விவசாய தொழில்நுட்பம்
|
|
Janvi | Date: Wednesday, 01 Oct 2014, 10:13 PM | Message # 51 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| வீட்டைக் காக்கும் நாட்டு வெங்காயம்! மகசூல் ஆர்.குமரேசன் ‘வீட்டைக் காக்கும் நாட்டு வெங்காயம்! -விலை வீழ்ந்தாலும் கண்ணைக் கசக்கத் தேவையில்லை....! வெங்காய நடவு... வெங்காய விலை அநியாயத்துக்கு விழுந்து போச்சி... ஏகப்பட்ட நஷ்டம்'' என்று சில வாரங்களுக்கு முன் கோவை பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அதுகுறித்து பசுமை விகடனிலும் கட்டுரை வெளியாகியிருந்தது. 'வெங்காயத்தை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் வேண்டும்... வெங்காய ஏற்றுமதி தடையை ரத்து செய்யவேண்டும்' என்றெல்லாம் அரசுக்கு கோரிக்கை விட்டார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். இதுவரை அரசுத்தரப்பிலிருந்து உரிய பதில்கள் வந்தபாடில்லை... இதற்கு நடுவே, ''இயற்கை முறையில நாட்டு ரக வெங்காயத்தை விளைவிச்சா, விலை குறைஞ்சாலும் தாக்குப்பிடிக்கலாம்'' என்று ஆலோசனை சொல்கிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி வெங்காய விவசாயிகள் சிலர். அவர்களில் ஒருவர் காவேரிஅம்மாபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (93459-41301). சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இவர், இதுதொடர்பான கருத்தரங்கங்களுக்குச் செல்வது, விவசாயிகளைச் சந்தித்து விவரங்களைப் பெறுவது, பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளை அள்ளிக் கொள்வது என்று மிகவும் நுணுக்கமாகவே செயல்பட்டு வருபவர். ''சரியான பட்டத்துல விதைச்சா வெகுமதியை அள்ளிக்கொடுக்கும் அற்புத பயிர்தான் (சின்ன) வெங்காயம். வைகாசி-ஆனியில ஒரு பட்டம், ஐப்பசி-கார்த்திகையில ஒரு பட்டம்னு வருசத்துக்கு ரெண்டு பட்டம். இந்தப்பகுதி விவசாயிங்க இந்த ரெண்டு பட்டத்துலதான் பெரும்பாலும் வெங்காயம் பயிர் செய்வாங்க. எங்க பகுதியில விளையற காய் நல்லா கெட்டியா இருக்கிறதால, ஆறு மாசம் வரைக்கும் பாதுகாத்து, நல்ல விலை வரும்போது வித்துக்கலாம். அதனால எங்களுக்கு வெங்காயம் லாபமாத்தான் இருக்கு. களையெடுத்தல் நடவு செய்த 60 முதல் 80 நாளுக்குள்ள அறுவடை முடிஞ்சிரும். வெங்காயத்தை நேரடியாவோ... நாத்துவிட்டோ நடவு செய்யலாம். நேரடி நடவுல விளையற வெங்காயம் கெட்டியா இருக்கும். பட்டறை போட்டு சேமிச்சி வச்சா ரொம்ப நாளைக்குத் தாங்கும். நாத்து விட்டு நட்டா சேமிச்சி வைக்க முடியாது. காயவைச்சி உடனே வித்துறணும். ஆனா, நாத்து விடுறதுல காய் பெருசா வரும். வெளைச்சலும் கூடுதலா கிடைக்கும். அதுக்காகவே சில ஏரியாவுல அந்த முறையில பயிர் செய்றாங்க. ஆனா, விலை குறையும்போது தாக்குப்பிடிக்க முடியாம போயிடுது. போன வைகாசி பட்டத்துல ரெண்டு ஏக்கருல கோ-4 ரக வெங்காயத்தை இயற்கை முறையில வெள்ளாமை பண்ணிணேன். பதினாறு டன் கிடைச்சுது. மனு (பத்து கிலோ) எம்பது ரூவாய் ரேட்டுக்கு 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கு வித்தேன். செலவு 33 ஆயிரம் போக 95 ஆயிரம் லாபம். ஊடுபயிரா பூசணி போட்டிருந்தேன். அது 120 நாள் பயிர். அதுல 9 டன் கிடைச்சுது. டன் ரெண்டாயிரம் ரூபாய்னு 18 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. செலவு மூவாயிரம் போக, 15 ஆயிரம் லாபம். மொத்தமா ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 1 லட்சத்தி 10 ஆயிரம் ரூபா கிடைச்சுது. இந்தத் தடவையும் ரெண்டு ஏக்கருல வெங்காயம் நட்டிருக்கேன். வெங்காய விதையையும் உற்பத்தி பண்றேன். வெங்காயத்தை விதைக்காக வளர்த்தா 120 நாள் ஆகும். வெங்காயத் தாள்ல இருந்து வரும் தண்டுல பூ பிடிக்கும். அது காய்ஞ்சி, தண்டு மஞ்சள் நிறத்துக்கு வந்தப்புறம் கேப்பை கதிரை அறுக்குற மாதிரி பூவை மட்டும் அறுத்து, காயவெச்சி, குச்சியால அடிச்சி விதையை பிரிச்சி எடுக்கணும். விதைக்கு வளக்குறப்ப காய் கம்மியாத்தான் கிடைக்கும். காய் உருட்டும் இருக்காது. ஒரு ஏக்கர்ல ஒரு டன்னுக்கும் கம்மியான காயும், நூறு கிலோ விதையும் கிடைக்கும். போன வருசம் கிலோ ஆயிரம் ரூபாய்னு விதை வித்திச்சி. இந்தத் தடவை எண்ணூறு ரூபா வரைக்கும்தான் விலைபோகுது’’ என்று சொன்ன செல்வராஜ், சாகுபடி முறைகளை பட்டியல் போட்டார். -'வைகாசி பட்டம் என்றால் ஆனி மாதத்துக்குள் நடவு செய்யவேண்டும். ஐப்பசி பட்டம் என்றால் கார்த்திகை மாதத்துக்குள்ளாக நடவேண்டும். அப்போதுதான் மழையிலிருந்து தப்பிக்க முடியும். நல்ல விலையும் கிடைக்கும். பெரும்பாலும் கோ-3, கோ-4 ரக விதைகளைத்தான் விவசாயிகள் நடவு செய்கிறார்கள். இதை நேரடியாக நடலாம். ஏக்கருக்கு 600 கிலோ விதைக்காய் தேவைப்படும். ஒன்றரை அடி பார்களை அமைத்து, செடிக்குசெடி 3 விரல் அளவு இடைவெளி விட்டு நடவேண்டும். ஆரம்பத்திலேயே தொழு உரம் ஏக்கருக்கு ஒரு டன்னுக்கும் குறையாமல் போடுவது நல்லது. நாற்று முறையில் நடுவதற்கு கோ-5 ரகம்தான் சிறந்தது. ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதும். நேரடியாக நடவு செய்யும்போது விதைக்காய்களுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். நாற்று முறை என்றால், ஆயிரம் ரூபாய் போதும். நாற்றங்காலில் 45 நாள் வளர்ந்த செடிகளை நடவு செய்யலாம். நடவு செய்த 5 முதல் 7 நாளுக்குள்ளாக முளை விடும். 15 முதல் 20 நாளில் ஒரு களையும், 30-ம் நாளில் ஒரு களையும், 45-ம் நாள் ஒரு களையும் எடுக்கவேண்டும். நுனிகருகல் நோய் தாக்குதல் இருந்தால், இரண்டு கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஊற வைத்து சாறு தயாரித்து தெளிக்கவேண்டும். 30 மற்றும் 40-ம் நாளில் மண்புழு உரம், அசோஸ் பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா எல்லாவற்றையும் கலந்து கொடுத்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். அதிகமாக நோய் தாக்காது. ரசாயனம் போட்டு விவசாயம் செய்வதை விட இயற்கை முறையில் செய்தால் செலவு குறைவு. 60 முதல் 70 நாட்களில் வெங்காயதாள் பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். அந்த சமயத்தில் செடி தரையில் சாய ஆரம்பிக்கும். அதுதான் அறுவடைக்கான நேரம். வெங்காயதாளை மட்டும் லேசாக அறுத்துவிட்டு, வேரை அறுக்காமல் காய வைத்து சேமிக்கலாம். உடனடியாக விற்பனை செய்ய நினைத்தால், தாள் மற்றும் வேர் அனைத்தையும் நீக்கிவிடவேண்டும். வெங்காய சேமிப்பு பட்டறை ஒட்டன்சத்திரம் பகுதியில் நாட்டுரகம்தான் பயிரிடப் படுகிறது. கோவை வேளாண்மை பல்கலைக் கழகம்தான் அவற்றை எங்களுக்குக் கொடுக்கிறது. அவற்றில் கோ-3, கோ-4 ஆகிய ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதிக நாள் தாங்கும் தன்மை இந்த ரகங்களுக்கு இருப்பதால், ஏற்றுமதிக்கும் ஏற்றதாக உள்ளன. கோ-5 ரகம் விதை எடுப்பதற்காக பயிர்செய்கிறார்கள். கோவை மாவட்டத்தில் பல்லடம், குண்டடம் பகுதியில் வெங்காயம் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. இங்கெல்லாம் முன்பு நாட்டு ரகங்களைத்தான் அதிகம் விளைவித்து வந்தார்கள். ஆனால், வீரிய விதைகள் வந்த பிறகு அதற்கு பரவலாக மாறிவிட்டார்கள். வீரிய ரகங்கள் அதிக விளைச்சலைக் கொடுத்தாலும் சாகுபடி செலவும் அதிகம்தான். அதாவது, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கிறது. சேமிப்புத் திறன் இல்லாததால் வைத்திருந்தும் விற்க முடியாமல் கிடைக்கும் விலைக்கு விற்கிறார்கள். இதே நாட்டு ரகங்களுக்கு மாறினால் நிச்சயம் அவர்களுக்கு பாதிப்பு இருக்காது' என்று தன் அனுபவத்திலிருந்து எடுத்துச் சொன்னார் செல்வராஜ். --- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Saturday, 18 Oct 2014, 3:53 PM | Message # 52 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ஏக்கருக்கு 2.5 லட்சம்...
இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்!
குறைந்த தண்ணீர்... நிறைவான மகசூல்..!
'திட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை’ என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இப்படிப்பட்டவர்களை 'பசுமை விகடன்’ தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது. இந்த வரிசையில் இணைகிறார்... கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர், இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான லாபம் ஈட்டி வருகிறார். தமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதைமேடு பகுதியில், பொட்டல்காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின உழைப்பின் மூலம் எழில்கொஞ்சும் தோட்டமாக மாற்றியிருக்கிறார், குரியன் ஜோஸ். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், தங்களின் பயணத்தினூடே இவருடைய பண்ணையையும் பார்வையிட வருமளவுக்கு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார்... குரியன். தென்மேற்குப் பருவக்காற்று சிலுசிலுக்கும் கூடலூர்-குமுளி தேசிய நெஞ்சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தம்மனம்பட்டி விலக்கு. வலது பக்கம் பிரியும் தார் சாலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, கழுதைமேடு. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு. வேலியில் பச்சைநிற நிழல் வலை சுற்றப்பட்ட 'ஹார்வெஸ்ட் ஃபிரஷ்’ பண்ணை வரவேற்கிறது. அன்று மானாவாரிக் கரடு... இன்று மாதுளைத் தோட்டம்! கொஞ்சும் தமிழ் கலந்த மலையாளத்தில் நம்மிடம் பறையத் தொடங்கிய குரியன், ''எர்ணாகுளத்துல எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்றேன். இருந்தாலும், கிருஷி (விவசாயம்) ஆர்வம் உண்டு. குமுளி, மூணாறுனு கேரளாவை ஒட்டிய பகுதியா இருக்கறதால தேடி அலைஞ்சு இந்த இடத்தை வாங்கினேன். தண்ணிக்கு பஞ்சம் இல்லை. சூழல் அதிகம் மாசுபடாத பகுதி. சுற்றிலும் மலைப்பகுதியா இருக்கறதால பாக்கவே ரம்யமா இருக்கும். அஞ்சு வருஷத்துக்கு முன்ன வாங்கும்போது பொட்டல்வெளி. இன்னிக்கு எப்படி மாறி இருக்குனு பாருங்க. இந்த இடத்தை வாங்கினதும் இயற்கை விவசாயம்தான்னு முடிவு செஞ்சேன். மொத்தம் இருக்கிறது 35 ஏக்கர். இதுல கிட்டத்தட்ட 30 ஏக்கர்ல 10 ஆயிரம் மாதுளை செடிகள் இருக்கு. இதுல, 7 ஆயிரத்து 500 செடிகள்ல மகசூல் வந்துட்டு இருக்கு. ரெண்டு ஏக்கர்ல பப்பாளி இருக்கு. மத்த இடங்கள்ல பண்ணைக் குட்டை, மாட்டுக் கொட்டகை, பேக்கிங் ரூம், பணியாளர் குடியிருப்பு, பண்ணை வீடு, பறவைகளுக்கான கொட்டகை கள் இருக்கு. இதை முழுமையான ஒருங்கிணைந்தப் பண்ணையா வடிவமைச்சிருக் கோம்'' என்றபடி, மாதுளைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார். ராமரிப்பு தருமே பணம்! ''முழுக்க இயற்கை முறையிலதான் விளைவிக்கிறேன். அதனால, பழம் வெடிச்சு கீழே விழுந்துடுது. காய்களோட தோல் சொறிசொறியா இருக்கு. நம்ம ஆளுங்க கடைக்கு போனதும் 'பளபள’னு இருக்கற பழங்களைத்தான் முதல்ல எடுக்குறாங்க. ஆனா, அது ரசாயனத்துல விளைஞ்சதுங்கிறதை யோசிக்கறதில்ல. எங்க பழங்களை ஆரம்பத்துல வாங்கத் தயங்கினவங்க, உறிச்சுப் பாத்தவுடனே ஆச்சர்யமாகிடுவாங்க. அவ்வளவு தெளிவா, அழகான முத்துக்களோட ரத்தச் சிவப்புல இருக்கும். ருசியும் பிரமாதமா இருக்கும். இதைத் தெரிஞ்சுகிட்ட பிறகு, இப்ப கேரளாவுல இருக்கற கடைகள்ல எங்க பழத்துக்கு தனி கிராக்கி ஏற்பட்டுப் போச்சு. வெளிநாட்டு ஆர்டரும் கிடைச்சிருக்கு'' என்ற குரியன், ஒரு பழத்தைப் பறித்து உடைத்து காண்பித்தார். ரத்தச் சிவப்பில் சிரித்தன, மாதுளை முத்துக்கள். எடுத்து வாயில் போட்டவுடன், அசரடித்தது சுவை. தொடர்ந்தவர், ''இந்த ரகத்துக்கு பேரு பக்வா. 12 அடிக்கு 10 அடி, 10 அடிக்கு 10 அடினு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இடைவெளியில நடவு செஞ்சிருக்கோம். உலகளவுல இயற்கை முறையில மாதுளை சாகுபடி செய்ற நுட்பங்களை இன்டர்நெட் மூலமாகவும், சில வேளாண் அறிஞர்கள், ஆலோசகர்கள் மூலமாகவும் தெரிஞ்சுக்கிட்டு செயல்படுத்துறோம். மாதுளை ஒரு மென்மையான பயிர். இதை, கைக்குழந்தையைப் பராமரிப்பது போல பராமரிக்கணும். மாதுளை விவசாயத்தோட வெற்றி, தோல்வி ரெண்டுமே பராமரிப்புலதான் அடங்கியிருக்கு. செடிக்கு 10 கிலோ! 'மாதுளையை வெச்சேன்... மகசூல் கிடைக்கல’னு புலம்புறவங்களைப் பாத்திருக்கேன். தண்ணி பாய்ச்சி, உரம் வெச்சா மட்டும் போதாது. எதிர்பார்த்தபடி பழம் கிடைக்கணும்னா... ஒவ்வொரு கட்டத்துலயும் அதுக்கு செய்ய வேண்டிய சாகுபடி முறைகளை, தொழில்நுட்பங்களைத் தெளிவா தெரிஞ்சுக்கிட்டு செய்யணும். நான் அதை சரியா செய்றதால உழைப்புக்கு ஏத்த ஊதியம் கிடைக்குது. ஒரு செடிக்கு வருஷத்துக்கு 200 ரூபாய் செலவாகுது. ஒரு செடியில இருந்து 10 கிலோ பழம் கிடைக்குது. ஒரு கிலோ சராசரியா 120 ரூபாய் வீதம், பத்து கிலோவுக்கு 1,200 ரூபாய் கிடைக்கும். செலவு 200 ரூபாய் போக, ஒரு செடி மூலமா வருஷத்துக்கு 1,000 ரூபாய் லாபம். 7 ஆயிரத்து 500 செடி மூலமா 75 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. ஏக்கருக்கு சராசரியா 2.5 லட்சத்துக்குக் குறையாம லாபம் வருகிறது'' என்று லாப கணக்குச் சொல்லி மகிழ வைத்தார், குரியன் ஜோஸ். தொடர்புக்கு, குரியன் ஜோஸ், செல்போன்: 093886-10249, ஜான் தாமஸ் (மேலாளர்), செல்போன்: 95780-72722
|
|
| |
Janvi | Date: Saturday, 18 Oct 2014, 3:53 PM | Message # 53 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| இயற்கை முறை மாதுளை சாகுபடி! பண்ணையை முழுக்கப் பராமரிப்பவர், அதன் மேலாளர் ஜான் தாமஸ். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்க பண்ணையில கேரளாவோட பாரம்பரிய ரகமான காசர்கோடு குட்டை, தமிழ்நாட்டோட பாரம்பரிய மாடான காங்கேயம்னு நாட்டு மாடுங்க பத்து இருக்கு. இந்த மாடுகளோட சிறுநீர், சாணத்தை வெச்சி ஜீவாமிர்தத்தை நாங்களே தயாரிச்சுக்கிறோம். பண்ணைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவை வெச்சி கம்போஸ்ட் தயாரிக்குறோம். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தி செய்றோம். எல்லா மரங்களுக்கும் மூடாக்கு போட்டிருக்கோம். தொழுவுரத் தையும், உயிரிப் பூச்சி கொல்லியையும் வெளியில இருந்து வாங்கிக்குவோம். அதனால சாகுபடிச் செலவு குறையுது. எங்க பண்ணைக்கு ஆர்கானிக் சான்றிதழும் இருக்கு'' என்ற ஜான் தாமஸ், மாதுளை சாகுபடி முறைகளைச் சொன்னார். அது இங்கே பாடமாக விரிகிறது. 'மாதுளை, களிமண்ணைத் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடுவது சிறந்த முறை. 2 அடி சதுரம், 2 அடி ஆழத்துக்குக் குழியெடுத்து ஆறவைத்து... ஒவ்வொரு குழியிலும், 10 கிலோ தொழுவுரம், 5 கிலோ மண்புழு உரம் போட்டு செடியை நடவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மண்புழு உரம் வைத்து வரவேண்டும். மூன்றாம் மாதத்தில் இருந்து, வாரம் ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனத்துடன், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களில் செடிகளில் பூ எடுக்கத் தொடங்கும். ஆனால், அந்தப் பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே, காய்ப்புக்குவிட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்கவிட்டால், செடியின் வளர்ச்சி தடைபடும். ஆறாவது மாதம் செடியில் அதிகக் கிளைகள் இருக்கும். இந்தச் சமயத்தில், நன்கு தடிப்பான, வாளிப்பான நான்கு கிளைகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றைக் கவாத்து செய்ய (கழித்துவிட) வேண்டும். செடிகள் காய்க்க ஆரம்பிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கவாத்து செய்ய வேண்டும். காய்க்க ஆரம்பித்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் போதுமானது. ஒரு மாதம் ஒய்வு! பூக்க ஆரம்பித்ததில் இருந்து, 160 முதல் 180 நாட்கள் கழித்துதான் பழத்தை அறுவடை செய்ய முடியும். ஒவ்வோர் ஆண்டும் செடிகளுக்கு ஓய்வுகொடுக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் தண்ணீர் கொடுக்காமல், செடியை வாட விட வேண்டும். ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன நிலையில் இருக்கும்போது... ஜனவரி மாதம் தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இப்படி வாடவிட்டு தண்ணீர் கொடுப்பதால், செடியில் அதிக பூக்கள் பூத்து, நல்ல மகசூல் கிடைக்கும். ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொடுத்த பிறகு, பூக்கும் பூக்கள் காயாக மாறி, ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வரும். அதிலிருந்து, நவம்பர் மாதக் கடைசி வரை அறுவடை செய்யலாம். பிறகு ஓய்வு கொடுத்துவிட வேண்டும். மாதுளையை அதிகம் தாக்குவது, பழ ஈக்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள்தான். இதற்கு பயோ மருந்து அல்லது மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சோலார் விளக்குப் பொறிகள், மஞ்சள் ஒட்டு அட்டைகள் வைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பழங்களில் சில நேரங்களில் கருப்புநிறத் துளைகள் இருக்கும். ''ஃப்ரூட் போரல்’ எனப்படும் இத்தாக்குதலைச் சமாளிக்க, 200 லிட்டர் தண்ணீரில், தலா 500 கிராம் டிரைக்கோ-டெர்மா விர்டி, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம்'' என்றார், ஜான் தாமஸ். பண்ணைச் சுற்றுலா! தான் மட்டும் இயற்கை விவசாயம் செய்தால் போதாது. இந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும். இயற்கை விளைபொருட்களின் அருமையை நுகர்வோர்கள் உணர்ந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பது குரியனின் நோக்கம். இதற்காக, 'இயற்கை விவசாயப் பண்ணைச் சுற்றுலா’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். யார் வேண்டுமானாலும், இந்தப் பண்ணையில் வந்து தங்கி, தோட்டத்தில் பழங்களைப் பறித்து ருசித்துச் செல்லலாம். குழந்தைகளுக்கு இயற்கையுடனான பிணைப்பை ஏற்படுத்தலாம். மாட்டுவண்டி மூலமாக, இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியை சுற்றிவரலாம் என்பதற்காக, மதிய உணவு, மாட்டு வண்டிப் பயணம், பண்ணை வீடு என அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காகக் குறைந்த கட்டணத்தையே வசூல் செய்கிறார். வெளிநாட்டினர் பலரும் இதற்காகவே இங்கே ஆர்வத்துடன் வருகிறார்களாம், இயற்கை விவசாயத்தின் அருமையை உணர்ந்த வர்களாக!
--- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Saturday, 18 Oct 2014, 3:57 PM | Message # 54 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| களாக்காய்... உயிர்வேலிக்கு உத்தரவாதம்...வருமானத்துக்கு ஆதாரம்! 'நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது’ என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மிநாராயணன். ''நிலத்துக்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம்'' என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை உதாரணமாக்கி வைத்திருக்கிறார், லஷ்மிநாராயணன். தோட்டம் தேடிப்போன நம்மை அன்போடு வரவேற்ற லஷ்மிநாராயணன், கடகடவென பேச ஆரம்பித்தார். ''10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். 26 வருஷமா விவசாயம் பார்க்குறேன். குடும்பத்துக்குச் சொந்தமா 22 ஏக்கர் நிலம் இருந்துச்சு. வழக்கமா நெல், மணிலா, கரும்பு மாதிரியான பயிர்களை வெப்பேன். கிடைச்ச வருமானத்துல பக்கத்துல இருந்த நிலங்களை வாங்கி சேர்த்ததுல, இப்ப 27 ஏக்கர் நிலம் இருக்கு. 15 வருஷத்துக்கு முன்ன வேலையாட்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னைனு வந்ததும், பெரும்பகுதி நிலத்துல சப்போட்டா, கொய்யா, மா இப்படி பழ மரங்களை நட்டுட்டேன். சப்போட்டாவும், மாவும் வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் மகசூல் கொடுக்குறதால பராமரிப்பு செய்றது சுலபமா இருந்தது. கொய்யா மரங்களைப் பொறுத்தவரை அதிகமான பராமரிப்புத் தேவைப்பட்டாலும், நல்ல விலை கிடைக்கிறதால, தொடர்ச்சியா சாகுபடி செய்றேன். திருட்டைத் தடுத்த களாக்காய் செடிகள்! 16 ஏக்கர்ல கொய்யா, ஒரு ஏக்கர்ல சப்போட்டா, 5 ஏக்கர்ல மா, ஒரு ஏக்கர்ல சவுக்கு, 4 ஏக்கர்ல செங்கல் சூளை, எடைமேடையும் இருக்கு. நிலம் முழுக்க ரோட்டு ஓரத்துலயே இருக்குறதால ஆரம்பத்துல கம்பிவேலி போட்டேன். அதுக்கு அதிக செலவு ஆச்சு. ஆனாலும், ஆடு, மாடுகளை மட்டும்தான் கட்டுப்படுத்த முடிஞ்சுது. திருட்டைக் கட்டுப்படுத்த முடியல. நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டப்போதான், 'களாக்காய் செடிகளை வேலியா வளர்த்தா... யாரும் உள்ள வர முடியாது'னு சொன்னார். உடனே செங்கத்துல இருந்து அஞ்சு படி (சுமார் 10 கிலோ) களாக்காய் பழம் வாங்கிட்டு வந்து விதை எடுத்து, காய வெச்சு முளைக்க வைச்சேன். அதெல்லாம் சரியா முளைக்கல. ஒரு தடவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போயிருந்தப்போ, ஆந்திராவுல இருந்து ஒரு வியாபாரி களாப் பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அவர்கிட்ட பேசினப்பதான் தெரிஞ்சுது, களாக்காய் விதைகளைக் காய வெச்சா முளைக்காதுங்குற விஷயம். நாத்துவிட்டு முளைக்க வைக்கிற தொழில்நுட்பத்தை அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அவர்கிட்டயே 25 கிலோ பழம் வாங்கிட்டு வந்து, அவர் சொன்ன முறையில நாத்து தயாரிச்சு, தேவையான இடங்கள்ல மட்டும் முக்கோண முறையில நட்டு விட்டேன். எல்லா செடிகளும் நல்ல முறையில வேர் பிடிச்சு வளர்ந்திடுச்சு. 12 ஏக்கர் நிலத்துல, சுமார் ஆயிரம் மீட்டர் அளவுக்குத் தேவைக்கு ஏத்த மாதிரி வேலியா நட்டு விட்டிருக்கேன்'' என்று சொல்லி வியப்பைக் கூட்டினார் லஷ்மிநாராயணன், தொடர்ந்தார். ஒரு வருடத்தில் வேலி! ''நட்ட ஒரு வருஷத்துல நல்ல வேலியா மாறிடுது. ஆடு, மாடுகள், மனிதர்கள் யாரும் உள்ள நுழைய முடியாது. நமக்குத் தேவையான உயரத்துக்கு வளரவிட்டு கவாத்து பண்ணிக்க லாம். கவாத்து செய்யாட்டியும் பிரச்னை இல்லை. மூணு வருஷத்துல காய் காய்க்க ஆரம்பிச்சிடும். ஒவ்வொரு வருஷமும் மே மாசம் பூவெடுத்து, ஆகஸ்ட் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரை, காய் அறுவடை செய்யலாம். 1,000 மீட்டர் நீளத்துக்கு வெச் சிருக்கிற செடிகள்ல இருந்து, 1,000 கிலோ காய் கிடைக்கும். வேலியோரமா இருக்கறதால, ரோட்டுல போறவங்களும் பறிச்சுடறாங்க. எல்லாம் போக, வருஷத்துக்கு 200 கிலோ காய் கிடைக்குது. போன வருஷம் 100 கிலோ காயை, கிலோ அம்பது ரூபாய்னு விற்பனை செஞ்சேன். இந்த வருஷம் பழுக்க விட்டு நாத்து விட்டு, மீதி இடங்கள்ல நடலாம்னு இருக்கேன். இதுல மகசூல் கிடைக்கிறதைவிட, கம்பி வேலிக்கு பதிலா அதிக செலவில்லாத மாற்றா இருக்குறதுதான் விஷயமே!'' என்று சந்தோஷ மாகச் சொன்னார்! தொடர்புக்கு, லஷ்மிநாராயணன், செல்போன்: 94888-63995
|
|
| |
Janvi | Date: Saturday, 18 Oct 2014, 3:58 PM | Message # 55 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| காட்டுப்பழங்களில் இருந்து செடிகள்! களாக்காய் சாகுபடி செய்யும் விதம் பற்றி லஷ்மிநாராயணன் தந்த தகவல்கள், இங்கே பாடமாக- 'குத்துச்செடி என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்ததுதான் களாக்காய். இதன் குறைந்தபட்ச ஆயுள் 25 ஆண்டுகள். காட்டில் கிடைக்கும் பழங்கள் அல்லது சந்தையில் கிடைக்கும் பழங்களின் விதைகளை பயன்படுத்தலாம். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் களாக்காய் பழங்களை வாங்கி, இரண்டு நாட்கள் வைத்திருந் தால், லேசாக அழுகிய நிலைக்கு மாறிவிடும். பிறகு, வாய் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால்... விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். 18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலத்தில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி... மண்ணைப் பொலப்பொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மீது 50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும். விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும். அதற்குமேல், செடி வாடினால் மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். நான்கு முதல் ஐந்து மாதங்களில் நாற்று, ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து நடவுக்குத் தயாராகி விடும். 100 மீட்டருக்கு 2 ஆயிரம் செடிகள்! மழைக்காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்களில், நடவு செய்யலாம். ஓர் அடி இடைவெளியில் முக்கோண முறையில் கடப்பாரையால் குழி இட்டு, செடியை நட்டுவிட்டால் போதுமானது. 100 மீட்டர் நீளத்துக்கு நடவு செய்வதற்கு, இரண்டு கிலோ பழத்தில் உற்பத்தி செய்த 2 ஆயிரம் செடிகள் போதுமானவை. நடவு செய்த 6 மாதங்கள் வரையில், மண்ணின் ஈரத்தைப் பொறுத்து, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்குமேல் தனியாக தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. மற்ற செடிகளுக்குப் பாயும்போது, கிடைக்கும் தண்ணீரை களாக்காய் செடிகள் எடுத்துக்கொள்ளும். நடவு செய்த ஆறு மாதங்களுக்கு, இவற்றை வெள்ளாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்து விடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. தனியாக இதற்கு எந்தவிதமான இடுபொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.' செர்ரி தயாரிக்க, களாக்காய்! களாக்காய் பற்றி பெரியகுளம் தோட்டகலைக் கல்லூரி, பழப்பயிர்கள் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ''களாக்காய் ஆங்கிலத்தில் 'கரோன்டா' (ளீணீக்ஷீஷீஸீபீணீ) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட களாக்காய் செடிகளின் அறிவியல் பெயர், 'கரிஸ்ஸா கரன்டாஸ்' (சிணீக்ஷீவீssணீ நீணீக்ஷீணீஸீபீணீs). வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்தச் செடிகள், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் காட்டுச்செடியாக மட்டுமே உள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிந்த பல்லபந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம், களாக்காயில் புதிய ரகத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வறட்சியான பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிராக இதை அறிவித்துள்ளது. இவற்றின் காய் மற்றும் பழங்கள் புளிப்புச் சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர். காய்கள், ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகின்றன. விதை நீக்கம் செய்யப்பட்ட களாக்காயை நிறமேற்றி, சர்க்கரை பாகில் ஊற வைத்து பேக்கரிகளுக்குத் தேவையான 'செர்ரி’ தயாரிக்கிறார்கள். இவற்றின் நாற்றுகளை விதை மற்றும் கட்டிங் மூலம் உற்பத்தி செய்யலாம். எங்கள் கல்லூரியை அணுகினால், தேவையின் பெயரில், நாற்றுகளை உற்பத்தி செய்து கொடுப்போம்'' என்று சொன்னார். தொடர்புக்கு: தலைவர் மற்றும் பேராசிரியர், பழப்பயிர் துறை, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி. தொலைபேசி: 04546-231726/233225.
---- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Saturday, 18 Oct 2014, 4:01 PM | Message # 56 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| நீங்கள் கேட்டவை
''பண்ணைக் குட்டையில் மீன் வளர்த்து வருகிறோம். மீன்களுக்கு அரிசிச் சோற்றை உணவாகக் கொடுக்கலாமா?'' வி. சுப்பிரமணியம், கோவிந்தபுரம். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின், நாகப்பட்டினம், மீன்வளத் தொழில்நுட்ப நிலையத் தின் உதவிப் பேராசிரியர் பி. கணேசன் பதில் சொல்கிறார்.
''மீன் வளர்ப்பில் தீவனச் செலவைக் குறைக்க அரிசிச் சோற்றைத் தராளமாகக் கொடுக்கலாம். ஆனால், அரிசிச் சோறு நன்றாக வெந்து இருக்க வேண்டும். மீன்களுக்கு வெறும்சோறு மட்டும் கொடுத்தால், வளர்ச்சி சரியாக இருக்காது. காரணம், அரிசிச் சோற்றில் கார்போ- ஹைட்ரேட் என்ற சத்து மட்டும்தான் அதிகமாக இருக்கும். ஆகையால், மீன்களுக்கு சரிவிகிதமாக சத்துக்கள் உள்ள உணவுகளைக் கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு, குளத்தில் மொத்தம் 200 கிலோ எடையுள்ள மீன்கள் இருந்தால்... தினமும் மூன்று கிலோ அரிசிச் சோறு, மூன்று கிலோ கடலைப் பிண்ணாக்கு மற்றும் அரிசித் தவிடு கலந்து கொடுக்க வேண்டும். பிண்ணாக்கை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலையில் குளத்தில் ஊற்றிவிட வேண்டும். பிண்ணாக்கு, அரிசித் தவிடு... போன்றவை மீன்களின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுக்கும். நெல் அரைக்கும்போது நொய் அரிசி கிடைக்கும். இதைச் சோறாகச் சமைத்து மீன்களுக்குக் கொடுக்கலாம். இதுபோன்ற உணவு வகைகளை உண்டு வளரும்போது, மீன்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் உருவாகும். நல்ல எடையுடன் வளர்ந்து லாபத்தையும் கொடுக்கும்.''
---- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Sunday, 26 Oct 2014, 2:05 PM | Message # 57 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ஒரு குழிக்கு 2 கிலோ மண்புழு உரம் மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய கலப்பு உரம் 100 கிராம் ஆகியவற்றை அடியுரமாகத் தரலாம். ஒரு ஏக்கரில் 1,300 குழிகள் வரை இருக்கும். 400 கிராம் விதைகள் தேவைப்படும் (விவசாயிகளே விதைகளை உற்பத்தி செய்வதால் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது). சுத்தமான பசு மாட்டு மோரில் ஒரு நாள் முழுதும் விதைகளை ஊறவைத்து... விதை நேர்த்தி செய்வது நல்லது. இதனால் முளைப்புத்திறன் கூடும். குழிக்கு மூன்று விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். பிறகு தண்ணீர் விடுவது அவசியம். ஏழு முதல் பத்து நாட்களில் முளைவிடத் தொடங்கும். தொடர்ந்து, 2 நாட்களுக்கு ஒரு தண்ணீர் தேவை. 20-ம் நாளில் ஒரு களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட ஒரு மூட்டை உரத்தை குழிக்கு 40 கிராம் வீதம் போடலாம். 50-ம் நாளில், ஒவ்வொரு குழியிலும் வளர்ந்திருக்கும் செடிகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றொன்றை அப்புறப்படுத்த வேண்டும். 6 அடி உயரம் கொண்ட நீளக்குச்சிகளை குழிகளில் நட்டு, வாழை நார் கொண்டு கொடிகளைக் கட்டி பந்தலில் படர விடலாம். 55-ம் நாளில் கொடிகளில் வளர்ந்துள்ள பக்கக் கிளைகளை ஒடித்து கவாத்து செய்வது முக்கியம். 120 நாட்கள் வரை மொத்தம் நான்கு களைகளை எடுக்கவேண்டும். கொடிகள் பந்தலில் பரவிவிட்ட பிறகு, நிழல் காரணமாக களைகள் அதிகம் வளர வாய்ப்பில்லை. 60-ம் நாளில் கடலைப் புண்ணாக்கு உரம் 50 கிலோவை தூளாக்கி, சம அளவில் ஒவ்வொரு குழியிலும் இடலாம். தேவைப்பட்டால் 10 கிலோ யூரியாவையும் கலந்துகொள்ளலாம். இதனால் காய்கள் சீரான வளர்ச்சியில் பந்தல் முழுக்க இருக்கும். 75-ம் நாளில் ஜிலுஜிலுவென அழகுக் காட்டி குறும்புடலைகள் பந்தலில் தொங்கியபடி... நம்மை அறுவடைக்கு அழைக்கும். இது முதல் அறுவடை. அதைத் தொடர்ந்து, 85-ம் நாளில் பொட்டாஷ் உரத்தை குழிக்கு 40 கிராம் வீதம் கொடுக்கவேண்டும் (90-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை குழிக்கு அரை கிலோ வீதம் மண்புழு உரம் கொடுக்கலாம்). முதல் அறுவடை நடந்த 75-ம் நாளில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்களைப் பறிக்கலாம். மொத்த சாகுபடி காலம் 165 நாட்கள். இதில் 90 நாட்கள் மகசூல் காலமாகும். 45 பறிப்புகள் மூலம் 20 டன் மகசூல் கிடைக்கும். குறும்புடலை விவசாயத்துக்கு பட்டம் கிடையாது என்பதால் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். 165 நாள் மகசூல் முடிந்த பிறகு, கொடிகளை அப்புறப் படுத்திவிட்டு... பழைய குழிகளில் இருந்து அரை அடி தள்ளி புதிய குழி அமைத்து விதையிட்டால் சிறந்தது. பழைய குழிகளில் தொடர்ந்து சாகுபடி செய்தால் மகசூல் குறையும்' என்று சாகுபடிக் குறிப்புகளைக் கொடுத்த கௌசல்யா, ''காய்களைப் பறிச்சி திருப்பூர் மார்க்கெட்டுக்கு அனுப்புறேன். இப்போதைக்கு கிலோ எட்டு ரூபாய் வரை விலை போகுது. 6 ரூபாய்க்கு குறைஞ்சி போனதே இல்ல. சீசன்ல கிலோ 10 ரூபாய்கூட விலை கிடைக்கும். வேன் வாடகை, சுங்கம், கூலி எல்லாம் சேர்த்து கிலோவுக்கு 70 பைசாதான் செலவு. மொத்த வருமானம் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய்'' என்று சொல்லி நிறுத்தியதோடு, தனக்குள் இருக்கும் ஆதங்கம் ஒன்றையும் வெளியிட்டார். அது- ''இப்போதைக்கு ரசயான உரம், பூச்சிக்கொல்லி மருந்துங்களைத்தான் போடுறேன். இதையெல் லாம் சுத்தமா குறைச்சிட்டு, முழுமையான இயற்கை விவசாயினு பேர் எடுக்கணும்கிறதுதான் என்னோட ஆசை.'' நோய் விரட்ட.... புடலையில் பச்சைக் காய்ப் புழுக்கள் துளையிட்டு காய்களைச் சேதமாக்கும். இதற்கு 250 மில்லி மோனோ குரோட்டோபாஸ் திரவ பூச்சிக்கொல்லி மருந்தை, 100 லிட்டர் நீரில் கலந்து விசைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும். இதன் மூலம் காய் துளைப்பைக் கட்டுப்படுத்தலாம். வெள்ளைச் சாம்பல் நோய் காரணமாக இலைகள் சுருண்டு... வாடி... கீழே விழுந்துவிடும். இதைத் தடுக்க... மெத்தோமில் பவுடர் 250 கிராமை 120 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். மேலும், சிறுசிறு வண்டுகள், பூச்சிகள், குளவிகள் போன்றவை களினாலும் பாதிப்பு உண்டு. இதை கருப்பட்டி இரண்டு கிலோ, அழுகிய பழச்சாறு, வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, இனக்கவச்சிப் பொறி போன்ற சிறிய டப்பாக்களில் ஊற்றி... பந்தலுக்குள் 15 இடங்களில் கட்டி தொங்கவிட வேண்டும். பூச்சி, வண்டு, குளவிகள் எல்லாம் இந்தப் பொறிக்குள் விழுந்து சமாதியாகும். பதநீர், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம. 10 நாட்களுக்கு ஒரு முறை இவைகளை சுத்தம் செய்து, இடம் மாற்றி தொங்கவிட வேண்டும். ---- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Wednesday, 12 Nov 2014, 6:49 PM | Message # 58 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| குதிரைவாலி... குறைந்த மழையிலும் குஷியான வருமானம் ! பளிச்... பளிச்...
மானாவாரிக்கு மிகவும் ஏற்றது. வயது : 90 நாட்கள். அரை ஏக்கரில் 300 கிலோ. ஊடுபயிராக தட்டைப் பயறு. பூச்சி, நோய் தாக்குதல் இல்லை. வேலை ஆள் பற்றாக்குறை, குறைவான மகசூல் போன்ற காரணங்களால் அழிவுநிலைக்கு வந்துவிட்ட சிறுதானியங்களில் குதிரைவாலியும் ஒன்று. ஆனால், குறைந்த அளவில் கிடைக்கும் மழையிலேயே மானாவாரி பூமியில் சிறப்பாக வளரக்கூடியப் பயிர்தான் குதிரைவாலி. இந்த ரகசியம் அறிந்த விவசாயிகள் மட்டும், ஆங்காங்கே விடாமல் இந்தக் குதிரைவாலியைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்து கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வாகையூர் அன்பழகனும் அவர்களில் ஒருவர். ஆனால், சில ஆண்டுகளாக குதிரைவாலியைக் கைவிட்டிருந்தவர், தற்போது மறுபடியும் கைப் பிடித்திருக்கிறார்... நல்ல விலை கிடைக்கிறது என்கிற உற்சாகத்தோடு!
''எனக்கு சொந்தமா நாலு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, ரெண்டு ஏக்கர் கிணத்துப் பாசனம், ரெண்டு ஏக்கர் மானாவாரி. கிணத்துல இருக்குற தண்ணியை வெச்சு நெல், காய்கறி, தென்னை, கடலை, வரகுனு இயற்கை முறையில சாகுபடி செய்துகிட்டிருக்கேன். ரசாயன உரத்தைக் கொட்டிக்கிட்டிருந்த நான், அஞ்சு வருஷத்துக்கு முன்ன 'ரோஸ் தொண்டு நிறுவன'த்துக்காரங்க மூலமா மண்புழு உரம், பஞ்சகவ்யா, மூலிகை பூச்சிவிரட்டிகளைத் தயாரிக்கக் கத்துக்கிட்டேன். அதில் இருந்தே, இயற்கை விவசாயத்தைக் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.
விதைக்க வைத்த விலை!
என்னோட செம்மண் பாங்கான நிலத்துல ஆடிப்பட்டத்துலதான் குதிரைவாலியை விதைச்சுக்கிட்டிருந்தேன். ரொம்ப வருஷமா மானாவாரியில இதை சாகுபடி செய்தாலும், இடையில ஏழு வருஷமா ஆள் பற்றாக்குறை, சரியான விலை இல்லாததனால விதைக்கல. இப்ப சிறுதானியத்துக்கு நல்ல விலை கிடைக்கறதால, இந்த வருஷம் சாகுபடி செய்திருக்கேன்'' என்ற அன்பழகன், மானாவாரியில் குதிரைவாலி சாகுபடி செய்யும் முறை பற்றி விவரிக்கத் தொடங்கினார்.
ஆடிப்பட்டம் தேடி விதை..!
குதிரைவாலியின் வயது 90 நாள். பாசன வசதியுள்ளவர்கள் ஆண்டு முழுவதும் விதைக்கலாம். மானாவாரி விவசாயிகள் மழைக் காலங்களில் விதைப்பதுதான் சிறந்தது. சித்திரை, வைகாசி மாதங்களில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை நன்றாக உழவு செய்து வைத்துக் கொண்டு, ஆடி மாதம் விதைக்கலாம். விதைப்புக்கு முன்பாக இரண்டு டன் தொழுவுரத்தைத் தூவி, உழவு செய்து விதைக்க வேண்டும். இந்த அடியுரத்தைத் தவிர அறுவடை வரை எந்த உரமும் தேவையில்லை.
அரை ஏக்கரில் சாகுபடி!
அரை ஏக்கருக்கு ஒரு கிலோ விதையை 10 கிலோ மணலுடன் கலந்து தூவி விதைக்க வேண்டும். 10 கிலோ மணலுக்கு பதிலாக 50 கிலோ மண்புழு உரத்தைக் கலந்தும் விதைக்கலாம் (இவர் மண்புழு உரம் கலந்து விதைத்திருக்கிறார்). விதைத்த பிறகு, மீண்டும் ஒரு உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒவ்வொரு சால் பாரிலும் 100 கிராம் தட்டைப் பயறு விதைகளை இரண்டு அடிக்கு ஒன்று வீதம் ஊன்ற வேண்டும். இந்தத் தட்டைப் பயறுக்காக தனியாக எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. 80-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கி 150 நாட்கள் வரை மகசூல் கிடைக்கும். தோராயமாக அரை ஏக்கரில் 100 கிலோ வரை தட்டைப் பயறு மகசூல் கிடைக்கும்.
45 நாள் வரை தாக்குப் பிடிக்கும்!
குதிரைவாலி 5-ம் நாளில் முளைவிடும். 20 முதல் 25-ம் நாளில் களையெடுத்து விட்டு, நெருக்கமாக இருக்கும் பயிர்களைக் களைத்துவிட வேண்டும். ஒரு களை மட்டும் எடுத்தாலே போதும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் வளர்ச்சி இருப்பதால், விரைவாக பயிர் வளர்ந்து நிழல் கட்டிக்கொள்ளும். அதன் பிறகு களை எடுக்கத் தேவையில்லை. ஒரு மழை பெய்தபின், 45 நாட்கள் வரை மழை இல்லாவிட்டாலும், தாக்குப் பிடிக்கும். பூச்சி, நோய்கள் தாக்குவது இல்லை.
90 நாளில் அறுவடை!
குதிரைவாலி 75-ம் நாளில் இருந்து கதிர் எடுக்கத் தொடங்கி, 90-ம் நாளில் முற்றிவிடும். சரியான மழை கிடைக்காவிட்டால், முற்றுவதற்கு 100 நாட்கள் வரைகூட ஆகலாம். அறுவடையின்போது குதிரைவாலியின் தாள்களை (தட்டை) நிலத்திலேயே விட்டுவிட்டு கதிரை மட்டும் அறுவடை செய்து, காய வைக்க வேண்டும். பிறகு, கம்பு மூலம் அடித்தோ அல்லது மாட்டை விட்டு மிதிக்க வைத்தோ கதிரில் இருந்து மணிகளைப் பிரிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, தூசும் சேர்ந்தே வரும். புடைத்து சுத்தம் செய்தால்... 300 முதல் 400 கிலோ வரை மணிகள் கிடைக்கும்.
குதிரைவாலித் தாள் மற்றும் தட்டைப் பயறுச் செடிகள் கால்நடைகளுக்கு நல்லத் தீவனமாக அமையும். அதனால், அறுவடையின்போது, கவனமாக கதிர்களையும், தட்டைப் பயறையும் மட்டும் அறுவடை செய்வது நல்லது. சாகுபடி பாடம் சொல்லி முடித்த அன்பழகன், ''எனக்கு குதிரைவாலி 300 கிலோ கிடைச்சுது. அதோட தாள் 1 டன் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.
குதிரைவாலியை உணவுத் தேவைக்குனு விலை வெச்சுக் கொடுத்தா... கிலோ 35 ரூபாய் வீதம் எடுத்துக்குவாங்க. விதைக்குனு கொடுத்தா... கிலோ 50 ரூபாய் வரைக்கும் போகும். எங்கிட்டேயிருந்து ரோஸ் தொண்டு நிறுவனத்துக்காரங்களே கிலோ 50 ரூபாய்னு விதைக்காக வாங்கிக்கறாங்க. மொத்தத்துல சாகுபடி செலவு போக 12 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும். அரை ஏக்கர்ல, அதுவும் மானாவாரியில இந்த லாபமே பெரிய லாபம்தாங்க'' என்றார் சந்தோஷம் பொங்க. குறிப்பு : குதிரைவாலித் தாள், தட்டைப் பயறுச் செடிகளை மாடுகளுக்குத் தீவனமாக பயன்படுத்தலாம். இதன் மதிப்பு கணக்கில் சேர்க்கப்படவில்லை.
விதை வேண்டுமா..? குதிரைவாலியில் இருந்து கிடைக்கும் அரிசியில் குறைவானக் கலோரிகள், அதிகமானப் புரதச்சத்து, கோதுமையைவிட ஆறு மடங்கு அதிகமான நார்ச்சத்தும் இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது சிறப்பான உணவு. குதிரைவாலி அரிசி மூலம் பொங்கல், சாதம், கூழ் என பலவிதமான உணவுகளைத் தயாரிக்கலாம். கொதுமையைவிட சத்தானது புதுக்கோட்டை பகுதியில் விவசாயிகளிடம், இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் 'ரோஸ் தொண்டு நிறுவனத்தின்’ ஒருங்கிணைப்பாளர் விஜயா, ''பொதுவாகவே குடும்பத்துக்குத் தேவையான சிறுதானியங்கள், பருப்பு வகைகளை மானாவாரியாகத்தான் சாகுபடி செய்வார்கள். அந்தப் பழக்கம் தற்போது குறைந்துள்ளது. இதை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக எங்களது தொண்டு நிறுவனம் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் பாரம்பர்ய விதைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவையுள்ள விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.
காசி வேம்பையன் தொடர்புக்கு, அன்பழகன், அலைபேசி: 99438-31850 விஜயா, அலைபேசி: 99655-93144
--- நன்றி பசுமை விகடன்.
|
|
| |
Janvi | Date: Wednesday, 12 Nov 2014, 6:53 PM | Message # 59 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| பூச்சிக்கொல்லிக்கு வேலை இல்லை ! இயற்கைச் சமநிலையைப் பராமரிச்சா...
இரைவிழுங்கி, ஒட்டுண்ணி, நோய் பரப்பும் காரணிகள்னு சொல்லப்படுற வரிசையில... இயற்கையாவே பூச்சிகளுக்கு எதிரிகளா இருக்கற காக்கா, கொக்கு, குருவி, மைனா, ஆந்தை, கரிச்சான், பாம்பு, பல்லி, தவளை, ஓணான் மாதிரியான உயிர்களைப் பத்தி பாக்கப் போறோம். வயல்ல பூச்சிகள சமநிலையில வெக்குறதுல மேலே சொன்ன ஜீவன்களோட பங்கு முக்கியமானது. நிலத்தை உழும்போது, மண்ணுக்கு அடியில கூட்டுப்புழு, முட்டைனு பல நிலைகள்ல இருக்கறப் பூச்சிகளோட வெவ்வேறு பருவம், மண்ணுக்கு மேல வரும். டிராக்டருக்கு பின்னால வரிசை கட்டி வர்ற கொக்கு, மைனா மாதிரியான பறவைங்க அந்தப் பூச்சிகள பிடிச்சு அழிச்சுடும்.மேற்படி பறவை இனங்கள, பயிர் பாதுகாப்பு விஷயத்துல கொண்டு வரலாம்ங்கறதுக்கான ஆரம்பம்தான்... நெல் வயல்கள்ல அமைக்குற 'ஜி’ வடிவ பறவை இருக்கைகள். வயல்ல 6 அடி உயரத்துல 'ஜி’ வடிவத்துல குச்சிகளை நட்டு வெச்சி, அதுல வைக்கோல் பிரியை சுத்தி வெக்கணும். வெறும் குச்சியை மட்டும் வெச்சா பறவைக அதுல ரொம்ப நேரம் உக்கார முடியாது. வைக்கோல் சுத்தி வெக்கும் போது, குஷன் மாதிரி பறவைக வசதியா உக்காந்து, நாலா பக்கமும் பொறுமையா பூச்சிகளைத் தேடித் தேடி வேட்டையாடும். இந்தப் பறவைங்க, நெல்வயல்ல பூச்சிகளோட எண்ணிக்கையைக் குறைக்கறதுல முக்கிய பங்கு வகிக்குது. உயிரியல் உருப்பெருக்கம்! வயல்ல தெளிக்குற பூச்சிக்கொல்லி விஷம், தீமை செய்ற பூச்சிகளோட உடம்புக்குள்ள போனதும், அந்த விஷத்தோட வீரியம்... 10 மடங்கு அதிகமாகிடும். இந்தப் பூச்சியை, நன்மை செய்ற பூச்சி திங்கறப்ப... அதோட உடம்புக்குள்ள போற விஷம் 20 மடங்காயிடும். நன்மை செய்ற பூச்சியை பறவைக பிடிச்சு திங்கறப்ப, பறவைக்குள்ள போற விஷம் 30 மடங்காயிடும். அந்தப் பறவைகள மனுசங்க பிடிச்சு திங்குறப்ப விஷத்தோட வீரியம் 40 மடங்கா மாறிடும். இதை மருத்துவத்துல 'உயிரியல் உருப்பெருக்கம்'னு சொல்றாங்க. நெல் வயல்ல தெளிக்குற பூச்சிக்கொல்லி விஷம், வைக்கோல் வழியா மாட்டு வயித்துக்குள்ள போயி, பாலா மாறி மனுஷன் உடம்புக்குள்ள போறப்பவும் இதே கதைதான் நடக்குது. இதைப் புரிஞ்சுகிட்டா... பூச்சிக்கொல்லிகளை நினைச்சுக்கூடப் பாக்க மாட்டீங்க. வரப்பு பயிர்! பிரதானப் பயிரைத் தாக்குற தீமை செய்ற பூச்சிகள, வயலுக்குள்ள போக விடாம தடுத்து நிறுத்துறதுக்காக உங்க வயல சுத்தி வரப்புப் பயிர் கட்டாயம் இருக்கணும். வரப்புப் பயிராக, உயரம் அதிகமான மக்காச்சோளம், சோளம், ஆமணக்கு மாதிரியான பயிர்களை நடணும். அடுத்து, நம்ம நிலத்துல இருக்கற நன்மை செய்ற பூச்சிகளுக்காக ஊடுபயிராகவோ, பொறிப்பயிராகவோ தட்டைப் பயறு, மக்காச்சோளம், சூரியகாந்தி, செண்டுமல்லி மாதிரியான மஞ்சள் நிற பூக்கள் இருக்குற பயிர்களை நடணும். இதன் மூலமா, நல்லது செய்ற பூச்சிகளுக்குத் தேன் கிடைக்கறதோட... மகரந்தமும் பரவும். இந்தப் பயிர்களை தாக்குற அசுவணி மாதிரியான பூச்சிகளும் நல்லது செய்ற பூச்சிகளுக்கு உணவாகிடும். பொறிகள்: தீமை செய்ற பூச்சிகளை அழிக்க 3 விதமான பொறிகளை வயல்ல அமைக்கணும். மஞ்சள் நிற ஒட்டுப் பொறி: பழைய டால்டா டின்கள்ல மஞ்சள் நிறத்தைத் தடவி, அதுமேல விளக்கெண்ணெய் இல்லனா கிரீஸை தடவி, ஒரு ஏக்கருக்கு 5 இடம்கிற கணக்குல, உசரமா குச்சியை நட்டு அதுமேல கவுத்து வெச்சிடணும். மஞ்ச நிறத்தால கவரப்பட்டு பக்கத்துல வர்ற அசுவணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் மாதிரியான பூச்சிக டப்பா மேல ஒட்டிக்கிட்டு அழிஞ்சு போகும். விளக்குப் பொறி: வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா குண்டுபல்பைத் தொங்க விடணும். விளக்குக்கு கீழ இரும்புச் சட்டியை வெச்சு, அதுல தண்ணியை ஊத்தி, ரெண்டு சொட்டு மண்ணெண்ணெயையும் கலந்து விட்டுடணும். இந்த விளக்கு வெளிச்சத்துக்கு வர்ற பூச்சிக, விளக்கைச் சுத்தி வட்டமடிச்சு பாத்துட்டு, கீழ இருக்கற சட்டியில விழுந்து செத்துப் போகும். விளக்குப் பொறியை சாயங்காலம் 6 மணியிலிருந்து. 9 வரைக்கும்தான் வெக்கணும். அதுக்கு மேல நன்மை செய்ற பூச்சிகளோட நடமாட்டம் அதிகமாயிடும். இனக்கவர்ச்சிப் பொறி: பெண் பூச்சிகளோட வாசனைதான், ஆண் பூச்சிகளை இனப்பெருக்கத்துக்காக கவர்ந்து இழுக்கும். அதனால பெண் பூச்சிகளோட வாசனையை சைக்கிள் வால்டியூப் மாதிரியான ஒரு டியூப்ல அடைச்சு விக்குறாங்க. இந்த வால்டியூப்பை ஒரு பிளாஸ்டிக் பைக்குள்ள வெச்சி, மேல ஒரு மூடியை வெச்சு மூடியிருப்பாங்க. இந்த மூடியில சின்னதா ஒரு ஓட்டை இருக்கும். இதை வயல்ல வெக்கும்போது 5 கிலோ மீட்டர் தூரத்திலிருந்துகூட ஆண் பூச்சிக பறந்து வரும். வாசனை புடிச்சுகிட்டே வர்ற ஆண் பூச்சி ஒட்டை வழியா உள்ள போயி மாட்டிக்கும். இதையும் ஏக்கருக்கு 5 இடத்துல அமைக்கணும். இந்தப் பொறி மூலமா... பச்சைக்காய்ப் புழு, புருடீனியா புழு, நெல் குருத்துப்பூச்சி, கத்திரிக் காய்ப்புழு இதையெல்லாம் கட்டுப்படுத்தலாம். அவசியம் இருக்கணும், இடைவெளி! இதைத் தவிர, பூச்சிகளை ஆரம்பம் முதலே கட்டுப்படுத்தறதுக்கு 5 வழிகள் இருக்கு. கோடை உழவு: கோடை உழவு செய்றப்ப 5 செ.மீ. முதல் 10 செ.மீ. வரைக்கும் அடி மண் கிளறப்படுது. அப்ப மண்ணுக்கு அடியில இருக்கற பூச்சிகளோட பல பருவங்கள் மேல வரும். இதுல பறவைக தின்னது போக மிச்சம் இருக்கறது வெயில் பட்டு செத்துப்போயிடும். கலப்புப் பயிர் : வயல்ல எப்பவும் தனிப்பயிரா செய்யாம, கலப்புப் பயிரா செய்யும்போது, குறிப்பிட்ட சில பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். வரப்பு: வயல்ல பயிர் இல்லாத நேரங்கள்ல, தீமை செய்ற பூச்சிக வரப்புகள்லதான் வசிக்கும். அதுக்கு இடம் கொடுக்காம, வரப்புகளை களை இல்லாம சுத்தமா வெச்சுக்கணும். இடைவெளி: ஒவ்வொரு பயிரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைவெளியிலதான் நடணும். இடைவெளி குறைவா இருந்தா... நுண்ணிய சீதோஷ்ண நிலை உருவாகி, தீமை செய்ற பூச்சிக வசிக்கறதுக்கு நாமளே வசதி பண்ணிக் கொடுத்த மாதிரியாகிடும். இடைவெளி சரியா இருக்கறப்ப சூரியஒளியும், காத்தும் முறையா கிடைக்கும். பயிரோட வளர்ச்சி நல்லா இருக்கறதோட, தீமை செய்ற பூச்சிக அங்க வசிக்க முடியாம போயிடும். எரிக்கக் கூடாது: அறுவடை செஞ்ச பிறகு கழிவுகளை வயல்ல வெச்சு எரிக்கக் கூடாது. இந்தக் கழிவுகள வயல்ல ஒரு ஓரத்துல குவிச்சு, நன்மை செய்ற பூச்சிக வசிக்கறதுக்கான வசதியை செஞ்சு கொடுக்கணும். உதாரணமா, நெல் வயல்ல அறுவடை செஞ்ச பிறகு, அடுத்தப் பயிர் வெக்குறவரைக்கும் வைக்கோல்லதான் சிலந்தி குடியிருக்கும். சர்க்கரைப் பாகு, தேன் கலந்த தண்ணியை வயல்ல தெளிச்சு விட்டா நன்மை செய்யும் பூச்சியான சிவப்பு எறும்பு, வயலுக்குள்ள அதிகமா வரும். சர்க்கரைத் தண்ணிய அது குடிச்சு முடிச்சதும், தீமை செய்ற பூச்சிகளை அழிக்க ஆரம்பிச்சுடும். புகை, தூசு கட்டுப்பாட்டுக்காக வயலைச் சுத்தி மரங்களை நட்டு வெக்கணும். காத்து தடுப்பா பயன்படுறதோட தூசுகள வயலுக்குள்ள விடாமலும் தடுக்கும். டிரைகோகிரம்மா மாதிரியான ஒட்டுண்ணிக காத்துல பறந்து போறதையும் தடுக்கலாம். இது எல்லாத்தையும் முறையா செஞ்சிட்டா... நம்ம வயல்ல இயற்கை சமநிலையை உருவாக்கிடலாம். பிறகு, பூச்சிக்கொல்லிக்கு வேலையே இருக்காது. இதுவரைக்கும் பூச்சிகளைப் பத்தி உங்ககிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகிட்ட நான், இப்போதைக்கு உத்தரவு வாங்கிக்கறேன். சந்தர்ப்பம் கிடைக்கறப்ப மறுபடியும் சந்திப்போம்! நன்றி! தமிழக வேளாண் துறையில் பணியாற்றும் எனக்கு இப்படி ஓர் அருமையான தொடரை எழுத வாய்ப்பளித்த ‘பசுமை விகடனு’க்கும், அனுமதி வழங்கிய என்னுடைய துறைக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பூச்சிகள் பற்றி மேலும், மேலும் எழுதுங்கள்’ என்று நேரிலும், அலைபேசி வாயிலாகவும் என்னை ஊக்கப்படுத்திய விவசாயிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! தொடர்புக்கு, அலைபேசி: 9443- 38356. மின்னஞ்சல்: Selipm@yahoo.com
--- நன்றி பசுமை விகடன்.
|
|
| |
Janvi | Date: Monday, 17 Nov 2014, 9:05 PM | Message # 60 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| பலே வருமானம் தரும் பலா !
மகசூல் கு.ராமகிருஷ்ணன் "ஒரு மரத்திலேயே சுளையாக 10,000 ரூபாய் பலே வருமானம் தரும் பலா !  உரக்கடைக்காரரின் இயற்கை விவசாயம் ! பளிச்... பளிச்... நாட்டுப் பலா நல்லது.... பலாவுக்கு தண்ணீர் தேங்காத மேட்டு நிலம் தேவை. ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும். நான் உரக்கடை வெச்சுருக்கேன். ஆனா, என்னோட பிலா மரங்களுக்குக் கொஞ்சம்கூட உரமோ, பூச்சிமருந்தோ பயன்படுத்துறதில்ல. ஆனாலும், காய்ப்பு சிறப்பா இருக்கு. பழமும் நல்லா பெருசு பெருசா இருக்கு. சுளையும் வாசனையோட, திரட்சியா, நார் இல்லாம இருக்கு. அதனாலயே அதிக விலை கிடைக்குது. வருஷத்துக்கு, ஒரு மரத்துல இருந்து மட்டுமே பத்தாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குதுனா பார்த்துக்கோங்க. டெல்டா மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் இது ஆச்சர்யமான மகசூல்னு மத்த விவசாயிகள் எல்லாம் பாராட்டுறாங்க" -இப்படி பூரிப்பு பொங்கப் பேசுபவர் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம். காவிரியின் கிளையாறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகில் வண்டல் கலந்த படுகை மண் பரப்பில் இருக்கிறது அவருடைய தோட்டம். சுமார் பத்து ஏக்கரில் வாழை. அதன் அருகிலேயே சுமார் அரை ஏக்கரில் நிற்கின்றன அவருடைய பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய பலா மரங்கள். மரத்துக்கு 100 காய்..! இரண்டு பலா மரங்களைச் சுட்டிக்காட்டிய சுந்தரம், "இந்த ரெண்டுக்கும் 60 வயசுக்கு மேல ஆகுது. ரெண்டுமே அருமையான காய்ப்புள்ள தாய்மரங்கள்தான். இதுல ஒட்டுக்கட்டித்தான் மத்த மரங்களை உருவாக்கினோம். நாப்பது வயசுள்ள மரங்கள்கூட இங்க இருக்கு. மரத்துக்கு மரம் சுமார் 30 அடி இடைவெளியில மொத்தம் 27 மரங்கள் இருக்கு. இதுல வருஷத்துக்கு தலா 100 பழங்கள் கிடைக்குற மரங்கள் 14 இருக்கு. இதோட பழங்கள் நடுத்தரமான அளவுல இருக்கும். இதுல, 60 முதல் 100 சுளைகள் இருக்கும். பழம் ஒவ்வொண்ணும் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரைக்கும் விலை போகுது. வருஷத்துக்கு 50 பழங்கள் வரைக்கும் தர்ற மரங்கள் 13 இருக்கு. இதோட பழங்கள் ரொம்பவே பெருசா இருக்கும். இதுல 200 சுளைகள் வரை இருக்கும். ஒரு பழம், 200 முதல் 300 ரூபாய் வரைக்கும் விலை போகுது. என்னோட தோட்டத்துப் பழங்கள் எல்லாமே உயர்தரமா இருக்குறதுனாலதான், நல்ல விலை கிடைக்குது. திருக்காட்டுப்பள்ளியில உள்ள வியபாரிங்க எப்போதுமே இந்தப் பழங்களை விரும்பி வாங்குவாங்க. இது எல்லாமே நாட்டுப் பிலா. தாய்மரம் நல்லா இருக்குறதுனால இதுல ஒட்டுக் கட்டின கன்றுகள் எல்லாமே அற்புதமா மகசூல் கொடுக்குது" என்றவர், சாகுபடி பாடத்தைத் தொடங்கினார். பருவ மழையே பலாவுக்குப் போதும்! "வண்டல், செம்மண் மற்றும் மணல் கலந்த மண்ணில் பலா சிறப்பாக விளையும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுடைய மேட்டு நிலத்தில் மட்டுமே பலா சாகுபடி செய்ய வேண்டும். விதை மூலம் உற்பத்தி செய்த கன்றை, நல்ல காய்ப்புள்ள தாய்மரத்தில் ஒட்டுக் கட்டி, நடவு செய்தால்தான் மரத்தின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், தரமான காய்களும் கிடைக்கும். முப்பது அடி இடைவெளியில் மூன்றடி ஆழமும், மூன்றடி சுற்றளவும் கொண்ட குழி எடுத்து நடவேண்டும். அதிகபட்சம் ஒரு ஏக்கரில் 50 கன்றுகள் நடமுடியும். நடவுக் குழியில் 75% தொழுவுரம், 15% மண்புழு உரம், 5% செம்மண், 5% வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து குழியை நிரப்பி, லேசாக தண்ணீர் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில்தான் கன்றை நடவு செய்ய வேண்டும். ஒரு மாதம் வரை, வாரம் இரு முறையும், அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதும். மூன்றாம் ஆண்டு, கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணீர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் தண்ணீர் தர வேண்டியதில்லை... பருவ மழையே போதும். பலன் கிடைக்க 10 வருஷம்!
|
|
| |