராணம் காச்மீரத்தை கச்யப முனிவருடன் தொடர்பு படுத்துகிறது. சப்த ரிஷிகளில் கச்யபரும் ஒருவர். இவர் ப்ரஹ்மா-வின் பத்து மானஸ புதல்வர்களில் (மனதிலிருந்து உதித்தவர்கள்) ஒருவரான மரீசியின் மகன். காச்மீரம் இப்பொழுது இருந்த இடத்தில் தக்ஷப்பிரஜாபதி-யின் மகளும் சிவனுடைய மனைவியுமான சதிதேவியின் பெயரில் அமைந்த சதிசரஸ் என்ற ஓர் ஏரி அமைந்திருந்தது. அங்கு ஜலோத்பவன் என்ற ராக்ஷசன் வசித்து வந்தான். அவன் அப்பகுதியில் உள்ளவர்களைத் துன்புறுத்தி வந்தான். கச்யபர் அவனைக் கொல்வதற்காக வந்த பொழுது அவன் அந்த சதிஸரஸ்-உக்குள் ஒளிந்து கொண்டான். அவர் கத்ரு (இவளும் தக்ஷனின் மகள் தான்) மூலம் பிறந்த நாகர்களின் வம்சத்தைச் சேர்ந்த அனந்தன் முதலிய நாகர்களின் உதவியுடன் ஏரியை வற்றச் செய்தான். அனந்தனால் வற்றச் செய்யப்பட்ட இடம் ‘அனந்தநாக்’ அதேப்போல் ‘நாக்’ என்ற பெயரில் இருப்பவை மற்ற நாகர்களால் வற்றச் செய்யப்பட்ட இடங்கள். விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து பூமியிலிருந்து ஜலோத்பவனை வெளிக் கொணர்ந்தார். அந்த இடம் வராஹ மூலை – இன்றைய பாராமுலா பள்ளத்தாக்கு – என்று அழைக்கப்படுகிறது

[தத்துவ ரீதியில் நாகர்கள் இருக்கும் இடங்களாகக் கூறப்படுபவை எரிமலையின் ஊற்றுவாய்கள் என்ற கருத்தும் உண்டு. எரிமலையில் பூமியில் மையத்தில் இருக்கும் குழம்பு வெளிவருவது நாகத்தின் சீற்றத்தைக் குறிக்கும். ஆதிசேஷன் தன் தலையில் உலகைத் தாங்குவதாகக் கூறுவது பூமி மையத்தை உள்ள மூலக்குழம்பை - ஆதி என்றால் முதல் அல்லது மூலம்; சேஷம் என்றால் மீதி (மூல நெபுலா வெடிப்பிலிருந்து பிரிந்த மீதி) என்று – குறிப்பதாகவும் கூறுவது உண்டு. ஆனால், இந்த தத்துவ விளக்கம் பிற்காலத்தில் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு ஏற்ற வகையில் திரிக்கப் பட்டதாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. ஏனெனில் இது போன்ற விளக்கம் புராணங்களிலோ அல்லது வேறு எந்த புத்தகங்களிலோ இல்லை என்றும் கூறுகிறார்கள். அதே நேரம், நாகர்கள் பாதாள உலகைச் சேர்ந்தவர்கள் என்றே புராணங்கள் கூறுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்].

ஆசியக் கண்டமும் இந்தியத் துணைக்கண்டமும் இணைந்த பொழுது, கடலால் சூழப்பட்ட இந்த பகுதி உயர்ந்து இமயமலை உருவானதாக புவியியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கஷ்யபரின் பெயரால் கஷ்யப புரம் என்று அழைக்கப்பட்டு, அது நாளடைவில் காச்மீரமாகத் திரிந்தாகக் கூறுவர்.

இதற்கு சற்று மாறுபாடாக, வடமொழியில் (சம்ஸ்க்ருதம்) ‘க’ என்றால் நீர். ’ஷ்மீரா’ என்றால் வற்றிய அல்லது உயிரற்ற என்று பொருள். நீர் வற்றி பூமி தோன்றிய இடம் கஷ்மீரம் என்ற பெயரில் வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

க்ரேக்க அறிஞர் டால்மியின் உலக வரைபடத்தில் காஷ்மீர், கஸ்பேரியா என்று அழைக்கபடுவதாகக் கூறுவர்.
ஜம்மு-வைப் பொறுத்தவரை கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே ஜம்புலோசனன் என்ற மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேட்டியாடிக் கொண்டே வந்த ஜம்புலோசனன் ஓரிடத்தில் ஆடும் சிங்கமும் சேர்ந்து நீர் பருகுவதைக் கண்டு அந்த இடத்திலேயே நகரை நிர்ணயித்ததாகத் தொன்மங்கள் கூறுகின்றன. ஜம்பூ என்று அவன் பெயராலேயே வழங்கப்பட்ட நகரம் நாளடைவில் ஜம்மு என்று திரிந்ததாகக் கூறுகிறார்கள்.

மஹாபாரதம் கர்ணனின் காம்போஜ விஜயத்தைக் கூறும் பொழுது, அதன் தலைநகரம் சிங்கபுரமாக இருந்தாலும், காம்போஜர்களின் கட்டுப்பாட்டில் ராஜபுரம் (தற்போதைய ரஜோரி) இருந்ததாகவும் அதைக் கர்ணன் வென்றதாகவும் குறிப்பிடுகிறது. பின்னர், பாஞ்சாலர்களின் கட்டுப்பாட்டிலும் சிலகாலம் இருந்தது. அப்பொழுது அவர்களால் மையப்படுத்தப்பட்ட நகரம் பஞ்சால் என்று அழைக்கப்பட்டு, பின்னர் பகீர் சித்தர் என்ற சூஃபி ஞானி வசித்ததால் பீர் பஞ்சால் என்று தற்போது வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

ராஜதரங்கிணி கி.மு 3-2 நூற்றாண்டுகளில் காச்மீரம் மௌரியர் வசமாகவும் (குறிப்பாக அசோகரும் அவருடைய மகன் ஜலூகா-வின் கீழும்) இருந்ததாகக் கூறுகின்றது. பின்னர், தாமோதர மௌரியனுக்குப்பின் கி.மு. முதல் நூற்றாண்டில் குஷாணர்களின் (ஹுஸ்கர், ஜுஷ்கர், கனிஷ்கர்) கட்டுப்பாட்டிலும் அதன் பின் மீண்டும் கோநந்தர்கள் வசம் வந்ததாகக் கூறுகிறது. இதிலிருந்து கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை ராஜதரங்கிணியில் பல தகவல் பிழைகளை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பின் 5-ஆம் நூற்றாண்டில் ஹூணர்கள் (தொரமானா, மிஹிரர் என்று கூறினாலும் ஹூண வம்சம் என்று குறிப்பிடப்படவில்லை) வசம் காச்மீரம் இருந்தது. பின் மீண்டும் கோநந்தர்கள் வசம் வந்தது. 7-ஆம் நூற்றாண்டில் கோநந்த வம்சத்தைச் சேர்ந்த பாலாதித்யன் என்ற மன்னர் தனது மகளையும் தனது ஆட்சியையும் கார்கோடக வம்சத்தைச் (கார்கோடகன் என்பதும் நாக வம்சத்தின் ஒரு பிரிவுதான்) சேர்ந்த லலிதாதித்ய முக்தபீடனிடம் ஒப்படைத்தார். லலிதாதித்யன் இந்தியாவின் அலெக்ஸாண்டர் என்று அழைக்கப்படும் அளவிற்கு பெரிய மாவீரன். லலிதாதித்யன் காலத்தில் மத்திய ஆசியாவரை காச்மீரத்தின் எல்லை விரிவடைந்தது. லலிதாதித்யனின் பின் அவன் மகன் வசம் நாடு வந்தது என்றாலும் பின்னர், நீண்ட வாரிசு போராட்டங்களுக்குப்பின் லலிதாதித்யனின் ஆசைநாயகியின் பேரன் உத்பலன் வசம் காஷ்மீரம் வந்தது. உத்பலனுக்குப்பின் கர்கோடக வம்சத்தின் திவானாக இருந்த ஷம்கரவர்மனின் குடும்பி வம்சம் வசம் சென்றது. பின் 9-10ஆம் நூற்றாண்டில் இது அவர்களின் ஓலை எழுதுபவர்கள் வம்சமான ‘திவிரர்’கள் வசம் சென்றது. பின்னர் இது லோஹரர்கள் வசம் சென்றது. இந்த லோஹரர்கள் வம்சம் தார்வாபிசாரன் என்ற வியாபாரியால் துவங்கப்பட்டது. இந்த லோஹரர்கள் தன் அரசாக ஆளாமல் தனிதனி ஊர்களை பல தலைமுறைகளாக ஆண்டு வந்தனர். கல்ஹனரின் தந்தை சம்பகர் இந்த வம்சத்தைச் சேர்ந்த ஹர்ஷன் என்ற மன்னனின் மந்திரிகளுல் ஒருவர்.

கல்ஹனரின் காலத்தில் இந்த லோஹரர்களும் வலிமை இழந்தனர். மங்கோலிய, துருக்கிய, அரேபிய படையெடுப்புகளாலும் வாரிசுப் போர்களாலும் சிற்றரசர்களின் எல்லைப் பிரச்சனைகளாலும் காச்மீரம் கலவர பூமியாகவே மாறியிருந்தது. ராஜதரங்கிணியைத் தொடர்ந்து ஜோனராஜா என்பவர் கல்ஹனர் விட்ட இடத்திலிருந்து 1412 – ஜைனுலப்தீன் காலம் வரை - பிற்சேர்க்கையிட்டார். தொடர்ந்து 1486 – ஃபாஷா காலம் வரை ஸ்ரீவரர் தொடர்ந்து எழுதினார். பின்னர் ப்ராஜினிய பட் என்பவர் 1588-இல் அக்பர் காச்மீரத்தைக் கைப்பற்றும் வரை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை காச்மீரம் ஆஃப்கானின் துரானி வம்சம், சீக்கியர்கள் வசம் (லாஹூரின் ரஞ்சித் சிங்) என்று நான்கு நூற்றாண்டுகள் வெளியாட்களாலேயே ஆளப்பட்டது. பின்னர் காச்மீரின் தியோ வம்சத்தைச் சேர்ந்த குலாப் சிங், ரஞ்சித் சிங்னால் காச்மீரத்தின் ஆட்சியின் கண்கானிபாளராக நியமிக்கப்பட, நாளடைவில் தன்னிச்சையாக காச்மீரத்தின் தனி மன்னராகவே செயல்பட ஆரம்பித்தார். அச்சமயத்தில் லாஹூரின் சீக்க்யர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் இவர் இருவருக்கும் இடையில் சமாதானத் தூதுவராகச் செயல் பட்டார். அப்பொழுதைய ஒப்பந்தத்தின் பலனாக 1856-இல் காச்மீரம் முழுவதும் தியோ வம்சத்தினரின் வசம் வந்தது. 1949-இல் ஹரிசிங் தியோ (குலாப் சிங், ரன்வீர் சிங், ப்ரதாப் சிங், ஹரிசிங் என்பது இவர்களின் வரிசை) காச்மீரத்தின் மன்னராக இருந்தார். இந்திரா காந்தியின் அரசில் மந்திரியாக இருந்த கரண்சிங் இந்த மன்னரின் வம்சமே…


endrum anbudan

vijiram
 
Search: