Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:08 PM | Message # 51 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பரீட்சை சமயத்தில் நம் குழந்தைகள் எப்போதும் படித்து , மிகவும் களைத்து இருப்பார்கள் .
அவர்கள் மூளைக்கு அவ்வப்போது சிறிது ஓய்வு தேவை.
ஆகவே, படிக்கும் போது , ஒரு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது ஓய்வு எடுக்கும் வகையில், ஒரு 10 நிமிடம் அவர்களுக்குப் பிடித்த பாடல் எதையாவது கேட்கச் சொல்லலாம்.
இல்லை , வரைவது பிடிக்கும் என்றால், சின்னதாக எதாவது வரையச் சொல்லலாம்.
ஒரு 3 மணிக்கு ஒரு முறை , வீட்டிற்குப் பக்கத்திலேயே அல்லது, வீட்டின் மொட்டை மாடியிலேயே , திறந்த வெளியில் , நடை பயின்று வரச் சொல்லலாம்.
அவ்வபோது , வெளிக் காற்று படுவதால், உடலும் , மனமும் புத்துணர்ச்சி பெறும்.
இவ்வாறு, அவ்வபோது, relax செய்வதால், அவர்களுக்கும், உடலளவிலும் , மனதளவிலும் , சோர்வடையாமல், உற்சாகமாக மேலும் படிக்க விரும்புவர்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:09 PM | Message # 52 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| அதே போல் , குழந்தைகளை அவ்வபோது தரையிலும் படுக்கச் செய்துப் பழக்கப் படுத்தவும்.
எப்போதும் கட்டில், மெத்தை போன்றவற்றிலேயே படுத்துப் பழகினால், வெளியில் எங்காவது செல்லும் இடத்திலும் , அந்த சுகங்களையே எதிர் பார்க்கத் தோன்றும் .
அவர்களை ஊக்குவிக்க, நாமும் அவர்களோடு, அவ்வபோது தரையில் படுத்து, உதாரணமாகத் திகழ வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் , nss, ncc போன்றவற்றில் சேர்ந்தால் , எந்த இடத்திலும் இருக்க நேரிடும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:09 PM | Message # 53 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| வீட்டில் , குழந்தைகளுக்கு , அவர்களது 7 வயதிலிருந்து ,சில சிறிய சிறிய பொறுப்புகளைக் கொடுக்கலாம், வயதுக்கு ஏற்றார் போல.
1. கடைகளிலிருந்து வரும் plastic covers, இவற்றில், உபயோகப் படக் கூடியவற்றை size வாரியாக , அழகாக மடிக்கக் கற்றுக் கொடுத்து, அதை குறிப்பிட்ட இடத்தில் வைக்குமாறு சொல்லலாம்.
2. News paper , இதை மாலை ஆனதும் , எல்லாரும் படித்து முடித்த பிறகு, அழகாக மடித்து, குறிப்பிட்ட இடத்தில் வைக்கச் சொல்லலாம் .
3. News paper உடன் வரும் pamphlets, இவற்றில் பின் பக்கம் காலியாக இருந்தால், அவற்றையும், கடைகளில் கிடைக்கும் bill, பின் பக்கம் காலியாக இருக்கும் , இவற்றையும் , ஒரு paper cutter (plastic ஆல் ஆனது ) வாங்கிக் கொடுத்து , அதைக் கொண்டு , அந்த பேப்பர் களை, வித விதமான உபயோகப் படும் சைஸில், கட் செய்து , எல்லாரும் எடுத்து உபயோகப் படுத்தக் கூடிய இடத்தில் வைக்கச் சொல்லலாம். இந்த பேப்பர்களை, ஏதாவது, லிஸ்ட் எழுதவோ, address எழுதவோ, phone நம்பர் எழுதவோ , உபயோகிக்க முடியும். இதனால், எந்த பேப்பர் ரையும் வேஸ்ட் செய்ய வேண்டாம் என்ற கருத்தும் அவர்களுக்குப் படியும்.
4. எங்கு வெளியில் செல்லும்போதும் , லைட் , fan, டிவி ,taps ,போன்றவற்றை off செய்து உள்ளதா என்று பார்க்கும் பொறுப்பைக் கொடுக்கலாம்.
5. அவர்களது லஞ்ச் பாக்சை சுத்தம் செய்வது, school shoes ஐ polish செய்வது போன்றவற்றைச் செய்யச் சொல்லலாம்.
முதல் சிறிது நாட்களுக்கு இவற்றை அவர்கள் செய்யும்போது நீங்கள் மேற்பார்வை பார்க்கலாம். செய்த பிறகு ஒரு முறை அவர்கள் அறியாமல் நீங்கள் ஒருமுறை திரும்ப செக் செய்யலாம். அவர்கள் எதை செய்தாலும் பாராட்டுவது ரொம்ப முக்கியம்.
இரண்டு குழந்தைகள் இருந்தால், பொறுப்புகளைப் பிரித்துக் கொடுக்கலாம்.
இதனால், அவர்களுக்கும் சிறு வயதிலிருந்தே பொறுப்பு வரும், நமக்கும் வேலை பளு குறையும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:10 PM | Message # 54 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை pocket money ஆக கொடுப்பவர்கள் , மாத முதலில், அந்தப் பணத்தைக் கொடுக்கும் போது, "இதில் மீத்தும் பணத்தை , உன்னுடைய உண்டியலில் போட்டு வைத்துக் கொண்டு, நிறைய பணம் சேர்ந்த வுடன், உனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் " என்று சொன்னால், அவர்கள் மிகவும் ஆர்வமாக பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள் .
அவர்களுக்கு ஒரு 13 வயது ஆகும் போது, சிறிது விவரம் வந்திருக்கும் .
அதனால், ஒரு மாதத்திற்கான வீட்டு செலவுகளை, ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டு, நீங்கள் பக்கத்தில் , குறிப்பிட்ட பணத்தோடு, உட்கார்ந்து கொண்டு, அவர்களை ஒவ்வொரு பேப்பர் கவரில் ஒவ்வொரு செலவின் பெயரையும் எழுதி ,
உதாரணமாக, 1. மளிகை
2. டெலிபோன் பில்
3. கேபிள் பணம்
4.வீடு வாடகை (அல்லது) வீட்டுக் கடன்
5.கரண்ட் பில்
போன்று , ஒவ்வொரு கவரின் மேல் எழுதி, அதற்குரிய பணம் எவ்வளவு ஆகும் என்று நீங்கள் சொல்ல சொல்ல, அவர்கள் அந்தக் கவரில் போடுமாறு சொல்லுங்கள்.
அவசர செலவுகளுக்கு, miscellaneous என்று ஒரு கவரில் போட்டு கொஞ்சம் ரூபாயைப் போட்டு வைக்கலாம்.
இதனால், அந்தந்த செலவுகளுக்கு , உரிய கவரிலிருந்து எடுத்துக் கொடுப்பது சுலபமாக இருக்கும் என்று கூறுங்கள்.
இவ்வாறு அவர்களை ஈடு படுத்துவதால் ,வீட்டின் வரவு செலவு அவர்களுக்குப் பிடிபடும். அனாவசிய செலவுகள் செய்வதற்குத் தயங்குவார்கள் .
Planningஎன்ற விஷயமும் நன்கு புரியும். இதெல்லாம் அவர்கள் பிற்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். மேற்கூறியுள்ள முறையைப் படிப்பவர்கள், இந்தக் காலத்தில் , online payments மற்றும் கிரெடிட்கார்டு இருக்கும் போது, இந்த முறை எதற்கு என்று நினைக்கலாம்.
முதலில் சிறிது காலம் அவர்களுக்கு புரிவதற்காக , இந்த முறையில் கற்றுக் கொடுத்தால், வரவு செலவு கணக்கை எப்படி சமாளிப்பது , மற்றும் திட்டமிடுதல் இவை எல்லாம் புரியும்.
சேமிப்பின் மகத்துவம் , அவசர நிலையை சமாளிப்பது ,அனாவசிய செலவுகள் செய்யாமல் இருப்பது ,எப்படி என்பதெல்லாம் புரிய நல்ல வாய்ப்பாக அமையும்.
endrum anbudan
vijiram
Message edited by rams - Thursday, 06 Feb 2014, 12:12 PM |
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:12 PM | Message # 55 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| குழந்தைகள் இப்போது பள்ளி செல்ல ஆரம்பித்து இருப்பார்கள் .
பள்ளிகளில் , அவர்கள் செய்யும் சேட்டைகளால் , ஆசிரியர்கள் அவர்களை சிறிதளவில் தண்டித்து இருக்கலாம் .
இதை வீட்டில் வந்து அவர்கள் சொல்லும் போது, முழு விவ்ரங்களையும் கேட்டு அறிந்து கொண்டு செயல் படவும். குழந்தைகள் தங்கள் தரப்பைப் பற்றி மட்டுமே சொல்வதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம்.
அதே போல் , குழந்தைகளிடம் , அவர்கள் ஆசிசிரியர்களைப் பற்றிப் பேசும்போது ,ஆசிரியர்களின் பெயர்களை மட்டும் சொல்லவோ , அவள் /அவன்போன்ற வார்த்தகளையோ உபயோகிக்க வேண்டாம் .
அவங்க , வருவாங்க இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கவும் . இதனால் , குழந்தைகளுக்கும் , ஆசிரியர்கள் மேல் மரியாதை உருவாகும் . மரியாதை குலையாமல் இருக்கும் .
அந்த ஆசிரியர் ஏதேனும் தவறு செய்து இருந்தாலும் , குழந்தைகளிடம் " அவளை , நான் வந்து எப்படி கேட்குறேன் பார் , இந்த மாதிரி எப்படி அவள் செய்யலாம் " இப்படி எல்லாம் பேசாமல் , நேரே அந்த டீச்சரிடம் சென்று தனியாக பேசவும் .
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆசிரியரின் மரியாதை கெடுமாறு நடந்து கொள்ள வேண்டாம் .
இதனால் , நாம் குழந்தைக்கும் அவர்கள் மேல் மரியாதை இல்லாமல் , தங்கள் தோழர்களுக்கும் இதைச் சொல்லி , அவர்களும் அவ்வாறே நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது .
இதே போல , வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி போன்றவர்களையும் , நம் குழந்தைகள்,அவர்களின்பெயரைச் சொல்லியோ , மரியாதை இல்லாமலோபேச அனுமதிக்க வேண்டாம் .
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:13 PM | Message # 56 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| மூன்று வயதுக்குள் குழந்தைகள் இருக்கும் வீட்டில் , பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது .
வீட்டில் உள்ள எல்லாகதவுகளின் மேல்பாகத்திலும், (tiolet, bathroom இவைகளிலும் கூட ) ஒருtowel(சிறிதளவு தடிமனாக ) ஒன்றைப் போட்டு வைக்கவும் .
இதனால் , குழந்தைகள் எந்த அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாலும் (அவர்களுக்கு மிகப் பிடித்த விஷயம் இது ), கதவு பூட்டிக் கொள்ள முடியாது .
நிறைய பெற்றோர்கள் , இந்த அனுபவத்தினால் , பெற்ற துன்பங்கள் நிறைய இருக்கும் . கதவை உடைக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் நேரிட்டு இருக்கலாம் .
இந்த அசம்பாவிதங்களைத் தடுக்க , மேற்கூறிய சிறிய யுக்தி நல்ல பலன் தரும்.
பெரியவர்கள் அந்த அறைகளை உபயோகப்படுத்த வேண்டி வரும் போது, அந்த towel ஐ எடுத்து விட்டு , பின்னர் மீண்டும் கதவு மீது போட்டு விடுவது நலம் .
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:13 PM | Message # 57 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| வீட்டில் , எந்த வயதுக் குழந்தை இருந்தாலும் , பெற்றோர் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று இது .
நமக்குக் கோபம் வரும்போது , எந்த ஒரு பொருளையும் தூக்கி எறிவது, கதவை அடித்து சாத்துவது இதைப் போன்றோ அல்லது வேறு எந்த மோசமான முறையிலோ நமது கோபத்தை வெளிப்படுத்தினால் , குழந்தைகள் (எந்த வயதினரும் ), இதை அப்படியே பின் பற்றுவார்கள் .
அதற்குப் பதில் , கோபம் வந்தால் , யாருடனும்பேசாமல் இருந்து ,நமது கோபத்தைக் காண்பித்தால், எல்லா விதத்திலும் நல்லது .
அனாவசிய வார்த்தைகளை வெளியே விட்டு , மற்றவர் மனதை புண்படுத்தாமல் இருக்கலாம் . பண்டங்களை உடைக்காமல் இருக்கலாம் . இதனால் , குழந்தைகளும் இதே முறையைப் பின் பற்றுவார்கள் .
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:14 PM | Message # 58 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Be careful when you hold your child's hand. You may not be aware of accidentally injuring them...
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:15 PM | Message # 59 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| குழந்தைகளின் வீட்டுப் பாடம் (homework) பற்றி பார்ப்போம்.
முதல் கட்டமாக , குழந்தைகளிடமோ , அல்லது அவர்கள் எதிரில் , மற்றவர்களிடமோ , "எப்போ பார்த்தாலும் , இவங்க ஸ்கூல்ல , homework கொடுத்து, கையை ஓடிக்கறாங்க " என்று சொல்லவே வேண்டாம் .
இதுவே , குழந்தைகள் மனதில் , ஹோம்வொர்க் பற்றிய ஒரு பெரிய வெறுப்பு , பயம் போன்றவை உருவாகக் காரணமாக அமைந்து விடும் .
இப்போது , அவர்களை எப்படி homework செய்ய வைப்பது என்பதைப் பார்ப்போம் .
ஸ்கூலில் இருந்து வந்தவுடன் , சாப்பிட ஏதாவது கொடுத்து , அவர்களை விளையாடச் சொல்லி விட்டு , மாலை 6 மணிக்கு மேல் , homework செய்ய உட்காரச் சொல்லலாம் .
அதைச் செய்ய , நல்ல ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் . தகுந்த டேபிள் , chair, வேறு எந்த சத்தம், அதாவது , டிவி போன்றவை இல்லாமல் , நல்ல வெளிச்சம் இவை எல்லாம் சரியாக இருக்கிறதா, என்று சரி பார்த்துக் கொள்ளவும் .
அடுத்தது , அவர்களிடம் , இந்த homework என்பது , ஸ்கூலில் சொல்லித் தந்த பாடங்களை திரும்ப ஒரு தரம் செய்யும்revisionதான் என்றும் , இதனால் , மனதில் நன்றாகப் பதியும் என்றும் எடுத்துச் சொல்ல வேண்டும் .
முடிந்த வரை அவர்களையே , எல்லா வற்றையும் செய்ய வைக்க வேண்டும் . இதை முதலிலேயே சொல்லி விட வேண்டும் .
"நீயே செய்தால் தான் , உனக்குப் புரிந்து , மனதில் நன்றாகப் பதிந்து , மீண்டும் பல தடவைப் படிக்காமல் , பரீட்சைகளில் நன்றாக மார்க் வாங்க முடியும்"என்று எடுத்துச் சொல்லவும் .
ஆனால் அதே சமயம் , "உனக்குப் புரியாததை மட்டும் நான் சொல்லித் தருவேன் , அதுவும் ஒன்று மட்டும்தான், அதைப் பார்த்து, மற்றதை நீயே செய்ய வேண்டும்" என்றும் சொல்லவும் .
எல்லாவற்றையும் நீங்களே செய்து தர வேண்டாம். அவர்களுக்கு ஒரு பொறுப்பு வராமல், ஒன்றும் புரியாமல் போய் விடும் .
அதே சமயம் ,அவர்கள் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருக்காமல், அவ்வபோது அவர்களை தூரத்திலிருந்து கண்காணித்துக் கொண்டு , சில சமயம் , கிட்டே வந்து, "எல்லாம் புரியுதா " என்றும் கேட்கத் தவற வேண்டாம் .
இப்படிச் செய்தால் , அவர்களே , பொறுப்புடன், விருப்பத்துடன் , பயம் இல்லாமல் , தானே செய்வார்கள் .
ஓரிருமுறை , தவறாக செய்தாலும் பரவாயில்லை. பள்ளியில் டீச்சர் திட்டினாலும் பரவாயில்லை. அதற்காக அடிக்காமல் , எடுத்துச் சொன்னால் , புரிந்து கொள்வார்கள் .
எப்போது எல்லாம் ,distraction இல்லாமல், ஒழுங்காகச் செய்கிறார்களோ , அப்போதெல்லாம் ,பாராட்டத் தவறாதீர்கள்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 12:15 PM | Message # 60 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| நம் குழந்தைகளை, மாலையில் பள்ளியில் இருந்து வந்த பிறகு , uniform உடையைக் கண்டிப்பாக மாற்றச் சொல்லி விடவும் .
சில தாய்மார்கள் ,இந்த uniform மறுநாள் தோய்க்க வேண்டியதுதானே , அதனால் , அதையே , இன்று போட்டுக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவதை நான் பார்த்து இருக்கிறேன் .
இதனால் , அந்த உடை, ஏதேனும் கறை பட்டோ , இல்லை கிழிய நேரிட்டோ விடலாம் . அதனால் ,வேறு உடைஅணிவதே உசிதம் .
அதே போல் , பள்ளியில் இருந்து வந்து, உண்ட பிறகு , கண்டிப்பாக ஒரு மணி நேரமாவது , நண்பர்களுடன் , வெளியில்- அதாவது பார்க் , மைதானம் போன்ற எதிலாவது ,ஓடி ஆடி விளையாடுமாறுநிர்பந்தப் படுத்தியாவது அனுப்ப வேண்டும் .
இதுதான் , உடல் நலத்திற்கும் , எலும்புகள் வலுவுறவும் உதவும் .
நான் என் மகனை இப்படித்தான் நிர்பந்தப்படுத்தி அனுப்புவேன் . வெளியில் ஒரு மணி நேரமாவது விளையாடினால் தான் , வீட்டில் கம்ப்யூட்டர் இல் ஒரு மணி நேரம் செலவிடலாம் என்று அக்ரீமென்ட் போட்டுக் கொள்வோம் .
இந்தக் காலக் குழந்தைகள் , வெளியில் சென்று விளையாடுவதே இல்லை . அதனால் , இந்த முறையை பின் பற்றிப் பார்க்கலாம் .
மேலும் , விளையாடி விட்டு வந்த பிறகு , 6 மணி இல்லை 6 1/2 மணிக்கு , பூஜை அறையில் சென்று (சாமி படத்தின் முன் ), atleast ஒரு 15 நிமிடமாவது , சிலஸ்லோகங்களைசொல்லுமாறு பணிக்க வேண்டும் .
அவர்களுக்குத் தெரியாவிடில் , நீங்கள் , ஸ்லோக புத்தகத்திலிருந்து , படித்து , அவர்களை திரும்ப சொல்ல வைக்க , நாளடைவில் , அவர்களுக்கு , மனப் பாடமாக சொல்லத் தெரிந்து விடும் .
endrum anbudan
vijiram
|
|
| |