Ram's தகவல் பெட்டகம் - Page 5 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
Ram's தகவல் பெட்டகம்
ramsDate: Thursday, 06 Feb 2014, 11:52 AM | Message # 41
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
பொதுவாக , சிறு குழந்தைகளை , விளையாட்டுக்காக , நம் தலைக்கு மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடுவோம் .

தயவுசெய்து ,இனி, இது போல் செய்ய வேண்டாம் . 

இப்படிச் செய்வதால் , குழந்தைகளின் மூளை செயல் திறன் பாதிக்கப் படுவதாக ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்களாம் . 

சில சமயம் , இந்தச் செயல் , உயிருக்கும் ஆபத்தாக முடிய வாய்ப்பு உண்டு .


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 11:53 AM | Message # 42
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்றுநுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்: * கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது. * செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன. * ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது. * இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது. * உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ' என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.

endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 11:55 AM | Message # 43
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப் பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 11:58 AM | Message # 44
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு யோசனை.

குழந்தைகளை , அவர்களது இரண்டு வயதிலிருந்து பத்து வயது வரை , இரவு படுக்கச் செல்லுமுன் ஒருமுறை , மற்றும் நடு இரவில் ஒரு முறை என்று , urine pass செய்ய வைத்தால், எந்த வயதிலும் bed-wetting பழக்கம் இருக்கவே இருக்காது.

ஆனால் , இப்போதைய தாய்மார்கள் ஒரு விபரீத வழக்கமாக , 3 வயது வரை குழந்தைகளுக்கு (இரவில் ) diaper போட்டுவிட்டு விடுகின்றனர். இது உடல் நலத்திற்கும் உகந்ததல்ல, மேலும் அந்த குழந்தைகளுக்கு controlling the urine sensation என்ற பழக்கமும் வராமலே போய் விடுகிறது. இதனால் , school க்கு செல்லும்போது பிரச்சினை ஆகிறது.

ஆகவே, இரவில், நடுவில் ஒரு முறை எழுந்திரிக்கும் சிரமத்தை பார்க்காமல் பெற்றோர் செயல்பட்டால், நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுத்த சந்தோஷத்தை நாம் அடையலாம். 

நம் குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போதோ அல்லது வேறு இடங்களுக்குச் செல்லும்போதோ , timetable ஒழுங்காக எடுத்துக் கொள்ளவில்லை என்றோ, வீட்டுப் பாடம் சரியாகச் செய்யவில்லை என்றோ, shoe சரியாக polish செய்யவில்லை என்றோ, வேறு எதற்குமோ, கிளம்பும் சமயத்தில் அவர்களைத் திட்ட வேண்டாம்.

ஏனென்றால், ரோட்டில் செல்லும்போது, நாம் திட்டியதே அவர்கள் மனதில் ரீங்காரமிட்டு, கவனம் சிதற வாய்ப்பு உண்டு . இதனால் சாலையில் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இந்த நடைமுறை பெரியவர்களுக்கும் பொருந்தும் .

மொத்தத்தில் , யார் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போதும் , வீட்டில் உள்ளவர்கள் சிரித்த முகத்தோடு வழி அனுப்புவது சிறந்த முறை.

அதே மாதிரி, காலையில் வெளியே சென்றவர்கள் , மாலையில் வீடு திரும்பியவுடன், அன்று அவர்களிடம் சொல்லி அனுப்பிய வெளி வேலைகள் முடித்தார்களா என்று, உள்ளே நுழைந்தவுடன் கேட்டுத் துளைக்காமல், அவர்கள் refresh செய்து கொண்ட பிறகு, நிதானமாக கேட்டால், எரிச்சல் வராமல் இருக்கும்.

வீட்டில் உள்ளவர்கள், நமக்கும் இதே முறையை பின்பற்ற வலியுறுத்தலாம். 

நம் குழந்தைகள் vacation சமயத்தில் , நம் உறவினர் வீடுகளுக்கு , ஒரு நாள் அல்லது 2 நாள் சென்றாலும், கிளம்புவதற்கு முன்னால், அவர்களுக்கு வேண்டிய துணிமணிகள், விளையாட்டுச் சாமான்கள், புத்தகங்கள் (கதை ), மற்ற எதுவும், அவர்களையே எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாம். 

வைப்பதற்கு முன்னர், அவர்களையே ஒரு checklist தயார் செய்யச்சொல்லி , அதன்படி எல்லாவற்றையும் பெட்டியில் (அல்லது பையிலோ ) எடுத்து வைக்கச் சொல்லலாம். அந்த checklist அவர்கள் பெட்டியில் ஒரு தனி இடத்தில் இருக்கட்டும்.

திரும்ப வரும்போது, அந்த checklist இல் உள்ளவற்றைச் சரிபார்த்து, எதையும் விட்டு விடாமல் எடுத்து வரச் சொல்லலாம்.

இவ்வாறு செய்வதால், அவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே தம் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்வார்கள். 


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 12:00 PM | Message # 45
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
சிறு வயதிலிருந்தே நம் குழந்தைகளை சின்னச் சின்ன வேலைகளைச் செய்யச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்.

இதில் முக்கியமான ஒன்றை நாம் எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.

அவர்கள் ஒரு வேலையைச் செய்தால், அதில் சில தவறுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், நாம், அவர்கள் செய்த வேலையில் உள்ள சரியானவற்றை , முதலில் , மனமாரப் பாராட்டிவிட்டு, பின்னர் அதில் உள்ள தவறுகளை, "இதை இந்த மாதிரி செய்தால், சரியாக வரும், அடுத்த முறை , அப்படி செய்துப் பார், எவ்வளவு நன்றாகத் தப்பே இல்லாமல் செய்வாய் பார் " என்று பொறுமையோடு எடுத்துச் சொன்னால் , கண்டிப்பாக அவர்கள் கேட்டு அதன்படியே செய்வார்கள்.

நம் பாராட்டைப் பெறுவதற்காகவே ஆர்வமுடன் வேலை செய்வார்கள்.

அப்படி இல்லாமல், நிறைய பெற்றோருக்கு , அவர்கள் தவறுதான் முதலில் கண்ணில் பட்டு, சரியாக செய்த பங்கைப் பாராட்டாமல், தவறை மட்டும் திட்டினால், அவர்கள் மனதில் , " ச்சே .....நம் அப்பா, அம்மாவுக்கு , நாம் என்ன செய்தாலும் பிடிக்காது, எப்போதும் திட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்" என்று ஒரு வெறுப்பு வந்து, மறுமுறை நாம் சொல்லும் வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள்.

இந்த முறை, சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் பொருந்தும்.
    குழந்தைகள் சாப்பிட மிகவும் படுத்துவார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவர சில யோசனைகள்.எந்த ஒரு பலகாரத்தையும் ஒரே மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு அலுத்து விடும். வித்தியாசத்தை விரும்புவார்கள்.உதாரணத்துக்கு, தோசை , சப்பாத்தி போன்ற வற்றை வழக்கமான வடிவத்தில் செய்யாமல், வித விதமான நாடுகள், மாநிலங்கள், முக்கோணம் போன்ற வடிவங்களில் செய்து, " இப்போ நீ அந்த நாட்டைச் சாப்டுடப்போற பார் " என்று அவர்களுக்கு ஆர்வத்தைஉண்டு பண்ணலாம். கண்டிப்பாக அவர்கள் ஆர்வத்துடன் சாபிடுவிடுவார்கள்.அதே போல், காரட் போன்ற வற்றை அப்படியே முழுதாகவோ, சிறியதாக வெட்டியோ கொடுக்காமல், நன்றாகத் துருவி, ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட்டு விடுவார்கள்.மேலும், ஒவ்வொரு சத்துள்ள பண்டத்தையும், " இதை நீ சாப்பிட்டால், உனக்கு நல்லா முடி வளரும், கண்ணு நல்லா தெரியும், விளையாட்டுகளில் முதலாக வரலாம் , படிப்பில் முதலாக வரலாம், உயரமாக வளரலாம்" போன்று பலவற்றைச் சொல்லி அவர்களைச் சாப்பிட வைக்கலாம்.அவர்களை வற்புறுத்திச் சாப்பிட வைப்பதை விட, இந்த முறைகளைப் பின்பற்றினால், நல்ல பலன் தெரிய வாய்ப்பு உண்டு.




endrum anbudan

vijiram


Message edited by rams - Thursday, 06 Feb 2014, 12:01 PM
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 12:03 PM | Message # 46
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
நாம் எப்போது வெளியில் செல்லும்போதும் , கையில் ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது ஒரு பை, கொண்டு சென்று, வெளியில் ஏதாவது சாப்பிட நேர்ந்தால், அதன் குப்பையை அந்த கவரில் போட்டு, எதிர்ப்படும் குப்பைதொட்டியில் போட்டு விடலாம்.

இந்தப் பழக்கத்தை நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தால், அவர்கள், எப்போதும், எங்கேயும் இதை கடை பிடிப்பார்கள்.

நாம் செல்லும் பஸ் அல்லது train இவற்றில் குப்பையைப் போட்டு சுற்றுபுறத்தைக் கெடுக்காமல் இருக்கலாம்.தெருக்களையும் அசுத்தப்படுத்தாமல் இருக்கலாம்.

நம் குழந்தைகளுக்கு வெளியில் எந்த வித அசுத்தத்தையும் செய்யாமல் இருப்பது நலம் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் நமது நாடும் வீடும் மிகவும் சுத்தமாக இருக்கும்.

நம் பிள்ளைகள், அவர்கள் நண்பர்களுக்கும் இதை வலியுறுத்துவார்கள்.

நம் குழந்தைகளுக்கு அவர்கள் ஆணாக இருப்பினும் , பெண்ணாக இருப்பினும் , அவர்களது 3 வயது முதலே, good touch , bad touch , முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும்.

இது ஏதோ பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்ற எண்ணம் நிறைய பெற்றோருக்கு இருக்கலாம். ஆனால் , இந்தக் காலத்தில், இருபாலர்க்கும் இது பொருந்தும்.

அவர்களுக்குத் தங்களின் மார்புப்பகுதி, கால்களுக்கு இடையில் மற்றும் பின்புறம் , இவற்றை அவர்களின் அம்மாவைத் தவிர வேறு யாரும் தொடக் கூடாது என்றும், மருத்துவர் கூட, அம்மாவின் முன்னிலையில்தான் சோதனை செய்யலாம் என்றும், வேறு யாராவது தொட நேர்ந்தால், எப்படித் தடுக்க வேண்டும் என்றும், மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து, அந்தச் செயலைத் தடுக்க வேண்டும் என்றும் சொல்லித் தர வேண்டும்.

3 வயதிலிருந்து , பெண் குழந்தைகளை , அவர்களின் அன்னை மட்டுமே குளிக்க வைக்க வேண்டும். தந்தை குளிக்க வைக்க நேர்ந்தால், அந்தரங்கப் பகுதிகளை , அக்குழந்தையே சுத்தம் செய்யுமாறு கூறலாம்.

3 வயதிலிருந்து, 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை என்று இவ்விஷயத்தை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கலாம். ஒரு 7 வயது வரை அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பிறகு, அவர்களுக்கேப் பழகி விடும். 

அப்படி ஏதாவது நேர்ந்தால், யாராக இருந்தாலும், தன்னிடம் வந்து சொல்லும்படித் தாய் வலியுறுத்தவேண்டும்.



சிறு குழந்தைகளுக்கு, அவர்களது 1 வயது முதல், திட உணவு கொடுக்கும்போது, நிறைய தாய்மார்கள் செய்வதுபோல் , குழந்தைகள் பின்னாலேயே ஓடி ஓடி , சாப்பாடு கொடுக்காதீர்கள் .

நம் பக்கத்தில், அவர்களை உட்கார வைத்துக் கொண்டு, இதிகாச , புராண க் கதைகள், மற்றும் நீதிக் கதைகள் (moral stories ), போன்றவற்றைச் சொல்லிக்கொண்டே சாப்பாடு ஊட்டினால் , இரண்டு லாபங்கள்.

ஒன்று, அவர்கள் கதை கேட்கும் ஆர்வத்தில், படுத்தாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
இரண்டு, சிறு வயதிலேயே, அவர்களுக்கு எல்லா கதைகளையும், நமது பாரம்பரியங்களையும் சொல்லிக் கொடுத்து விட்டால் , எந்த வயதிலும் அவை ஞாபகத்தில் இருக்கும்.

ஓடிக் கொண்டே சாப்பாடு கொடுத்தால், எங்கு வெளியில் சென்றாலும், அவர்கள் அதையே எதிர் பார்ப்பார்கள். நமக்கும் மிகவும் அலுப்பாக இருக்கும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 12:04 PM | Message # 47
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
குழந்தைகளுக்கு அவர்களது சிறு வயது முதலே , அவர்கள் கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டாம்.

அவர்களுக்கு
 "இல்லை, கிடையாது, முடியாது " என்ற வார்த்தைகளைக் கேட்டுப் பழக்கம் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால், பின்னர் எந்த தோல்வியையும் தாங்கும் மனப்பக்குவம் அவர்களுக்கு வரும்.


5 வயது முதலே, நாம் எங்கு கடைகளுக்குச் சென்றாலும், குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வது நலம்.

அப்போதுதான், வெளி இடங்களில், யாருடன் எப்படிப் பேசிப் பழக வேண்டும் , எந்தப் பொருட்களை எப்படி வாங்க வேண்டும், ஒவ்வொன்றின் விலை எவ்வளவு இருக்கும் என்பன போன்ற எல்லா விஷயங்களையும், அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு, பின்னர், அவர்களைத்
 தனியாக கடைக்கு அனுப்பும் போது, திண்டாடாமல் இருப்பார்கள். ஏமாறவும் மாட்டார்கள்.

இதை நீங்கள் அவர்களிடம் கவனிக்குமாறு வலியுறுத்தாமல், விளையாட்டு போல சொன்னால், நல்ல பலன் ஏற்படும்.
 


குழந்தைகளுக்கு அவர்களது 1 1/2 வயது முதலே, எடுத்தப் பொருட்களை, அதனதன் இடத்திலேயே வைத்து விடுமாறு வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.அவர்களும் உடனே கேட்பார்கள்.

பின்னர், பள்ளிக்குச் செல்லும்போது, முதல் நாளே, timetable எடுத்து வைத்துக் கொள்ளும்போது, ஒரு வரிசையில் books, மற்றொரு வரிசையில் notebooks என்றும், அவை , அன்றைய period படி அடுக்கி வைத்து, அதே வரிசைக் கிரமப் படி, திரும்ப எடுத்து வருமாறும், pencil, pen, மற்றும் எது எடுத்துச் சென்றாலும், உபயோகித்தப் பின் , மீண்டும் அதன் இடத்திலேயே வைத்து விடுமாறு வலியுறுத்திச் சொல்லுங்கள்.

அவர்கள் செய்வதை ஒவ்வொரு நாளும் கவனித்து, சரியாகச் செய்திருந்தால், உடனுக்குடன் பாராட்டி விடுங்கள்.
 தினமுமே பாராட்டலாம்.

நம்மிடம் பாராட்டைப் பெறுவதற்காகவே, அவர்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக எடுத்து வர ஆரம்பிப்பார்கள்

.இதனால், வீட்டிலும், எப்போதும், எடுத்த பொருட்கள், இடம் மாறாமல், வைக்கப்படும். எதையும், இருட்டிலும் கூட
 தேடாமல், எடுத்துக் கொள்ளலாம்.

நாம், அவர்களைத் தனியாகப் பாராட்டுவது மட்டுமன்றி, அவ்வப்போது வரும், உறவினர் , நண்பர் அனைவரின் முன்பும், அவர்களின் இந்தச் செயலைப் பாராட்டினால், மிக மிக நல்ல பலன் கிடைக்கும்.

அதே சமயம், அனைவரின் முன்பும், குழந்தைகள் செய்யும் தவறைச் சொல்லவே வேண்டாம்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 12:05 PM | Message # 48
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
நாம் காலையில் தூங்கி எழுவதற்கு, அலாரம் அடிக்காமல், எழ, ஒரு உபாயம்.

இரவு படுப்பதற்கு முன், கடிகாரத்தை , ஒரு முறைப் பார்த்து, காலையில் ,
 எத்தனை மணிக்கு எழுந்திரிக்க வேண்டுமோ , அந்த மணியை, மனதிற்குள் சொல்லிக் கொண்டு , படுத்துத் தூங்கினால், உதாரணத்திற்கு , காலை 5.30க்கு எழ வேண்டுமானால், இரவு படுக்குமுன், கடிகாரத்தைப் பார்த்து, மனதிற்குள், காலை 5.30க்கு எழ வேண்டும் என்று சொல்லிக்கொண்டுப் படுத்துப் பாருங்கள். சரியாக, 5.25க்கு தூக்கம் முழித்து விடும்.

முதலில் சில நாட்கள் பழகுவதற்காக, அலாரமும் வைத்துக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு லாபம் என்னவென்றால், எப்போதும் காலையில் எழும் போது உண்டாகும் அலுப்பு, சலிப்பு, போன்றவை அறவே இருக்காது. எழுந்திரிக்கும் போதே
 புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இதில் ஒரே ஒரு விஷயம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இரவில், நடுவில் நாம் எழ நேர்ந்தால், அல்லது, முழிப்பு வந்து விட்டால்,
 மீண்டும் ஒரு முறை, கடிகாரத்தைப் பார்த்து, காலை எழ வேண்டிய மணியை மனதிற்குள் சொல்லிக் கொண்டுப் படுக்க வேண்டும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 12:06 PM | Message # 49
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
குழந்தைகளுக்கு 3 வயதோ, அதற்கு முன்னரோ கூட , வீட்டிற்கு,நன்கு தெரிந்தவர்கள்வந்தால், அவர்களை வரவேற்று "வாங்க uncle/aunty, உட்காருங்க , தண்ணி வேணுமா ?" என்று கேட்கப் பழக்கப் படுத்தலாம்.

இதனால் , வருபவர்களுக்கும் சந்தோஷம், நமக்கும் சந்தோஷம், குழதைகளும் எல்லாருடனும் பழகியது போல் இருக்கும்.

இதை நான் சொல்வதற்குக் காரணம், நிறைய குழந்தைகள், யாரவது வீட்டிற்கு வந்தால், உடனே, அறைக்குள் புகுந்து கொள்வதை நான் பார்த்து இருக்கிறேன்.

இதனால், வருபவர்கள், மனம் நோகிறார்கள்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 12:06 PM | Message # 50
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
நாம் இந்தக் காலத்தில் , பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்குச் சமமாக , படிப்பு, விளையாட்டு ,இன்னும் பலவற்றில் சிறக்க , வளரக்க ஆர்வம் கொள்கிறோம்.

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று மார் தட்டுகிறோம்.

இதே போல் , வீட்டில்,
ஆண் குழந்தைகளையும் , சிறு வயதிலிருந்தே,வீட்டு வேலை அனைத்தையும் , வீடு பெருக்குதல், சுத்தம் செய்தல், சமையலில் உதவுதல், துணி துவைத்து, மடித்து வைத்தல் , எடுத்த பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல் ,போன்ற எல்லா வேலைகளையும் செய்யப் பழக்கினால்,கீழ்கண்ட நன்மைகள் கிடைக்கும் .

1. பெண்கள்தான் இந்த மாதிரி வேலைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அறவே இருக்காது.

2. அம்மாவுக்கு உதவியாக இருந்துப் பழகுவதால், பின்னர் தனியாக இருக்க நேரும்போது (படிப்பு விஷயமாக), மிகவும் சௌகர்யமாக உணர்வார்கள்.

3. திருமணமான பின்னரும், மனைவிக்கு உதவியாக இருக்கத் தயங்காமல், எல்லா வேலைகளையும் பங்கு போட்டுக் கொண்டு செய்வார்கள்.

இங்கு (இந்த Forum இல் ஒரு பெண் , கணவர் தனக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் , வேலைக்குப் போய் வந்து களைப்பாக இருந்தாலும், இதெல்லாம் பெண்கள் வேலை , நான் ஒன்றும் செய்ய மாட்டேன் , என்று கூறுவதாகச் சொல்லி இருந்தார், அதைப் படித்தபோது, மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது).

அதனால், சிறு வயதிலிருந்தே, ஆண்களை இப்படிப் பழக்கப் படுத்தினால், அனைவருக்கும் நலம்.



endrum anbudan

vijiram
 
Search: