விவசாய தொழில்நுட்பம்
|
|
Janvi | Date: Monday, 17 Nov 2014, 9:09 PM | Message # 61 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| நடவிலிருந்து 5-ம் ஆண்டு காய்ப்புக்கு வரும். அப்போது ஒரு மரத்துக்கு 3 முதல் 4 காய்கள்தான் கிடைக்கும். 6-ம் ஆண்டு சுமார் 8 காய்களும், 7-ம் ஆண்டு 10 காய்களும் கிடைக்கும். அதன் பிறகுதான் படிப்படியாக மகசூல் அதிகரிக்கும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 50 முதல் 100 காய்கள் கிடைக்கும். பூ வந்ததிலிருந்து சுமார் 95-ம் நாள் காய் பறிக்கலாம். நன்கு பழுக்கும் முன்பே பறித்துவிட வேண்டும். பழுத்து விட்டால், இதன் வாசனை தெரிந்து பறவைகள் பழத்தைச் சேதப்படுத்திவிடும். அதேசமயம் இளங்காயாகவும் பறிக்கக் கூடாது. காயில் உள்ள முள்ளை ஒடித்துப் பார்த்தால் தண்ணீர் போல் ஒரு திரவம் வரவேண்டும். பால் போல் வந்தால் அந்தக் காயைப் பறிக்கக் கூடாது. காயில் உள்ள முட்கள், நன்கு அகன்று விரிந்து, கையில் குத்தாத நிலையில் இருக்கும் போது பறிக்கலாம். அப்போது காய் நன்கு முற்றி, மிக லேசான மஞ்சள் நிறத்துக்கு மாறியிருக்கும். அதுதான் பறிப்பதற்கு சரியான தருணம். பறித்த சில நாட்களிலேயே பழுத்துவிடும். ஆண்டுக்கு ஒரு கவாத்து..! பலா இலைகள் மண்ணில் விழுந்து மட்கி உரமாகி விடுவதால், தனியாக எந்த உரமும் தேவையில்லை. இருந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை, மரத்தின் கிளைகளின் நிழல் முடியும் எல்லையில், மரத்தைச் சுற்றி ஒரு அடி ஆழமும், ஒன்றரையடி அகலமும் கொண்ட குழியை எடுத்து... அதில், மரத்துக்கு 50 கிலோ வீதம் தொழுவுரம் போடவேண்டும். மரங்களுக்கு நன்றாக சூரிய ஒளி கிடைக்கும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால்தான் தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால், கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் வைத்துக் கொண்டு, கூடுதலாக உள்ள காய்களை, பிஞ்சாக இருக்கும்போதே வெட்டி எடுத்துவிட வேண்டும். பிஞ்சு காய்களை கறியாகச் சமைத்து சாப்பிடலாம். காய்த் துளைப்பான் கவலையில்லை..!
மரத்தின் கீழ்பகுதியில் காய்ப்பு இருந்தால், மண்ணில் பட்டு, அந்தக் காய்கள் அழுகிவிடும். அதனால் எந்தப் பலனும் இல்லை. மேற்பகுதியில் உள்ள காய்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களையும் இவை எடுத்துக்கொண்டு விடும். எனவே, மிகவும் கீழ்பகுதியில் பூவிடும் போதே அகற்றிவிட்டால், மற்ற காய்கள் தரமானதாக உருவாகும். பாடத்தை முடித்த சுந்தரம், "பூச்சினு பெருசா வர்றதில்ல. சில காய்கள்ல மட்டும் துளைப்பான் தாக்குதல் இருக்கும். ஆனா, ரசாயனப் பூச்சிமருந்துகள அடிச்சும் பலனில்லாததால நாலு வருஷமா பூச்சிமருந்து அடிக்கறதில்ல. அதனால, துளைப்பான் தாக்குதல், கூடவும் இல்லை, குறையவும் இல்லை. ஒரு மரத்தோட மொத்த மகசூல்ல சுமார் ஐந்து சதவிகிதக் காய்கள் மட்டும்தான், துளைப்பான் தாக்குதலால சேதமாகும். அதனால, அதை நான் பெருசா எடுத்துக்கல. ஆனா, அந்த ஐந்து சதவிகிதத்தைக் கூட கட்டுப்படுத்தறதுக்கு ஏதாவது இயற்கைப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தலாமானு யோசிச்சுக்கிட்டிருக்கேன். அதேசமயம், மேலே சொன்ன வழிமுறைகளைச் சரியா கடைபிடிச்சாலே தரமான பிலாப் பழங்களை உருவாக்கலாம்" என்றவர், "ஒரு ஏக்கர்ல பிலா நடவு செய்ய 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மகசூல் கொடுக்கற மரத்துக்கு, தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் அதிகபட்சமா ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். வருமானமோ, 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்" என உற்சாகத்தோடு சொன்ன சுந்தரத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக, சட்டையைப் போட்டுக் கொள்ளச் சொன்னார், நம் புகைப்படக்காரர். ஆனால், "விவசாயினா இப்படித்தான் இருப்பான். அதனால இப்படியே படமெடுங்க... அதுவும் இந்தப் பிலாப் பழத்தோட எடுங்க" என்று அழுத்தமாகச் சொன்னபடி பழத்தைக் கையில் தூக்கிக் கொண்டு தெம்பாக நின்றார் 71 வயது சுந்தரம்!
ஒட்டுக் கட்டுவது எப்படி..? பலாவில் ஒட்டுக் கட்டும் முறை பற்றி, ஒட்டுக் கட்டுதல் மற்றும் மர சாகுபடியில் அனுபவம் பெற்றவரான பாலசுப்பிரமணியம் பேசுகிறார். "வீரிய ரக பலாவைவிட, அதிக நோய் எதிர்ப்புச் சக்தி, வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் நீண்ட காலம் பலன் தரும் நாட்டுப் பலாதான் மிகவும் சிறப்பானது. தரமான நாட்டுப் பலாவின் தாய்மரங்களைத்தான் ஒட்டுக் கட்ட தேர்வு செய்ய வேண்டும். ஒட்டுக் கட்டுவதற்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள்தான் சிறந்தது. கன்றுகளை உருவாக்க, செம்மண், மட்கிய தொழுவுரம், மணல் ஆகியவற்றை சமஅளவு கலந்து, சிறியத் தொட்டிகளில் நிரப்பி, தண்ணீர் தெளிக்க வேண்டும். மறுநாள் ஒரு அங்குல ஆழத்தில் பலாக் கொட்டையை ஊன்றி, தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். பென்சில் தடிமனுக்குக் கன்றின் தண்டு வளர்ச்சி அடைந்ததும் அப்படியே தொட்டியோடு எடுத்து வந்து, தாய்மரத்தின் செழிப்பானக் கிளையில், பென்சில் தடிமனில் இருக்கும் ஒரு தரமான பக்கக் கிளையில் ஒட்டுக் கட்ட வேண்டும். கன்றையும், தாய்மரத்தின் கிளையையும் பக்கவாட்டில் கத்தியால் சீவி, சீவப்பட்ட பகுதிகளை ஒன்றாக இணைத்து, நைலான் கயிற்றால் இறுகக் கட்ட வேண்டும். கன்று மற்றும் கிளை ஆகியவற்றின் தலைப்புப் பகுதி ஒரே அளவாக இருக்க வேண்டும். தினமும் கன்றில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒட்டுக் கட்டியதிலிருந்து 45-ம் நாள், ஒட்டுக் கட்டிய இடத்துக்குக் கீழ்ப்பகுதியில், (மரத்திலிருந்து வரும் கிளையின் பாகத்தில்) பக்கக் கிளையில் மட்டும் லேசாக வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டி துண்டித்து விடக் கூடாது. 60-ம் நாள், ஏற்கெனவே வெட்டிய இடத்தின் மறுபக்கத்தில் லேசாக வெட்ட வேண்டும். 90-ம் நாள், அதை வெட்டி கன்றைத் தனியாகப் பிரித்து எடுக்கலாம். இப்போது, கன்றோடு பக்கக் கிளையின் துண்டு பாகமும் சேர்ந்தே வந்துவிடும். ஒட்டுக் கட்டிய பகுதிக்கு மேலே உள்ள கன்றின் மேல் பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட வேண்டும். ஒட்டுக்கு மேலே, தாய்மரத்தின் பக்கக் கிளையின் மேல் பகுதி மட்டுமே இருக்க வேண்டும். ஒட்டுப் பிரிக்கப்பட்ட பலாக் கன்றை, ஒரு மாதம் வரை நிழலில் வைத்து, தினமும் தண்ணீர் தெளித்து, அதன் பிறகு நடவு செய்யலாம்ÕÕ என்ற பாலசுப்பிரமணியம், துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் உபாயத்தையும் சொன்னார். அது- "1 லிட்டர் தண்ணீரில், 30 மில்லி வேப்பெண்ணெயைக் கலந்து, பூப்பதற்கு முன்பும், பூக்கும் போதும் மரத்தின் எல்லா பாகங்களிலும் படுமாறு தெளிக்க வேண்டும். இது ஒரு மரத்துக்குப் போதுமானது." படங்கள் கே. குணசீலன் தொடர்புக்கு சுந்தரம், தொலைபேசி 04362- 229570
---- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Monday, 17 Nov 2014, 9:12 PM | Message # 62 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| குப்பைக் கோழிகள் !
இயற்கை கூடுதலாக முட்டை போடும்  'குப்பைக் கோழிகள்'! இரண்டாம் உலகப்போர் சமயத்தில், பலரும் இறைச்சிக் கோழிகளையும், முட்டைக் கோழிகளையும் வளர்த்து வந்தார்கள். அந்தப் பண்ணைகளில் பெருமளவில் நோய்கள் தாக்கி கோழிகள் இறந்து போயின' என்று பார்த்தோம். அதேசமயத்தில் ஒரு பண்ணையாளர் குழுவினரும் இறைச்சிக்காக, முட்டைக்காக என இரண்டு வகையான கோழிகளையும் அன்போடு வளர்த்து வந்தனர். இவர்கள் கோழிகளுக்கும் கழிச்சல், வலிப்பு போன்ற அனைத்து நோய்களும் வந்தன. மருத்துவர்களின் உதவியை நாடாமல், அவர்களே தங்கள் கோழிகளுக்கான உணவுகளை ஆராய்ந்தபோது, 'புரதம், வைட்டமின் பற்றாக்குறையால்தான் நோய்கள் வருகின்றன' என்று கண்டுபிடித்தார்கள். உடனடியாகக் கோழிகளைத் தனித் தனியாகப் பிரித்து வைத்து தானியங்களையும், கிளிஞ்சல்களையும், இலைகளையும் தீவனமாகக் கொடுக்கத் தொடங்கினர். அதன் பின்பு பலவித நோய்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, முட்டை உற்பத்தியும் இருபது சதவிகிதம் அதிகரித்தது. தீவனச் செலவும் வெகுவாகக் குறைந்தது. இதைக் கண்ட அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். அதோடு அந்தப் பண்ணையாளர்கள் மாட்டுச்சாணியை சாப்பிடும் பன்றிகள் நன்கு கொழுப்பதை அறிந்து வைத்திருந்தார்கள். அதனால் எதார்த்தமாக கோழிகளுக்கு பசுஞ்சாணியைத் தின்னக் கொடுத்தபோது, கோழிகள் ஒன்றையன்று கொத்துவதைக் கூட நிறுத்தி விட்டன. இவர்களுக்கும் நவீன விஞ்ஞானிகள் பல ஆலோசனைகளை வழங்கத்தான் செய்தார்கள். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த இவர்களிடம் வேலையாட்கள் போதவில்லை. கொட்டில்களில் சேர்ந்து கொண்டிருந்த கோழிக் குப்பைகளைக்கூட, இவர்களால் அகற்ற முடியவில்லை. அதனால் இவர்களது கொட்டிலில் கோழிக் குப்பைகள் பெருகிக் கொண்டே இருந்தன. அதன் மேலேயே அடுக்கடுக்காக எச்சம் விழுந்து விழுந்து ஒரு ஆண்டு கழிந்தபின் குப்பைகள் தூள்தூளாக ஆகின. ஆனால், கோழிகளுக்கு எந்த நோயும் பரவவில்லை. பல பண்ணைகளில் இந்த விஷயம் பரவ, அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்து ஆராய்ச்சிப் பண்ணையில் இது பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். ஆய்வுக் கூடத்தில் இரண்டு கொட்டில்களை அமைத்து, ஒரு கொட்டிலில் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளித்து வந்தனர். இன்னொன்றில் கோழிக் குப்பையையும், வைக்கோலையும் பரப்பி இரண்டிலும் சம எண்ணிக்கையில் சம வயதுள்ள கோழிகளை விட்டனர். சில வாரங்கள் கழித்து ஆராயும்போது குப்பையில் இருந்த கோழிகள் ஆரோக்கியமாக இருந்ததுடன், அதிக முட்டைகளை இட்டன. கிருமிநாசினி தெளித்தக் கொட்டிலில் இருந்த கோழிகளில் வெகுவாக முட்டைகளின் எண்ணிக்கை குறைந்தன. அதன் பிறகுதான், குப்பைகள் இருந்த கொட்டிலில் அதைக் கிளறிக் கிளறி கோழிகள் எதையோ சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்து, அதில் புரதம் மிகுந்த பூஞ்சைகளும், காளான்களும் உற்பத்தியாவதைக் கண்டு பிடித்தனர். தவிர, அதில் பென்சிலின், செப்டோமைசின் குடும்பத்தைச் சேர்ந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளும், பி-12 என்ற வைட்டமினும் உற்பத்தியாவதைக் கண்டுபிடித்தனர். 'இந்த ஆன்டிபயாட்டிக்குகளால்தான் கோழிகளுக்கு நோய்கள் பரவவில்லை. பி-12 வைட்டமினால்தான் முட்டை உற்பத்தி அதிகரித்தது. தவிர, இந்த வைட்டமின் ரத்த சோகையையும் குணப்படுத்துகிறது. மேலும் பசுவின் சாணியில் இதே வைட்டமின் அதிகளவில் இருப்பதால்தான் சாணியைத் தின்றக் கோழிகளும் நன்கு வளர்ந்தன' என்று விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை எழுதினர். கூடவே, 'கிருமிநாசினிகள் தெளிக்கப்படும்போது வைட்டமின்களையும், ஆன்டிபயாட்டிக்குகளையும் உற்பத்தி செய்யக்கூடிய உயிரிகள் கொல்லப்படுகின்றன' என்றும் அறிவித்தனர். ஆனால், இன்னமும், மனிதர்களுக்கான மருத்துவத்தில் உள்ளது போலவே, கால்நடை மருத்துவத்திலும் கிருமிகள்தான் நோய்களை உண்டு பண்ணுகின்றன என்று நவீன விஞ்ஞானம் சொல்லிக் கொண்டிருக்கிறது. 'மண்ணில் கிருமிகள் இருப்பதால், கால்நடைக் கழிவுகளிலும் கிருமிகள் இருக்கலாம். அவற்றால் கால்நடைகளுக்கு நோய் தொற்றலாம்' என்றெல்லாம் யூகம் செய்து, அதற்கானத் தீர்வுகளையும் போதித்து வருகிறார்கள், துறைசார்ந்த விஞ்ஞானிகள். அவற்றை ஏகப்பட்ட விவசாயிகள், பண்ணையாளர்கள் பின்பற்றியும் வருகிறார்கள். ஆனபோதும், கோழிகளுக்கோ... மற்ற மற்ற கால்நடைகளுக்கோ வருகிற எந்த நோயையும் இவர்களால் தவிர்க்க முடிவதில்லை. வெள்ளைக் கழிச்சல், ரத்தக் கழிச்சல், அம்மை, ஈரல் பாதிப்பு, நீலநாக்கு, காணை என ஏகப்பட்ட நோய்கள் வந்து கொத்துக் கொத்தாக மடியத்தான் செய்கின்றன கோழிகளும் கால்நடைகளும். இதுபோல ஒவ்வொரு பிரச்னையையும் பார்த்துவிட்டு, 'அதனால் இருக்குமோ... இதனால் இருக்குமோ...' என்று குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகளில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். கால்நடைகளோடு அன்போடு பழகிப் பார்த்து அதன் கஷ்டங்களைப் புரிந்து கொள்பவர்களால் மட்டும்தான் இதற்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியுமே தவிர, விஞ்ஞானிகளால் ஒன்றுமே செய்ய முடியாது. இப்படிப்பட்ட விஞ்ஞானிகளுக்கு, மேலே நாம் பார்த்த சம்பவமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அரைகுறை விஞ்ஞானிகளின் பேச்சைக் கேட்காமல், அமெரிக்கப் பண்ணையாளர் குழுவினரின் பாணியைப் பின்பற்றி நாமும் பயனடைவோம். - போற்றுவோம்
--- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Monday, 17 Nov 2014, 9:16 PM | Message # 63 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| 50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்... நிறைவான வருமானம் தரும் நூக்கல்! த. ஜெயகுமார்
உற்பத்தி செய்த பொருளை விற்க அலைவதைவிட... தேவை அதிகம் உள்ள பொருளை உற்பத்தி செய்வதுதான், சிறந்த தொழிலதிபர் ஆவதற்கான சூத்திரம். இது விவசாயத்துக்கும் பொருந்தும். அந்த வகையில், ஓசூர், பெங்களூரு சந்தையில் அதிகத் தேவையுள்ள 'டர்னிப்’ எனப்படும் நூக்கலை, (சில பகுதிகளில் 'நூல்கோல்’ என்றும் நூக்கல் என்றும் அழைக்கிறார்கள்) கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலமங்கலம், பேரிகை, சூளகிரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் பயிரிட்டு, தொடர்ந்து லாபமீட்டி வருகிறார்கள்... விவசாயிகள்! பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ்... போன்ற 'இங்கிலீஷ்’ காய்கறிகள் வரிசையில் நூக்கலும் ஒன்று. மிதமான குளிரும், வெப்பமும் இருக்கும் பகுதிகளில் வளரக்கூடிய இது, நல்ல வருமானம் தரக்கூடிய பயிராகவும் இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் இது விளைவதற்கான சூழல் நிலவுவதால், அங்கு அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இப்படி பல ஆண்டுகளாக நூக்கல் சாகுபடியில் ஈடுபட்டு வருபவர்களில், ஒருவரான வெங்கடேசனைத் தேடி, அவருடையத் தோட்டத்துக்குச் சென்றோம். கெலமங்கலத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய தோட்டம். ''முன்ன, டெம்போ வெச்சு ஓட்டிட்டிருந்தேன். சுத்து வட்டாரத்துல இருந்து காய்கறிகளை ஏத்திக்கிட்டு, ஓசூர் மார்க்கெட்டுக்கு தினமும் போயிட்டு வருவேன். கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட்னு காய்கறிகளுக்கு நல்ல தேவை இருந்துச்சு. விவசாயிக 3 மாசத்துல நல்ல காசு பார்த்துட்டு இருந்தாங்க. அதனால, எனக்கும் காய்கறி சாகுபடியில ஆசை வந்துச்சு. என்னோட நிலத்துல காய்கறிகள போட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல, பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்குனு போட்டுட்டு இருந்தேன். சந்தையில 'டிமாண்ட்’ உள்ள காயோட விதைகளைக் கொடுத்து, வியாபாரிங்க விதைக்கச் சொல்லுவாங்க. அப்படித்தான் என்னோட நிலத்துல நூக்கல் போட ஆரம்பிச்சேன். கர்நாடகா மாநிலத்திலிருந்து ஓசூர் பகுதிக்கு வந்த காய்கறிகள்ல இதுவும் ஒண்ணு.
|
|
| |
Janvi | Date: Monday, 17 Nov 2014, 9:17 PM | Message # 64 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| மொத்தம் 5 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, கொஞ்ச நிலத்துல நூக்கல் போட்டேன். என்னோட நிலத்துல நல்லாவே வந்துச்சு. அதனால வருஷா வருஷம் நூக்கல் போட ஆரம்பிச்சுட்டேன். இந்த முறை 50 சென்ட்ல போட்டு, அறுவடை பண்ணிட்டேன். வழக்கமா 60 நாள்ல வர்றது, இந்த முறை 45 நாள்லயே மகசூலுக்கு வந்துடுச்சு'' என்று முன்கதை சொன்ன வெங்கடேசன், 50 சென்ட் நிலத்தில் நூக்கல் சாகுபடி செய்யும் முறை பற்றி சொல்ல ஆரம்பித்தார். அது அப்படியே பாடமாக இங்கே... ஏக்கருக்கு 625 கிராம் விதை! 'நூக்கல் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடியது. குறிப்பாக, பனிக்காலத்தில் நன்றாக விளையும். நாற்று நடவு, நேரடி விதைப்பு என இரண்டு முறைகளில் நடவு செய்யலாம். அதிகப்பரப்பில் சாகுபடி செய்ய வேண்டுமானால், நேரடி விதைப்புதான் ஏற்றது. சாகுபடி நிலத்தில் (அரை ஏக்கர்) இரண்டு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, தானியங்களை விதைப்பது போல் நூக்கல் விதையை நிலத்தில் தூவிவிட வேண்டும் (ஒரு ஏக்கர் நிலத்துக்கு 625 கிராம் விதை தேவைப்படும்). விதைத்த பிறகு ஏர் கலப்பையிலோ, டிராக்டரிலோ நிலத்தை சமன் செய்து, பாசனம் செய்ய வசதியாக, பார் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொருத்து பாரின் அளவை அமைத்துக் கொள்ளலாம்.
|
|
| |
Janvi | Date: Monday, 17 Nov 2014, 9:19 PM | Message # 65 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| மேக மூட்டம் கவனம்! நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். களைகள் வளர்வதைப் பொருத்து, விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும். களை எடுக்கும்போதே, ஒவ்வொரு செடிக்கும் 3 அங்குலம் அல்லது 4 அங்குலம் இடைவெளி இருப்பதுபோல (இடைவெளி இருந்தால்தான் காய் பெருக்கும்) அதிகப்படியான செடிகளை கொத்திவிட்டு, பரிந்துரைக்கப்படும் உரங்களைத் தேவையான அளவு கொடுக்க வேண்டும். 25 நாட்களுக்கு மேல் காய்கள் வர ஆரம்பிக்கும். மேக மூட்டம் இருக்கும் சமயத்தில், புழுக்கள், பூச்சிகளின் தொல்லை இருக்கும். அந்த சமயத்தில், பூச்சிவிரட்டிகளைத் தெளிக்க வேண்டும். அவ்வப்போது, மண்ணின் தன்மையைப் பொருத்து... பரிந்துரைக்கப்படும் நுண்ணூட்ட உரங்களைக் கொடுத்து வந்தால், கிழங்கின் எடை கூடும். நடவு செய்த 45 நாட்களுக்கு மேல் கிழங்குகள் பெருத்து, 60 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். செடிகளை வேரோடு பறித்து, வேர்களை முறுக்கி எடுக்க வேண்டும். மேற்பகுதியில் இருக்கிற தழைகளை ஒடித்துவிட்டு, அப்படியே மூட்டை பிடிக்கலாம். நன்றாக விளைந்திருந்தால், ஒரு கிழங்கு கால் கிலோ அளவு எடை இருக்கும்.’ 81 மூட்டை மகசூல்! சாகுபடிப் பாடம் சொன்ன வெங்கடேசன் நிறைவாக, ''50 சென்ட்ல இருந்து 80 மூட்டைக்கு (80 கிலோ மூட்டை) குறையாம நூக்கல் மகசூல் கிடைக்கும். இந்த முறை எனக்கு 81 மூட்டை கிடைச்சுது. பெங்களூர் சந்தைக்கு 40 மூட்டையை அனுப்பினேன். மூட்டை ஆயிரம் ரூபாய்னு விலை போச்சு. மீதியை, மூட்டை 500 ரூபாய்னு ஓசூர் மார்க்கெட்லேயே போட்டுட்டேன். மொத்தம் 60 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. எல்லா செலவும் போக... 49 ஆயிரம் ரூபாய் லாபமா நின்னுச்சு. எவ்வளவு உற்பத்தியானாலும், ஒரு கிலோ நூக்கல் விலை, 6 ரூபாய்க்குக் கீழ எப்பவும் குறையறதில்லை'' என்று சந்தோஷமாக விடை கொடுத்தார். தொடர்புக்கு, வெங்கடேசன், செல்போன்: 98430-67410 மகேஷ், செல்போன்: 94431-41366
|
|
| |
Janvi | Date: Monday, 17 Nov 2014, 9:21 PM | Message # 66 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| இயற்கை முறையிலும், சாகுபடி செய்யலாம்!
நூக்கலை இயற்கை முறையில் பயிர் செய்வது குறித்து, நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாய ஆலோசகர் மகேஷ் சொன்ன விஷயங்கள் இங்கே... ''நூக்கலை, ஊடுபயிராகவோ, தனிப்பயிராகவோ இரண்டு முறைகளிலுமே சாகுபடி செய்யலாம். தனிப்பயிராக சாகுபடி செய்ய, ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும். நாற்று நடவு முறையில் சாகுபடி செய்ய, குழித்தட்டுகளில் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். குழித்தட்டில் தேங்காய் நார், மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு நிரப்பி, விதைகளை ஊன்றி விட வேண்டும். தினமும் பூவாளி மூலமாக தண்ணீர் தெளித்து வந்தால், 25 நாட்களில் நாற்று தயாராகி விடும்.
10 டன் தொழுவுரம், ஒரு கிலோ பவேரியா பேசியானா, 5 கிலோ மணல், ஒரு கிலோ கொம்புசாணம் அல்லது ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் தூவி... இரண்டு சால் உழவு ஓட்டி, பார் பாத்திகளை அமைத்துக் கொண்டு, நான்கு அங்குல இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 8-ம் நாள், ஏக்கருக்கு 4 டேங்க் (10 லிட்டர்) வேப்பங்கொட்டைக் கரைசலை (100 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ பச்சை வேப்பங்கொட்டையை நசுக்கி 3 நாட்கள் ஊற வைத்த கரைசல்) தெளிக்க வேண்டும். இது, வெட்டுப்புழு, வேர்களைத் தாக்குகிற வெள்ளைப் புழு, கருப்புப் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நடவு செய்த 8 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் நிலத்தைக் கொத்தி களைகளை அகற்றி, ஒன்றரை டன் மண்புழு உரத்தைத் தூவி பாசனம் செய்ய வேண்டும். 35-ம் நாளில் ஒன்றரை டன் மண்புழு உரம் கொடுக்க வேண்டும். 15 மற்றும் 45-ம் நாட்களில் பத்து லிட்டர் தண்ணீருக்கு, 100 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 4 டேங்குகள் தேவைப்படும். இது, இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தும். 45-ம் நாளுக்கு மேல் பாத்திக்கு ஒரு லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் (40 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 60 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 100 கிலோ பசுஞ்சாணம், 3 கிலோ வெல்லம், ஆகியவற்றை 300 லிட்டர் தண்ணீரில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்த கரைசல்) தெளிக்க வேண்டும். நூக்கல் குடும்பத்தைச் சேர்ந்த முட்டைகோஸ், காலிஃபிளவர்... பயிர்களை அருகில் சாகுபடி செய்தால், கெண்டை நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. வழக்கமாக, நீலகிரி மலைப்பகுதியில் நாற்று நடவு செய்து 55 நாட்கள் கழித்துதான், (அதாவது, விதைத்து 80 நாட்கள் ) அறுவடை செய்வோம். ஆனால், ஓசூர் பகுதிகளில் தேவை காரணமாக, விதைத்து 60 நாட்களுக்குள்ளாகவே அறுவடை செய்து விடுகிறார்கள். நாட்கள் விட்டு அறுவடை செய்தால், கிழங்கின் எடை அதிகரிக்கும்'' என்றார்.
மொத்த விலைக்கும் விற்க முடியும்! பென்னிக்கல் என்கிற கிராமத்தில் நூக்கல் பயிரிட்டிருக்கும் வெங்கடசாமி, ''25 வருஷமா விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். 30 சென்ட்ல நூக்கல் போட்டிருக்கேன். நானே அறுவடை பண்ணி, மூட்டை பிடிச்சு அனுப்பறது சிரமம். அதனால, தோட்டத்தை மொத்த விலைக்குப் பேசி விட்டுட்டேன். அவங்களே அறுத்து எடுத்திட்டு போயிடுவாங்க. சந்தை விலையைப் பத்தி நமக்கு கவலையில்ல. ஒவ்வொரு முறையும் செய்ற செலவைப் பொருத்து கட்டுபடியாகற விலைக்குப் பேசி விட்டுடுவேன். இந்த முறை முப்பதாயிரம் ரூபாய்னு பேசி விட்டுருக்கேன். அதுலயே எல்லா செலவும் போக, எப்படியும் பதினஞ்சாயிரம் ரூபாய் கையில நிக்கும்'' என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
---- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 3:44 PM | Message # 67 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ஒற்றை நாற்று நடவு முறை
நெல்லில் ஒற்றை நாற்று நடவு முறை என்பது,அதிக இடைவெளியில் ஒரு குழிக்கு ஒரே ஒரு நாற்று மட்டும் நடவு செய்வதே ஆகும்.இதனை "திருந்திய நெல் சாகுபடி முறை" என்றும் அழைக்கலாம். சிறப்பு அம்சங்கள்
- விதை நெல் தேவை மிக மிக குறைவு.
- அதிக இடைவெளியில் நடும் போது பயிறுக்கு தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
- காய்ச்சலும்,பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சுவதால் நீரின் தேவை மிக மிகக் குறைவு.
- இயற்கை வழி விவசாயம் செய்வதால்,ரசாயன உரத்தின் தேவை இல்லை.
- ரசாயன உரம் பயன்படுத்தாததால் இடுபொருள் செலவு மிகவும் குறைகிறது.
- இயற்கை வழி விவசாயம் செய்வதால்,விளைபொருளான நெல்லின் தரம் நல்லதாக இருக்கும்.
- இயற்கை வழி விவசாயம் செய்வதால்,நிலத்தின் தன்மை மாசு படாமல் இருக்கும்.
- நடவு வேலை குறைவு.
- மொத்ததில் குறைவான செலவில் அதிக மகசூல் கிடைக்கும்.
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 3:59 PM | Message # 68 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| நேற்று, வெறும் சீமைக்கருவேலங்காடு... இன்று, ஆண்டுக்கு ரூ.30 லட்சம் தரும் காடு... 52 ஏக்கரில் அற்புத பண்ணையம்!
தண்ணியில்லாத காடு’ என அரசு அதிகாரிகளால் குறிப்பிடப்படும் மாவட்டம், ராமநாதபுரம். சீமைக்கருவேல் முட்கள் சூழ்ந்த அந்த வறட்சி மாவட்டம் 'விவசாயத்துக்கு லாயக்கில்லை’ என்று சொல்லப்பட்டாலும்... நம்பிக்கையோடு வெற்றிகரமாக விவசாயம் செய்யும் பலர் அங்கு உண்டு. அவர்களில் ஒருவர்தான் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 'தரணி’ முருகேசன். நெல் விவசாயத்தோடு நாட்டுக்கோழி, ஆடு, மீன் என கால்நடைகளையும் இணைத்து, ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, சிறப்பாக பண்ணையம் செய்து வருகிறார், முருகேசன்.
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 4:00 PM | Message # 69 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ராமநாதபுரம்பரமக்குடி சாலையில் 14 வது கிலோ மீட்டரில் உள்ள எட்டிவயல் எனும் கிராமத்தில் இருக்கிறது, இவரது பண்ணை. சுற்றிலும் சீமைக்கருவேல் சூழ்ந்திருக்க, நடுவில் பசுமைத் தீவு போல காட்சியளிக்கிறது முருகேசனின் 'தரணி இயற்கை விவசாயப் பண்ணை’. காலை வேளையொன்றில் பணியாளர்களுக்கு அன்றைய பணிகளைச் சொல்லிக் கொண்டிருந்த முருகேசனைச் சந்தித்தோம். ''எங்க மாவட்டத்தோட சாபக்கேடு, சீமைக்கருவேல். 'இங்க விவசாயமே செய்யமுடியாது’னு பலபேரு வேற தொழிலுக்கு ஓடுறாங்க. ஆனா, பாட்டன்... பூட்டன் செஞ்ச தொழிலை விடுறதுக்கு எனக்கு மனசு வரல. 'முழு ஈடுபாட்டோட கஷ்டப்பட்டு உழைச்சா, மத்த தொழில்ல கிடைக்கிற வருமானத்தை மாதிரி விவசாயத்துலயும் எடுக்கலாம்’ங்கிற உண்மையை எங்க மாவட்ட விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்ற நம்பிக்கை மையமா, ஒரு மாதிரிப் பண்ணையை உருவாக்க நினைச்சேன். அதுக்காக மூணு வருஷம் உழைச்சேன். இப்ப, என்னோட பண்ணை முழுமையான இயற்கை விவசாய முறையிலான ஒருங்கிணைந்த பண்ணையா மாறியிருக்கு. இப்ப வருஷத்துக்கு 30 லட்ச ரூபாய் லாபம் பாத்துக்கிட்டு இருக்கேன். இதை பாத்துட்டு பலரும் ஆர்வமா விவசாயத்துல இறங்கியிருக்காங்க'' என்று பெருமிதமாகச் சொன்ன முருகேசன் தொடர்ந்தார்
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 4:00 PM | Message # 70 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ''விவசாயத்தைப் பார்த்துட்டே... கட்டுமானத் தொழில் செய்துட்டு இருக்கேன். முன்னாடி மினரல் வாட்டர் கம்பெனி வெச்சிருந்தேன். லட்சங்கள்ல வருமானம் வந்துட்டு இருந்துச்சு. ஒருநாள் நண்பர்கள்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, 'இயற்கை விவசாயம் அது இதெல்லாம் பேசுற. ஆனா, அதுக்கு நேர்மாறா தண்ணியை எடுத்து வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருக்கியே’னு ஒரு நண்பர் சொன்னதும், 'பொளேர்’னு உறைச்சது. அன்னிக்கு ராத்திரி முழுக்க யோசிச்சு, அடுத்த நாள் காலையில அந்தத் தொழில்ல இருந்து வெளியே வந்துட்டேன். அதுக்குப்பிறகு, என்னோட கவனம் முழுதையும் விவசாயத்துப் பக்கம் திருப்பிட்டேன்.
|
|
| |