காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, மோட்டாரைப் போட்டு, தண்ணீர் பாய்ச்சி, படாத
பாடுபட்டு விளைச்சலைப் பெருக்கும் பெரும் பாலான உழவர்கள்... அறுவடை
செய்தவுடனே அலுப்பும் சலிப்பும் சேர்ந்துவிட, தோட்டத்திலேயே
இடைத்தரகர்களிடம் வந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு, அடுத்த வேலையைப்
பார்க்கத் துவங்குவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.

ஒரு சிலர் மட்டுமே விற்பனையிலும் வெற்றிக் கொடி நாட்டி, தான் பட்டபாட்டுக்கு கடைசி
வரை போராடி ஓரளவுக்கு லாபத்தைப் பார்க்கின்றனர். அவர்களில் ஒருவராக
அசத்திக் கொண்டிருக் கிறார்...
தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை ரமேஷ் தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.குமரேசன் (98433-55459). அதுவும் சமவெளிப் பகுதியில்
சாத்துகுடி பயிர் செய்து சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறார். கொடைக்கானல் பேரிஜம் அணைப்பகுதி அடங் கியிருக்கும் மலையை ஒட்டிய அடிவார நிலம்;
எங்கெங்கு காணினும் பச்சைப் பசேல்; தோப்பும் துரவுமாக வளமான பூமி; போட்டது
விளையும் புதுக்கால் நிலம்; தேனினும் இனிய சுவையான நீர் என்று பல வகையிலும்
வளமான பூமியில் வேளாண்மையை மேற்கொண்டிருக்கும் பெரும் சம்சாரி
குடும்பத்தின் இளம் உறுப்பினர்தான் இந்த குமரேசன். ''சாத்துகுடி சாகுபடி, ஊருக்குப் புதுசாச்சே... எப்படி வந்தது இந்தத் துணிச்சல்?''
என்று கேட்டதுதான் தாமதம்... மடமடவென தகவல் களை பிழிய ஆரம்பித்துவிட்டார்
குமரேசன். ''ஆந்திராவில இருக்கற கூடூர் பகுதிக்கு ஒரு தரம் போயிருந்தேன். அப்ப அங்க இருக்கிற சாத்துகுடி தோட்டங்களைப் பார்த்தேன். 'நம்ம

ஊர் மலை யடிவாரத்தை ஒட்டின தோட்டத்துல எலுமிச்சையும், நாரத்தையும் ஆயிரக்
கணக்கான ஏக்கர்ல விளையுது. சாத்து குடியும் இதே ஜாதிதானே... இதை நம்ம
தோட்டத்துலயும் போட்டா ஏன் விளையாது?'னு யோசிச்சேன். அதுக் குப்பிறகு
சாத்துகுடி பத்தின தகவல் களையெல்லாம் சேகரிச்சிக்கிட்டு ஊர் திரும்பினேன். என்னோட தோட்டம், மலை அடி வாரத்துல இருக்கறதால கூட்டம் கூட்டமா காட்டெருமைங்க
மேய்ச் சலுக்கு வரும். அதனால எந்தப் பயிரை யும் சரிவர செய்யமுடியாது.
மல்பெரி பயிரிட்டா... பட்டுப்புழுங்களை முந்திக்கிட்டு காட்டுமாடுங்க
மேய்ஞ்சிடும். வீட்டுத்தேவைக் குக்கூட கறிகாய் பயிர் செய்ய முடியல. மாமரம்
நடவு செய்தோம். மாந்தளிரைப் பார்த்தா காட்டுமாடு களுக்குக்
கொள்ளைப்பிரியம். தப்பித்தவறி பெரிய மரமாகிடுச்சினா... முட்டியும்,
உரசியும் விளை யாண்டே கிளைகளை ஒடிச்சி, மரத்தைக் காலி பண்ணிடும். கரும்பு
போட்டா, இளம் பயிரா இருக்கறவரைக்கும் கடுமையா காவல் இருக்க
வேண்டியிருக்கும். அதனால காட்டெருமைங் ககிட்ட இருந்து தப்பிக்கற மாதிரியான
விவசாய பயிர் எதுனு யோசிச்சிக்கிட்டிருந்த சூழல்லதான்... 'சாத்துகுடி'
விஷயம் என் கண்ணுல பட்டுது. இதைப்பத்தி பெரியகுளத்துல இருக்கற தோட்டக்கலைத் துறை பேராசிரியருங்க, அதிகா ரிங்கனு
ஆலோசனை கேட்டப்ப... 'வேண்டாங்க, அதெல்லாம் நம்மூருக்கு சரிப்பட்டு வருமானு
தெரியல'னு சொன்னாங்க. ஆனா, எனக்கு ஒரு நம்பிக்கை... அதனால மனசத் தளர விடாம
கூடூர் போய், 'மொட்டு கட்டின சாத்துகுடி நாத்து' களை வாங்கிக்கிட்டு வந்து
நடவு செய்தோம். 98-ம் வருஷத்துல நடவு செய்த செடிங்க... இன்னிக்கு இந்த
அளவுக்கு வளர்ந்து பலன் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு'' என்று சொன்னவர்,
தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றிப் பாடமாக விவரிக்கத் தொடங்கினார். நல்ல வளம், ஆழமான மண் கண்டம், வடிகால் வசதி, நீர்ப்பாசன வசதி இதெல்லாம்
இருக்கின்ற நிலம் முக்கியம். கார, அமிலத் தன்மை 6.4 முதல் 7.5 வரையிலான
அளவுடன் நல்ல செம்மண் நிலமாக இருந்தால் மிகவும் நல்லது. நிலத்தின்
வளத்துக்கு ஏற்றபடி 18 முதல் 20 அடி வரை இடைவெளி கொடுத்து, 3 அடி நீள, அகல,
ஆழமுள்ள குழிகளை எடுத்து நன்கு ஆறவிட வேண்டும். தொழுஉரம் 10 கிலோவுடன்
மேல்மண் கலந்து குழிகளை மூடினால் நடவுக்கு நிலம் தயார். அவரவர் வசதிக்கு
ஏற்ப சொட்டுநீர், வாய்க்கால் பாசனம் என்று செய்யலாம். தோட்டக்கலைப்
பயிர்களைப் பொறுத்தவரை சொட்டுநீர் நல்ல பலனைக் கொடுக்கும். நல்ல தரமான ரகச் செடிகளை தேர்ந்தெடுத்து நடவு செய்யவேண்டும். நன்கு வறட்சியைத்
தாங்கும் ஜம்போரி ரக தாய்ச் செடிகள் மொட்டுக் கட்ட சரியானவை. தாய்ச்
செடியில் கிளை அல்லது தண்டுக்குப் பதிலாக தேவையான தனி மொட்டு பொருத்தி இனப்
பெருக்கம் செய்வதே மொட்டுக் கட்டுதல். ஒட்டுக் கட்டுதல் முறையை விட இது
சிக்கனமான முறை. மொட்டுக் கட்டு தலிலும் பல முறைகள் உண்டு. கேடய மொட்டு
(Shield Budding), சதுர வடிவ மொட்டு (Patch Budding), நீள்பட்டை மொட்டு
(Flap Budding), குழல் வடிவ மொட்டு (Ring Budding), வளைய மொட்டு (ஸிவீஸீரீ
ஙிuபீபீவீஸீரீ), துண்டு வடிவ மொட்டு (Chip Budding). தரமான செடியை
நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தின் ஈரம் தாங்கும் தன்மைக்கு ஏற்ப
செடியின் அருகில் தண்ணீர் தேங்காமல் பாசனம் செய்தல் வேண்டும். இதற்கு
பேசின் முறை ஏற்றது (பார்க்கப் பெட்டிச் செய்தி).