Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Sunday, 16 Feb 2014, 4:39 PM | Message # 141 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பஹாலிகா
பஹாலிகா என்றால் வேற்றாள் அல்லது வெளி ஆள் என்று முன்னரே பார்த்தோம். சப்த-சிந்துவின் கிழக்குப் பகுதி தொடங்கி கங்கை பகுதியை உள்ளடக்கிய ஆர்யவர்த்தம் என்ற ஆரியகளின் தேசத்தவரைப் பொறுத்தவரை சிந்துவிற்கு மறுகரையில் (மேற்குப்பகுதி) உள்ளவர்கள் பஹாலிகர்கள் தான்.
புராணங்களில் புவனகோசம் என்று ஒன்று உண்டு. புவனகோசம் என்றால் புவியியல். தேசங்களும் அவற்றின் புவியியலையும் பற்றிக் குறிப்புகள் இந்த புவனகோசத்தில் அடங்கியிருக்கும். காம்போஜ, காந்தார வரிசையில் மஹாவர்கள் (பஞ்சாப்), முஜாவந்த் (ஹிந்துகுஷ், பாமிர் பகுதியில் ஒரு மலை) ஆகியவற்றைத் தொடர்ந்து பஹாலிக நாடு குறிப்பிடப்படுகிறது. ப்ரமாண்ட புராணம் ’சக்*ஸு’ நதி (தற்போதைய ஆக்ஸஸ் என்று அழைக்கப்படும் அமு தரியா) பஹாலிக தேசம் வழியாகப் பாய்வதாகக் குறிக்கிறது. தில்லி இரும்புத் தூணில் சந்த்ரகுப்தன் சிந்துவின் ஏழு வாய்களைத் தாண்டி பஹாலிகர்களை வென்றதாகக் குறிப்பிடுகிறது.
மஹாபாரதக் கதை ஒன்றைப் பார்ப்போம்…
குருவம்சத்தில் குருவின் மகன் ஜிஹ்ணுவிற்கு 10 தலைமுறைகள் பிறகு ப்ரதீபன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள். இவர்களில் இரண்டு பேர் அவர்களின் பெயர்களுடன் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள், ப்ரதீபனின் முதல் மகன் தேவபி-யும் மூன்றாவது மகன் சந்தனு-வும் தான்.
ப்ரதீபன் தனக்குப் பின் தன் மகன் தேவபி-யை நாட்டின் அரசனாக்க நினைத்தான். ஆனால், தேவபி ஊனமுற்றவன் என்பதால் சாத்திரங்கள் அவனை அரசனாக நியமிக்கக் கூடாது எனக் கூறுவதாகப் பண்டிதர்களாலும் மூத்தோர்களாலும் மறுக்கப்பட்டது. தேவபியும் தனக்கு ராஜ்ஜியம் வேண்டாம் என்று சன்யாசம் மேற்கொண்டான். ப்ரதீபனின் இரண்டாவது மகன் தன் அண்ணனுக்குக் கிட்டாத தன் நாடு தனக்கு வேண்டாம் என்று மறுத்ததுடன் தன் நாட்டைத் துறந்து தன் தாய் வழிப் பாட்டனிடம் சென்று விட்டான். இவன் பெயர் குறிப்பிடப்படாமல் பஹாலிகன் என்று அழைக்கப்பட்டான். மூன்றாவது மகன் சந்தனு நம் அனைவருக்கும் அறிமுகம் ஆனவன்; கங்கை, சத்யவதி ஆகியோரை மணந்த பீஷ்மரின் தந்தை தான் அவன்.
காசி அரசனின் மகள்களைத் தன் தம்பி விசித்ரவீர்யனுக்காகத் தூக்கி வந்தப் பொழுது அம்பா எழுப்பியப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பீஷ்மர் தன் பெரியப்பாவான பஹாலிகரிடம் ஆலோசனைக் கேட்டதாக மஹாபாரதம் கூறுகிறது. பஹாலிகன் என்பது அவர் பெயர் அல்ல. அவனுடையத் தாய் வழிப் பாட்டனின் பஹாலிக தேசத்தை ஆண்டதால் தான் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டான்.
பஹாலிகன், அவனுடைய மகன் சோமதத்தன், பேரன் புரிசிரவஸ் ஆகியோர் பாரதப் போரில் கௌரவர்கள் சார்பில் போட்டியிட்டனர். சோமதத்தனும், புரிசிரவஸும் கௌரவ சேனையின் பதினோறு அக்ரோனி சேனைகளில் இரண்டின் தலைவர்கள். பாரதப் போரில் போர்ப்புரிந்த வீரர்களில் மிகவும் வயதானவர் என்று குறிப்பிடுவது பீஷ்மரைத் தான். ஆனால், போரில் பஹாலிகரை பீமன் கொன்றதாகக் குறிப்பிடப் படுகிறது. எனவே, தேவபியின் தம்பி பஹாலிக மன்னனுக்கு அடுத்து ஒரு மகன் (பஹாலிகன்) இருந்து அவனுடைய மகனாக சோமதத்தன் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சோமதத்தனும் அவன் மகன்கள் புரிசிரவஸ், சாலன் (சகாலன் என்றும் கூறப்படுவதுண்டு) ஆகியோர் துரியோதனனை விரும்பாதவர்கள். ஆனால், பஹாலிகர்கள் பீஷ்மருக்காகவும் திருதராஷ்ட்ரனுக்காகவும் அதைவிட குரு வம்சக் கொடிக்கு (கௌரவர்களுக்கு) எதிராகவும் இருக்கக் கூடாது என்பதால் கௌரவர்கள் பக்கம் போரிட்டார்கள். மேலும் மற்றொரு காரணம் சாத்யகி. சாத்யகி-க்கும் புரிசிரவஸுக்கும் பரம்பரைப் பகை. அது தனிக் கதை…
தேவகி என்ற ராஜகுமாரிக்குச் சுயம்வரம் நடை பெற்றது. இதில் பல மன்னர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்குள் பல போட்டிச் சண்டைகள் நடைபெற்றன. இறுதியில் எஞ்சியது இருவர். அதில் ஒருவர் சாத்யகியின் தந்தை சினி; மற்றொருவர் சோமதத்தன். இருவருக்கும் ஏற்பட்டக் கடும் சண்டையில் சினி சோமதத்தனைத் தோற்கடித்தான். சினி இந்தப் போரில் தன் உறவினன் வசுதேவன் சார்பாகக் கலந்து கொண்டார். அவருக்கே தேவகியை மணமுடித்து வைத்தார். ஆம்! இந்த தேவகி வேறுயாருமல்லள்; கிருஷ்ணரின் தாயே தான். இந்தப் பகை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அடுத்தத் தலைமுறைக்கும் பரவி புரிசிரவஸும் சாத்யகியும் எதிரிகளாக இருந்தனர்.
கிருஷ்ணருக்கு அர்ஜுனனுடன் எவ்வளவு நட்பு உண்டோ அதே அளவு நட்பு சாத்யகியுடனும் உண்டு என்று குறிப்பிடுகிறார்கள். பாண்டவருக்காக கிருஷ்ணர் அஸ்தினாபுரத்திற்கு சமாதானம் பேச வந்த பொழுது அவரின் மெய்காப்பாளனாக வந்தது சாத்யகிதான். கௌரவர் சபையில் கிருஷ்ணர் நிந்திக்கப்பட்டப் பொழுது கோபத்துடன் வாளை உறுவிய சாத்யகியை கிருஷ்ணர் சமாதானம் படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
சோமதத்தனும் புரிசிரவஸும் பாண்டவர்கள் சார்பில் போரிட்ட சூரசேன மன்னன் சத்யகியினால் கொள்ளப் பட்டனர். சாலன், த்ரௌபதியின் ஐந்தாவது மகன் ச்ருஷ்டணனால் கொல்லப் பட்டான். பஹாலிகர்களுக்கு இறுதிச் சடங்கை, பங்காளிகள் என்பதால், த்ருதராஷ்டரனேச் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. [சாலன் சில இடங்களில் சகாலன் என்றும் கூறப்படுவதுண்டு; தற்போதைய சியால்கோட் நகரத்தின் முந்தைய பெயர் சகாலா; அதனால் இந்தப் பெயரால் வழங்கப் பட்டிருக்கலாம்]. சியால்கோட் பகுதி மத்ர தேசத்தைச் சேர்ந்தது. என்றாலும், மஹாபாரதத்தில் மத்ர தேசத்தவர்கள் பஹாளிகர்கள் என்று இகழப்படுகிறார்கள். அதனால், அவர்கள் ஒரே பரம்பரையில் வந்து பின்னர் பிரிந்திருக்கலாம். சாலனின் கட்டுப்பாட்டில் சியால்கோட் (சகாலா) நகரம் இருந்திருக்கலாம்; அல்லது தாய் வழியில் அந்தப் பகுதி அவன் வசம் வந்தும் இருக்கலாம்.
பஹாலிகர்கள் குதிரையேற்றத்திற்கும் பஹாளிக தேசம் குதிரைக்கும் பெயர் போனவை. சிகண்டியின் மகன் க்ஷத்ரதேவன் பஹாலிகக் குதிரைகளில் ஏறிப் போர்புரிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சுபத்திரையின் திருமணத்தில் அர்ஜுனனுக்கு பஹாலிகக் குதிரைகள் பரிசளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப் படுகிறது.
பழைய குறிப்புகளில் வடமேற்கு பகுதிகளில் குறிப்பிடப்படும் பஹாலிக தேசம் பிற்காலக் குறிப்புகளில் மெல்ல பஞ்சாப், சௌராஷ்ட்ரம், ஆபீரம் ஆகிய தென் மேற்கு பகுதி மக்களோடுத் தொடர்பு படுத்தப்படுகிறது. இதிலிருந்து இவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் நாளடைவில் மங்கோலிய, அரேபிய படையெடுப்புகளால் மெல்ல தெற்கு நோக்கி புலம் பெயர்ந்திருக்கக் கூடும் என்பது புலப்படுகிறது.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 4:40 PM | Message # 142 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| மத்ர தேசம்
மத்ர தேசம் என்று பொதுவாக அறியப்படுவது இன்றைய பாகீஸ்தான் பகுதியில் இருக்கும் பஞ்சாப் தான். சியால்கோட் (பழைய பெயர் சகாலா) தான் இதன் தலைநகர். இதைத் தவிர அபர மத்ரா (கீழை மத்ரா), உத்தர மத்ரா (வட மத்ரா) என்பவையும் சில இடங்களில் குறிப்பிடப்படுவதும் உண்டு. மத்ர தேசத்திற்கும் சால்வ தேசத்திற்கும் நிறையத் தொடர்புகளும் வம்ச முறைகளும் கலந்து வந்துள்ளன.
மத்ர தேசம் மேற்கில் சிந்து நதியும் தென் கிழக்கில் ஐராவத நதியும் (தற்போதைய ராவி நதி) எல்லைகளாகக் கொண்டதாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக இந்திய அரச வம்சங்களில் இஷ்வாகுவின் வழித் தோன்றலாக வந்த சூரிய வம்சமம், புரூரவஸ்-இன் வழித்தோன்றலாக வந்த சந்த்ர வம்சம் ஆகிய இரண்டு வழித் தோன்றலாகத்தான் குறிப்பிடப்படுகின்றன. திருவாலங்காடு செப்பேடுகளில் சோழ வம்சம் கூட சூரிய வம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.
சந்திரவம்சத்தில் யயாதிக்குப் பின் அந்த வம்சம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. யயாதி கதை [வயதான பின்பும் மீண்டும் இளமையை பெற நினைத்தது. அதற்கு அவர் மகன் யது தன் இளமையைத் தர மறுக்க மற்றொரு மகனான புரு தன் இளமையைத் தந்தது என] நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான். யயாதி தன் இளமையைத் தர மறுத்ததால் அவர் சந்த்ர வம்சத்திலிருந்து விளக்கப் பட்டார். அவரது வம்சம் யது வம்சம் என்று தனியாகக் கிளைவிடத் துவங்கியது (கிருஷ்ணர்-இந்த யது வம்சத்தைச் சேர்ந்தவர் தான்). புரு வம்சம் பெரும் புகழுடன் கிளைவிட்டு அதில் துஷ்யந்தன், பரதன், ஹஸ்தி, குரு என்றுத் தொடர்ந்தது.
புருவின் வம்சத்தில் வ்யுசிஸ்தவன் என்ற ராஜகுமாரன் தோன்றினான். இவன் கௌதம முனிவருக்கும் மகத அரசன் வலி-யின் மனைவியின் வேலைக்காரப் பெண்ணிற்கும் பிறந்த கக்*ஷிவத் என்பவரின் மகளான பத்ரா-வை மணந்தான். ஆனால், இவர்களுக்குக் குழந்தைப் பிறக்கும் முன்பே வ்யுசிஸ்தவன் இறந்துவிட்டான். ஆனால், பத்ரா-வோ அவன் உடலை அடக்கம் செய்யவிடாமல் அந்த உடல் மூலமே(!!!) ஏழு குழந்தைகளைப் பெற்றதாகப் மஹாபாரதம் கூறுகிறது.
பிணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் என்பதால் இவர்கள் புரு வம்சத்தில் சேர்க்கப்படவில்லை. பின்னர், அந்த ஏழு குழந்தைகளில் நான்கு மத்ர தேசத்தையும் மூன்று சால்வ தேசத்தையும் ஆண்டதாகக் கூறுகின்றனர். மத்ர தேசமும் சால்வ தேசமும் பல இடங்களில் திருமண சம்பந்தம் வைத்ததாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில் ஒரே தேசமாகவும் ஆளப்பட்டு வந்துள்ளது.
மற்றொரு வம்ச வழியையும் கூறுவது உண்டு. அது…
யயாதியின் நான்காவது மகன் அனு; அனுவின் வம்சம் பின் வருமாறு:
அனு சபநரன்
காலநரன் ச்ருஞ்ஜயன் ஜனமேஜயன்
(பரீக்ஷித்-இன் மகன் ஜனமேஜயன் வேறொருவன்)
இந்த ஜனமேஜயன்-இன் பேரன் மஹாமன்னின் (மஹாசலனின் மகன்) மகன் உசிநரன்.
இந்த உசிநரனின் முதல் மகன் சிபி; சிபியின் மூன்றாவது மகன் மத்ரன். இந்த மத்ரன் தோற்றுவித்தது மத்ர தேசம் என்றும் கூறுகிறார்கள்
பஹாலிகர்கள் போலவே மத்ர தேசத்தவர்களும் குரு-பாஞ்சால மற்றும் மற்ற கங்கைப்புர அரசக் குடும்பங்களால் ஒரு படி கீழானவர்களாகவே பார்க்கப் படுகின்றனர்.
புராணங்களில் இரண்டு மத்ர அரசர்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஒருவர் நாம் அனைவரும் அறிந்த சல்லியன். இவர் பாண்டுவின் மனைவி மாத்ரியின் (இதுவும் காரணப் பெயர்தான் - காந்தார தேசத்துப் பெண் காந்தாரி; மத்ர தேசத்தின் பெண் மாத்ரி) சகோதரர். பாண்டவருக்கு உதவ வந்து துரியோதனனுக்காகப் போரிட நேர்ந்ததும், கர்ணனுக்குத் தேரோட்டியதும், பின்னர் கௌரவர்களின் சேனாதிபதியாகப் படை நடத்தியதும் நாம் அனைவரும் அறிந்ததே.
மற்றொரு பிரபலமான மத்ர தேச அரசர் சல்லியனுக்கும் பல காலம் முந்தையவர். அவர் பெயர் அஸ்வபதி. இந்தப் பெயரைச் சொன்னால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது கடினம். ஆனால், இவரது மகள், மருமகனின் பெயர் இந்தியா முழுவதும் அனைவரும் அறிந்ததே. அவர்கள் சாவித்ரி-சத்யவான் (இவர் சால்வ தேசத்தைச் சேர்ந்தவர்) ஆகியோர் தான். இந்த அஸ்வபதியின் மனைவியின் பெயர் மால்வி. இந்த அஸ்வபதியின் மகன் தன் தாய் மால்வி-யின் பெயராலேயே மால்வ தேசம் உண்டானதாகவும் குறிப்பிடப்படுகிறது.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 4:40 PM | Message # 143 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| த்ரிகர்தம் -- ஜலந்தர்
த்ரி என்றால் மூன்று; ‘கர்தம்’ என்றால் குழி அல்லது பள்ளம் [ஹிந்தி மொழியில் ‘காடி’ (घाटि – ghati – பள்ளத் தாக்கு) என்ற வார்த்தை இதிலிருந்து வந்தது தான்]. இங்கு மூன்று நதிப்பள்ளத்தாக்குகளை இது குறிக்கிறது. அந்த மூன்று நதிகள் சட்லஜ், பியாஸ், ராவி ஆகியவையே. இது இன்றைய ஹிமாசலப் பிரதேசமாக அழைக்கப்படும் பகுதி. த்ரிகர்தம் என்ற இந்த இடத்தின் முக்கியப் பகுதி ஹிமாசலத்தின் காங்ரா(டா) மாவட்டம்தான். இதன் தலைநகராக விளங்கியது ப்ரஸ்தலம் என்ற பெயரில் விளங்கிய இன்றைய பஞ்சாப் மாநில நகரமான ஜலந்தர் தான்.
பானினியின் அஷ்டத்யாயி-இல் பொதுவாக த்ரிகர்த்தம் ஆறு பகுதிகளை உள்ளடக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. அவை..
(1) கௌண்டோபரத் (2) தண்டகி (3) கௌஷ்டகி (4) ஜலமணி (5) ப்ரஹ்மகுப்தா (6) ஜானகி
இந்த பகுதி வேறுபாடுகள் பற்றி வேறு எங்கும் குறிப்புகள் கிடைக்கவில்லை.
த்ரிகர்தர்களைப் பற்றிய புராண குறிப்பு என்றால் அது ப்ரஹ்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்படும் ராஜனக பூமி சந்த் என்பவரைப் பற்றியதே. (ராஜனக என்பது சக்ரவர்த்தி என்பது போன்ற பட்டப் பெயர்) இவர் கடோச வம்சத்தைத் தோற்றுவித்தவர். சந்திர வம்சத்தைச் சேர்ந்த இவர் பார்வதி தேவிக்கு அசுரர்களை வெல்ல உதவியதால் அதற்குப் பரிசாக இந்த த்ரிகர்தம் அவருக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இவருடையக் காலமாகக் குறிப்பிடப்படுவது கி.மு. 4300.
இந்த வம்சத்தினர் பின்னர் 4 கிளை வம்சங்களாகப் பிரிந்து ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதையும் ஆண்டு வந்துள்ளனர். அந்த வம்சங்கள் ஜஸ்வால், குலேரியா, சிபையா, தாட்வால் ஆகியவை.
ராமாயணத்திலும் த்ரிகர்த ராஜா ராமருடன் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் த்ரிகர்த வம்சத்தின் 234-ஆவது ராஜா சுசர்ம சந்த்ரன் மஹாபாரதத்தில் கௌரவர்கள் சார்பில் போரிட்டு அர்ஜுனனால் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. த்ரிகர்தர்களுக்கும் விராட மத்ஸ்ய மன்னர்களுக்கும் தொடர் பகை. கீசகன் இறந்ததைத் தொடர்ந்து விராட தேசத்தின் பலம் குன்றியதை அறிந்த சுசர்மன் ஒரு பக்கத்தில் இருந்து தாக்க அவனுடன் போர்புரிய விராட மன்னன் சென்ற பொழுது கௌரவர்கள் விராட தேசத்தின் மீது போர் தொடுத்தனர். அவர்களை விராட மன்னனின் மகன் தடுத்து நிறுத்தினான். அவனுக்கு உதவியாக ப்ருகன்நளை (அர்ஜுனன்) வந்தது நாம் அறிந்ததே. மஹாபாரத யுத்தத்தின் பொழுது த்ரோணர் சக்ரவியூகம் அமைத்து தர்மரை கைது செய்ய நினைத்த பொழுது அர்ஜுனனை அங்கிருந்து அகற்ற சுசர்மன் அவனை வலிந்து தனியாக யுத்தம் செய்ய அழைத்து அலைக்கழித்தான். அங்கிருந்து சுசர்மனைத் தொடர்ந்து அர்ஜுனனும் வெகு தொலைசில் செல்ல சக்ர வியூகத்தைப் பிளந்து அபிமன்யு உள்நுழைய அந்தப் பிளவை ஜயத்ரதன் அடைத்தான். சக்ரவியூகத்தில் மாட்டிய அபிமன்யு கொல்லப்பட்டான். தற்போதைய காங்டா கோட்டை இந்த சுசர்மனின் காலத்திலேயே கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. மஹாபாரதப் போருக்குப் பின் இது பீமன் கோட்டை என்று வழங்கப்பட்டது.
அலெக்ஸாண்டருடன் போரிட்ட போரஸ் காந்தாரத்தை ஆண்டாளும் கடோச் வம்சத்தினரால் அவர்களைச் சேர்ந்தவனாக (இராஜா பரமானந்த சந்த்ரன் என்ற பெயரில்) குறிப்பிடப்படுகிறான். பின்னர் அசோகரிடம் முல்தான் பகுதியை இழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
பின்னர் நிகழ்ந்த அரேபிய மங்கோலிய படையெடுப்புகளிலும் கடோச் வம்ச அரசர்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். தைமூரின் படையுடன் ராஜனக ரூப்சந்த் சண்டையிட்டுத் தடுத்ததால் துக்ளக் இந்த வம்சத்தினருக்கு ‘மியான்’ என்ற பட்டத்தைத் தந்தனர்.
முகலாயர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 1600-வரை முகலாயர்களால் கூட காங்டா கைப்பற்றப் படவில்லை. 1620-ஆம் ஆண்டு தான் காங்டா முகலாயர் வசம் வந்தது. பின்னர் 1700-இல் கடோச் வம்சத்தினர் குரு கோவிந்த் சிங்-உடன் சேர்ந்து ஔரங்கசீப்-இடம் இருந்து காங்டா-வை மீண்டும் கைப்பற்றினர்.
1775-1820 வரை ஆண்ட இரண்டாம் ராஜா சன்சார் சந்த் –இன் ஆட்சி தான் பிற்கால கடோச் வம்சத்தின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதே சன்சார் சந்த்-இன் காலத்திலேயே இந்த வம்சம் இதன் சீரையும் இழந்தது என்பது தான் இதில் முரண்நகை.
காஷ்மீரம் போலவே இந்த கடோச வம்சத்தினரும் தற்போது வரைத் தங்கள் வம்சாவழியை எழுதிவைத்துள்ளனர். இந்த வம்சாவழியில் 500 அரசர்களின் பெயர்கள் வரிசையாக எழுதிவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இவற்றை கற்பனையாக எழுதப்பட்டவை என்று கருதுகின்றனர். ஆனால், இவற்றை ஓரளவுக்கு நம்பலாம் என்று சிலர் கருதுகின்றனர். அதற்கான காரணங்களாக அவர்கள் கூறுவது, இதில் 234-ஆவதாக வரும் சுசர்மன் மஹாபாரத காலமான கி.மு. 3300-ஆவது வருடமாகக் கொண்டு ஒரு அரசருக்கு சுமார் 20-25 ஆண்டுகள் கொண்டால் தற்போதைய 500 மன்னர்கள் வர சுமார் 5000 ஆண்டுகள் ஆகும் (265 *20 = 5300 ஆண்டுகள் - சில மன்னர்கள் இளைய சகோதர்களாகவும் இருந்து குறைந்த காலம் ஆள சாத்தியம் இருப்பதால்) என்பதால் இந்த வம்சவழி சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், மேலும் பழம் பெருமை ஒன்றே கொள்கையாக இருந்தால் வேறு பெரிய ராஜாகளின் வம்சமாகக் கூறிக் கொள்ளாமல் பெருமளவில் எங்கும் குறிப்பிடப்படாத த்ரிகர்தர்களைச் சொல்ல அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 4:41 PM | Message # 144 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| கேகயம் அல்லது கைகேயம்
கேகயம் அல்லது கைகேயம் என்பது வடமேற்கு பஞ்சாபில் காந்தார தேசத்திற்கும் பியஸ் நதிக்கும் இடையில் உள்ள பகுதி.
கைகேயத்தைப் பற்றிப் பல புராண இதிகாசங்களில் குறிப்புகள் உள்ளன.
ரிக் வேதத்தில் கைகேயர்கள் பருஸ்னி (தற்போதைய ராவி நதி) நதிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்களாகக் குறிக்கப் படுகின்றனர். விதேகத்தைச் சேர்ந்த ஜனகரின் சமகாலத்தவராகக் குறிப்பிடப்படுவர் கைகேய மன்னர் அஸ்வபதி. சதபத ப்ரமானத்திலும் சாண்டோகிய உபநிஷத்திலும் கூட கைகேய மன்னர் அஸ்வபதி குறிப்பிடப்படுகிறார். ஜனகரைப் போலவே அஸ்வபதியும் அரசராக இருந்தாலும் யோகியாகவும் கருதப்படுகிறார். ப்ரமாணங்களில் இவர் அர்ஜுன ஔபவேசி, கௌதமர், சத்யாக்ஞ பௌலௌஷி, மஹாசல ஜாபாலா, புதிலா அஸ்வதரஷ்வி, இந்த்ரத்யும்ன பல்லவேயர், ஞான சர்கரக்*ஷ்யர், ப்ராசின்ஷலா, அவுபமன்யவர், அருணி உத்தாலகர் ஆகியோருடன் நடந்த உரையாடல்களால் குறிப்பிடப்படுவதன் மூலம் அவர்களின் சமகாலத்தவராக தெரிகிறது.
ராமாயணத்தின் தசரதனின் மனைவியும் பரதனின் தாயுமான கைகேயி நாம் அனைவரும் ஏற்கனவே அறிவோம். பெயரிலிருந்தே அவர் கைகேய நாட்டைச் சேர்ந்தவர் என்று அறியமுடியும். அந்யந்தண ராமாயணத்தில் கைகேயி அஸ்வபதியின் மகளாகக் குறிப்பிடப்படுகிறார். ஜனகரின் சமகாலத்தவர் என்பதால் இதற்குச் சாத்தியம் உண்டு. வால்மீகி ராமாயணத்தில் கைகேய ராஜ்ஜியம் சௌதாமா (தற்போதைய சரேஞ்ஜஸ்) நதியைத் தாண்டி, ராஜக்ரஹம் அல்லது கிரிவ்ரஜ நகரத்தைத் தலைநகராகக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இது ஜீலம் நதிக்கரையில் அமைந்த கிரிஜக் என்ற ஜலால்பூராக இருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் (குறிப்பக கன்னிங்ஹாமின் Ancient Geography of India- என்ற புத்தகத்தில்) கருதுகின்றனர்.
பாகவதத்தைப் பொறுத்தவரை கைகேயர்கள் யயாதி-யின் நான்காவது மகன் அனு-வின் வம்சத்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மத்ர தேசத்தைப் பற்றி எழுதும் பொழுது அனுவின் வம்ச வழியைக் குறிப்பிட்டிருந்தேன். அதை மீண்டும் பார்ப்போம்..
யயாதியின் நான்காவது மகன் அனு; இந்த அனுவின் வம்சம் பின் வருமாறு:
அனு சுபநரன் காலநரன் ச்ருஞ்ஜயன் ஜனமேஜயன் (பரீக்ஷித்-இன் மகன் ஜனமேஜயன் வேறொருவன்)
இந்த ஜனமேஜயன்-இன் பேரன் மஹாமன்னின் (மஹாசலனின் மகன்) மகன் உசிநரன்.
இந்த உசிநரனின் முதல் மகன் சிபி; சிபியின் மகன்கள் நால்வர். அவர்கள் (1)வ்ரஸ்த்ரபன் (2) சுதிரன் (3) மத்ரன். சிபியின் நான்காவது மகன் ஆத்ம-தத்வ கேகயன் என்று பாகவதம் கூறுகிறது.
ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் அன்வர்கள் என்பது யயாதியின் மகனான இந்த அனு-வின் வம்சமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இவர்கள் இரானிய வம்சமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.
விஷ்ணு புராணம், கைகேயர்கள் விதிஸா நதியைத் (தற்போதைய ஜீலம் நதி) தாண்டி கைகேயம் அமைந்ததாகக் குறிப்பிடுகிறது. பெரும்பாலான் வரலாற்று ஆசிரியர்கள் கைகேயம் பாகிஸ்தானின் ஜீலம், ஷாபூர், குஜரத் பகுதிகளைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
மஹாபாரதத்தில் கைகேயர்கள் இருபிரிவினராக கௌரவர், பாண்டவர் சார்பில் போரிட்டனர். வ்ரிஹத்க்ஷத்ரன் தலைமையில் ஐந்து சகோதரர்கள் பாண்டவர் சார்பில் போரிட்டனர் (வேறு சில புராணங்களில் இவர் பெயர் த்ருஷ்டகேது என்றும் குறிப்பிடப்படுகிறது). இவர்கள், பாண்டவர்களைப் போலவே பங்காளி சகோதரர்களால் நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். பாண்டவர்கள் கௌரவர்களுக்கு எதிராக யாரையெல்லாம் தங்களுடன் சேர்க்கலாம் என்று யோசிக்கும் பொழுது க்ருஷ்ணர் முதலில் குறிப்பிட்டது இந்த ஐவரையே. இவர்களை நாட்டைவிட்டுத் துரத்திய பங்காளி சகோதரர்கள் துரியோதனனை ஆதரித்தனர். இவர்கள் கர்ணன் படைத்தலைமை வகித்தபோது அவனுக்கு உதவியதாகவும் அப்பொழுது அர்ஜுனனால் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மஹாபாரதத்தில் குரு வம்சத்தில் பல அரசர்களின் மனைவியராகவும் கைகேயப் பெண்கள் குறிப்பிடப்படுகின்றனர். குறிப்பாக புரு-வின் மகன் ஜனமேஜயனின் கொள்ளுப்பேரன் ஸர்வபௌமன் கைகேய இளவரசி சுந்தா-வைக் கவர்ந்து வந்துத் திருமணம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ப்ரதீபனின் தாத்தா பீமசேனனின் மனைவி குமாரி-யும் கைகேயத்தைச் சேர்ந்தவரே.
தவிர, பாண்டவர்கள் வனவாசம் செய்த விராட தேசத்தின் மஹாராணி சுதேஷனா-உம், அவளுடைய அண்ணன் கீசகனும் மற்ற 105 சகோதரர்கள் உபகீசகர்களும் கைகேயர்களே. (கீசகன் கொல்லப்பட்டதும் அவன் உடலுடன் சைரிந்திரியை (த்ரௌபதி) ’சதி’யாக எரிக்க வேண்டும் என்று வற்புறுத்திய 105 உபகீசகர்களையும் பீமன் கொன்றதாகக் குறிப்பிடப்படுகிறது). ஆனால், இவர்களைக் குறிப்பிடும் பொழுது சூத கைகேய மன்னரின் புதல்வர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களின் தாய் மால்வி (மால்வ தேசத்தைச் சேர்ந்தவர்).
அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின் பொழுது காந்தாரத்தின் அம்பி குமாரன் அலெக்ஸாண்டருடன் பணிந்ததாகப் படித்துள்ளோம். அதற்குக் காரணமாகக் கூறப்படுவது அலெக்ஸாண்டர் கைகேயத்தை வென்று அதைக் காந்தாரத்துடன் இணைத்து அதை அம்பி-யின் பொறுப்பில் விடுவார் என்று கூறுகின்றனர். அப்பொழுது கைகேய நாட்டை ஆண்டவர் மன்னர் பர்வதேஸ்வரர்; இவரது மற்றொரு பெயர் போரஸ். இவருக்கும் அம்பிக்கும் இருந்த பகையை அலெக்ஸாண்டர் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. [போரஸ்-ஐ த்ரிகர்தத்தின் கடோச் வம்சமும் சொந்தம் கொண்டாடுகிறது.] பின்னர், போரஸ் சாணக்கியரின் ஆலோசனையின் பேரில் சந்த்ரகுப்தருக்கு உதவி அவர் நந்தர்களை அகற்றி மௌரிய வம்சம் உருவாக உதவினார். நந்தர்களின் மந்திரிகளில் ஒருவரான ராக்ஷசனால் போரஸ் (சந்திரகுப்தருக்கு பதிலாக தவறுதலாகக்) கொல்லப்பட்டதாகக் கூறுவர். போரஸ்-இன் மகன் பெயர் மலையகேது என்று கூறுவர்.
கொங்கணப் பகுதிகளிலும் கைகேயர்கள் இருந்ததாக சில குறிப்புகள் உள்ளன. முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலைக் கோயிலின் தலவரலாறு அக்கோவில் கைகேய மன்னன் ’கார்த்தவீர்யாஜுன’னால் புணருத்தாரணம் செய்யப்பட்டதாகக் கூறுகிறது. கார்த்தவீர்யார்ஜுனன் கொங்கணம் பகுதியைச் சேர்ந்தவன். அவன் பரசுராமரால் கொல்லப்பட்ட்தை நாம் புராணங்களில் படித்திருப்போம்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 4:41 PM | Message # 145 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| சிந்து தேசம்
ஸிந்து நதியைப் பற்றிப் புராணங்களிலும் இதிகாசத்திலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. அதேபோல் மேற்கத்திய தேசக் குறிப்புகளும் சிந்துவைப் பற்றிப் பல குறிப்புகள் கூறுகின்றன.
இந்த சிந்து நதியின் மையப்பகுதியில் ஐந்து நதிகள் கூடுமிடத்தில் இருந்தது தான் இந்த சிந்து தேசம். இது இன்றைய பாகிஸ்தானில் குறிப்பாக வடக்கு முல்தான் பகுதியில் ஆஃப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியாகும். அக்னிபுராணத்தில் பாரத வர்ஷத்தைக் குறிப்பிடும் பொழுது கடலுக்கு வடக்கில் ஹிமாலத்தின் தெற்கே 9000 யோஜனைகள் கொண்டதாகக் குறிப்பிடுகிறது. இதன் முக்கிய மலைத் தொடர்களை குலபர்வதம் என்று குறிப்பிட்டு 7 மலைத் தொடர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் பாரியாத்ரம் என்பது ஆரவல்லி மலைத் தொடரைக் குறிப்பதாகும். இந்த ஆரவல்லித் தொடர் பகுதியில் ஸிந்து தேசம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. உலக நாகரிகத் தொடக்கப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விடத்தில் சிறப்பாக ஒரு நாடு இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.
ராமாயணத்தைப் பொறுத்தவரை, ராமருக்கு ராகவன் என்ற பெயர் உண்டு. இதன் பொருள் ரகு வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதாகும். காளிதாசரின் ரகுவம்சத்தில் ரகு மஹாராஜர், படலாவதி நதியைக் கடந்து பாரியாத்ரதின் அபராந்த மலை வழியாக பஹாலிக தேசத்தை அடைய சிந்து தேசத்தை கடந்ததாகக் குறிப்பிடுகிறது.
சிந்து தேசம் சில இடங்களில் சிவி(பி) தேசம் என்று சிபிச் சக்ரவர்த்தியின் பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஸிந்து தேசத்தவர்களுக்கு சைந்தவர் (சிபி வம்சத்தவர்) என்ற பெயரும் உண்டு. சிந்து தேசத்தைத் தோற்றுவித்தவன் சிபி-யின் மகன் வ்ருசத்ரபன் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் தலைநகரம் வ்ருசத்ரபுரம்; இது இன்றைய பஞ்சாப் (பாகிஸ்தான்) மாநிலத்தின் மிதான்கோட் நகரம்.
மஹாபாரதத்தில் ஸிந்து தேசம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ஸிந்து மன்னன் ஜயத்ரதன், துரியோதனனின் சகோதரி துஸ்சலையை மணந்தவன். துஸ்சலையைத் தவிர இவனுக்கு காந்தார காம்போஜ இளவரசிகளும் மனைவியர். பாஞ்சலியை மணக்கப் சுயவரப் போட்டியில் தோற்றவர்களில் இவனும் ஒருவன். அப்பொழுது, பாஞ்சாலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மிகவும் அவமானப் பட்டவன். தொடர்ந்த பகையில் பாஞ்சாலர்கள் மீதும் பாஞ்சாலியை மணந்த பாண்டவர்கள் மீதும் கடும் வன்மம் கொண்டிருந்தான். சக்ர வியூகத்தைப் பிளந்து அதில் நுழைந்த அபிமன்யுவைக் காக்க விழைந்த பாண்டவர்களைத் தான் பெற்ற வரத்தின் உதவியால் தடுத்து, சக்ரவியூகத்தை மூடியவன். மறுநாள், சூரிய அஸ்த்மனத்திற்குள் அவனைக் கொல்ல அர்ஜுனன் சபதம் செய்து அவனைக் கொன்றான். ஜயத்ரதனின் தந்தையின் பெயர் வ்ருத்தக்ஷ்ரதன். அவன், தன் மகனின் தலை மண்மீது விழக் காரணமாக இருந்தவன் தலை வெடித்துச் சிதற வேண்டுமென வரம் பெற்றிருந்தான். அர்ஜுனனின் அம்பு ஜயத்ரதனின் தலையைக் கொய்து வ்ருத்தக்ஷ்ரதன் மடியில் விழ, அதிர்ச்சியில் எழுந்த அவன் மடியிலிருந்து ஜயத்ரதனின் தலை மண்ணில் விழ, அவனும் மடிந்ததாக பாரதம் கூறுகிறது. ஜயத்ரதன் சிந்து தேசத்தின் மன்னனாக இருந்தாலும் அவன் கட்டுப்பாட்டில் 10 தேசங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக சிவி வம்சத்தவர் சிவ வழிபாடு செய்பவர்களாக மஹாபாரதமும் மற்றக் குறிப்புகளும் தெரிவிக்கின்றன. மஹாபாரதத்தில் உபமன்யு என்ற முனிவரைச் சைவ சமயத்தைக் கடைபிடிப்பவர் அதிலும் குறிப்பாக ’முண்டகர்’ (தலையை முழுங்க மழித்தவர்கள்) என்று குறிப்பிடப்படுகிறது. உபமன்யுவின் மகன் அல்லது வம்சத்தவர் தான் சாமவேதத்தில் குறிப்பிடப்படும் ஔபமன்யர் என்று காந்தார தேசத்தின் குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தேன். மஹாபாரதத்தில் ஜயத்ரதனும் அவன் தந்தையும் சிவனிடம் வரம் பெற்றதாகவே குறிப்பிடப்படுகிறது. அலெக்ஸாண்டரின் குறிப்புகளிலும் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்களையும் காம்போஜர்களையும் ‘தலை மழித்தவர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது.
அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப் பின் போரஸ் மன்னனின் மகன் கட்டுப்பாட்டில் இருந்த சிந்து தேசம், பின் மௌரியர்களால் கைப்பற்றப்பட்டு, அவர்களுக்குப் பின் சுங்க வம்சத்தின் சுங்க மித்ரன் மற்றும் அவன் மகன் புஷ்யமித்ரன் ஆகியோர் வசம் இருந்ததாக புத்த மத நூல்கள் குறிக்கின்றன.
புத்தமதத்தினரின் ஜாதகக் கதைகளில் சிபி மன்னனின் தலைநகரம் அரிஷ்டபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீன யாத்ரிகர்கள் பாஹியான், க்ஷுவன்சான், யுவான்சுவாங், சாங்யுன் ஆகியோரின் குறிப்புகளில் சிவி வம்சத்தவரை ஒட்ட்யானா பகுதி (ஸ்வாட் பள்ளத்தாக்கிற்குத் தெற்குப் பகுதியைக் குறிக்கும்) என்றுக் குறிப்பிடுகிறார்கள். அரிஷ்டபுரம் க்ரேக்கர்களால் (டால்மி) அரிஸ்டொபொத்ரோ என்று குறிப்பிடுகிறது.
மத்ஸ்ய புராணம் சிந்து நதி சிவபுரம் (சிவிகளின் நகரம்) வழியாகப் பாய்வதாகக் குறிப்பிடுகிறது.
யுவான் சுவாங்-இன் குறிப்புகளில் வசுந்தரன் என்ற போதிச்சத்துவரின் கதைக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அல்-பிருனி இந்த மன்னனை ராஜஸ்தானின் சித்தூரைச் சேர்ந்தவராகக் குறிப்பிடுகிறார்.
புத்த ஜாதகக் கதைகளில் சிபிக்களின் தலைநகரமாக மற்றொரு நகரமும் குறிப்பிடப்படுகிறது. அது ரோர்கா என்று தற்போது அழைக்கப்படும் ரோரி. பல்லதிய ஜாதகக் கதைகளில் இந்த ரோரியின் அரசனாக ரூரக் என்ற ருத்ராயனன் குறிப்பிடப்படுகிறான். இவன் இஷ்வாகு-வின் வம்சத்தைச் சேர்ந்தவனாகக் குறிப்பிடப்படுகிறான். இந்த ரூரக்-இன் மகன் சிகண்டி-யின் (மகாபாரத சிகண்டி அல்ல) காலத்தில் கடும் புயல் அடித்து இந்த நகரம் அழிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சுங்க வம்ச ஆட்சிக்குப் பின்னர் ரோர் (ரூரக்-இன் திரிபு) வம்சத்தவர்களால் இது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
அராபியர்கள் ரோர்-களை ’அரோர்’ என்று அழைத்தனர். அரேபியப் படையெடுப்பிற்குப் பின்னர் அரோர் என்ற பெயரே நிலைத்தது. பஞ்சாபின் அரோரா-க்கள் இவர்கள் வம்சத்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் அரேபியப் படையெடுப்பின் போதே சிந்தி-க்கள் இராஜஸ்தான் ஹரியானா பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். ஹரியானாவின் ஜஜ்ஜர்-களும் சிந்து (சிபி-யின்) வம்சத்தவர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
அன்றும் இன்றும், இந்திய பாகிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக பல சிந்தி-க்கள் இருந்து வந்துள்ளனர்/இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்களாக ஜின்னா, பூட்டோ, கிலானி, ஜியா-உல்-ஹக், க்ருபாளினி, அத்வானி, ஜெத்மெலானி என்று பலரையும் குறிப்பிடலாம்.
நன்றி வேங்கட ஸ்ரீநிவாசன்
endrum anbudan
vijiram
Message edited by rams - Sunday, 16 Feb 2014, 4:42 PM |
|
| |
Nathasaa | Date: Sunday, 16 Feb 2014, 5:19 PM | Message # 146 |
 Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| thank you for sharing the information ram
|
|
| |
meyyammai | Date: Monday, 17 Feb 2014, 11:40 AM | Message # 147 |
Private
Group: Checked
Messages: 11
Status: Offline
| thank you Ram
|
|
| |
rams | Date: Monday, 17 Feb 2014, 2:03 PM | Message # 148 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| நேற்று வலைத்தமிழுக்கு சென்னையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அனுப்பி பகிரக் கேட்டுக்கொண்டார்கள். நண்பர் வீட்டில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போகிறவர்கள். எனவே காலையில் தனியார் வாகனம் வந்து குழந்தையை பள்ளிக்கு ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். நேற்றும் அதன்படியே நண்பர் அவரின் மாமியாரை வெளியில் நின்று குழந்தையை வாகனத்தில் அனுப்பச் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தார். வழக்கமாக வரும் நேரத்தில் ஐந்து நிமிடம் முன்பே ஒரு வாகனம் வந்தது, ஆனால் அதில் தினமும் வரும் பக்கத்து தெருவில் இருக்கும் இரண்டு குழந்தைகள் இல்லை. நண்பரின் மாமியார் சந்தேகப்பட்டு பணிப்பெண்ணை எங்கே அந்த இரண்டு குழந்தைகள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சில காரணங்களை சொல்லி மழுப்பியுள்ளார் குழந்தையை அழைக்க வந்த பெண். திருப்தி அடையாத நண்பரின் மாமியார் மருமகனை சத்தம் போட்டு கூப்பிட, நண்பர் வந்து விபரம் கேட்க ஆரம்பித்தவுடன், முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். எனவே அவர் சுதாரிப்பதற்குள் வாகனம் வேகமாகப் போய்விட்டது. பின்புறம் பார்க்கையில் அந்த வாகனத்திற்கு வாகன எண் (Registration number plate) இல்லாமல் இருந்துள்ளது. இவர்கள் கொஞ்சம் சுதாரிக்காமல் விட்டிருந்தால் வந்த வட இந்திய வாகன ஓட்டுனரும், தமிழ் பேசும் பணிப்பெண்ணும் குழந்தையை கடத்தியிருப்பார்கள். நண்பர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெற்றோர்களே! சென்னை நாளுக்கு நாள் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் மாறி வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. எதையும் அசட்டையாக இல்லாமல், விழிப்புணர்வுடன், எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்.
Parents beware!!! My friend Radhika had a scary experience this morning and in our own Chennai. Beware parents.. Pls be very cautious in sending across kids in cab to school. Had a terrible experince today mrng.. Jus like a regular day, my kid was waiting outside with my MIL to board his school cab.. 5 minutes earlier a new cab came in with no school board with a new driver and attender.. As my kid is usually the last pick up, my mil had a doubt and asked them abt other kids and those ppl had no answer.. my MIL was smart enuf to call me out immediately and in meantime the attender lady had took in my kid.. And the moment I came out I grew very skeptical seeing those bastards face.. they were jus lik a mere crook.. And when I started questioning them in a loud voice they immediately said sorry madam we had to go two flats beyond.. And I waited outside to see if they really pick up any kid from my street but they just flew off.. Working parents pls be very cautious when ur kids board the cabs @ mrng time.. We ll al be in a hurry to start for our work but pay attention for a minute and act immediately if u sense any difference.. The driver was like a guy from North east part of our country and the lady was Tamilian.. she had a boy cut and dressed very unpleasant..
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Monday, 17 Feb 2014, 2:04 PM | Message # 149 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| இதயம் சில உண்மைகள்...!
பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும்இருக்கும்.
(எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)
6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.
endrum anbudan
vijiram
|
|
| |
ArunMozhi | Date: Monday, 17 Feb 2014, 2:38 PM | Message # 150 |
 Major general
Group: *Checked*
Messages: 442
Status: Offline
| Thanku Ram for the info
Arun
|
|
| |